search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    குடும்ப தகராறில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

    • கிருஷ்ணமூர்த்தி மது போதையில் வாணியை சந்தேகப்பட்டு பேசி, தகராறு செய்ததாக தெரிகிறது.
    • அக்கம்பக்கத்தினர் வாணிக்கு போன் செய்து கிருஷ்ணமூர்த்தி தூக்குமாட்டியதில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா வள்ளிபுரத்தான் பாளையம், கள்ளியங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (30). இவரது மனைவி வாணி (26). இவர்களுகு 8 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    இருவரும் கடந்த 20-ந் தேதி ஈரோடு வைராபாளையத்தில் உள்ள வாணியின் தாய் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு கிருஷ்ணமூர்த்தி மது போதையில் வாணியை சந்தேகப்பட்டு பேசி, தகராறு செய்ததாக தெரிகிறது.

    பின்னர் அவர் கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டு கள்ளியங்காட்டு வலசில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்த நிலையில் இரவு அக்கம்பக்கத்தினர் வாணிக்கு போன் செய்து கிருஷ்ணமூர்த்தி தூக்குமாட்டியதில் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பதாகவும், ஈரோடு அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல்வதாகவும் கூறியுள்ளனர்.

    இதையடுத்து வாணி மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வாணி அளித்த புகாரின்பேரில் வெள்ளோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×