என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை
Byமாலை மலர்22 Nov 2021 10:00 PM GMT (Updated: 22 Nov 2021 10:00 PM GMT)
பஞ்சாப், கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
புதுடெல்லி:
கோவா, மணிப்பூர் சட்டப்பேர்வையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் 14-ம் தேதியுடனும், பஞ்சாப்பின் பதவிக் காலம் மார்ச் 15-ம் தேதியுடனும் முடிவடைகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலமும் விரைவில் நிறைவடைய உள்ளது.
இதற்கிடையே, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நேற்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையும் படியுங்கள்...பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார் பூபேஷ் பாகல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X