search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife"

    • திருக்குறளின்படி வாழ்ந்தவர்கள் வரலாறு குறித்து திரைப்பட நடிகர் சிவக்குமார் பேசினார்.
    • எனது உயிர் எனது மனைவி லட்சுமி மடியில் தான் பிரிய வேண்டும்.

    பல்லடம்:

    நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள் 100 என்கிற நிகழ்ச்சி பல்லடம் வனாலயத்தில் நடைபெற்றது.

    இதில் திருக்குறளின்படி வாழ்ந்தவர்கள் வரலாறு குறித்து திரைப்பட நடிகர் சிவக்குமார் பேசினார். அப்போது அவர் வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு என்ற குறளில் தொடங்கி 100-வது கதையாக மலக்குழி இறங்கும் துப்புரவுத் தொழிலாளியின் கதையைக் கூறி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று அதற்குரிய குறளைக் கூறி நிறைவு செய்தார்.

    இந்த திருக்குறள் கதைகளில் எம்.ஜி.ஆர், சத்யராஜ், சூர்யா மற்றும் சிவக்குமாரின் தாயார் மற்றும் மனைவி ஆகியோரது வாழ்வியல் சம்பவங்களை திருக்குறளுடன் குறிப்பிட்டு பேசினார்.

    மனைவி பற்றி பேசும்போது, எனது உயிர் எனது மனைவி லட்சுமி மடியில் தான் பிரிய வேண்டும். என் தாயார் இறந்த பின்பு இரண்டாவது தாயாக என்னை பேணிக்காக்கும் அவளது மடியில் தான் எனது உயிர் போக வேண்டும் என்று உள்ளம் உருக பேசினார்.

    • நடத்தை சந்தேகத்தில் மனைவியை, கணவர் அரிவாளால் வெட்டினார்.
    • சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள கணபதி சுந்தரநாச்சி யார்புரம் கிராமம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (23) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடந்தது.

    இதற்கிடையே கூலி வேலைக்கு சென்று வரும் அய்யாச்சாமி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் அவர் அடிக்கடி சண்டை போட்டு தகராறிலும் ஈடுபட்டு வந் தார். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த மகாலட் சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித் துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இதையறிந்த அய்யாச்சாமி நேற்று காலை மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வந்தார். ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை யாக மாலையில் தம்பதிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த அய்யாச்சாமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த சேத்தூர் புறக்காவல் நிலைய போலீ சார் வழக்குப்பதிவு செய்து அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தலைமறைவான அய்யாச்சாமியை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மோதிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றவரை காணவில்லை.
    • சி.சி.டி.வி காமிரா மூலம் நகை திருடியவர் சிக்கினார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையை அடுத்த கீழநம்மங்குறிச்சியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது40).

    இவர் பழைய பஸ் நிலையத்தில் நகை கடை வைத்துள்ளார்.

    இவரது நகை கடைக்கு கடந்த 5-ந்தேதி டிப்டாப் உடையில் வந்த ஒருவர் மோதிரம் வேண்டும் என்று மாடல் பார்த்துள்ளார்.

    அப்போது 2 கிராம் எடை கொண்ட ஒரு மோதிரத்தை தேர்வு செய்த அவர், வாசலில் எனது மனைவி நிற்கிறார்.

    அவரிடம் காட்டிவிட்டு வந்துவிடுகிறேன் என்று கடை உரிமையாளரிடம் கூறிவிட்டு, மோதிரத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.

    பின்னர் நீண்டநேரம் ஆகியும் அவர் வரவில்லை.

    அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அய்யப்பன் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    முத்துப்பேட்டை துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு டிப்டாப் ஆசாமியை தேடிவந்தனர்.

    இந்தநிைலயில் தலைமறைவாக இருந்த காரைக்கால் டி.ஆர். பட்டினம் புது காலனி பகுதியை சேர்ந்த குமரேசன் (50) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து, அவரிடம் இருந்த 2கிராம் மோதிரத்தை பறிமுதல் செய்தனர்.

    • ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தவித்து வந்த நிலையில் தலைமறைவான ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.
    • காவி உடை அணிந்து சாமியாராக மாறியது ஓட்டேரி போலீசுக்கு தற்போது தெரியவந்தது.

    சென்னை:

    சென்னை ஓட்டேரி ஏகாங்கிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது மனைவி வாணியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்தார். இது தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    காதல் திருமணம் செய்து கொண்டு 16 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த ரமேஷ் மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் தலையில் கல்லை தூக்கி போட்டு அவரை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இதனால் ரமேசின் மகன்களான கவுதம், ஹரிஸ் இருவரும் தவித்து வந்த நிலையில் தலைமறைவான ரமேஷை போலீசார் தேடி வந்தனர்.

    போலீசார் தீவிரமாக தேடியும் ரமேஷ் சிக்காமல் ஊர் ஊராக சென்று பதுங்கினார். இதன் பின்னர் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்துவிட்டு தாடி வளர்க்க தொடங்கினார். பின்னர் காவி உடை அணிந்து சாமியாராக மாறியது ஓட்டேரி போலீசுக்கு தற்போது தெரியவந்தது.

    இதையடுத்து கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ரமேஷை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இணை கமிஷனர் ரம்யா பாரதி, துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சாமியாராக மாறிய ரமேஷை பிடிக்க களத்தில் இறங்கினர்.

    திருவண்ணாமலை, வடலூர், சதுரகிரி உள்பட சாமியார்கள் அதிகமாக தங்கி இருக்கும் இடங்களுக்கு சென்று ரமேஷ் காவி உடையில் அடையாளம் மாறிப்போய் யாசகம் கேட்டு அந்த பணத்தை வைத்து சாப்பிட்டு வந்தது தெரிய வந்தது.

    இந்நிலையில் ரமேஷ், தனது நண்பரான இன்னொரு சாமியாரின் செல்போன் எண்ணில் இருந்து நண்பரின் செல்போனுக்கு 'கூகுள் பே' மூலமாக பணம் அனுப்பியது தெரிய வந்தது. இந்த பணத்தை தனது மகன்களிடம் கொடுத்து விடுமாறு நண்பரிடம் போன் செய்து ரமேஷ் கூறியதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சாமியாரின் செல்போன் எண்ணை போலீசார் கண்காணித்தனர்.

    இந்நிலையில் ரமேஷ் சாமியார் வேடத்தில் சென்னைக்கு வந்திருப்பதும், சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆசிரமத்துக்கு செல்ல இருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே போலீசார் கண்காணித்தனர். அப்போது இன்று அதி காலையில் சென்ட்ரல் ரெயில் நிலைய பகுதிக்கு வந்த ரமேஷை இன்ஸ்பெக் டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

    • அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
    • நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார்.

    கோவை:

    கணவன்-மனைவி அன்பு என்பது ஆத்மார்த்தமானது. அன்பான மனைவிக்கு கணவனிடம் உள்ள அன்பு போற்றத்தக்கது. ஏதோ ஒரு காரணத்தால் தங்கள் துணை இறந்த பிறகு அவர்களை மறக்க முடியாமல் தவிக்கும் கணவன், மனைவியை இன்றும் பார்க்கிறோம்.

    அதேபோல் இறந்த தன் மனைவியை மறக்க முடியாமல் அவரது கல்லறைக்கு தினமும் சென்று வழிபட்டு வருகிறார் கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி. கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவரது மனைவி சரோஜினி. இவர் கணவர் சுப்பிரமணியன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இதனால் இவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.

    இந்நிலையில் சரோஜினி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார். தினமும் அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் அவரது கல்லறைக்கு சுப்பிரமணியன் செல்லத் தொடங்கினார். தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக காலையில் சரோஜினியின் கல்லறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டார். அங்கு கல்லறை முன்பு விளக்கேற்றி வழிபட்டு விட்டு வேலைக்கு செல்வார்.

    பின்னர் மாலையிலும் கல்லறைக்கு சென்று வணங்குவார். அப்போது அன்று நாள் முழுவதும் தன் வாழ்வில் என்னென்ன நடந்தது என்பதை கல்லறை முன்பு கூறுவார். சரோஜினி இறந்தாலும் தன்னுடனேயே வாழ்வதாக எண்ணி இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

    தனது மனைவி மீது சுப்பிரமணியன் கொண்டுள்ள அன்பை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். இதுபற்றி சுப்பிரமணியன் கூறுகையில் என் மனைவி சரோஜினி, அதிக பாசத்துடன் என்னை கவனித்து வருகிறார். அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. ஷாஜகான் தனது மனைவிக்காக தாஜ்மகால் கட்டியது போல் எனது மனைவிக்காக நானும் எதாவது ஒன்று செய்ய வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது. விரைவில் அதனை செய்து முடிப்பேன் என்றார்.

    • மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் பவித்ரா மற்றும் அவருடைய 1½ வயது குழந்தையுடன் ஓட்டம் பிடித்தார்.
    • கடந்த 13- ந்தேதி நடந்த மோதலில் 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டியை அடுத்த பூமிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த சரவணன் மகன் கோபி (32). இவருக்கு அதே பகுதியைசேர்ந்த மாதேஷ் என்பவரின் மனைவி பவித்ரா என்ப வருடன் பழக்கம் ஏற்பட்டது.

    கடந்த வாரம் பவித்ரா மற்றும் அவருடைய 1½ வயது குழந்தையுடன் ஓட்டம் பிடித்தார். இவர்களை மீட்டு வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கடந்த 13- ந்தேதி நடந்த மோதலில் 7 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று பவித்ராவின் தந்தை சிவா என்பவர் அடையாளம் தெரியாத 3 பேருடன் கோபி யின் வீட்டிற்கு சென்று கோபியின் பெற்றோரிடம் ஆகியோருடன் தகராறு செய்தனர். இதை அறிந்த கோபியின் பெரியப்பா மகன் கார்த்திக் தட்டி கேட்டார்.

    அப்போது சிவா மற்றும் அவருடன் வந்த நபர்கள் கார்த்திக்கை கடுமையாக தாக்கினர். காயமடைந்த கார்த்திக் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளர். இது பற்றி கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் சிவா மற்றும் அவருடன் வந்தவர்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோகிணி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கணவர் பிரகாஷ் நேற்று இரவு கண்டித்துள்ளார்.
    • வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தபோது, ரோகிணி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள மாங்குப்பை பழையூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி ரோகினி (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது. 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரோகிணி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை கணவர் பிரகாஷ் நேற்று இரவு கண்டித்துள்ளார்.

    இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரோகிணி, அருகில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பிரகாஷ் போன் செய்தும் போனை ரோகிணி எடுக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் போன் செய்தும் ரோகிணி எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பிரகாஷ், அங்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. அதன் பிறகு வீட்டின் ஓட்டை பிரித்து பார்த்தபோது, ரோகிணி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பிரகாஷ், கருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 5 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஒ விசாரணை நடத்தி வருகிறார்.

    • மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    திருப்பூர் :

    மதுரையை சேர்ந்தவர் சலீம்முகமது (வயது 45). இவரது மனைவி மும்தாஜ். 3 மகள்கள் உள்ளனர். சலீம் முகமது தனது குடும்பத்துடன் திருப்பூர் போயம்பாளையத்தில் வசித்துக்கொண்டு அதே பகுதியில் இறைச்சிக்கடை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவரது மகள் ஷகிலாவுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஷபிபுல்லா என்பவருக்கும் திருமணம் நடந்தது. சில நாட்கள் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து ஷகிலா, கணவர் ஷபிபுல்லாவை விட்டு பிரிந்து திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    சம்பவத்தன்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வர ஷபிபுல்லா, அவரது தந்தை முகமது மீரான், தம்பி அயூப்கான், சகோதரி சபீனா ஆகியோருடன் திருப்பூர் போயம்பாளையத்தில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்தார்.பின்னர் மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு சலீம் முகமதுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஷபிபுல்லாவும் அவரது தம்பியும் சேர்ந்து கிரிக்கெட் மட்டையால் மாமனார் சலீம் முகமதுவை தாக்கினர்.மும்தாஜையும் தாக்கினர். இைதயடுத்து ஷபிபுல்லா உள்ளிட்ட 4 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.இந்தநிலையில் படுகாயமடைந்த சலீம் முகமது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் அனுப்பர்பளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.தனிப்படை போலீசார் திண்டுக்கல்லில் பதுங்கியிருந்த ஷபிபுல்லா மற்றும் அவரது தம்பி அயூப்கான் ஆகிய 2 பேரையும் கைது செய்து அனுப்பர்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். ஷபிபுல்லாவிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:- எனக்கும் எனது மனைவி ஷகிலாவுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தொடக்க நாட்களில் நாங்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்தினோம். சில நேரங்களில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைக்காக எங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன்பு ஷகிலா என்னை விட்டு பிரிந்து திருப்பூர் வந்து விட்டார். இதில் நான் மிகவும் மன உளைச்சல் அடைந்தேன். அவருடன் தொடர்ந்து சேர்ந்து் வாழ வேண்டும் என்று விரும்பினேன். இதனால் எனது அப்பா மற்றும் தம்பி, சகோதரியுடன் திருப்பூர் வந்து மாமனார் வீட்டில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி மனைவி ஷகிலாவை அனுப்பி வைக்குமாறு கூறினேன். இதற்கு மாமனார் சலீம் முகமது அனுப்ப முடியாது என்று வாக்குவாதம் செய்தார். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கடும் கோபம் அடைந்த நான் அங்கு இருந்த கிரிக்கெட் மட்டையால் அவரை தாக்கினேன்.இதில் அவர் உயிரிழந்து விட்டார். நான் அவரை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதை செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • பணத்திற்கு ஆசைப்பட்டுகணவன்-மனைவி நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.
    • இது குறித்து நடவடிக்க வேண்டும் என நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கருங்கல்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த பொது மேலாளர் மாரிமுத்து(42) என்பவர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

    நாங்கள் ஈரோடு, கருங்கல்பாளையம் நியூ ஸ்டேட் பேங்க் காலனியில் தலைமை இடமாக வைத்து நிதி நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு ஈரோடு, பவானி, ஓமலூர், சங்ககிரி, அரச்சலூர், மற்றும் அம்பாசமுத்திரம் என 6 இடங்களில் எங்கள் கிளைகள் உள்ளன.

    எங்கள் நிறுவனத்தில் சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவன்ன கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பணிபுரிந்து வந்தார். அவர் சொல்பவர்கள் எல்லாம் எங்கள் நிறுவனத்திற்கு வரச்சொல்லி ஆவணங்களை சரிபார்த்து பெற்றுக்கொண்டு பணத்தை அவரிடம் வழங்கினோம்.

    அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவர்கள் திருமணத்தையும் நாங்களே தலைமையேற்று நடத்தி வைத்தோம். இந்நிலையில் பணத்திற்கு ஆசைப்பட்டு இருவரும் எங்கள் நிதி நிறுவனத்தில் கையாடல் செய்து பணம் மோசடி செய்துள்ளனர்.

    இருவரும் 3 மாதத்திற்குள் எங்கள் நிதி நிறுவனம் இடமிருந்து ரூ.19 லட்சத்து 37 ஆயிரத்து 325 ரூபாயை மோசடி செய்து கையாடல் செய்து உள்ளனர். இது குறித்து அவர்களிடம் கேட்டபோது முறையாக பதில் சொல்லாமல் உள்ளனர்.

    எனவே அவர்கள் இருவர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

    பாகிஸ்தானில் திருமண வயது வராத மகளை ஒரு லட்ச ரூபாய்க்காக திருமணம் செய்து கொடுக்க முயன்ற போது தடுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    டாடு :

    பாகிஸ்தானின் லக்கி ஷா சதார் பகுதியைச் சேர்ந்தவர் சுல்பிகர் ஜிஸ்கானி. இவரது மனைவி பாப்லி ஜிஸ்கானி. சுல்பிகர் ரூ. 1 லட்சத்திற்காக தனது மகள் ஹுமேராவை ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார். இதைத் தடுத்த பாப்லியை சுல்பிகர் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாப்லியின் சகோதரர் முனவ்வர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சுல்பிகரை கைது செய்துள்ளனர். மேலும் ஏற்கெனவே, சுல்பிகர் தன்னுடைய இரண்டு மகள்களையும் இதுபோல பணத்திற்காக விற்று விட்டதாகவும் முனவ்வர் தெரிவித்துள்ளார்.

    விரைவில் இதுகுறித்த விசாரணை தொடங்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். செஹ்வான் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, பாப்லி ஜிஸ்கானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    மனைவியை அடித்து உதைத்த கணவன், கள்ளக்காதலி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள வனிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(வயது37) இவரது மனைவி ரேவதி (27).  சுந்தரம் டெம்போ டிரைவராக வேலை செய்து வருகிறார் .

    இந்நிலையில் சுந்தரத்திற்கு பவளத்தானுர் பகுதியில் பழக்கடை வைத்து இருக்கும் கண்ணம்மா (35) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் சுந்தரம் கண்ணம்மாளின் பழக்க–டையில் இருந்து கொண்டு தனது வீட்டிற்கு செல்வதை தவிர்த்து வந்துள்ளார் .

    இந்நிலையில் ரேவதி கணவர் சுந்தரத்தை பல முறை கண்டித்துள்ளார்.இருந்தும் சுந்தரம், கண்ணம்மாள் இருவருக்கும் இடையே பழக்கம் நீடித்து வந்துள்ளது.இதனால் ஆத்திரம் அடைந்த ரேவதி  கணவரை தேடி பவளத்தா–னுர் பகுதிக்கு வந்துள்ளார்.

    அப்போது சுந்தரமும் ,கண்ணம்மாளும் பழக்கடை–யில் ஒன்றாக வியாபாரம் செய்துகொண்டு இருந்ததை பார்த்த ரேவதி இருவரையும் கண்டித்துள்ளார் .இதனால் ஆத்திரமடைந்த கணவர் சுந்தரமும் கண்ணம்மாளும் இங்கு எதற்கு வந்தாய் என்றுகூறி ரேவதியை அடித்து உதைத்துள்ளனர்.

    இதுபற்றி ரேவதி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் சுந்தரம் மற்றும் கண்ணம்மாள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணைக்கு எப்போதும் தனிப்பட்ட சுதந்திரத்தை அளித்தால் வாழ்க்கை சோலைவனமாக மாறும்.
    கணவன்-மனைவி இருவரும் இணைந்து வாழ்ந்தாலும், தனிமையான நேரங்கள், தனிப்பட்ட விருப்பங்கள் போன்றவை முக்கியமானவை. இருவரில், ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் இடையூறு ஏற்பட்டாலும், உறவில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே சிக்கலை கண்டுபிடித்து சீர்செய்வதன் மூலம், உறவை மகிழ்ச்சியாக நீட்டிக்கலாம். எத்தகைய நேரங்களில் தனிமை தேவைப்படும் என்பதை இங்கே காண்போம்.

    விரக்தியாக இருத்தல்:

    உங்கள் வாழ்க்கைத்துணை இறுக்கமாக இருக்கும் தருணங்களில், யாருடனும் பேசாமல் தனிமையில் இருக்கவே தோன்றும். ஏதோ ஒரு பொருளை இழந்ததுபோல், விரக்தியுடனே இருப்பார்கள். எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருப்பது போலத் தோன்றும். எதைக் கேட்டாலும், எரிச்சலுடன் கோபமடைவார்கள். இத்தகைய சமயங்களில் அவர்களோடு வாதிடாமல், சற்று அமைதியாக இருப்பது அவசியம்.

    மகிழ்ச்சியான தருணங்களை ஒதுக்குதல்:

    இதுநாள் வரை வாழ்க்கைத் துணையுடன் இணைந்து, வார இறுதி நாட்களில், வெளியிடங்களுக்கு செல்லவோ, மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கவோ திட்டமிட்டிருக்கலாம். ஆனால், உங்கள் வாழ்க்கைத் துணை, அவரின் தனிப்பட்ட சுதந்திரம் பறிபோவதாக உணரும்போதோ அல்லது, அவருக்கான ஆசை, விருப்பம் நிறைவேறாமல் பறிபோவதாக நினைத்தாலோ அதற்கு ஏற்ப நடந்து கொள்வது அவசியம். வழக்கமாக நீங்கள் போடும் திட்டங்களைத் திடீரென பொய்க்காரணம் கூறி ரத்து செய்யலாம். இது ஒரு முறை நடக்கும்போது, பெரிது படுத்த தேவையில்லை. அதுவே, தொடரும்போது, கட்டாயம் அதில் கவனம் செலுத்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும்.

    எதையும் விவாதிக்க மாட்டார்:

    அலுவலகத்தில் நடப்பவை, குடும்பத்தில் நடப்பவை என அனைத்து விஷயங்களையும் தினமும் உங்களுடன் பகிர்ந்து கொள்வது உங்கள் வாழ்க்கைத்துணையின் வழக்கமாக இருக்கலாம். ஆனால், அவரின் தனிப்பட்ட விருப்பங்கள் மறுக்கப்படும்போது, அவருக்குள் ஏற்படும் மாறுபாட்டால், அதை உங்களிடம் விவாதிக்க விரும்பாமல் மறுக்கலாம். அவ்வாறு இருக்கும்போது அவரிடம், மேற்கொண்டு எதையும் கேட்டு சங்கடத்தை ஏற்படுத்தாமல், இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை அமைதியாய் இருப்பது நல்லது.

    காரணமின்றி சண்டை போடுதல்:

    வாழ்க்கைத் துணையிடம் சண்டையிடுவது இயல்புதான். ஆனால், அதற்கும் நியாயமான காரணம் இருக்க வேண்டும். எந்தக் காரணமும் இல்லாமல், அனைத்து விஷயங்களுக்கும் எப்போதும் சண்டையிட்டு, பிரச்சினையைப் பெரிதாக்க முயல்வதாகத் தெரிந்தால், வாழ்க்கைத் துணைக்குச் சற்று அமைதி தேவை என புரிந்து கொள்ளுங்கள். அப்போது, அங்கிருந்து விலகி சில மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்க முயலுங்கள். மேலும், துணைக்கு எந்த வகையில், சுதந்திரம் தேவை என்பதைக் கேட்டுத் தெளிவடைவது சிறந்தது.

    எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதில் தீர்க்க முடியும். வாழ்க்கைத் துணைக்கு எப்போதும் தனிப்பட்ட சுதந்திரத்தை அளித்தால் வாழ்க்கை சோலைவனமாக மாறும்.
    ×