என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
- காலை முதலே ஜனநாயக கடமையாற்ற வாக்குப்பதிவு மையங்களில் வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்
- ராஜஸ்தான் - 11.77%, திரிபுரா-16.65%, உத்தரபிரதேசம் - 11.67%, மேற்கு வங்காளம் - 15.68% வாக்குகள் பதிவாகி உள்ளது.
மணிப்பூர்:
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.
2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை முதலே ஜனநாயக கடமையாற்ற வாக்குப்பதிவு மையங்களில் வரிசையில் காத்திருந்து மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலில் 9 மணி நிலவரப்படி அசாமில் 9.71%, பீகாரில் 9.84%, சத்தீஸ்கரில் 15.42%, ஜம்மு காஷ்மீர் - 10.39%, கர்நாடகா - 9.21%, கேரளா - 11.98%, மத்தியப்பிரதேசம்-13.82%, மகாராஷ்டிரா -7.4%, மணிப்பூர் - 15.49%, ராஜஸ்தான் - 11.77%, திரிபுரா-16.65%, உத்தரபிரதேசம் - 11.67%, மேற்கு வங்காளம் - 15.68% வாக்குகள் பதிவாகி உள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானின் பாகிடோரா தொகுதியில் 13% வாக்குகள் பதிவாகி உள்ளது.
- தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
- முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் 17 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதி, 25 பாராளுமன்ற தொகு திகளுக்கு வருகிற 13-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் கடந்த 18-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று ஏராளமானோர் மனு தாக்கல் செய்தனர்.
தெலுங்கானாவில் உள்ள 17 பாராளுமன்றத் தொகுதிக்கு 890 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மல்காஜ்கிரி தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 114 பேர் மனுதாக்கல் செய்தனர்.
அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்தால் இந்த தொகுதியில் 8 வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்
குறைந்தபட்சமாக அடிலாபாத் தொகுதியில் 23 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இதேபோல் ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிக ளுக்கு மொத்தம் 5460 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 25 பாராளுமன்ற தொகுதி களுக்கு 965 பேர் மனு தாக்கல் செய்தனர்.
முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி புலிவேந்துலா தொகுதியில் மனுதாக்கல் செய்தார்.
இன்று மனுதாக்கல் பரிசீலனை செய்யப்பட்டு விதிமுறைகளை பின்பற்றாத வேட்பாளர்கள் மனு நிராகரிக்கப்பட உள்ளன.
வருகிற 29-ந் தேதிக்குள் வேட்பு மனு வாபஸ் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.
- பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களுரு:
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர்கள் லோகேஷ் (23) கால்டாக்சி டிரைவர். பாலசுப்ரமணியம் (22), சசிகுமார் (20). நண்பர்களான இவர்கள் 3 பேரும் வேலை தேடி பெங்களூருக்கு வந்தனர்.
இவர்கள் 3 பேரும் பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே உள்ள சின்னப்பனஹள்ளி பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் இரவு இவர்கள் 3 பேரும் அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த தண்டவாளத்தில் யஷ்வந்தப்பூரியில் இருந்து கண்ணூர் நோக்கி ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகத்தில் வந்து கொண்டு இருந்தது. ரெயில் வருவதை அவர்கள் கவனிக்கவில்லை. ரெயில் லோகா பைலட் அதிவேகமாக ரெயிலை இயக்கியதால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து அவர்கள் மீது ரெயில் மோதியது. இதில் 3 பேரும் அடுத்தடுத்து தூக்கி வீசப்பட்டனர். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- இன்ஸ்டாகிராமில் தோனி பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி ஒரு நபர் பதிவு செய்திருந்தார்.
- வணக்கம் நான் எம்.எஸ்.தோனி நான் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கணக்கில் இருந்து செய்தி அனுப்புகிறேன்.
இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ்அப், பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் நூதன மோசடி அரங்கேற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி பெயரில் சமூகவலைத்தளம் மூலம் மோசடி செய்ய முயன்ற ஒருவரது பதிவு 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை ஈர்த்து வைரலாகி உள்ளது. இன்ஸ்டாகிராமில் தோனி பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி ஒரு நபர் பதிவு செய்திருந்தார். அதில், வணக்கம் நான் எம்.எஸ்.தோனி நான் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கணக்கில் இருந்து செய்தி அனுப்புகிறேன். நான் ராஞ்சியில் புறநகரில் இருக்கிறேன். பணப்பையை மறந்து வைத்து விட்டேன். எனக்கு ரூ.600 அனுப்ப முடியுமா? நான் வீட்டிற்கு சென்றதும் திருப்பி அனுப்புகிறேன் என கூறப்பட்டிருந்தது.
இந்த பதிவு சமூக ஊடகங்களில் சில மணி நேரங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் மோசடி நபரை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டனர்.
- வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
- அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
கேரளா:
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26 மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1-ந் தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி கடந்த 19-ந்தேதி முதல்கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
2-ம் கட்டத் தேர்தலுக்கு கடந்த 4-ந்தேதி மனுத்தாக்கல் தொடங்கியது. 8-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் 2-ம் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
* கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
* பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சுரேஷ் கோபி திருச்சூரில் வாக்களித்தார்.
* காங்கிரஸ் வேட்பாளர் கே.சி.வேணுகோபால் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
* திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குச் சாவடியில் பத்தனம்திட்டா பாஜக வேட்பாளர் அனில் ஆண்டனி தனது வாக்கினை செலுத்தினார்.
* கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் வாக்குச்சாவடியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார்.
* பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் பிரகாஷ் ராஜ் வாக்களித்தார்.
#LokSabhaElections2024 | Kerala CM Pinarayi Vijayan casts his vote at polling station number 161 in Kannur pic.twitter.com/XdQLAdzLCt
— ANI (@ANI) April 26, 2024
#WATCH | Karnataka: Finance Minister Nirmala Sitharaman casts her vote at BES polling booth in Bengaluru.
— ANI (@ANI) April 26, 2024
Karnataka is voting on 14 seats today in the second phase of Lok Sabha elections.#LokSabhaElections2024 pic.twitter.com/70BZFe9x6s
#WATCH | Kerala: BJP candidate from Pathanamthitta, Anil Antony shows his inked finger after casting his vote at a polling booth in Thiruvananthapuram.
— ANI (@ANI) April 26, 2024
CPI-M has fielded Thomas Isaac from here. Congress has its sitting MP Anto Antony as its candidate in the constituency.… pic.twitter.com/GI2OZCAy41
- மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
- திருமண விழா முக்கியமானது தான் ஆனால் வாக்களிப்பதும் முக்கியம்.
மகாராஷ்டிரா:
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.
2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க திருமண கோலத்தில் மணமகன் ஆகாஷ், அமராவதியின் வதர்புரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது,
திருமண விழா முக்கியமானது தான் ஆனால் வாக்களிப்பதும் முக்கியம். இன்று மதியம் 2 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது என்று கூறினார்.
- கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.
பெங்களூரு:
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.
2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான விஷயம். நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகிறவர்தான் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள்.
ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும் உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.
முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இது ஒரு அற்புதமான அனுபவம். சந்தோஷம், எழுச்சியை கொடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
#WATCH | Karnataka: After casting his vote in Bengaluru, actor Prakash Raj says, "My vote stands for my right, for my power to chose who represents me, who will be my voice in the Parliament... It is very important to choose a candidate whom you believe in, and I have voted for… pic.twitter.com/f6s05exQel
— ANI (@ANI) April 26, 2024
- 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
- வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.
புதுடெல்லி:
இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.
இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இதைத்தொடர்ந்து 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
அந்தவகையில் கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மகாராஷ்டிரா (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.
2-ம் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
எனவே மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையிலேயே பிரசாரம் ஓய்ந்தது.
இந்நிலையில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.
2-ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15.88 கோடியாகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
- மலேகானில் மசூதிக்கு அருகே மோட்டார் சைக்களில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர்.
- இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரக்யா சிங் தாகூர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
பலமுறை சம்மன் அனுப்பியும் பிரக்யாக சிங் ஆஜராகாமல் இருந்தார். தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராக நிலையில், ஏப்ரல் 25-ந்தேதிக்குள் (இன்று) நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் முன் இன்று ஆஜரானார். அப்போது தான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்தார். மேலும், உள்ளங்கையால் கையெழுத்து போட முடியாததால் கைரேகை வைக்க அனுதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், கேள்வி- பதில் வடிவில் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது.
பிரக்யா தாகூர் உள்ளிட்ட ஆறு பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரணையை சந்தித்து வருகிறார்கள்.
மலேகானில் மசூதிக்கு அருகே மோட்டார் சைக்களில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றது.
முதலில் இந்த வழக்கை மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வந்தது. அதன்பின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)க்கு மாற்றப்பட்டது.
- மணிப்பூரில் கடந்த வருடம் நடைபெற்ற வன்முறையின்போது மனித உரிமை மீறல்.
- ராகுல்காந்திக்கு தண்டனை வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த வருடம் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்குப்பிறகு குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மனிதாபிமான மீறல் நடைபெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிக்கைக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்து. அந்த அறிக்கை மிகவும் பாரபட்சமானது. இந்திய நாட்டின் மோசமான புரிதலை பிரதிபலிக்கிறது.
மேலும் அந்த அறிக்கையில் பிபிசி அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் சுமார் 60 மணி நேரம் விசாரணை நடத்தியது. மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு தண்டனை வழக்கப்பட்டு, அதன்பின் உச்சநீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது உள்ளிட்ட விவகாரங்களையும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள் என்ற பெயரில் அறிக்கை வெளியிடும். அதன்படி 2023 மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த நாட்டின் அறிக்கைகள்: இந்தியா என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவ்வாறு தெரிவித்துள்ளது.
- அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது
- சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான Platform Fee எனப்படும் கட்டணத்தையும் ₹5 ஆக உயர்த்துகிறது
ஆன்லைன் உணவு நிறுவனமான சோமேட்டோ, கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இதற்கான சோதனை முயற்சியில் சொமேட்டோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இந்த சோதனை முயற்சி நடைபெறவுள்ளது.
மேலும், சோமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான தனது பிளாட்பார்ம் கட்டணத்தை 25% உயர்த்தியுள்ளது, இதன்படி ஒவ்வொரு ஆர்டருக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலிக்கப்படும். இந்த மாற்றம் டெல்லி, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் தற்போது அமலாகியுள்ளது.
பிளாட்ஃபார்ம் கட்டணம் என்பது டெலிவரி கட்டணத்திற்கு மேல் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணமாகும். 2023 ஆகஸ்ட் மாதத்தில் 2 ரூபாயாக அறிமுகப்படுத்தப்பட்ட பிளாட்பாரம் கட்டணம் தற்போது 5 ரூபாயாக உயர்ந்துள்ளது.
- கடந்த மார்ச் மாதம் 4-ந்தேதி அரசியல் பயணத்தை தொடங்கினார்.
- டெல்லியில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் கலந்து கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன். இவரது மனைவி கல்பனா. இவர் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கந்தே சட்டமன்ற தேர்தலுக்கு மக்களவை தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் போட்டியிட இருக்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.ஏல்.ஏ. சர்பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் கந்தே தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா, எம்டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார். ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பள்ளி கல்வியை முடித்த அவர், இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படிப்பை புவனேஸ்வரில் உள்ள கல்லூரிகளில் முடித்தார்.
மார்ச் மாதம் 4-ந்தேதி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தொடக்க தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது கல்பனா தனது அரசியல் பயத்தை தொடங்கினார். அப்போது, 2019-ல் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு பதவிக்கு வந்ததில் இருந்தே எதிரிகளால் சதித் திட்டம் தீட்டப்பட்டது. ஜார்கண்ட் தனது கணவரை சிறையில் தள்ளிய சக்திகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் என்றார்.
ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன்பின் கல்பனா டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டார். அதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
அமலாக்கத்துறை சம்மனை எதிர்கொண்டபோது, ஹேமந்த் சோரன் அவரது மனைவியை முதல்வராக்க முயற்சிக்கிறார் என பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்