search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Micro"

    • விருதுநகரில் குறு, சிறு நிறுவனங்களுக்கு ரூ.84 லட்சம் மதிப்பில் மானிய கடன்களை அமைச்சர் வழங்கினார்.
    • மாணிக்கம் தாகூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், முன்னிலை வகித்தனர்.

    விருதுநகர்

    சென்னையில் வருகிற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதை முன்னிட்டு விருதுநகரில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட அளவி லான கள நிகழ்வு நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாணிக்கம் தாகூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன், முன்னிலை வகித்தனர். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கடனுதவி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

    5 தொழில் முனை வோர்களுக்கு ரூ.6.81 கோடி திட்ட மதிப்பிலான கடனுத விகளையும், 34 தொழில் முனைவோர்களுக்கு ரூ.84.48 லட்சம் மதிப்பில் மானியத்திற்கான காசோ லைகளையும், 114 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1524.82 கோடி மதிப்பில் மாவட்ட த்தில் முதலீடு செய்து தொழில் புரிவ தற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்க ளையும் அமைச்சர் வழங்கினார். பின்னர் அமைச்சர் கூறுகையில், தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொரு ளாதாரம் கொண்ட மாநில மாக உயர்த்தும் விதமாக, தமிழக முதலமைச்சர் வருகின்ற ஜனவரி மாதம் 07 மற்றும் 08 தேதிகளில் "சர்வ தேச முதலீட்டாளர்கள் மாநாடு 2024"-க்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தவும், வெளி நாடு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த பல்வேறு முதலீட்டா ளர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன் முன்னோட்டமாக 100-க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் ரூ.1500 கோடி அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    • சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ. 75,000 வரை முதலீட்டு மானியத்தை கலெக்டர் வழங்கினார்.
    • சிவகாசி கிளை மேலாளர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    சிவகாசி வேலாயுதம் சாலையில் உள்ள இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழிற்கடன் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் கடன் பெற்று பயன்பெற்று வரும் வாடிக்கையாளர் களை கலெக்டர் கவுர வித்தார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    சிறப்பு தொழிற்கடன் விழாவில் 11 விண்ணப்பதாரர்களிடமிருந்து ரூ.11.74 கோடி மதிப்பில் புதிய தொழில் தொடங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

    நீட்ஸ் திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவிகித முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாமில் வருகிற 1-ந்தேதி சமர்ப்பிக்கப்படும் பொதுக்கடன் விண்ணப் பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். இந்த வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர்/தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பொது மேலாளர் துரைராஜ், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மண்டல மேலாளர் முருகேசன், இந்திய பட்டய கணக்காளர்கள் கழகத்தின் தலைவர் பாலமுருகன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சிவகாசி கிளை மேலாளர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் வருகிற 21-ந் தேதி முதல் நடக்கிறது.
    • கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக் கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்க பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற் சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடி யாக திகழ்கிறது.

    இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவு களை விரிவு படுத்துவதற்கும், உற்பத்தி யை பன்முகப் படுத்து வதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    விருதுநகர் மாவட்ட சிவகாசி கிளை அலுவல கத்தில் (முகவரி:-98/சி4 சேர்மன் சண்முகநாடார் ரோடு, 2-வது தளம், சிவகாசி 626 123, விருதுநகர் மாவட்டம்;) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா முகாம் வருகிற 21-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் ரூ.150 இலட்சம் வரை, வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.NEEDS திட்டத்தில் தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் / தொழிலதி பர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தெரிவித்துள்ளார்.

    • பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேரும் தூய்மை இந்தியா திட்டத்தில், நுண் உர மையம் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
    • இந்த நுண் உர மையத்தில் 3 டன் அளவு மட்கும் குப்பையை அரைத்தி பதப்படுத்தி உரம் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடுதக்கது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேரும் மட்கும் குப்பையை உரமாக்க, கோட்டக்காடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தில், நுண் உர மையம் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்டது.

    இதன் திறப்பு விழா நகராட்சி ஆணையர் தாமரை தலைமையில் நேற்று நடந்தது. சேர்மன் செல்வராஜ் நுண் உர மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை சேர்மன் பாலமுருகன், மற்றும் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த நுண் உர மையத்தில் 3 டன் அளவு மட்கும் குப்பையை அரைத்தி பதப்படுத்தி உரம் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடுதக்கது.

    ×