search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து டிரைவர் தற்கொலை
    X

    விஷம் குடித்து டிரைவர் தற்கொலை

    • உடனடியாக அவரை மீட்டு உறவினர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
    • அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் விஷமருந்தி இருப்பதாக கூறி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் ஜாண் பரிதாபமாக இறந்தார்.

    குழித்துறை, அக்.27-

    மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி பழைய கடை பகுதியை சேர்ந்தவர் மைக்கேல் ஜாண் (வயது 53), இவருக்கு பெல்ஸ் மேரி (43) என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். மைக்கேல் ஜாண் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் வீட்டில் வந்ததும் வயிறு வலிப்பதாக துடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு உறவினர்கள் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் இவர் விஷமருந்தி இருப்பதாக கூறி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் ஜாண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×