search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபர் விஷம் குடித்து  தற்கொலை
    X

    வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

    • மன உளைச்சலில் இருந்த பார்த்திபன் தற்கொலை செய்து முடிவு எடுத்து பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
    • இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளை யம் ராஜகோபால் தோட்டம், கலைஞர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (36). இவரது மனைவி சங்கீதா (30).

    பார்த்திபன் தெரிந்தவர்க ளிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் வாங்கிய வர்களிடம் பணம் கொடுக்க முடியாமல் தவித்தும் வந்து உள்ளார்.

    இதனால் சமீபகாலமாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த 4 வருடத்திற்கு முன்பு பார்த்திபன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த பார்த்திபன் தற்கொலை செய்து முடிவு எடுத்து கடந்த 8-ந் தேதி பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.

    இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×