search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manipur Violence"

    • மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி இரு சமூகத்தினருக்கு இடையே உருவான மோதல் பெரும் கலவரமாக வெடித்தது
    • மணிப்பூர் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்

    அசாம் ட்ரிப்யூன் நாளிதழுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.

    அதில், மணிப்பூர் கலவரத்தின்போது தக்க நேரத்தில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் மாநில அரசின் முயற்சிகளால் அம்மாநிலத்தின் சூழலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மேலும், "மணிப்பூரில் கலவரம் உச்சகட்டத்தை எட்டிய நேரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூருக்கு சென்று, அங்கு தங்கி கலவரத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தார். மணிப்பூர் மாநில அரசுக்குத் தேவையான ஆதரவை மத்திய அரசு தொடர்ந்து அளித்து வருகிறது" என்று பிரதமர் கூறினார்.

    மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது, முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு உதவிகள் வழங்குவதற்கான நிதி உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது" என்று மோடி கூறியுள்ளார்.

    மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி இரு சமூகத்தினருக்கு இடையே உருவான மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. மணிப்பூர் வன்முறையில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பொதுச் சொத்துக்களுக்கும், தனியார் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.

    • வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
    • அமைதியாக தேர்தலில் பங்கேற்க வேண்டும்.

    வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள முகாம்களில் வசிக்கும் மக்கள், வரும் மக்களவை தேர்தலில் முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது மணிப்பூர் குறித்த கேள்விக்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், "நாங்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்" என்றார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    நாங்கள் ஒரு திட்டத்தை வடிவமைத்துள்ளோம். அதை நாங்கள் அறிவித்துள்ளோம். முகாமில் உள்ள வாக்காளர்கள் முகாமில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கிறோம்.

    ஜம்மு-காஷ்மீர் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு திட்டம் உள்ளது போல, மணிப்பூரில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

    வாக்காளர்கள் அந்தந்த முகாம்களில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். கீழ் தொகுதியில் இருந்து மேல் பகுதிக்கும், உயரத்திலிருந்து தாழ்ந்த பகுதிக்கும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

    வாக்காளர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், வாக்குச்சீட்டின் மூலம் முடிவு அறிவோம். அமைதியாக தேர்தலில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • 2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மணிப்பூரில் மேய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

    மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றியமைத்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம். இதன்படி மெய்தி இனத்தினர் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலேயே சேர்க்கப்படுவர்.

    2023 மார்ச் 27-ல் மெய்தி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பிறகு மணிப்பூரில் மெய்தி இனத்தினருக்கும், குக்கி பழங்குடிக்கும் இடையே மோதல் உருவாகி பின்னர் மிகப்பெரிய கலவரம் வெடித்தது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மணிப்பூர் பழங்குடியினர் சங்கம் மறு ஆய்வு செய்தது. அவ்வழக்கின் தீர்ப்பில், தனது உத்தரவை நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.

    அத்தீர்ப்பில் பழங்குடியினர் பட்டியலில் மாற்றம் செய்யவும், திருத்தவும் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம் சுட்டி காட்டியது.





    • ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்களுடன் செல்பி எடுத்துள்ளார் தலைமை காவலர்.
    • தலைமைக் காவலரை எஸ்.பி. சஸ்பெண்ட் செய்ததால், மீண்டும் வேலை வழங்குமாறு போராட்டம்.

    மணிப்பூர் மாநிலம் சுரசந்த்பூர் மாவட்டத்தில் தலைமை காவலராக சியாம்லால்பால் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆயுதம் ஏந்திய குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களுடன் சேர்ந்த செல்பி எடுத்துள்ளார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக சுரசந்த்பூர் மாவட்ட எஸ்.பி., தலைமைக் காவலர் மீது ஒழுங்கை நடவடிக்கை எடுத்து அவரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

    இதற்கு ஆயுதம் ஏந்திய குழு மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

    சுமார் 300 முதல் 400 பேர் இணைந்து போராட்டம் நடத்தியதால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. போலீசார் அவர்களை கலைந்த செல்ல உத்தரவிட்ட நிலையில் அவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால் போலீசார் வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்துள்ளனர்.

    அப்போது போராட்டம் நடத்திய கும்பல் எஸ்.பி. அலுவலகத்திற்கு வெளியே இருந்த பேருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். மேலும், கல்வீசி தாக்கல் நடத்தியுள்ளனர். போலீசார் அதற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

    இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    குகி-சோ பழங்குடியின மக்கள், பொலீசார் தங்கள் கிராமங்களை குறிவைத்து தாக்கி வருவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர. ஆனால், போலீசார் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மேலும், "கிராம பாதுகாப்பு தன்னார்வலர்களை" ஊக்குவிப்பதில் குகி-சோ கிளர்ச்சியாளர்கள் ஈடுபடுவதாக தெரித்துள்ளனர்.

    • பாதுகாப்பு படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
    • பாதுகாப்பு படையினர் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம், இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    அங்கு சில நாட்கள் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆனால் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி வனப்பகுதியில் விறகு எடுக்க சென்ற 4 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை நிகழ்ந்துள்ளது. மணிப்பூரின் மோரே பகுதியில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டும் வருகிறார்கள்.

    இவர்களில் சிலர் இன்று அதிகாலை ஒரு கோவில் அருகே தூங்கிக்கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்தது. பாதுகாப்பு படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

    ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

    உடனே பாதுகாப்பு படையினர் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் சண்டை நடந்தது. இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

    • ராகுல்காந்தியின் நடை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம்.

    காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி 'இந்திய ஒற்றுமை நீதிப் பயணம்' என்ற பெயரில் அவரது யாத்திரை மணிப்பூரில் இன்று தொடங்கியது.

    மணிப்பூரில் உள்ள தவுபல் மாவட்ட மைதானத்தில் இருந்து யாத்திரை தொடங்கப்பட்டது. ராகுல்காந்தியின் நடை பயண தொடக்க விழாவில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

    இந்நிலையில், யாத்திரை பயணத்தில் தொடக்க விழாவில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    லட்சக்கணக்கான மக்கள் இங்கே இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள். மணிப்பூர் மக்களின் கண்ணீரை துடைக்கவும் அவர்களுக்கு ஆறுதல் கூறவும், இன்றுவரை பிரதமர் மோடி வரவில்லை. பிரதமர், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் மணிப்பூரை இந்தியாவின் ஒருபகுதியாக கருதவில்லை என நினைக்கிறேன்.

    மணிப்பூர் மக்களின் வலியை நாங்கள் புரிந்துள்ளோம். உங்களது சோகமும், வலிகளும் எங்களுக்கு புரியும். மணிப்பூரில் திரும்பவும் நல்லிணக்கம், அமைதியை கொண்டு வருவோம்.

    வேலைவாய்ப்பின்மை,விலைவாசி உயர்வால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை வெடித்த வண்ணம்தான் உள்ளது.
    • பிஷ்ணுபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால் பதட்டம் அதிகரிப்பு.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மைதேயி- குக்கி இன மக்களிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோக்கள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இரு பிரிவினரிடையேயான மோதலால் 180-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு, உடமைகளை இழந்த நிலையில் ஏராளமானோர் அண்டை மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தனர். அங்கு ராணுவம், பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் அவ்வப்போது அங்கு வன்முறை வெடித்து வருகிறது. புத்தாண்டு தினத்தன்றும் அங்கு துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதனால் பதட்டம் நிலவியது.

    இந்நிலையில் மணிப்பூரில் பிஷ்ணுபூர் மாவட்டம் அகசோய் பகுதியைச் சேர்ந்த நான்கு பேர், சுராசந்த்பூர் மாவட்டத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக நேற்று சென்றுள்ளனர். தாரா சிங், இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20) மற்றும் ரோமன் சிங் (38) ஆகிய 4 பேரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கும்பலால் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

    இந்த நிலையில் நான்கு பேரில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்கள் சுராசந்த்பூர் மாவட்டம் ஹாடக் பைலென் காட்டுப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இபோம்சா சிங் (51), அவரது மகன் ஆனந்த் சிங் (20) மற்றும் ரோமன் சிங் (38) எனத் தெரியவந்துள்ளது. மூன்று பேரையும் ஆயுதமேந்திய குழு கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    தாராசிங் மட்டும் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள கும்பி- தவுபால் மாவட்டத்தில் உள்ள வாங்கூவில் இரு பிரிவனருக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற வன்முறைக்குப் பிறகு மணிப்பூரில் ஏராளமானோர் மாயமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
    • முதலமைச்சர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    மணிப்பூர் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தின் லிலாங் சிங்காவ் பகுதிக்குள் காரில் வந்திறங்கிய மர்ம நபர்கள் பொது மக்களை நோக்கி நடத்திய திடீர் துப்பாக்கி சூடு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பொது மக்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். திடீர் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தௌபால் மட்டுமின்றி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

     


    திடீர் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஆவேசம் அடைந்த உள்ளூர்வாசிகள் மூன்று நான்கு-சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். அந்த வாகனங்கள் யாருக்கு சொந்தமானவை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இன்று நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்கும் பணிகளில் காவல் துறை செயல்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.  

    • மணிப்பூர் கலவரத்தில் 180 பேர் உயிரிழந்தனர்; 300 பேர் காயமடைந்தனர்
    • தற்போது வரை மணிப்பூருக்கு பிரதமர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    மணிப்பூரில் கடந்த மே மாதம் 3 அன்று இரு பிரிவினருக்கிடையே வெடித்த மோதல் கலவரமாக மாறி நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. கலவரத்தில் இரு பிரிவினருக்கும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் சுமார் 180 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். பல குடும்பங்கள் வன்முறைக்கு பயந்து மணிப்பூரை விட்டு அண்டை மாநிலங்களுக்குள் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டது.

    கலவரத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்த சில வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வருகின்றன. அத்தகைய ஒரு வீடியோவில், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் அழுகின்ற ஒரு கைக்குழந்தையை வைத்து கொண்டு, கணவனை இழந்த பெண் ஒருவர் கணவரின் உடலை கண்டு கதறியழும் காட்சிகள் காண்போரின் இதயத்தை கனக்க செய்கிறது.

    சுமார் 4 மாத காலமாக ஒரு மாநிலத்தில் உயிர்பலி தொடரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பாராளுமன்றத்திலோ பொதுவெளியிலோ கருத்து ஏதும் தெரிவிக்காததும், அம்மாநில மக்களை வந்து சந்திக்காததும், வீடுகளையும், உடைமைகளையும், சொத்துக்களையும் இழந்தவர்களுக்கு ஆறுதல் கூற கூட வராததும், அவர்களுக்கு நஷ்ட ஈடாகவும் ஏதும் அறிவிக்காததும் அகில இந்திய அளவில் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவின் உள்துறை அமைச்சரும், பா.ஜ.க.வில் மோடிக்கு அடுத்து நம்பர் 2. இடத்தில் உள்ளவருமான அமித் ஷா இதுவரை பாதிக்கப்பட்ட இரு இனத்தை சேர்ந்த மக்களையும் சந்திக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    அம்மாநிலத்தின் ஆளும் பா.ஜ.க. முதல்வர் பிரேன் சிங் ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால்தான் நிலைமை கை மீறி போனதாக விமர்சிக்கும் மக்கள், உணர்வுபூர்வமான ஒரு பிரச்சனையை அலட்சியமாக கையாளத்தான் அவர் முதல்வாரானாரா என கேட்கின்றனர்.

    • மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
    • மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதிகளில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை காரணமாக அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், 2 மாணவர்கள் கடத்தி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக அங்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

    இந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் காரணமாக பதற்ற நிலை உருவாகி இருக்கிறது. நேற்றிரவு முழுக்க வன்முறை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், இன்று காலை முதலே மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதிகளில் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. எனினும், பதற்றமான சூழல் தான் நிலவியது.

    தாக்குதல் எதுவும் நடைபெறாத நிலையில், இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் நாளை (சனிக்கிழமை) காலை 5 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு உத்தரவில் தளர்வு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் பொது மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
    • ஜி20 மாநாட்டுக்கு பின்னர் இன்னும் கூடுதல் ராணுவம் வரவழைக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    மணிப்பூர் மாநிலத்தில் 2 பிரிவினரிடையே கடந்த மே மாதம் 3-ந்தேதி மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில் 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதை தொடர்ந்து பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள பவுகாக்சோ இகாய் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதனிடையே வன்முறையால் இடம்பெயர்ந்த இரு பிரிவை சேர்ந்த 50 ஆயிரம் பேரை மீண்டும் குடியேற வைக்க அந்த மாநில அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 ஆயிரம் எல்லை பாதுகாப்பு மற்றும் துணை ராணுவ படையினர் மணிப்பூருக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஜி20 மாநாட்டுக்கு பின்னர் இன்னும் கூடுதல் ராணுவம் வரவழைக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் கடந்த ஜூன் 4-ந் தேதி இந்த கொடிய சம்பவம் நடந்தது.
    • மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் 2 ஆயிரம் பேர் கொண்ட கும்பல், ஆம்புலன்சை மடக்கியது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ந் தேதி, பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. 160 பேர் பலியானார்கள். மணிப்பூர் கலவர வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது.

    இதையடுத்து, 20 வழக்குகளை சி.பி.ஐ.யிடம் மணிப்பூர் போலீசார் ஒப்படைத்துள்ளனர். அந்த வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ. தொடங்கி உள்ளது.

    அவற்றில், ஆம்புலன்சில் 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கும் அடங்கும். மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் கடந்த ஜூன் 4-ந் தேதி இந்த கொடிய சம்பவம் நடந்தது.

    டான்சிங் ஹங்சிங் என்ற 7 வயது சிறுவனின் தாயார் மீனா ஹங்சிங், மெய்தி இனத்தை சேர்ந்தவர். அவனுடைய தந்தை ஜோசுவா ஹங்சிங், குகி பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஒரு நிவாரண முகாமில் டான்சிங் ஹங்சிங் தங்கி இருந்தபோது, மெய்தி இன போராட்டக்காரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், துப்பாக்கி குண்டு ஒரு இரும்பு தூணில் பட்டு தெறித்து, டான்சிங்கை காயப்படுத்தியது. அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

    சிறுவனின் தாயாரும், உறவுக்கார பெண் லிடியாவும் மெய்தி இன கிறிஸ்தவர்கள் என்பதால், அவர்கள் சிறுவனுடன் ஆம்புலன்சில் செல்வது என முடிவு செய்யப்பட்டது.

    ஆனால், மேற்கு இம்பால் மாவட்டம் இரோய்செம்பாவில் 2 ஆயிரம் பேர் கொண்ட கும்பல், ஆம்புலன்சை மடக்கியது. டிரைவரையும், நர்சையும் விரட்டியடித்தது.

    சிறுவனின் தாயாரும், உறவுக்கார பெண்ணும் தங்களை விட்டுவிடுமாறு எவ்வளவோ கெஞ்சியும் போராட்ட கும்பல் ேகட்கவில்லை. ஆம்புலன்சுக்கு தீவைத்தனர். இதில் சிறுவனுடன் 3 பேரும் உயிருடன் எரிந்து சாம்பலாகினர்.

    போலீசார், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கும்பலை கலைக்க முயன்றபோதிலும், பலன் கிட்டவில்லை.

    இச்சம்பவம் தொடர்பாக லம்பெல் போலீஸ் நிலையத்தில் போலீசார் பதிவு செய்த வழக்கும், கங்போக்பி போலீஸ் நிலையத்தில் சிறுவனின் தந்தை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    கடந்த மே 3-ந் தேதி, குகி பழங்குடியின தலைவர்களால், தான் கற்பழிக்கப்பட்டதாக ஒரு மெய்தி இன பெண் அளித்த புகாரும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளில் அடங்கும்.

    ×