search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூலக வளாகத்தில் வாலிபர் தற்கொலை
    X

    நூலக வளாகத்தில் வாலிபர் தற்கொலை

    • நூலக வளாகத்தில் சந்தோஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கோபி செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் கணபதி பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சந்தோஷ் (21). கூலி தொழிலாளி.

    இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள ஒரு ரேசன் கடையில் இயங்கி வரும் நூலக வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுப்பற்றி தெரிய வந்ததும் உறவினர்கள் ஓடிச்சென்று பார்த்து கதறி அழுதனர். மேலும் கோபி செட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சந்தோஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×