என் மலர்
இந்தியா
- சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
- மையங்களில் பக்தர்கள் முன்பதிவு செய்து, அன்றைய தினமே சாமி தரிசனம் செய்யலாம்.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக 16-ந்தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெறுகிறது.
சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் முன்பதிவு முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை சீசன் காலத்திலும் அந்த முறை அமல்படுத்தப்படுகிறது.
தினமும் ஆன்லைன் முன்பதிவு (மெய் நிகர் வரிசை) மூலமாக 70ஆயிரம் பேருக்கும், ஸ்பாட் புக்கிங் (உடனடி முன்பதிவு) மூலமாக 20 ஆயிரம் பேருக்கும் என தினமும் 90 ஆயிரம் பேருக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
மண்டல பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (1-ந்தேதி) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. sabarimalaonline.org என்ற இணையதளம் முலமாக பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
'ஸ்பாட் புக்கிங்' மூலம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியார், சன்னிதானம் ஆகிய 5 இடங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்த மையங்களில் பக்தர்கள் முன்பதிவு செய்து, அன்றைய தினமே சாமி தரிசனம் செய்யலாம்.
மேலும் இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தால், அவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. அதாவது கடந்த காலத்தில் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் விபத்தில் உயிரிழக்கும் ஐயப்ப பக்தர்களின் குடும்பத்துக்கு ரூ5.லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்பட்டு வந்தது.
அது இந்த ஆண்டுமாநில எல்லைக்குள் எந்த பகுதியில் விபத்து நடந்து, அதில் மரணம் அடையும் ஐயப்ப பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் விபத்து காப்பீடு வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
மேலும் இறந்தவர்களின் உடலை அவரவர் வீடுகளுக்கு கொண்டு செல்ல கேரள மாநிலத்திற்குள் ரூ.30 ஆயிரமும், வெளி மாநில பக்தர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அது மட்டுமின்றி மலையேற்றத்தின்போது மரணம் ஏற்பட்டால் ஐயப்ப பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்காக ஆன்லைன் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இருந்து முன்பதிவு செய்யப்படும் போது ரூ.5 பெறப்படுகிறது.
- உணவின் தரமே மிகவும் முக்கியம் என்று கோலி கூறியுள்ளார்.
- இந்த உணவகத்தின் பெயரான ‘ஒன்8 கம்யூன்’ என்பது விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்துடன் தொடர்புடையது.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் விராட் கோலி. டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.
உலகின் பணக்கார கிரிக்கெட் வீரராக விராட் கோலி திகழ்கிறார். கிரிக்கெட் தவிர விளம்பரங்கள் மூலம் அவர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார். விராட் கோலியும், அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து உள்ளனர். இந்த நிலையில் விராட் கோலியின் மும்பை உணவகம் பற்றியும், ரெஸ்டாரண்டில் இருக்கும் உணவுகளின் விலை விவரம் பற்றிய தகவலும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
மும்பையில் பிரபலமான ஜூகு பகுதியில் 'ஒன் 8 கம்யூன்' என்ற பெயரில் அவர் 2022-ம் ஆண்டில் உணவகத்தை தொடங்கினார். பிரபல பாடகர் கிஷோர் குமாருக்கு சொந்தமான பங்களாவை விராட் கோலி வாங்கி புதுப்பித்து உணவகம் அமைத்துள்ளார்.
இந்த ரெஸ்டாரண்டின் மெனுவில் அசைவம், கடல் உணவுகள் மட்டுமின்றி தாவர அடிப்படையிலான உணவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு பிரியாணி விலை ரூ.978 ஆகும்.
வெறும் சாதம் ரூ.318, பிரெஞ்ச் பிரைஸ் ரூ.348, மஸ்கார்போன் சீஸ்கேக் ரூ.748, தந்தூரி ரொட்டி ரூ.118 போன்ற விலைகளில் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ரூ.2,318 -ல் மிகவும் விலை உயர்ந்த அசைவ உணவு கிடைக்கிறது.
விராட் கோலியின் தற்போதைய சைவ உணவு முறையைப் பிரதிபலிக்கும் வகையில், 'விராட் பேவ ரைட்ஸ்' என்ற சிறப்புப் பிரிவும் இடம் பெற்றுள்ளது. இதில் டோபு ஸ்டீக், ட்ர பிள் ஆயில் சேர்த்த மஸ்ரூம் டம்ப்ளிங்ஸ், சூப்பர் புட் சாலட் போன்ற உணவுகள் இடம்பெற்றுள்ளன. எல்லா வகையான உணவுகளும் இந்த ரெஸ்டாரண்டில் கிடைக்கிறது.
இந்த உணவகத்தின் விலைப்பட்டியல் சற்று அதிகமாகவே இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதேபோல் செல்லப்பிராணிகளுக்கான உணவுகளும் ரூ.518 முதல் ரூ.818 வரை இங்கு விற்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உணவகத்தின் பெயரான 'ஒன்8 கம்யூன்' என்பது விராட் கோலியின் கிரிக்கெட் பயணத்துடன் தொடர்புடையது. அவரது ஜெர்சி எண் 18-ஐ குறிக்கும் வகையிலேயே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. உணவகத்தின் சுவரில் இந்த எண் பிரதானமாக இடம் பெற்றுள்ளது. இங்கு பகல் நேரத்தில் வெளிச்சம் நன்றாக வர வசதியாக கண்ணாடி கூரை அமைக்கப்பட்டு, அழகான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
உணவின் தரமே மிகவும் முக்கியம் என்று கோலி கூறியுள்ளார். இந்த ரெஸ்டாரண்ட் மூலம், விருந்தினர்கள் திருப்தி அடைந்து மீண்டும் வர வேண்டும் என்பதே அவரது முக்கிய நோக்கமாக உள்ளது. மும்பையில் மட்டுமின்றி டெல்லி, கொல்கத்தா, புனே போன்ற நகரங்களிலும் 'ஒன்8 கம்யூன்' கிளைகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
- மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது
ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்ததை கிராம மக்கள் பள்ளி ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பள்ளி முதல்வர் ஆசிரியரை பணிநீக்கம் செய்தார்.
முன்னதாக, ஆசிரியர் தனது மொபைல் எண்ணை ஒரு மாணவியின் நோட்டில் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் அவரைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம்.
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பீகாரில் பிரசாரம் செய்தார்.
பீகார் சட்டசபைக்கு முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கு வருகிற 6-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 2-வது கட்டமாக எஞ்சிய 122 இடங்களுக்கு 11-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இதையொட்டி தலைவர்கள் பீகாரில் முற்றுகையிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளும் ஐக்கிய ஜனதாதளம்- பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும், எதிர்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று பீகாரில் பிரசாரம் செய்தார். பெகுசராய் பகுதியில் அவர் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக ஓட்டு சேகரித்தார்.
முன்னதாக பாட்னா விமான நிலையத்தில் பிரியங்கா காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
ஒரு கோடி வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பா.ஜ.க கூட்டணி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதுவரை அவர்கள் அதை வழங்காதது ஏன்? இப்போது அதைப்பற்றி கூறுவது ஏன்?
பீகாரில் மெகா கூட்டணி ஏன் ஆட்சி அமைக்காது. நிச்சயமாக நாங்கள் ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
- உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கூட்டநெரிசலில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- அனைத்து பிரிவு மக்களின் வளர்ச்சிக்காகவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.
- பீகார் மாநிலத்தை முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றும் வகையில் நாங்கள் அதை மேம்படுத்துவோம்.
243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக வரும் 6 -ந்தேதி மற்றும் 11-ந் தேதி என 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ந்தேதி நடைபெற உள்ளது.
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று இருக்கிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர களப்பணியாற்றி வருகிறது.
நிதிஷ் குமாரிடம் இருந்து ஆட்சியை இந்த முறை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி. (ராஷ்டிரிய ஜனதா தளம்) - காங்கிரசின் மகா பந்தன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சி 'காட்டு ராஜ்ஜியம்' என்று கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், தனது அரசாங்கத்தின் கடந்த இரண்டு தசாப்த கால சாதனைகளை அவர் எடுத்துரைத்து உள்ளார். மக்களுக்கான அனைத்து பணிகளையும் நேர்மையுடனும் கடின உழைப்புடனும் செய்ததாக அவர் கூறி உள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியை 'காட்டு ராஜ்ஜியம்' என்று கடுமையாக சாடிய நிதிஷ்குமார், NDA அரசாங்கம் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த பாடுபட்டதாக கூறினார்.
முன்னதாக, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருந்தது. முதலாவதாக, அதை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றின் நிலைமை கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்திலிருந்தே, அனைத்து பிரிவு மக்களின் வளர்ச்சிக்காகவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம். எங்கள் குடும்பங்களுக்காக அல்ல, அனைவருக்காகவும் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.
முன்பெல்லாம் பீகாரி என்று அழைக்கப்படுவது அவமானம். ஆனால் இப்போது அது மரியாதைக்குரிய விஷயம்.
பீகாரின் வளர்ச்சியில் பிரதமர் மோடியின் பங்கை பாராட்டிய நிதிஷ் குமார், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பீகாரின் வளர்ச்சிப் பயணத்திற்கு முழு ஆதரவையும் அளித்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியால் மட்டுமே பீகாரை மேம்படுத்த முடியும். மத்தியிலும் மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகள் இருவருமே ஆட்சி செய்வதால் வளர்ச்சியின் வேகம் அதிகரித்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு மக்களை வலியுறுத்திய நிதிஷ் குமார், கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் பீகார் மேலும் வளர்ச்சியடையும்.
எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். பீகார் மாநிலத்தை முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றும் வகையில் நாங்கள் அதை மேம்படுத்துவோம். எனவே, தயவுசெய்து அதிகபட்ச எண்ணிக்கையில் உங்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- 2021 ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தபட்டது.
- மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கியது.
இன்று நடைபெற்ற கேரள சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில், "கேரளா தீவிரமான வறுமையிலிருந்து விடுபட்ட மாநிலமாக மாறியுள்ளது" என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
சட்டமன்றத்தில் பேசிய பினராயி விஜயன், "2021 ஆம் ஆண்டு தீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மிகவும் ஏழ்மையான குடும்பங்களை அடையாளம் காணும் செயல்முறை தொடங்கியது. அடையாளம் காணப்பட்ட குடும்பங்கள் வார்டு குழுக்களால் ஆய்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டன. இது சூப்பர் செக்கிற்கு உட்படுத்தப்பட்டு வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியல் கிராம சபைகளுக்கு வழங்கப்பட்டது. அதிலிருந்து, 64,006 குடும்பங்களைச் சேர்ந்த 1,03,099 நபர்கள் மிகவும் ஏழ்மையானவர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
உணவு, சுகாதாரம், வீட்டுவசதி மற்றும் வருமானம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.
முதல் கட்டமாக ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை போன்ற அடிப்படை ஆவணங்கள் கூட இல்லாமல் தவித்த 21,263 பேருக்கு அத்தியாவசிய ஆவணங்கள் வழங்கப்பட்டன.
20,648 மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு குடும்பஸ்ரீ திட்டத்தின் மூலம் வழக்கமான உணவு விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள், மருந்துகள், தடுப்பூசிகள், நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் உறுதி செய்யப்பட்டன.
4,677 குடும்பங்களுக்கு வீடுகளும் 2,713 குடும்பங்களுக்கு வீடுகள் மற்றும் நிலங்களும் வழங்கப்பட்டன. 35,041 குடும்பங்கள் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் (MGNREGS) கீழ் சேர்க்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசாங்கம் ரூ.1,000 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர்.
- கூட்டநெரிசலில் சிக்கி சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏகாதசி பண்டிகையை ஒட்டி கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தற்போது மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெய்வத்தை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இவ்வாறு உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
- பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள MMRDA மைதானத்தில் பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த இசை நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான வித்யா பாலன், மலைக்கா அரோரா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 80 மொபைல் போன்கள் திருடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் ஏழு முதல் தகவல் அறிக்கைகளை (FIR) பதிவு செய்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- நச்சுக் காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது நுரையீரலை கடுமையாக சேதப்படுத்தும்.
- மாசுபாடு அதிக இறப்பு விகிதங்களுடன் கடுமையான வைரஸ் அல்லது பாக்டீரியா நிமோனியாவை ஏற்படுத்துகிறது.
டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் காற்று மாசு தீபாவளிக்கு பிறகு மிக அதிகமாகவே இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் காற்றின் தரம் இன்று காலை 'மோசமான' பிரிவில் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்த காற்றின் தர குறியீடு காலை 8 மணிக்கு 245 ஆக பதிவாகியுள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியின் பல கண்காணிப்பு நிலையங்களில் பதிவான காற்றின் தரக் குறியீடு 'மோசமாக' இருந்தது. சில இடங்களில் 'மிதமான' மற்றும் 'மிகவும் மோசமான' காற்றின் தரத்தையும் பதிவு செய்தன.
இந்த நிலையில் டெல்லி தலைநகரில் காற்று மாசுபாடு அபாயகரமான உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நுரையீரல் நிபுணர் டாக்டர் கோபி சந்த் கில்னானி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நுரையீரல் நிபுணர் டாக்டர் கோபி சந்த் கில்னானி கூறுகையில், உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடிந்தால் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுங்கள். நச்சுக் காற்றை நீண்ட நேரம் சுவாசிப்பது நுரையீரலை கடுமையாக சேதப்படுத்தும். நாள்பட்ட சுவாச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் ஆயுட்காலத்தை கூட குறைக்கும்.
மாசுபாடு அதிக இறப்பு விகிதங்களுடன் கடுமையான வைரஸ் அல்லது பாக்டீரியா நிமோனியாவை ஏற்படுத்துகிறது. தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாடு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது, ஏற்கனவே சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் கடினமான காலமாக இருக்கும். ஏனெனில் பெரும்பாலான மக்கள் சுவாசிக்கக் கூட சிரமப்படுகிறார்கள். நாள்பட்ட பாதிப்பில் உள்ளவர்கள் முடிந்தால் டிசம்பர் வரை தலைநகரை விட்டு வெளியேறுமாறு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
- செப்டம்பர் முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை சுமார் 100 பண பரிவர்த்தனைகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர்.
- இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
புனே:
இன்றைய நவீன உலகில் இணையதளம் மூலமாக பல்வேறு நூதன முறைகளில் மோசடிகள் நடந்து வருகிறது.
லிங்கை தொட்டால் பரிசு, அரசின் உதவித்தொகை பெற்றுத் தருகிறோம் என கூறி பணம் பறிப்பது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யு.பி.ஐ. ஐ.டி. கேட்டு பணம் பறிப்பது, டிஜிட்டல் கைது என பல்வேறு வகைகளில் மோசடிகள் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் பரிசு என்ற ஆன்லைன் விளம்பரத்தை நம்பிய ஒருவர் ரூ.11 லட்சம் இழந்த சம்பவம் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்துள்ளது.
புனேயை சேர்ந்த 44 வயதான ஒருவர் ஒப்பந்ததாரராக உள்ளார். இவர் ஆன்லைனில் ஒரு விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் பேசிய ஒரு பெண், நான் தாயாவதற்கு ஒரு ஆண் தேவை. என்னை கர்ப்பமாக்கக்கூடிய ஒரு ஆணை தேடுகிறேன். என்னை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் பரிசு தருகிறேன். அந்த நபரின் கல்வி, சாதி, அழகு ஒரு பொருட்டல்ல என கூறி இருந்தார்.
இதைப்பார்த்த ஒப்பந்ததாரர் சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த நம்பரில் தொடர்பு கொண்டபோது, சில விபரங்களை கேட்டுள்ளனர். மேலும் பரிசு பெறுவதற்காக சில சரிபார்ப்பு விதிமுறைகள் உள்ளன என கூறியுள்ளனர். பின்னர் பதிவு, சரிபார்ப்பு, ஜி.எஸ்.டி. என பல காரணங்களை கூறி பல்வேறு வகைகளில் கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் 23-ந்தேதி வரை சுமார் 100 பண பரிவர்த்தனைகள் மூலம் ஒப்பந்ததாரரிடம் இருந்து ரூ.11 லட்சம் பெற்றுள்ளனர்.
பின்னர் அவர் கர்ப்பமாக்கும் வேலை தொடர்பாக தனது கேள்விகளை கேட்டபோது, மறுமுனையில் பேசியவரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து அவர் அழைத்தபோது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான் அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணத்தை இழந்த ஒப்பந்ததாரர் அளித்த தொலைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்களை முடக்கி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்ப வேண்டாம். என்று சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
- உயிரிழந்திருந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென்று காணாமல் போய் இருந்தார்
- காதலன், அவரது நண்பர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
பெங்களூரு சுப்பிரமணியபுராவில் உள்ள சர்க்கிள் மாரம்மா கோவில் பகுதியில் வசித்து வந்த 36 வயது பெண்ணுக்கு 17 வயதில் மகள் இருக்கிறாள். இவர், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைந்ததால் அதன்பிறகு அவர் படிப்பை நிறுத்தி விட்டார். கணவரை பிரிந்து வாழ்ந்த 36 வயது பெண், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26-ந்தேதி அந்த பெண் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அப்பெண்ணின் தங்கையின் தகவலின் பேரில் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், உயிரிழந்திருந்த பெண்ணின் 17 வயது மகள் திடீரென்று காணாமல் போய் இருந்தார். அவரை போலீசார் தேடி வந்தனர். ராமநகர் மாவட்டம் கக்கலிபுராவில் பாட்டி வீட்டில் இருந்த அந்த சிறுமியை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. அதாவது தனது காதலன், நண்பர்களுடன் சேர்ந்து தாயை கொலை செய்ததாக அந்த சிறுமி கூறினார். அதைத்தொடர்ந்து, காதலன், அவரது நண்பர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர்.
அவர்கள் 4 பேருக்கும் 18 வயதாகவில்லை என்பதும், அவர்களும் சிறுவர்கள் என்பதும், இதில் ஒரு சிறுவனுக்கு 13 வயது தான் ஆவதும் தெரிந்தது. இதையடுத்து 17 வயது சிறுமி, காதலன் உள்பட 5 பேரிடமும் போலீசார் விசாரித்தனர். அப்போது சிறுமி, தன்னுடன் படித்த வாலிபரை தான் காதலித்துள்ளார். தனது மகள், அந்த வாலிபரை காதலிப்பது நேத்ராவதிக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது மகளை கண்டித்துள்ளார். மேலும் காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த மகள், தனது நண்பர்களுடன் சேர்ந்து தாயாரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை படுக்கை அறைக்கு இழுத்து சென்று, கழுத்தில் சேலையால் கட்டி உடலை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டுவிட்டு தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிறுமி உள்பட 5 பேரையும் கைது செய்துள்ளனர்.






