search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போன் வாங்கி கொடுத்து தங்கையை காதல் வலையில் வீழ்த்தியதால் கொன்றோம்
    X

    சக்திவேல் சதீஷ்குமார்

    செல்போன் வாங்கி கொடுத்து தங்கையை காதல் வலையில் வீழ்த்தியதால் கொன்றோம்

    • நேற்று முன்தினம் மாலை துக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார்.
    • இது குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், வாலிபர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கி யாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மகன் சக்திவேல் (வயது 23). இவர் கொத்த னார் வேலை செய்து வந்தார்.

    கொைல

    இவர் நேற்று முன்தினம் மாலை துக்கியாம்பாளையம் வடக்குக்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்த நிலையில் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், வாலிபர் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது பற்றி சக்திவேலின் தாய் அஞ்சலம் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார், கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட வாலிபர் சக்திவேல் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    திடுக்கிடும் தகவல்

    இதனால் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    கொலையுண்ட சக்திவேல் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒரு வருடமாக காதலித்துள்ளார். இந்த நிலையில் சக்திவேல் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் துக்கியாம்பா ளையம் வடக்குக்காடு பகுதியில் சென்றபோது, சக்திவேல் காதலித்து வந்த சிறுமியின் அண்ணனான சதீஷ்குமார் (22) மற்றும் இவரது உறவினரான 17 வயது சிறுவன், சேலம் புத்தூர் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த மைக்கேல் (24) ஆகிய 3 பேரும் சேர்ந்து சக்திவேலை திடீரென கத்தியால் கழுத்தில் வெட்டி சரமாரி யாக தாக்கியுள்ளனர். இதில் சக்திவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் என்பது தெரியவந்தது.

    3 பேர் கைது

    இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், இவரது உறவினர் 17 வயது சிறுவன் இருவரையும் நேற்று இரவு கைது செய்தனர்.

    வாக்குமூலம்

    கைதான சதீஷ்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

    எனது தங்கையை, சக்திவேல் பின்தொடர்ந்து வலுக்கட்டாயமாக காதல் வலையில் வீழ்த்தினார். எனது தங்கைக்கு 18 வயது நிரம்பவில்லை. இதனால் நான் முதலில் எனது தங்கையை கண்டித்தேன். மேலும் வீட்டில் சத்தம் போடுவதை கண்டு அவர், சக்திவேலிடம் பேசாமல் இருந்து வந்தார்.

    ஆனால், எனது தங்கையை பார்ப்பதற்காக வீட்டின் அருகே சக்திவேல் சுற்றி சுற்றி வந்தார். அப்போது எனது தங்கை வீட்டில் நடந்தவற்றை சக்திவேலிடம் தெரி வித்துள்ளார். இதனால் மீண்டும் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

    இதனால் நான், சக்தி ேவலை சத்தம் போட்டேன். எனது தங்கையிடம் பேசாதே, அவரை பின்தொடராதே, அவள் சிறுமி, என கண்டித்தேன். ஆனால், சக்திவேல் கேட்காமல், எனது தங்கைக்கு செல்போன் வாங்கி கொடுத்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் இது பற்றி எனது உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்தேன்.

    இதையடுத்து நான், எனது உறவினர் மற்றும் நண்பருடன் சேர்ந்து, சம்பவத்தன்று சக்திவேலை வழிமறித்து தீர்த்துக்கட்டிேனன். இதையடுத்து நாங்கள் போலீசாரிடம் மாட்டாமல் இருக்க தலைமறைவாக சுற்றி திரிந்தோம். ஆனால், போலீசார் எங்களை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு சதீஷ்குமார் வாக்குமூலத்தில் கூறியதாக தெரிகிறது.

    ெஜயிலில் அடைப்பு

    இதனை தொடர்ந்து சதீஷ்குமார் மற்றும் இவரது உறவினரான 17 வயது சிறுவன் ஆகியோரை வாழப்பாடி கோர்ட்டில் நேற்று போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் சதீஷ்குமார், ஆத்தூர் கிளை சிறையிலும், 17 வயது சிறுவன் சேலம் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

    தலைமறைவான மைக்கேலை வாழப்பாடி போலீசார் தேடி வந்தனர். இன்று காலையில் அவர் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து மைக்கேலை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சினிமாவை மிஞ்சும் சம்பவமாக, சிறு வயது காதல், கொலை செய்யும் அளவிற்கு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×