search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம் குடித்து"

    • உடனடியாக அவரை மீட்டு உறவினர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
    • அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் விஷமருந்தி இருப்பதாக கூறி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் ஜாண் பரிதாபமாக இறந்தார்.

    குழித்துறை, அக்.27-

    மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பழைய கடை பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ஜாண் (வயது 53), இவருக்கு பெல்ஸ் மேரி (43) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். மைக்கேல் ஜாண் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் வீட்டில் வந்ததும் வயிறு வலிப்பதாக துடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு உறவினர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் விஷமருந்தி இருப்பதாக கூறி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் ஜாண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகள் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியே சென்றவர் காதலருடன் சென்று விட்டார்.
    • இதனால் வெங்கடேசன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (54). இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 25 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இவர்களது மகள் சம்பவத்தன்று வேலை விஷயமாக வெளியே சென்றவர் காதலருடன் சென்று விட்டார். இதனால் வெங்கடேசன் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பயிர்களுக்கு அடிப்பதற்காக தனது வீட்டில் வைத்திருந்த கலைக்கொல்லி (விஷம்) மருந்தை குடித்துள்ளார். அப்போது சித்ரா தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்துள்ளார்.

    அப்போது தனது கணவர் வாந்தி எடுத்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கணவரிடம் இதுகுறித்து கேட்டபோது தான் விஷம் குடித்து விட்டதாக கூறியதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை கொண்டு வருகின்றனர். 

    • சம்பவத்தன்று திடீரென வசந்தாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
    • வேதனையால் துடித்த அவர் வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் அடுத்த பெரியவீரசங்கீ, லட்சுமி நகரை சேர்ந்தவர் கருணாநிதி (70). இவரது மனைவி வசந்தா (55). வசந்தாவுக்கு கடந்த 3 வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார்.

    சம்பவத்தன்று திடீரென வசந்தாவுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையால் துடித்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) குடித்து சிறிது நேரத்தில் வாந்தி எடுத்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தாவை சிகிச்சைக்காக சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டார். பின்னர் வசந்தா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று திடீரென வசந்தா உடல்நிலை மோசமானது.

    இதையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வசந்தா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதில் அவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்ததாக கூறப்படுகிறது.
    • இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி பி.கே. வலசு பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் (80) . இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இதில் அவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்ததாக கூறப்படுகிறது. வயதான காலத்தில் இப்படியாகி விட்டதே என்று அவர் மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் காளிம்மாள் வீட்டில் இருந்த எலி மருந்து (விஷம்) சாப்பிட்டார்.

    இதனை கண்ட அவரது மகன் மகேந்திரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காளியம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சத்தியசுந்தரி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் சம்பவ த்தன்று மன வருத்தத்தில் இருந்து வந்த சத்தியசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாழ்குளி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தகுமார். இவரது மனைவி சத்தியசுந்தரி (வயது 34). விவசாயி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    சத்தியசுந்தரி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என கூறப்படுகிறது. இ தனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று மன வருத்தத்தில் இருந்து வந்த சத்தியசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளை யத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக் காக கோபிசெட்டிபாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியசுந்தரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கண்ணன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    சங்கராபுரம் அருகே குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(75). இவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார், இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திலகா கணவரின் நினைவாக மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார்.
    • அப்போது திலகா அவரது கணவர் போட்டோவிற்கு கீழ் படுத்திருந்தார். அவரது கை மற்றும் வாய்ப்பகுதி மஞ்சளாக இருந்தது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் திலகா (51). இவரது கணவர் பெருமாள். இவர்களுக்கு விஜய் (27) என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2 வருடமாக திலகா கர்ப்பப்பை யில் கட்டி கார ணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெருமாள் இறந்து விட்டார்.

    இதனால் திலகா கணவரின் நினைவாக மன வேதனையுடன் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை விஜய் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் திலகா மட்டும் இருந்துள்ளார்.

    பின்னர் மதியம் சாப்பிடுவதற்காக விஜய் வீட்டுக்கு வந்தார். அப்போது திலகா அவரது கணவர் போட்டோவிற்கு கீழ் படுத்திருந்தார். அவரது கை மற்றும் வாய்ப்பகுதி மஞ்சளாக இருந்தது.

    அவரது அருகே சாணி பவுடர் பாக்கெட் திறந்த நிலையில் இருந்தது. இது பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் தாயை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றார்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே திலகா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சம்பவத்தன்று இரவு பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் அவர் திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
    • இதையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (30). இவரது மனைவி வித்யா. பிரதாப் மூலப்பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விட்டார். நள்ளிரவில் பிரதாப் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அப்போது பிரதாப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்திருப்பதாக அவரது மனைவி மற்றும் உறவின ர்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரதாப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை இல்லாத மன வேதனையில் கவிதா களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார்.
    • இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள வேலாங்குட்டை, துய்யம் பூந்துறை, கே.கே. வலசை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகள் கவிதா (வயது 36).

    இவருக்கு கடந்த 9 வருட ங்களுக்கு முன்பு ஒருவருடன் திருமண–மானது. அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உடுமலைப்பேட்டை குடும்ப நல நீதிமன்றத்தில் விவா கரத்து பெற்றனர்.

    இதைதொடர்ந்து கவிதா மோகன்ராஜ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் கவிதா மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கவிதா களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவ ரது உடல் பிரேத பரி சோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர். ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர்.
    • இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பவானிசாகர், கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (50). இவரது மனைவி சாந்தா. இருவரும், குடும்பச் செலவுக்காக மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் பெற்றிருந்தனர்.

    ஆனால் அதை திருப்பிச் செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்துள்ளனர். இந்த நிலையில் மூர்த்தி சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

    அவரை மீட்டு, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி உயிரிழந்தார்.

    இதுகுறித்து, பவானிசாகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மன உளைச்சலில் இருந்த பார்த்திபன் தற்கொலை செய்து முடிவு எடுத்து பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
    • இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளை யம் ராஜகோபால் தோட்டம், கலைஞர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (36). இவரது மனைவி சங்கீதா (30).

    பார்த்திபன் தெரிந்தவர்க ளிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் வாங்கிய வர்களிடம் பணம் கொடுக்க முடியாமல் தவித்தும் வந்து உள்ளார்.

    இதனால் சமீபகாலமாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த 4 வருடத்திற்கு முன்பு பார்த்திபன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த பார்த்திபன் தற்கொலை செய்து முடிவு எடுத்து கடந்த 8-ந் தேதி பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

    இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனவேதனை அடைந்த மாதேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மொசல் மடுவு பகுதியை சேர்ந்தவர் மாதேஷ்(37). டிராக்டர் டிரைவா். இவரது மனைவி பூங்ககொடி. மாதேஷிற்கு மதுப்பழக்கம் உள்ளது.

    கடந்த சில நாட்களாக மாதேஷ் மது குடித்து விட்டு சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு பூங்கொடி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த மாதேஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் மாதேஷை மீட்டு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு மாதேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×