search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நடிகை நமீதா கணவருடன் சாமி தரிசனம்
    X

    நடிகை நமீதா கணவருடன் சாமி தரிசனம்

    • ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க ப்பட்டுள்ளது.
    • இந்த கோவிலுக்கு திரைப்பட நடிகை நமீதா, தனது கணவர் வீரேந்திரச சவுத்திரியுடன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில், உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்க ப்பட்டுள்ளது.

    இந்த கோவிலுக்கு திரைப்பட நடிகை நமீதா, தனது கணவர் வீரேந்திரச சவுத்திரியுடன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார்.

    கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் 146 அடி உயரம் கொண்ட முருகன் சுவாமியின் முன் நின்று வணங்கி, மூலவர் சன்னதிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து மாலை அணிந்து, சாமியின் மேல் வைக்கப்பட்டுள்ள வேலுக்கு பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஸ்ரீதர் மற்றும் ஹரி ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×