ரூ.41 லட்சத்தில் நுண் உர மையம் திறப்பு

பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேரும் தூய்மை இந்தியா திட்டத்தில், நுண் உர மையம் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்டது. இந்த நுண் உர மையத்தில் 3 டன் அளவு மட்கும் குப்பையை அரைத்தி பதப்படுத்தி உரம் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடுதக்கது.
நுண் உர மையத்தை சேர்மன் செல்வராஜ் திறந்து வைத்த போத்ய் எடுத்த படம்.
நுண் உர மையத்தை சேர்மன் செல்வராஜ் திறந்து வைத்த போத்ய் எடுத்த படம்.
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேரும் மட்கும் குப்பையை உரமாக்க, கோட்டக்காடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தில், நுண் உர மையம் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நகராட்சி ஆணையர் தாமரை தலைமையில் நேற்று நடந்தது. சேர்மன் செல்வராஜ் நுண் உர மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை சேர்மன் பாலமுருகன், மற்றும் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த நுண் உர மையத்தில் 3 டன் அளவு மட்கும் குப்பையை அரைத்தி பதப்படுத்தி உரம் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடுதக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com