search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manipur Violence"

    • இந்தியா கூட்டணி 3 முக்கிய மற்றும் எளிதான வேண்டுகோளை வைத்தது.
    • அதில் ஒன்றை கூட நிறைவேற்றாத பிரதமர் அரசியலமைப்பு குற்றத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

    மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்கு மன்னிப்பு கேட்பதாக அம்மாநில முதல்வர் தெரிவித்திருந்தார். அனைத்து சமூதாயத்தினரும் அமைதி காக்க வேண்டும். மன்னிப்போம், மறப்போம் எனக் கூறியிருந்தார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்ட ஓரிரு நாளிலேயே புதிய வன்முறை வெடித்தது.

    நேற்று மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தை ஒரு கும்பல் தாக்கியது. இந்த திடீர் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இம்பால் கிழக்கு மாவட்ட எல்லையான சைபோல் கிராமத்தில் இருந்து பி.எஸ்.எப். மற்றும் சி.ஆர்.பி.எப். படையை அகற்றத் தவறியதாகக் கூறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மணிப்பூர் தீப்பற்றி எரிவதற்கான குற்றத்தில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் கார்கே வெளியிட்டுளள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பா.ஜ.க. மணிப்பூரை எரித்த தீக்குச்சியாகும். நரேந்திர மோடி ஜி, நீங்கள் கடைசியாக 2022 ஜனவரியில் வாக்கு சேகரிப்பதற்கான மணிப்பூர் சென்றீர்கள். 2023 மே 3-ந்தேதியில் இருந்து வன்முறை தொடங்கியது.

    600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். செயற்கைக்கோள் படங்கள் மூலம் மீடியாக்கள், கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன.

    உங்களுடைய திறமையற்ற மற்றும் வெட்கமற்ற முதலமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் நீங்கள் மாநிலத்திற்கு செல்லாததை வெட்கமின்றி வசதியாக மறைத்துவிட்டார்.

    அழகான எல்லை மாநிலமான மணிப்பூர் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க வேண்டும் என பாஜக சுயநல ஆர்வம் கொண்டுள்ளது என்பதை மீண்டும் தெரிவிக்கிறோம். நூற்றுக்கணக்கானோர் உயிரழிந்த நிலையில், 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 20 மாதங்களாக முகாம்களில் மக்கள் இன்றும் வசித்து வருகின்றனர்.

    டிசம்பர் 6-ந்தேதி இந்தியா கூட்டணி மணிப்பூர் வன்முறை தொடர்பாக மூன்று முக்கிய மற்றும் எளிதான கோரிக்கைகளை வதை்தது. இந்த மூன்றில் ஒன்றை கூட நீங்கள் செய்யவில்லை. இதனால் ராஜ்தர்மத்தை பின்பற்றாத பிரதமர் மோடி அரசியலமைப்பு குற்றத்தில் இருந்த தப்ப முடியாது.

    டிசம்பர் 31-ந்தேதி சைபோலக கிராமத்தில் பெண்கள் மீது பாதுகாப்புப்படையினர் தடியடி நடத்தியதாக குகி அமைப்புகள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

    • மணிப்பூரில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
    • மணிப்பூரில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் முதல் மந்திரி பைரேன் சிங்.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் தொடங்கிய குக்கி-மெய்தேய் இனக்குழுக்கள் இடையிலான கலவரத்தில் 250 பேர் பலியாகினர். இன்னும் அப்பகுதியில் கலவரம் ஓயவில்லை.

    கடந்த அக்டோபர் முதல் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் பள்ளத்தாக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இதற்கிடையே, மணிப்பூரில் நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அம்மாநில முதல் மந்திரி பைரேன் சிங் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தை நேற்று மாலை ஒரு கும்பல் தாக்கியது.

    இந்த திடீர் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தாக்குதல் நடத்தியவர்கள் எஸ்.பி. அலுவலகத்தை நோக்கி கற்களை வீசி எறிந்தனர். இதில் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த போலீசாரின் வாகனங்கள் சேதமடைந்தன.

    இம்பால் கிழக்கு மாவட்ட எல்லையான சைபோல் கிராமத்தில் இருந்து பி.எஸ்.எப். மற்றும் சி.ஆர்.பி.எப். படையை அகற்றத் தவறியதாகக் கூறி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

    • கடந்த ஆண்டு முதல் மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது.
    • அங்கு பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றது.

    மணிப்பூர்:

    மணிப்பூரில் குக்கி, மைதேயி இன மக்களுக்கு இடையே கடந்தாண்டு முதல் மோதல் போக்கு நிலவிவருகிறது. இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலால் மணிப்பூரின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் பல மக்கள் குடும்பத்தையும், வீடுகளையும் இழந்து தவித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முதல் மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வருகிறது.

    வன்முறையைக் கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவ நிறுவனங்களுடன், மத்திய துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டது. அவர்கள் அதிக பதற்றமான பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.


    இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடந்த மாதம் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலின் 5 மாவட்டங்களிலும் போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

    3 அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏ.க்கள் வீடுகளை தீயிட்டு எரித்ததால் பதற்றம் அதிகரித்தது. பல இடங்களில் போராட்டக்காரர்களை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.


    இதனால் மணிப்பூரில் பா.ஜ.க. அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றது. ஆனாலும் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    மணிப்பூர் பற்றி எரிவதை பா.ஜ.க. விரும்புகிறது. ஜனாதிபதி இந்த பிரச்சனையில் தலையிடவேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

    • கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டனர்
    • எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த வருடம் முதல் கலவரமான சூழல் நிலவுகிறது. இட ஒதுக்கீடு தொடர்பாக குக்கி- மெய்தேய் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.

    2023 மே மாதம் பெண் ஒருவர் வன்முறை கும்பலால் சாலையில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ வெளியானது நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    240க்கும் அதிகமான மக்கள் இந்த கலவரத்தில் உயிரிழந்தனர். 60,000 பேர் தங்கள் வீடுகளை இழந்து புலம்பெயர்ந்தனர். முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.

    காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு ஆயுதங்கள் களவாடப்பட்டன. இடையில் கலவரம் ஓய்ந்திருந்த நிலையில் இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் சமீபமாக மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

    கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டதால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்து.

     

    பதுங்கியிருந்து தாக்கும் கிளர்ச்சியாளர்களைப் பிடிக்க மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப்படை திணறி வருகிறது.

    இந்நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கெய்ராவ் குனூ பகுதியில் பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் சில இணையதள சாதனங்களையும் கைப்பற்றினர்.

    கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் சாதனங்களின் புகைப்படங்களை இந்திய ராணுவம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சின்னம் உள்ளதாக எக்ஸ் தள பயனர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

     

     இதனைதொடர்ந்தகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.

    இது பொய்யானது. இந்தியாவின் மேல் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் செயல்படாது என்று தெரிவித்து உள்ளார்.

     செயற்கைக்கோள் இணையதள சேவையை வழங்கும் ஸ்டார்லிங், இந்தியாவில் இயங்க உரிமம் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கிளர்ச்சியாளர்களுக்கு இதுபோன்ற நவீன சாதனங்கள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது புதிராகவே இருந்து வருகிறது. 

     

    • வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.
    • மாதக்கணக்கில் நீடித்த கலவரத்தில் 200-க்கு மேற்பட்டோர் பலியானார்கள்.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு பெரும்பான்மையாக வாழும் மெய்தி இனத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கோரி வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு மே மாதம், மணிப்பூரில் உள்ள மலை மாவட்டங்களில் பழங்குடியினர் ஆதரவு பேரணி நடந்தது. அப்போது, மெய்தி இனத்தினருக்கும், பழங்குடியினருக்கும் இடையே கலவரம் வெடித்தது.

    மாதக்கணக்கில் நீடித்த கலவரத்தில் 200-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கினர். எண்ணற்ற வீடுகள் எரிக்கப்பட்டன. கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. இன்னும் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    இதற்கிடையே, மணிப்பூர் கலவரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற 3 பெண் நீதிபதிகளை கொண்ட குழு அமைக்குமாறு உத்தரவிட்டது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    மணிப்பூர் இனக்கலவரத்தின்போது, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ எரிக்கப்பட்ட வீடுகள், கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகள் பற்றிய விவரங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யுமாறு மணிப்பூர் மாநில அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும், கலவரக்காரர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் தெரிவிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 20-ந் தேதி தொடங்கும் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

    • குகி கிளர்ச்சி குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கையை தொடங்க வேண்டும்.
    • மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம்.

    மணிப்பூரில் கடந்த வாரம் ஆறு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். குகி கிளர்ச்சிக்குழு பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்திச் சென்று 7 நாட்களில் ஆறு பேரையும் கொலை செய்தது. இதனால் மணிப்பூரில் தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இது தொடர்பாக அமித் ஷா உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டார். மூன்று வழக்குகளை என்.ஐ.ஏ. விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.-க்கள் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த நிலையில் மணிப்பூரில் பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 27 எம்.எல்.ஏ.-க்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் குகி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை (mass operation) எடுக்கப்பட வேண்டும். குகி கிளர்ச்சிக்குழுவை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நவம்பர் 14 தேதியிட்ட உத்தரவின்படி AFSPA உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் இந்த தீர்மானத்தில் குறிப்பிட்டவை நடைமுறை படுத்தப்படவில்லை என்றால் மணிப்பூர் மக்களுடன் ஆலோசனை நடத்தி அதன்பின் உரிய நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.

    மணிப்பூரில் அமைதி மற்றும் இயல்பு நிலையை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசும் மாநில அரசும் விரைவில் எடுக்கும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த கூட்டத்தில் ஏழு எம்.எல்.ஏ.-க்கள் மருத்துவம் தொடர்பான காரணங்களை கூறி கலந்து கொள்ளவில்லை. 11 எம்.எல்.ஏ.க்கள் காரணம் ஏதும் கூறாமல் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • வடகிழக்கு பகுதியியல் இருந்து வாபஸ் பெறுவதற்கான டிரென்ட் தொடங்கியுள்ளது.
    • ஒருநாள் ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்குதேசம் பா.ஜ.க.வுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது என்ற செய்தி வரும்.

    மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. ஆனால் பா.ஜ.க. வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உறுதியான முடிவை எடுக்காமல் இருந்து வருகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் கட்சி பா.ஜ.க.-வுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் நாட்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன என காங்கிரஸ் தலைவர் கன்வார் தனிஷ் அலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கன்வார் தனிஷ் அலி கூறியதாவது:-

    கீழக்கே சூரியன் உதிக்கின்றது. பா.ஜ.க.வின் நாட்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. வடகிழக்கு பகுதியியல் இருந்து வாபஸ் பெறுவதற்கான டிரென்ட் தொடங்கியுள்ளது. மணிப்பூர் அரசுக்கு வழங்கி ஆதரவு வழங்கி வந்த அவர்களின் கூட்டணி கட்சி ஒன்று தற்போது வாபஸ் பெற்றுள்ளது.

    ஒருநாள் ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்குதேசம் ஆதரவை திரும்ப பெற்றதாக சொல்வதை நீங்கள் கேட்பீர்கள். மோடி அரசு கவிழும்.

    அவர்கள் ஏராளமான வாக்குறுதிகளை அளித்து, அதிகாரத்திற்கு வந்துள்ளனர். ஆனால் இந்த நாள் வரை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மணிப்பூர் நிலை ஒவ்வொருவரின் முன்பும் இருக்கிறது. அவர்கள் எதுவும் செய்யவில்லை 'baanto' and 'kaato' என்ற அரசியலோடு அவர்கள் பிசியாக உள்ளனர்.

    ஒருநாள் காலை நீங்கள் எழுந்திருக்கும்போது, யாருடைய ஊன்றுகோளில் பா.ஜ.க. அரசு நடந்து கொண்டிருக்கிறதோ, அந்த ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்குதேசம் பா.ஜ.க.வுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது என்ற செய்தியை கேட்பீர்கள்.

    இவ்வாறு கன்வார் தனிஷ் அலி தெரிவித்துள்ளார்.

    • மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை பரவத் தொடங்கியுள்ளது.
    • ஆளும் பாஜக மணிப்பூர் பற்றி எரிவதை விரும்புவதாக தெரிகிறது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    உங்களுடைய இரட்டை இஞ்சின் ஆட்சியில் மணிப்பூர் பாதுகாப்பாக இல்லை. கடந்த 2023 மே முதல் அங்கு கற்பனைக்கு எட்டாத வலிகள், பிரிவுகள் மற்றும் கொதித்தெழும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அது அங்குள்ள மக்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது.

    பா.ஜ.க. வேண்டுமென்றே மணிப்பூர் பற்றி எரிவதை விரும்புகிறது. ஏனெனில் அது அவர்களின் பிரிவினைவாத வெறுப்பு அரசியலுக்கு உதவுகிறது.

    கலவரத்தால் பாதிக்கப்படும் பட்டியலில் பல மாவட்டங்கள் புதிதாக இணைகின்றன. வன்முறைத் தீ அண்டையில் உள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவுகிறது.

    அழகான எல்லை மாநிலமான மணிப்பூரை பிரதமர் மோடி கைவிட்டு விட்டார். எதிர்காலத்தில் மோடி மணிப்பூருக்குச் சென்றாலும், துயரமான நேரத்தில் பிரச்சினைக்கு தீர்வு காண தங்கள் மாநிலத்தில் காலடி எடுத்து வைக்காத மோடியை அந்த மாநில மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என பதிவிட்டுள்ளார்.

    • பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
    • தேடுதல் வேட்டையில் பெரிய அளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இம்பால்:

    வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஒரு ஆண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவே மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.

    இரு சமூகத்தினரை சார்ந்த பயங்கரவாதிகளும் மாறி மாறி தாக்குதல்களில் ஈடுபடுவதால் உயிர் சேதம் தொடர் கதையானது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

    இந்நிலையில், ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று ஒரு வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த ஒருவரை சுட்டுக்கொன்றனர். இந்த பயங்கரவாதிகள் மலைப்பகுதியில் இருந்து வந்தவர்களாவர். இதைத் தொடர்ந்து இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் உள்பட ஆயுதம் தாங்கிய 5 போ் உயிரிழந்தனர். அங்கு மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மணிப்பூரில் ஏற்பட்ட புதிய கலவரம் தொடர்பாக முதல்-மந்திரி பிரேன்சிங் அவசர ஆலோசனை நடத்தினார். சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடர்பாக அவர் இம்பாலில் உள்ள தனது இல்லத்தில் மாநில மந்திரிகள், ஆளும் கூட்டணி எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று இரவு அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இந்த அவசர கூட்டத்துக்கு பிறகு முதல்-மந்திரி பிரேன்சிங், கவர்னர் லட்சுமன் ஆச்சார்யாவை தனியாக சந்தித்தார்.

    இந்த நிலையில் முதல்-மந்திரி பிரேன்சிங், 20 எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் லட்சுமன் ஆச்சார்யாவை இன்று காலை 11 மணியளவில் சந்தித்தார். இந்த சந்திப்பு 1 மணி நேரம் நடைபெற்றது. அவர்கள் என்ன விவாதித்தார்கள் என்று தெரியவில்லை.

    ஆளில்லா விமானம், ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து புதிய வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டதால் மணிபூரில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த தேடுதல் வேட்டையில் பெரிய அளவில் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துப்பாக்கிகள், கைதுப்பாக்கிகள், குண்டுகள், கையெறி குண்டுகள், நீண்ட தூரம் தாக்க கூடிய ராக்கெட் குண்டுகள், வெடி பொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றினர்.

    • சொந்த வீட்டிற்கு வர முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்கவில்லையா?.
    • 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதிக்குக்கு பிறகு மத்திய மந்திரிகள் மணிப்பூர் வராதது ஏன்?.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மணிப்பூர் (Outer Manipur) காங்கிரஸ் எம்.பி., மணிப்பூர் வன்முறை தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து உணர்ச்சிப்பூர்வமான பேச்சை பதிவு செய்தார்.

    இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆல்ஃப்ரட் ஆர்தர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாநிலமான மணிப்பூருக்கு வர வேண்டும். சொந்த வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் மீண்டும் சொந்த வீட்டிற்கு வர முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் அழுகுரல் கேட்கவில்லையா?.

    மத்திய மந்திரிகள் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒவ்வொரு வாரமும் 2023-ம் ஆண்டு மே 3-ந்தேதிக்குக்கு முன் வந்த நிலையில், அதன்பின் மணிப்பூர் வராதது ஏன்?.

    பிரதமர் மோடி மணிப்பூர் மாநில முதல்வர் என். பிரேன் சிங்கை ஏன் மாற்றவில்லை. ஒருவரை மாற்றினால் அமைதியை கொண்டு வர முடியும் என்ற நிலையில், அவரை மாற்ற ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது.

    இந்த வன்முறைக்கு ஒரு நபர்தான் காரணம் என ஒரு சமூகத்தினர் கூறுகிறார்கள். முதல்வரை விட நீங்கள் 49 உறுப்பினர்களை அதிகமாக பெற்றுள்ளீர்கள். பிரதமர் மோடி அவரை மாற்ற வேண்டும். அமைதி கொண்டு வருவதற்காக ஒருவரை மாற்றுவது கடினமா? உங்களால் சிறிய மாநிலத்தில் அமைதியை கொண்டு வர முடியவில்லை என்றால், எப்படி மிகப்பெரிய நாட்டில் அமைதியை நிலைநாட்டுவீர்கள்?

    மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை நான் பார்வையிட்டேன். இந்த நேரத்தில், மணிப்பூர் மிகக் குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமாகவும், அதிக பணவீக்கத்தைக் கொண்ட மாநிலமாகவும் உள்ளது என்பதை அவர் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார் என்று நினைக்கிறேன். எது மக்கள் நட்பு மற்றும் ஒரு நாட்டின் நலனுக்கு எதிரானது என்பதனை புரிந்துகொள்ள உங்களுக்கு ராக்கெட் அறிவியல் தேவையில்லை.

    இவ்வாறு ஆல்ஃபர்ட் ஆர்தர் தெரிவித்துள்ளார்.

    • மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.
    • வன்முறையால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

    மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. ஓராண்டை கடந்தும் மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே தற்போதும் நீடித்து வருகிறது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அதேவேளை, வன்முறையை கட்டுப்படுத்த மணிப்பூரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவங்கள் தற்போது குறைந்துள்ள நிலையில் மணிப்பூரில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் மணிப்பூர் செல்லும் அவர் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூற உள்ளார்.

    மேலும், வன்முறையால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.

    • பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்காக, மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் சென்றிருந்தபோது ஜரிபாம் மாவட்டமும் பற்றி எரிந்தது.
    • கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய மோதல் இனக்கலவரமாக, 400 நாள்களுக்கும் மேல் கொளுந்துவிட்டு எரிகிறது.

    மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க, வன்முறைக் காடானது மணிப்பூர்.

    மோதல்களும் கலவரங்களும் தீ வைப்பு சம்பவங்களும் தொடர்கின்றன. மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்து வருகிறது. வீடுகள் தீக்கிரையானதால், பள்ளிகளும், அரசுக் கட்டிடங்களும், முகாம்களாகின. மணிப்பூரில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இனக்கலவரத்தில் இதுவரை பாதிக்கப்படாமல் இருந்தது ஜரிபாம் மாவட்டம்தான். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவிற்காக, மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங் சென்றிருந்தபோது ஜரிபாம் மாவட்டமும் பற்றி எரிந்தது.

    அங்கு புதாங்கல் என்ற இடத்தில் மெய்தி இனத்தவரின், 70-க்கும் அதிகமான வீடுகள் தீ வைக்கப்பட்டன. ஜூன் 6-ந்தேதி காணாமல் போன ஒருவரின் உடல், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறை, மத்திய பாதுகாப்புப்படை, துணை ராணுவம் என ஒட்டுமொத்தமாக குவிக்கப்பட்டன.

    கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய மோதல் இனக்கலவரமாக, 400 நாள்களுக்கும் மேல் கொளுந்துவிட்டு எரிகிறது. இந்நிலையில், மணிப்பூரில் பாதுகாப்பு நிலைமையை உறுதிப்படுத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த உயர் அதிகாரிகள், ராணுவம் மற்றும் இதர பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    ×