search icon
என் மலர்tooltip icon
    • கர்நாடக மாநில மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    மேட்டூர்:

    கர்நாடக மாநில மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்று வழிபாடு செய்கின்றனர். மேலும் அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில், இன்று வைகாசி மாத அமாவாசை என்பதால், மாதேஸ்வர மலை கோவிலுக்கு செல்வதற்காக ஏராளமான பக்தர்கள் மேட்டூர் பஸ் நிலையத்தில் குவிந்தனர்.

    இதையடுத்து கர்நாடக மற்றும் தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் மேட்டூரில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இதனால் மேட்டூர் பஸ் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

    • சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவி லில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது.
    • தேர்த்திருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. இதனைத் தொடர்ந்து 29-ந்தேதி சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது.

    சேலம்:

    பிரசித்தி பெற்ற சேலம் சுகவனேசுவரர் சுவாமி கோவி லில் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 2-ந்தேதி தேரோட்டம் நடைப்பெற உள்ளது. தேர்த்திருவிழா வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) கொடி யேற்றத்துடன் தொடங்கு கிறது. இதனைத் தொடர்ந்து 29-ந்தேதி சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைப்பெற உள்ளது. 25-ந் தேதி முதல் ஜூன் மாதம் 2-ந் தேதி வரை தினமும் காலை மற்றும் மாலை சாமி புறப்பாடு நடைப்பெறும். மேலும் மாலை வேளையில் ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. எனவே அனைத்து பக்கதர்களும், பொதுமக்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்று இறைவன் அருள் பெற வேண்டும் என அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா மற்றும் அறங்காவலர்கள் கேட்டுக்கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இந்த கொலுசு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • இந்த தொழிலை நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வெள்ளித் தொழிலாளர்கள் உள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இந்த கொலுசு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிலை நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வெள்ளித் தொழிலாளர்கள் உள்ளனர்.

    இதையடுத்து வெள்ளி தொழிலாளர்கள் கோரிக்கையின் அடிப்படை யில் அரியாகவுண்டம்பட்டி யில் வெள்ளி கொலுசு பன்மாடி உற்பத்தி மையக் கட்டிடம் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த வெள்ளி கொலுசு உற்பத்தி மைய கட்டிட பணி களை விரைந்து முடித்துத் பயன்பாட்டுக்கு வழங்கு மாறு சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை நலச்சங்கத் தலைவர் ஆனந்தராஜன், செயலாளர் முனியப்பன், துணை செயலாளர் பாபு ஆகியோர் தமிழ்நாடு சிட்கோ சென்னை கிண்டி யில் உள்ள மேலாண்மை இயக்குனர் மதுமதியிடம் மனு வழங்கினர். அப்போது அவர் விரைந்து கட்ட நடவடிக்கை எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்தார்.

    • பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேரும் தூய்மை இந்தியா திட்டத்தில், நுண் உர மையம் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
    • இந்த நுண் உர மையத்தில் 3 டன் அளவு மட்கும் குப்பையை அரைத்தி பதப்படுத்தி உரம் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடுதக்கது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேரும் மட்கும் குப்பையை உரமாக்க, கோட்டக்காடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தில், நுண் உர மையம் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்டது.

    இதன் திறப்பு விழா நகராட்சி ஆணையர் தாமரை தலைமையில் நேற்று நடந்தது. சேர்மன் செல்வராஜ் நுண் உர மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை சேர்மன் பாலமுருகன், மற்றும் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த நுண் உர மையத்தில் 3 டன் அளவு மட்கும் குப்பையை அரைத்தி பதப்படுத்தி உரம் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடுதக்கது.

    • ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க ப்பட்டுள்ளது.
    • இந்த கோவிலுக்கு திரைப்பட நடிகை நமீதா, தனது கணவர் வீரேந்திரச சவுத்திரியுடன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க ப்பட்டுள்ளது.

    இந்த கோவிலுக்கு திரைப்பட நடிகை நமீதா, தனது கணவர் வீரேந்திரச சவுத்திரியுடன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

    கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 146 அடி உயரம் கொண்ட முருகன் சுவாமியின் முன் நின்று வணங்கி, மூலவர் சன்னதிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து மாலை அணிந்து, சாமியின் மேல் வைக்கப்பட்டுள்ள வேலுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஸ்ரீதர் மற்றும் ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.

    • கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கார் விற்பனைக்கு உள்ளதாக பிரபலமான ஆன்லைன் நிறுவன விளம்பரத்தில் பார்த்தார்.
    • காரை விலைக்குப் பேசி ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் செலுத்தி, மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அந்த காரை ஓட்டி வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கார் விற்பனைக்கு உள்ளதாக பிரபலமான ஆன்லைன் நிறுவன விளம்பரத்தில் பார்த்தார். அதில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.

    அதன்பேரில் மதுரைக்குச் சென்று கார் விற்பனை நிறுவன உரிமை யாளர் சுதர்சன் என்பவரை சந்தித்துள்ளார். அவர் காட்டிய காரை விலைக்குப் பேசி ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் செலுத்தி, மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அந்த காரை ஓட்டி வந்தார்.

    அப்போது நடு வழியில் அந்த கார் பழுதாகி நின்றுவிட்டது. இதுகுறித்து காரை விற்பனை செய்த வருக்கு தகவல் தெரி வித்தபோது, அவர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி காரை எடுத்துச் சென்று விட்டார். காரை வாங்கிய சேகரையும், அவருடன் இருந்த இருவரையும் நாமக்கல் செல்லுமாறும், காரை ரிப்பேர் செய்து, நாமக்கல்லில் கொண்டு வந்து கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதனை நம்பி சேகரும் அவருடன் சென்றவர்களும் நாமக்கல் வந்துவிட்டனர்.

    காரை வாங்கிய சேகர் பலமுறை காரை விற்ற சுதர்சனை தொடர்பு கொண்ட போதிலும், அவர் காரை சரி செய்து திருப்பி வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்த சேகர், நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார். கடந்த மாதம் விசாரணை முடிவுற்றிருந்த நிலையில், நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினார்.

    அதில், பாதிக்கப்பட்ட சேகருக்கு அவர் செலுத்திய தொகை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்தை, 9 சதவீத வட்டி யுடனும், அவருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடு ரூ. 1 லட்சமும், வழக்கின் செலவு தொகையாக ரூ.19 ஆயிரமும் காரை விற்பனை செய்த சுதர்சன் 4 வார காலத்துக்குள், சேகருக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பா ளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
    • போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உண்மை யான குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என ஜேடர்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பா ளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகையில் பணிபு ரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், வட மாநில தொழி லாளர்கள் பணிபுரியும் வெல்ல ஆலை கொட்ட கைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பஸ் போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்களும் நடந்து வந்தது.

    இதையடுத்து, ஜேடர்பா ளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு, வி.புதுப்பாளையம் பகுதியில் முத்துசாமி என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகையில் தூங்கிய வட மாநில தொழிலா ளர்கள் 4 மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த பரபரப்பு அடங்கு வதற்குள், நேற்று முன்தினம் இரவு ஜேடர்பா ளையம் பகுதியைச் சேர்ந்த முரு கேசன் என்ப வர் தோப்பில் இருந்த 600-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் சில பாக்கு கன்றுகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். வாழை தோப்பின் உரிமையாள ரான முருகேசன், முத்துசாமியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து தகவல் அறிந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை யிலான போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் மொளசி மற்றும் ஜேடர்பா ளையம் பகுதிகளை சேர்ந்த, படுகொலை செய்யப்பட்டு இளம்பெண்ணின் சமூகத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து, போலீசார் ரகசிய இடத்தில் வைத்து நேற்று இரவு முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவத்தன்று, நள்ளிரவு 2.30 மணி அளவில் கரப்பாளையம் பகுதியில் குடியிருக்கும் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் வீடுகளுக்கு சென்ற போலீசார், அங்கு தூங்கிக் கொண்டிருந்த வர்களை தட்டி எழுப்பி, அவர்களது கைகள், துணி, உடலை நுகர்ந்து பார்த்து சோதனை செய்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த அவர்கள், ஏன் எங்கள் சமூகத்தை மட்டும் குறி வைத்து இது போன்ற தேவையற்ற முறையில் தொந்தரவு செய்கிறீர்கள்? என்று போலீசாரிடம் கேட்டனர். ஆனால் போலீ சார் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

    இப்பகுதியில் எந்த அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சமூ கத்தை சேரந்தவர்களை மட்டும் குறிவைத்து சம்பந்தப்பட்ட வழக்கு களில் கைது செய்து சிறை யில் அடைத்து வருவதாக கரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் போலீசார் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

    போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உண்மை யான குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என ஜேடர்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது போன்ற தவறான செயல்பாடுகளால் பொதுமக்கள் போலீசார் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடு கின்றனர். இதனால் தேவை யற்ற போராட்டங்களை போலீ சார் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றனர்.

    • நேற்று முன்தினம் மாலை துக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.
    • இது குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், வாலிபர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கி யாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மகன் சக்திவேல் (வயது 23). இவர் கொத்த னார் வேலை செய்து வந்தார்.

    கொைல

    இவர் நேற்று முன்தினம் மாலை துக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், வாலிபர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது பற்றி சக்திவேலின் தாய் அஞ்சலம் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட வாலிபர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    திடுக்கிடும் தகவல்

    இதனால் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கொலையுண்ட சக்திவேல் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு வருடமாக காதலித்துள்ளார். இந்த நிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் துக்கியாம்பா ளையம் வடக்குக்காடு பகுதியில் சென்றபோது, சக்திவேல் காதலித்து வந்த சிறுமியின் அண்ணனான சதீஷ்குமார் (22) மற்றும் இவரது உறவினரான 17 வயது சிறுவன், சேலம் புத்தூர் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் (24) ஆகிய 3 பேரும் சேர்ந்து சக்திவேலை திடீரென கத்தியால் கழுத்தில் வெட்டி சரமாரி யாக தாக்கியுள்ளனர். இதில் சக்திவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் என்பது தெரியவந்தது.

    3 பேர் கைது

    இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், இவரது உறவினர் 17 வயது சிறுவன் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.

    வாக்குமூலம்

    கைதான சதீஷ்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனது தங்கையை, சக்திவேல் பின்தொடர்ந்து வலுக்கட்டாயமாக காதல் வலையில் வீழ்த்தினார். எனது தங்கைக்கு 18 வயது நிரம்பவில்லை. இதனால் நான் முதலில் எனது தங்கையை கண்டித்தேன். மேலும் வீட்டில் சத்தம் போடுவதை கண்டு அவர், சக்திவேலிடம் பேசாமல் இருந்து வந்தார்.

    ஆனால், எனது தங்கையை பார்ப்பதற்காக வீட்டின் அருகே சக்திவேல் சுற்றி சுற்றி வந்தார். அப்போது எனது தங்கை வீட்டில் நடந்தவற்றை சக்திவேலிடம் தெரி வித்துள்ளார். இதனால் மீண்டும் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

    இதனால் நான், சக்தி ேவலை சத்தம் போட்டேன். எனது தங்கையிடம் பேசாதே, அவரை பின்தொடராதே, அவள் சிறுமி, என கண்டித்தேன். ஆனால், சக்திவேல் கேட்காமல், எனது தங்கைக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் இது பற்றி எனது உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்தேன்.

    இதையடுத்து நான், எனது உறவினர் மற்றும் நண்பருடன் சேர்ந்து, சம்பவத்தன்று சக்திவேலை வழிமறித்து தீர்த்துக்கட்டிேனன். இதையடுத்து நாங்கள் போலீசாரிடம் மாட்டாமல் இருக்க தலைமறைவாக சுற்றி திரிந்தோம். ஆனால், போலீசார் எங்களை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு சதீஷ்குமார் வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.

    ெஜயிலில் அடைப்பு

    இதனை தொடர்ந்து சதீஷ்குமார் மற்றும் இவரது உறவினரான 17 வயது சிறுவன் ஆகியோரை வாழப்பாடி கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் சதீஷ்குமார், ஆத்தூர் கிளை சிறையிலும், 17 வயது சிறுவன் சேலம் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

    தலைமறைவான மைக்கேலை வாழப்பாடி போலீசார் தேடி வந்தனர். இன்று காலையில் அவர் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து மைக்கேலை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சினிமாவை மிஞ்சும் சம்பவமாக, சிறு வயது காதல், கொலை செய்யும் அளவிற்கு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று மாலை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது
    • மழை பெய்தாலும் இரவு கடும் புழுக்கமாகவே நீடித்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக ஆனை மடுவு, கரிய கோவில், காடையாம்பட்டி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு: ஆனைமடுவு-19, கரிய கோவில் -18, காடையாம்பட்டி -17, ஏற்காடு -8.4, பெத்தநாயக்கன் பாளையம்-5.5, தம்மம்பட்டி-5, ஓமலூர்-4.6, சேலம் 1.2 என மாவட்டம் முழுவதும் 78.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மழை பெய்தாலும் இரவு கடும் புழுக்கமாகவே நீடித்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். 

    • விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், விதை ஆய்வு இணை இயக்குநர் செல்வமணி திடீர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது விதை ஆய்வாளர் சரண்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், விதை ஆய்வு இணை இயக்குநர் செல்வமணி திடீர் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் விதைகளுக்கு உரிய கொள்முதல் பட்டியல்கள் மற்றும் விற்பனைப் பட்டியல்கள் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.

    முளைப்புத்திறன் ஆய்வறிக்கை இல்லாமல் விதைகளை விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தினார். விதை விற்பனையாளர்கள் இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல்கள், முளைப்பு திறன் அறிக்கைகள், விதைகளின் இருப்பு விபரம் மற்றும் விற்பனை விலை பலகை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

    விவசாயிகள் விதைகள் வாங்கும் போது, லைசென்ஸ் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே விதை வாங்க வேண்டும். அதற்கான பில்களை கேட்டுப்பெற வேண்டும். விற்பனை பட்டியலில் விதைக் குவியல் எண் மற்றும் காலாவதி தேதியை உறுதி செய்தல் வேண்டும். மேலும் விதை விற்பனையாளர்களிடம் முளைப்புத்திறன் ஆய்வறிக்கையை சரிபார்க்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைபிடிக்கும்போது விவசாயிகள் விதைகளின் தரத்தினை உறுதி செய்துகொள்ளலாம் என அவர் கூறினார்.

    உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட விதைக் குவியல்களுக்கு விதைகள் சட்டம் மற்றும் விதைக்கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் விதைகளின் தரத்தினை உறுதிப்படுத்த விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின்போது விதை ஆய்வாளர் சரண்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில், வைகாசி மாத அமாவாசை தினமான இன்று, அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    அமாவாசையை முன்னிட்டு பத்ரகாளி அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்ட ப்பட்டது.

    திரளான பக்தர்கள் வந்திருந்து, சாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்த ர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    • ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது.
    • சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சேலம் மற்றும் சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர், திருமணிமுத்தாறு வழியாக வந்தடைகிறது.

    சமீபத்தில் பெய்த கன மழையால் சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

    சேலத்தில் இருந்து வந்த தண்ணீரில் சாயக் கழிவு அதிக அளவில் வந்ததால் மீன்கள் செத்தனவா? அல்லது மர்ம நபர்கள் யாராவது ஏரி தண்ணீரில் விஷம் கலந்தனரா? என்று தெரியவில்லை. எப்படி மீன்கள் செத்தென என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை

    விடுத்துள்ளனர். 

    ×