search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதி"

    • இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் லிகோரி. இவருடைய மகன் டெனி லிகோரி (வயது 23). இவர் வெளிநாட்டில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு திரும்பி னார். நேற்று இரவு 10 மணி அளவில் டெனிலிகோரி தனது இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பெரியார் நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கேரளா சுற்றுலா பஸ் பெரியார் நகருக்கு செல்வதற்காக திரும்பியது.

    அப்போது டெனிலிகோரி சென்ற இரு சக்கரவாகனம் மீது அந்த சுற்றுலா பஸ் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டெனிலிகோரி சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கேரளா சுற்றுலா பஸ்சை ஓட்டி வந்த பத்தனம் திட்டா, முடியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் பினுகுமார் (46) என்பவரை கைது செய்தனர்.

    • கோரிமேடு அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று காலை அதிக பாரம் மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குரும்பப்பட்டியை நோக்கி சென்றுக்கொண்டி ருந்தது.
    • வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கோரிமேடு அடுத்த எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இன்று காலை அதிக பாரம் மரங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று குரும்பப்பட்டியை நோக்கி சென்றுக்கொண்டி ருந்தது.

    அப்போது சாலையில் உள்ள மின்சார கம்பிகள் மீது மோதியதில் மின்கம்பிகள் அறுந்து சாலையிலேயே விழுந்தது. அப்போது சாலையில் பொது மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த விபத்து காரணமாக சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, செட்டி சாவடி, கோம்பைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

    • சேலம் அப்–சரா இறக்–கம் பகு–தி–யில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வய–து–டைய நபர் மீது எதிர்–பா–ரா–த–வி–த–மாக போலீஸ் வாக–னம் மோதி–யது.
    • தலை–யில் பலத்த காயம் அடைந்த அவரை அக்–கம்–பக்–கத்–தி–னர் மீட்டு சிகிச்–சைக்–காக சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அவர் வரும் வழி–யி–லேயே அவர் இறந்து விட்–ட–தாக தெரி–வித்–த–னர்

    சேலம்:

    சேலம் மாவட்ட ஆயு–தப்–ப–டை–யில் போலீஸ்–கா–ர–ராக அன்–பு–தா–சன் (வயது 35) என்–ப–வர் பணி–யாற்றி வரு–கி–றார். டிரை–வ–ரான அவர் நேற்று போலீஸ் வாக–னத்–தில் 2-ம் நிலை காவ–லர் தேர்–வுக்கு பயன்–ப–டுத்–தப்–பட்ட பொருட்–களை ஏற்–றிக்–கொண்டு மாவட்ட போலீஸ் சூப்–பி–ரண்டு அலு–வ–ல–கத்–துக்கு சென்–றார். பின்–னர் பொருட்–களை அங்கு இறக்கி வைத்–து–விட்டு மீண்–டும் ஆயு–தப்–ப–டைக்கு வாக–னத்தை ஓட்டி வந்து கொண்–டி–ருந்–தார்.

    அப்–சரா இறக்–கம் பகு–தி–யில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வய–து–டைய நபர் மீது எதிர்–பா–ரா–த–வி–த–மாக போலீஸ் வாக–னம் மோதி–யது. இதில் தலை–யில் பலத்த காயம் அடைந்த அவரை அக்–கம்–பக்–கத்–தி–னர் மீட்டு சிகிச்–சைக்–காக சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அங்கு டாக்–டர்–கள் பரி–சோ–தனை செய்த போது, அவர் வரும் வழி–யி–லேயே அவர் இறந்து விட்–ட–தாக தெரி–வித்–த–னர்.

    இது–கு–றித்து தக–வல் கிடைத்–த–தும் செவ்–வாய்–பேட்டை போலீ–சார் அங்கு விரைந்து சென்று விசா–ரணை நடத்–தி–னர். இதில் இறந்–த–வ–ரின் சட்–டைப்–பை–யில் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் பொதுப்–பி–ரி–வில் புற–நோ–யா–ளி–யாக சிகிச்சை பெற்–ற–தற்–கான சீட்டு இருந்–தது. அதில் ரவிக்–கு–மார் (37) 

    • தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார்.
    • அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார்.

    காடையாம்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் அருகில் வசித்து வருபவர் முனுசாமி. இவரது மனைவி மகேஸ்வரி (வயது 42).இவர்கள் கொத்தனார் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் தருமபுரியில் இருந்து சேலத்தை நோக்கி வரும்போது தொப்பூர் காமராஜர் நகர் அருகில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மகேஸ்வரி தவறி கீழே விழுந்தார். அப்பொழுது பின்னால் வந்த வாகனம் மகேஸ்வரி மீது ஏறியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார். முனுசாமி லேசான காயத்துடன் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகரில் வசிப்பவர் லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் அன்னதா னப்பட்டி அருகே மணியனூர் உத்தரப்பன் காடு அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் கிரேஸ்குமார் (வயது 37). இவர் நேற்று காலை பள்ளப்பட்டி, மையனூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இவருக்கு பின்னால் வந்த லாரி, எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கிரேஸ்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கிரேஸ் குமாரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்ட தாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பழையூர் தோப்பு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரதாப் (வயது23).

    லாரி டிரைவர். இவர் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.

    பூசாரிபட்டி பழைய சினிமா கொட்டாய் பகுதி யில் ஒரு விவசாயிக்கு 5 கட்டுகளை இறக்கிவிட்டு லாரி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் .இந்த விபத்தில் மின் இணைப்பு துணிக்கப்படாமல் இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகல் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் கொண்டலாம் பட்டி, போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நேற்று இரவு அவர் உறவினரை பார்க்க, தனது ஸ்கூட்டரில் நெத்திமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.
    • எதிரே வந்த கண்டெய்னர் லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராத விதமாக மோதியதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மணிராஜ பெருமாள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் கொண்டலாம் பட்டி, போஸ்ட் ஆபீஸ் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிராஜ பெருமாள் ( வயது 32). ப்ளக்ஸ் டிசைனிங் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் உறவினரை பார்க்க, தனது ஸ்கூட்டரில் நெத்திமேடு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கரிய பெருமாள் கரடு நுழைவு ரோடு அருகே, எதிரே வந்த கண்டெய்னர் லாரியும், ஸ்கூட்டரும் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த மணிராஜ பெருமாள் சம்பவ இடத் திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோத னைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது மோட்டார் சைக்கிளில் சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸல் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்தார்.
    • எதிரில் வேகமாக வந்த டெம்போ வாகனம் அவர் மீது மோதியது.

    குமாரபாளையம்:

    சேலம் மாவட்டம், வெள்ளரிவெள்ளி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது31), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸல் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்தார்.

    ரங்கனூர் பிரிவில் இருந்து வலது பக்கமாக திரும்பும் போது, எதிரில் வேகமாக வந்த டெம்போ வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த அடிபட்ட அவர்,சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போ டிரைவர் விழுப்புரத்தை சேர்ந்த இருதயராஜ்(45) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வாழப்பாடி அடுத்த கோணஞ்செட்டியூர் அருகே வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
    • அவ்வழியாக அதிவேகமாக வந்த ஜேசிபி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னம நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் ஹரிகிருஷ்ணன்,(30). இவரது தம்பி கவுதம், (29). கூலித் தொழிலாளியான இவர்கள் வாழப்பாடி அடுத்த கோணஞ்செட்டியூர் அருகே வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

    அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஜேசிபி வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஹரிகி ருஷ்ணன், கவுதம் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஹரிகிருஷ்ணன் நேற்று சிகிச்சை பல னின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இவரது தம்பி கவுதம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.
    • எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பள்ளிப்பாளையம் சாலை, குமரன் மருத்துவமனை பின்புறம் வசிப்பவர் கலைமணி(வயது 34.). இவர் தனது குழந்தைகள் ரினிதாஸ்ரீ,( 6,) சிவஸ்ரீ, (3,) ஆகிய இருவரையும் மொபட்டில் பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.

    எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து குமாரபா ளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.குமாரபாளையம் அருகே நேரு நகரில் வசிப்பவர் அஜித் குமார்(வயது 19.) கட்டுமான கூலி தொழிலாளி. இவர் தன் அண்ணனின் மொபட்டில் சேலம்-கோவை புறவழிச்சாலையில் நேரு நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார், மொபட் மீது மோதியதில் அஜித்குமார் படுகாயமடைந்தார்.

    குமாரபாளையம் போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கோவையை சேர்ந்த தீயணைப்பு படை வீரர் கணேஷ்பாபு, (36,) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவ்விபத்தில் கணேஷ்பாபுவிற்கும் காயமேற்பட்டதால் இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டார்.
    • மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய கிரேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையம் மெயின் வீதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி (91). இவர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டில் வேலப்பம்பாளையத்தில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு இடது புறம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த கிரேன் வண்டி அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து விட்டார். அப்போது கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் இறந்த முதியவர் கிருஷ்ணசாமி உடலை கைப்பற்றி கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய கிரேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    பெருந்துறையில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

    பெருந்துறை:

    திருப்பூர் மாவட்டம், முத்தூர், மங்கலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது 50). இவர் பெருந்துறை வண்ணாம்பாறை பகுதியில் தங்கி பெருந்துறையில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவர் ஈரோடு ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடைக்கு வந்து பொருட்களை வாங்கி கொண்டு வீட்டி ற்கு செல்வதற்காக ரோட்டோரத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஆரோக்கியம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரு ந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வரு கின்றனர்.

    ×