search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager commits suicide"

    • கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதி, டி. பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (40). இவரது மனைவி பிரீத்தா.

    திருமணம் ஆகி 2 மாதத்தில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கவுரி சங்கரை விட்டு அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    இதனையடுத்து கவுரிசங்கர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து திரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கவுரிசங்கர் விஷத்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி. மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவுரிசங்கர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோபால்சாமி களைக்கொல்லி மருந்தை மதுவில் கலந்து குடித்து விட்டார்.
    • திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே திங்களூர் அடுத்துள்ள நிச்சாம் பாளையம் ராம நாயக்க னூரை சேர்ந்தவர் கோபால்சாமி (26).

    இவருக்கு திருமணமாகி 6 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. கோபால் சாமிக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணியளவில் கோபால்சாமி மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இது குறித்து அவரது மனைவி அவரிடம் சண்டை போட்டுள்ளார்.

    இதையடுத்து வீட்டில் இருந்து வெளியேறிய கோபால்சாமி விவசாய பயிருக்கு தெளிக்கும் களைக் கொல்லி மருந்தை (விஷம்) மதுவில் கலந்து குடித்து விட்டார்.

    இது குறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த கோபால் சாமியை மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே கோபால்சாமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உமாதேவி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
    • மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே காடாம்பாடியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் மகன் மாரிமுத்து (வயது48). இவர் காளீஸ்வரி என்பவரை முதல் திருமணம் செய்து அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    அதன் பின்னர் காளீஸ்வரியை பிரிந்து உமாதேவி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது 2-வது மனைவியும் இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதனை அடுத்து முதல் மனைவி பணியாற்றும் கம்பெனியில் இவர் வேலைக்கு சேர்ந்து மீண்டும் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ அவரிடம் முறையிட்டுள்ளார். இதனை காளீஸ்வரி ஏற்றுக் கொள்ளாததால் மனமுடைந்து தினமும் மது குடித்து வந்துள்ளார். குடிபோதையில் அவ்வப்போது தன்னுடன் சேர்ந்து வாழுமாறு காளீஸ்வரியிடம் கூறினார்.

    சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த மாரிமுத்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நூலக வளாகத்தில் சந்தோஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கோபி செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் கணபதி பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சந்தோஷ் (21). கூலி தொழிலாளி.

    இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு ரேசன் கடையில் இயங்கி வரும் நூலக வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் உறவினர்கள் ஓடிச்சென்று பார்த்து கதறி அழுதனர். மேலும் கோபி செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • கோமங்கலத்தில் தங்கி ராகேஷ் கான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராகேஷ் கானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை,

    மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ராகேஷ் கான் (வயது 25). இவரது மனைவி மனோகர கான் (22). இவர்களுக்கு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் கோவை வந்தனர். பின்னர் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலத்தில் தங்கி ராகேஷ் கான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று ராகேஷ் கான் தனது மகனை கண்டித்து தாக்கினார்.

    இதனை பார்த்த அவரது மனைவி மனோகர கான், அவரை கண்டித்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதனால் ராகேஷ் கான் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்கி அடைந்த அவர் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கதறி அழுதார்.

    இதுகுறித்து கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராகேஷ் கானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கடனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கினார்.
    • இது குறித்து பீளமேடு போலீசாருக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை காளப்பட்டி அருகே உள்ள செந்தூர் திருநகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மகன் பழனி பாரதி (வயது 25). கிரைண்டர் மெக்கானிக். இவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கடனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கினார்.

    பின்னர் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தார். மேலும் நண்பர்கள் சிலரிடமும் கடன் வாங்கி இருந்தார். ஆடம்பர வாழ்க்கைகாக வாங்கிய கடனை பழனி பாரதி திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

    இதனால் அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பழனி பாரதி வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து பீளமேடு போலீசாருக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில வருடங்களுக்கு முன்பு உறவினர் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • வெங்கடேஷ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    கோவை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 22). இவர் கோவை சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    வெங்கடேசுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு உறவினர் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் வெங்க டேசுடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். இதன் காரணமாக வெங்கடேஷ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    வழக்கம் போல இவர் இரவு பணிக்கு சென்று விட்டு மறுநாள் காலையில் வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த வெங்கடேஷ் தனது அறைக்கு சென்றார். அங்கு வைத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த வெங்கடேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வெங்கடேஷ் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • பண்ருட்டி அருகே மணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா.
    • அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக்கல்லூரி பின்புறம் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் ரவிச்சந்திரன்(35). திருமணம் ஆகாதவர். இவர்நேற்றுமுன்தினம் இரவுஅங்கு செட்டி பாளையம் அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக்கல்லூரி பின்புறம் விஷம் குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சை க்காக கடலூர் கொண்டு செல்லப்பட்ட வாலிபர் ரவிச்சந்திரன் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

    பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமணம் ஆகாத விரக்தியில் ரவிச்சந்தி ரன் தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    • கிருஷ்ணமூர்த்தி மது போதையில் வாணியை சந்தேகப்பட்டு பேசி, தகராறு செய்ததாக தெரிகிறது.
    • அக்கம்பக்கத்தினர் வாணிக்கு போன் செய்து கிருஷ்ணமூர்த்தி தூக்குமாட்டியதில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா வள்ளிபுரத்தான் பாளையம், கள்ளியங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (30). இவரது மனைவி வாணி (26). இவர்களுகு 8 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இருவரும் கடந்த 20-ந் தேதி ஈரோடு வைராபாளையத்தில் உள்ள வாணியின் தாய் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு கிருஷ்ணமூர்த்தி மது போதையில் வாணியை சந்தேகப்பட்டு பேசி, தகராறு செய்ததாக தெரிகிறது.

    பின்னர் அவர் கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டு கள்ளியங்காட்டு வலசில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் இரவு அக்கம்பக்கத்தினர் வாணிக்கு போன் செய்து கிருஷ்ணமூர்த்தி தூக்குமாட்டியதில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதாகவும், ஈரோடு அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர்.

    இதையடுத்து வாணி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாணி அளித்த புகாரின்பேரில் வெள்ளோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 29) கூலி தொழிலாளி, இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்பொழுது இவரது மனைவி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி குடும்பம் நடத்துவது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தனது பருத்தி வயலுக்குச் சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்ததார். இதனை கண்ட அக்கம்,பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். இது குறித்து இவரது மனைவி தேவகி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மன உளைச்சலில் இருந்த பார்த்திபன் தற்கொலை செய்து முடிவு எடுத்து பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
    • இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளை யம் ராஜகோபால் தோட்டம், கலைஞர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (36). இவரது மனைவி சங்கீதா (30).

    பார்த்திபன் தெரிந்தவர்க ளிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் வாங்கிய வர்களிடம் பணம் கொடுக்க முடியாமல் தவித்தும் வந்து உள்ளார்.

    இதனால் சமீபகாலமாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த 4 வருடத்திற்கு முன்பு பார்த்திபன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த பார்த்திபன் தற்கொலை செய்து முடிவு எடுத்து கடந்த 8-ந் தேதி பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

    இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×