search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிரேன்"

    • வெள்ளகோவில் -மூலனூர் ரோட்டில் இருந்து சைக்கிளில் வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
    • கிரேன் வாகனம் சைக்கிள் மீது மோதியதில் முத்துசாமி பலத்த காயம் அடைந்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள நாச்சிபாளையம், பச்சப்பாளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (வயது 65) . இவர் நேற்று மாலை வெள்ளகோவில் -மூலனூர் ரோட்டில் இருந்து சைக்கிளில் வெள்ளகோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    பின்னால் வந்த கிரேன் வாகனம் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துசாமி பலத்த காயம் அடைந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் முத்துசாமியை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முத்துசாமி இறந்து விட்டதாக கூறினர். இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • கிரேனை நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை(45) என்பவர் ஓட்டினார்.
    • அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடா சலம்(வயது45). பவானி அருகே வரதநல்லூரை சேர்ந்தவர் சுந்தரம்(52). கூலி தொழிலாளி. இருவ ரும் நேற்று மதியம் கிரேன் வண்டியில் சேலம்- கோவை நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

    கிரேனை நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை(45) என்பவர் ஓட்டினார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஒன்று கிரேன் மீது மோதியது. இதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது.

    வாகனத்தில் இருந்த டிரைவர் உள்பட 3பேரும் படுகாயமடைந்தனர். குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டார்.
    • மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய கிரேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே உள்ள நடுப்பாளையம் மெயின் வீதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணசாமி (91). இவர் கரூர்-ஈரோடு மெயின் ரோட்டில் வேலப்பம்பாளையத்தில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு இடது புறம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த கிரேன் வண்டி அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்து விட்டார். அப்போது கிரேன் வண்டியின் பின் சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணசாமி இறந்து விட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் இறந்த முதியவர் கிருஷ்ணசாமி உடலை கைப்பற்றி கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின் உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய கிரேன் டிரைவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×