என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![நடத்தை சந்தேகத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் நடத்தை சந்தேகத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/13/1949217-vnr-03.webp)
நடத்தை சந்தேகத்தில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நடத்தை சந்தேகத்தில் மனைவியை, கணவர் அரிவாளால் வெட்டினார்.
- சேத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே யுள்ள கணபதி சுந்தரநாச்சி யார்புரம் கிராமம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி (வயது 26). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (23) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரு மணம் நடந்தது.
இதற்கிடையே கூலி வேலைக்கு சென்று வரும் அய்யாச்சாமி மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் அவர் அடிக்கடி சண்டை போட்டு தகராறிலும் ஈடுபட்டு வந் தார். இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த மகாலட் சுமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவருடன் கோபித் துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையறிந்த அய்யாச்சாமி நேற்று காலை மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் குடும்பம் நடத்த அழைத்து வந்தார். ஆனால் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை யாக மாலையில் தம்பதிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரம் அடைந்த அய்யாச்சாமி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த சேத்தூர் புறக்காவல் நிலைய போலீ சார் வழக்குப்பதிவு செய்து அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவான அய்யாச்சாமியை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)