search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Widespread"

    • நேற்று மாலை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது
    • மழை பெய்தாலும் இரவு கடும் புழுக்கமாகவே நீடித்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர் இரவு 7 மணி அளவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    குறிப்பாக ஆனை மடுவு, கரிய கோவில், காடையாம்பட்டி உட்பட பல பகுதிகளில் கனமழை பெய்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மாவட்டத்தில் பெய்த மழையளவு வருமாறு: ஆனைமடுவு-19, கரிய கோவில் -18, காடையாம்பட்டி -17, ஏற்காடு -8.4, பெத்தநாயக்கன் பாளையம்-5.5, தம்மம்பட்டி-5, ஓமலூர்-4.6, சேலம் 1.2 என மாவட்டம் முழுவதும் 78.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    மழை பெய்தாலும் இரவு கடும் புழுக்கமாகவே நீடித்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்தனர். 

    • தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலையும் மழை லேசான தூறலுடன் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
    • இன்றும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்ததால் சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்து, புதுச்சேரி, ஸ்ரீஹரிக் கோட்டாவிற்கு இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சேலத்தில் சாரல் மழை

    இதன் காரணமாக வருகிற 11-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலையும் மழை லேசான தூறலுடன் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.

    குறிப்பாக நங்கவள்ளி, தம்மம்பட்டி, ஏற்காடு, காடையாம்பட்டி, சேலம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சாரல் மழையாக பெய்தது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இன்றும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்ததால் சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    இதற்கிடையே சேலம் மாவட்டத்தில் மேற்கொள் ளப்பட்டுள்ள முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய்த்துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்களுடன் கலெக்டர் கார்மேகம் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

    இதன்படி சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மலைப்பகுதிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பணிபுரியும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் தங்கள் பணிபுரியும் இடங்களிலேயே இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. மழையின் போது சாலை ஓரங்களில் மரங்கள் ஏதேனும் சரிந்தால் உடனடியாக அதனை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத் துறையினர் அடங்கிய நடமாடும் குழு மர அறுப்பான்கள் எந்திரம் உள்ளிட்ட இதர உபகரணங்களுடன் தயாராக உள்ளனர்.

    மேட்டூர் அணை நீர் தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து ஆகியவை தொடர்ந்து கண்காணித்து உடனுக்குடன் தலைமையிடத்திற்கு அறிக்கை அனுப்பவும், வெளியேற்ற நேர்ந்தால் பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அவசர கால தேவை

    மேலும் தங்கு தடை இன்றி குடிநீர், பால், மருந்து இருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் கனமழை உள்ளிட்ட அனைத்து அவசர கால தேவைகளுக்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவில் 24 மணி நேரம் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 அல்லது மற்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது .

    பொதுமக்கள் மழை நேரங்களில் அவசிய பணிகள் இன்றி, மற்ற நேரங்களில் வெளியில் செல்வதையும் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்த்திடவும், அதிக குளிர் இருக்கும் என கருதப்படுவதால் 60 வயதுக்கு மேற்பட்டவர், குழந்தைகளை அவரவர் வீடுகளிலேயே பத்திரமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம் எனவும் கலெக்டர் கூறியுள்ளார்.

    மழையளவு

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கெங்கவல்லியில் அதிக பட்சமாக 13.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. தம்மம்பட்டி-6, ஏற்காடு -2.2, காடையாம்பட்டி-2, எடப்பாடி -1.6, சேலம் -1.6, மேட்டூர், சங்ககிரி -1.2, ஆத்தூர், பெரியகோவில், ஆனைமடுவு -1 என, மாவட்டம் முழுவதும் 32 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாமக்கல்

    இதே போல நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. குறிப்பாக புதுச்சத்திரம், ராசிபுரம், கொல்லிமலை உள்பட பல பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். மாவட்டத்தில் அதிகபட்சமாக கொல்லிமலையில் 6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. புதுச்சத்திரம் - 5 , ராசிபுரம் - 2.3, திருச்செங்கோடு - 1 என மாவட்டம் முழுவதும் 15.3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் மழை லேசாக தூறியபடி இருந்தது. இதனால் குளிர்ந்த சீதோசன நிலை நிலவியது. 

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. ஆனால் மழை குறைந்து தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.
    • தொடர்ந்து மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இன்று காலை வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டப் படியே சென்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. ஆனால் மழை குறைந்து தொடர்ந்து மேக மூட்டத்துடன் காண ப்பட்டு வருகிறது.

    ஆனால் தாளவாடி மற்றும் சுற்று வட்டார வன பகுதிகளில் இரவு ேநர ங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    இந்த நிலையில் சத்திய மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது.

    சத்தியமங்கலம், அரசூர், அரியப்பம் பாளையம், ஒட்டக்குட்டை, புளியம் கோம்பை, பெரிய குளம், கெஞ்சனூர், பவானி சாகர், பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ராஜன் நகர் உள்பட பல்வேறு இடங்க ளில் நள்ளிரவு 1 மணிக்கு பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து விடிய விடிய இன்று காலை 6 மணி வரை மழை தூறி கொண்டே இருந்தது.

    இதே போல் தாளவாடி, ஆசனூர், தலமலை, திம்பம் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து பரவலாக மிதமான மழை பெய்தது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமையாக காணப்பட்டது.

    தொடர்ந்து மேக மூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இன்று காலை வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டப் படியே சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேக மூட்டத்துடனேயே காண ப்பட்டது. மேலும் மொட க்குறிச்சி, 46 புதூர், நஞ்சை ஊத்துக்குளி, லக்காபுரம், கஸ்பாபேட்டை, அவல்பூந்துறை உள்ளிட்ட இடங்களில் இன்று அதி காலை லேசான மழை பெய்தது.

    ஒரு சில இடங்களில் மழை நீர் வழிந்து ஓடியது. அதிகாலை பெய்த மழை யால் மஞ்சள், கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு போதிய ஈரப்பதம் காணப்பட்டது. இதனை கண்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் லேசான குளிர் காற்றும் வீசி வருகிறது.

    இதனால் மொடக்குறிச்சி சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மாவட்டத்தில் அதிக பட்சமாக வரட்டுபள்ளம் பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • மாநகரில் இன்று அதிகாலை முதல் பனிமூட்டத்துடன் தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் தேங்குவதாலும், மின் தடையாலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், பெருந்துறை, நம்பியூர், வரட்டுபள்ளம், சென்னிமலை, தாளவாடி, கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம், மொடக்குறிச்சி, அம்மாபேட்டை என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

    இந்த மழை காரணமாக ஈரோடு, நாடார்மேடு பகுதியில் உள்ள விக்னேஷ் நகர், கெட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. இன்சுலேட்டர் வெடித்ததில் மின் தடை ஏற்பட்டதை கண்டறிந்த மின்சாரத்துறையினர் அதனைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக இரவு 10 மணிமுதல் அதிகாலை வரை அப்பகுதியில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.

    இதேபோல மாவட்ட த்தின் பிற பகுதியான கோபியிலும் மின் தடை ஏற்பட்டது. இதுபோல் மாவட்டத்தில் அதிக பட்சமாக வரட்டுபள்ளம் பகுதியில் 41 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் வரட்டுபள்ளம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

    தொடர்ந்து இரவு முதல் காலை வரை சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாநகரில் இன்று அதிகாலை முதல் பனிமூட்டத்துடன் தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    வரட்டுபள்ளம்-41, பெருந்துறை-26, நம்பியூர்-24, சென்னி மலை-24, தாளவாடி-16, கவுந்தப்பாடி-12, கோபி-8, மொடக்குறிச்சி-5, அம்மாபேட்டை-4.4, ஈரோடு-4, கொடுமுடி-2, பவானி-2.

    ×