search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர் வடிகால்"

    • மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் தற்போது கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து தெளிப்பதை தொடங்குமாறு மலேரியா ஒழிப்பு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து மழைநீர் வடிகால்களிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2,600 தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை நகரம் முழுவதும் புகை அடித்தும், மருந்துகளை தெளித்தும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    சென்னையில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மழைநீர் வடிகால்கள் இருப்பதால் அங்கு தொடர்ந்து மருந்து தெளிக்கப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகும் மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்றினாலும் கூட அந்த வழியாக கழிவுநீர் செல்கிறது. எனவே கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பொதுமக்களின் பார்வைக்கு தெரியப்படுத்துவது அவசியமானது தான்.
    • அ.தி.மு.க.வினர் மத்திய அரசுடன் நட்புறவுடன் இருக்கிறார்கள்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம் என்றால் வெளியிடலாம். என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. எவ்வளவு நிதி செலவழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை பொதுமக்களின் பார்வைக்கு தெரியப்படுத்துவது அவசியமானது தான்.

    மத்திய அரசு ரூ.1,000 கோடி மட்டுமே பேரிடர் நிவாரண நிதியாக வழங்கி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் ரூ.5,000 கோடி வேண்டும் என்று கோரி இருந்தார். ஆனால் அதில் ஐந்தில் ஒரு பங்கு என்கிற வகையில் ரூ.1,000 கோடி மட்டுமே ஒதுக்க முன் வந்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

    அ.தி.மு.க.வினர் மத்திய அரசுடன் நட்புறவுடன் இருக்கிறார்கள். அவர்கள் மத்திய அரசு அல்லது பிரதமரை வலியுறுத்தி ரூ.5,000 கோடி பெறுவதற்கு ஆதரவு தர முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 275-வது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
    • உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 275-வது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2023- 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 27 திட்டங்களுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் அமைப்பதற்கு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலிப்பது குறித்தும் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தொழில், சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம் (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி, போக்குவரத்துத்துறை சிறப்புச் செயலாளர் வெங்கடேஷ் , சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர், நிதித் துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநெரே, குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
    • மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலந்தது

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் உள்ள மழை நீர் வடிகால்களில் வீட்டில் உள்ள கழிவு நீர் கலப்பதால் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கழிவு நீரை மழை நீர் வடிகாலில் கலக்காமல் இருக்க வீடுகளில் உறிஞ்சி குழாய் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் உறிஞ்சி குழாய் அமைக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் வீடுகளில் இருந்து வெளியே வரும் கழிவுநீர்களை உறிஞ்சி குழாயில் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியே வரும் செப்டிக் டேங்க் கழிவுகளை மழைநீர் வடிகாலில் விட்டால் அந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் செப்டிக் டேங்க் கழிவு நேரடியாக மழை நீர் வடிகாலில் வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

    அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார், சுகாதார அதிகாரி ராஜாராம், சுகாதார ஆய்வாளர்கள் சத்யராஜ், பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அந்த நகை கடைக்கு வந்தனர். பின்னர் அந்த நகை கடையில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீர் மழை நீர் வடிகாலில் வரும் வகையில் மோட்டார் வைத்து பயன்படுத்துவதை அதிகாரிகள் பார்த்தனர்.

    இதனை தொடர்ந்து அந்த நகை கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது நகைக்கடை தரப்பில் கடையில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் வெளியேறியதும் நகையில் உள்ள நகை இருப்புகளை சரி செய்து விட்டு வெளியே வருவதாக நகைக்கடை ஊழியர்கள் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காத்திருந்தனர். பின்னர் அவர்கள் வெளியே வந்த பிறகு நகை கடைக்கு சீல் வைத்தனர். மேலும் கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இதனால் மீனாட்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சென்னை மாநகராட்சியில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 369 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 37 இடங்கள் தாழ்வான இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மாநாடு சென்னை கலைவாணர் அரங்கில் சமீபத்தில் நடந்தது. இதில், சென்னை பெருநகர மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார்.

    மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து 'தினத்தந்தி'க்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- கலெக்டர்கள் மாநாட்டில், சென்னை மாநகராட்சி சார்பில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள், அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுறுத்தல்கள் என்ன?

    பதில்:- சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்த ஆண்டு 9 ஆயிரத்து 848 எண்ணிக்கையிலான சாலைகள் அமைக்கும் பணி, 1,156 கி.மீட்டருக்கு, ரூ.1,174 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் நடக்கிறது. இந்த பணிகளை விரைவில் முடிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார். பல்வேறு துறைகளில் நடக்கும் சாலை வெட்டுப் பணிகளை விரைவில் நிறைவு செய்யவும், மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கும் பகுதிகளில் சாலை பணிகளை முடிக்கவும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    கேள்வி:- விரைவில், பருவமழை தொடங்க உள்ளது. மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் எந்த கட்டத்தில் உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள் என்ன?

    சென்னை மாநகராட்சி

    சென்னை மாநகராட்சி

     பதில்:- சென்னை பெருநகர மாநகராட்சியில் 11,516 எண்ணிக்கையிலான 2,674 கி.மீட்டர் மழைநீர் வடிகால்கள் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் வரை இருந்தது. இப்போது, 3,480 கி.மீட்டர் மழைநீர் வடிகால்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிதாக எடுக்கப்பட்ட 1,501 கி.மீட்டர் திட்டப்பணிகளில் 1,390 கி.மீட்டர் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 92.61 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளையும் விரைவில் நிறைவு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    புதிதாக சென்னை மாநகராட்சியில் இணைக்கப்பட்ட விரிவாக்க பகுதிகளில், கழிவுநீர் அகற்றும் வசதிகள், குடிநீர் வழங்கல் வசதிகள் இல்லாத காரணத்தால் அந்த பகுதிகள் மாநகராட்சி தரத்துக்கு கொண்டு வரப்படவில்லை. அங்கு மின்சாரத்துறை உட்பட பல்வேறு துறை சார்ந்த பணிகள் நிறைவடைந்ததும், சாலை பணிகள் முழுமையாக முடிக்கப்படும்.

    கேள்வி:- சென்னை மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள்?

    பதில்:- உலகளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம். இந்தியாவில் பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இப்போது அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 369 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு காரணமான 'ஏடிஸ்' கொசு உருவாவதை தடுக்கவும், காய்ச்சல் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த, வீடுகள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. கொசு ஒழிப்புக்கு தேவையான மருந்துங்கள் கையிருப்பில் உள்ளன. மாநகராட்சிக்கு உட்பட்ட சுகாதார மையங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுதவிர்த்து, மலேரியா, எலி காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஆகியவற்றை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கேள்வி:- விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

    பதில்:- சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 37 இடங்கள் தாழ்வான இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில், 9 இடங்கள் அதி தாழ்வான பகுதிகளாக உள்ளது. ஆபத்தான மரக்கிளைகள் வெட்டும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. புயல் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க, 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளது. சென்னையில் 16 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க 169 பம்பு செட்டுகள் தயார் நிலையில் உள்ளன. மீட்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    கேள்வி:- சென்னையில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுகின்றன. அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்?

    பதில்:- தெரு நாய்களை பிடிக்க 16 வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு, வெறி நாய்க்கடி நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது. நாய்கள் குணமடைந்ததும், நாய் இனக்கட்டுப்பாட்டு விதி 2023-ன்படி பிடித்த இடத்திலேயே விடப்படும். நடப்பாண்டு 11 ஆயிரத்து 220 தெரு நாய்களுக்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் 18 தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    மதுரை

    பருவ மழைக்கு முன்ன–தாக மதுரையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மழை நீர் வடிகால் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கை–களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் பருவ மழை காலம் என்பதால் மதுரையில் தாழ்வான பகு–திகளில் அதிகளவில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், அந்த பகுதிகளை கண்டறிந்து அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவ–டிக்கைகளை எடுப்பதற்காக மாநகராட்சி கமிஷனர் பிர–வீன்குமார் அதிகாரிக–ளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளை அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர். அந்த பகுதிளில் மழைநீரை தேக்கமின்றி வெளியேற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகிறார்கள்.

    மதுரை ஆழ்வார்புரம், செல்லூர் சுயராஜபுரம், மீனாம்பாள்புரம், பந்தல்குடி கால்வாய், பி.பி.குளம், கீழ தோப்பு, தத்தனேரி, காந்தி நகர், தைக்கால் தெரு, ஓபுளா படித்துறை, கிருது மால் கால்வாய், அண்ணா தோப்பு பகுதி, பேச்சியம்மன் படித்துறை சாலை, சுங்கம் பள்ளிவாசல், இஸ்மாயில் புரம், தாமிரபரணி வீதி, ஆத்திகுளம் கண்மாய் மற் றும் வண்டியூர் ஆகிய 18 பகுதிகள் தாழ்வான இடங்க–ளாக கண்டறியப்பட்டுள் ளன.

    இந்த பகுதிகளில் மழை நீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் மழை நீர் வடிகால் அமைக்க திட்டமிடப்பட்டுள் ளது. மதுரையில் ஏற்கனவே கடந்த பல மாதங்களாக முல்லை பெரியாறு குடிநீர் குழாய் பதிக்கும் பணி மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகின்றன.

    ஒரு மணி நேரம் மழை பெய்தால் கூட அந்த சாலை–களில் சேறும் சகதியும் அதிக அளவில் குவிந்து வாகன ஓட்டிகளை திக்கு முக்காட வைத்து வருகிறது. மேலும் விரிவாக்க பகுதிகளான ஆனையூர், தபால் தந்தி நகர், திருப்பாலை, கூடல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் பொது–மக்கள் கடும் அவதியில் உள்ளனர்.

    மேலும் பல மாதங்களா கியும் செல்லூர்-குலமங்க–லம் மெயின் ரோடு போடப்படாததால் வாகன ஓட்டிகள் படும் பாடு சொல்லி முடியாது. அது போல கூடல் நகர், ஆனை–யூர் பகுதிகளிலும் சாலைகள் படு மோசமாக காணப்படு–வதால் அடிக்கடி விபத்துக–ளும் நடந்து வருகின்றன.

    பருவமழை தொடங்குவதற்கு முன்னர் இந்த பகு–திகளில் சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் அந்த பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை–களை விரைந்து சீரமைக்க வேண்டும்.

    எனவே மாநகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கை கைவிட்டு சாலை பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் விரும்பு கிறார்கள். மேலும் பருவ மழை தொடங்குவதற்கு முன்னர் மதுரை நகரில் உள்ள மழை நீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒரே நேரத்தில் இரண்டு பணிகளுக்காகவும் சாலைகளை தாறுமாறாக தோண்டி போட்டுள்ளார்கள்.
    • ஒவ்வொரு வார்டிலும் இதற்காக வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

    மடிப்பாக்கம், ராம்நகர் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தண்ணீர்தான். மழை வந்தால் தண்ணீர் தேங்கும் என்பது தான்.

    ஆனால் இப்போது இந்த பகுதியில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வடிகால் ஓடை மற்றும் பாதாள சாக்கடை கால் வாய்கள் அமைக்கப்படுகிறது.

    ஒரே நேரத்தில் இரண்டு பணிகளுக்காகவும் சாலைகளை தாறுமாறாக தோண்டி போட்டுள்ளார்கள். பல மாதங்களாக இந்த பணிகள் நடந்து வருவதால் தெருக்களில் இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்ல முடியவில்லை. ராம்நகர், மடிப்பாக்கம், குபேரன்நகர், மகாலெட்சுமி நகர், குபேரன் நகர் விரிவு உள்பட எல்லா பகுதிகளிலும் 25-க்கும் மேற்பட்ட தெருக்களில் சாலைகள் இதே நிலையில் தான் உள்ளன.

    கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் இந்த சாலைகளில் கிடக்கும் குண்டுகளில் நீர் நிரம்பியும், தோண்டி போடப்பட்டிருக்கும் மண்குவியல்கள் சகதியுமாகி நடந்தும் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    பணிகளை செய்ய வேண்டியது அவசியம். அடர்த்தியான குடியிருப்பு பகுதி என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டு விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்கிறார்கள் குடியிருப்புவாசிகள். மாட்டு வண்டிகள் கூட செல்ல முடியாத சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுதான் வீடுகளுக்கு செல்கிறார்கள்.

    மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, இந்த பகுதியில் மிகப்பெரிய திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மெட்ரோ வாட்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து பணிகளை விரைந்து முடிக்கவும் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கவும் அறிவுறுத்தி இருக்கிறோம். பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் 124 சாலைகளில் 40 சாலைகளில் நடைபெறும் பணிகள் இன்னும் 3 நாட்களில் முழுமையாக முடிவடையும் என்றார்.

    இந்த பகுதியில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணிகளை முடித்து பருவமழை தொடங்குவதற்குள் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துடன் இணைத்துவிட திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுவரை 800 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிறைவு பெற்று இருப்பதாகவும் மேலும் 592 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்காலிகமாக பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க மண்டலங்களுக்கு ரூ.20 லட்சம் அவசர நிதியாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் இதற்காக வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கமிட்டி பரிந்துரைக்கும் சாலைகளை உடனடியாக பார்வையிட்டு சீரமைக்க டெண்டர் விடவும் மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

    • 4 -வது வார்டு மற்றும் 16-வது வார்டு பகுதியில் பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    • விழாவில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 4 -வது வார்டு மற்றும் 16- வது வார்டு பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ,முன்னாள் மண்டல தலைவர் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன் ,தமிழ்ச்செல்வி கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்படி இரண்டாம் கட்ட மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற உள்ளது.
    • சமூக ஆர்வலர்கள் கூறுகையில் மழைநீர் வடிகால் பணியின்போது மரங்களை வெட்டக்கூடாது. மின்சார கேபிள்களும் சேதம் அடையக்கூடாது என்றனர்.

    சென்னை:

    சென்னையில் கடந்த வடகிழக்கு பருவ மழைக்கு முன்பு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. ஆனால் பணிகள் முடிவடையும் முன்பே பருவமழை தொடங்கிவிட்டது. இதையடுத்து இந்த பணிகள் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்படி இரண்டாம் கட்ட மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி நடைபெற உள்ளது. ரூ.650 கோடி செலவில் இந்த பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக அதிகாரிகள் டெண்டர் கோர உள்ளனர்.

    ராயபுரம், தேனாம்பேட்டை, திரு.வி.க.நகர், அண்ணாநகர், வளசரவாக்கம், ஆலந்தூர் போன்ற பகுதிகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இவற்றில் பெரும்பாலான பணிகள் ஏற்கனவே உள்ள திட்டங்களின் தொடர்ச்சியாகும்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

    கடந்த பருவமழையின் போது வெள்ளம் ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து அங்கு மழைநீர் வடிகால் அமைத்து வருகிறோம். முதல் கட்ட பணியின் போது ஏற்பட்ட கலவை குறைவுகள் இரண்டாம் கட்ட பணியின் போது சரி செய்யப்படும்.

    இந்த முறை சாலையில் பள்ளம் தோண்டும் முன்பு குடியிருப்பு வாசிகளிடம் ஆலோசனை நடத்துவோம். கடந்த ஆண்டு வெள்ளப் பெருக்கை தடுக்க அவசரமாக பணிகளை மேற்கொண்டோம். இந்த முறை பணிகள் பெருமளவில் நேர்த்தியாக நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், இந்த முறை மழைநீர் வடிகால் பணியின் போது மரங்களை வெட்டக்கூடாது. மின்சார கேபிள்களும் சேதம் அடையக்கூடாது என்றனர்.

    • உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் பறிப்போகும் உயிர்.
    • கிடப்பில் போடப்பட்ட மழை நீர் வடிகாRain Drainல் பணியால் விபரீதம்.

    காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் மழை நீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. மழை காரணமாக அப்பகுதி சேறும் சகதியுமாக, பள்ளத்தில் மழை நீர் தேங்கியும் இருந்துள்ளது. மேலும், இந்த பணி கிடப்பில் போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், அவ்வழியாக சென்ற தனியார் நிறுவன ஊழியர் லட்சுமிபதி (42) என்பவர் மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்து பலியாகி உள்ளார்.

    உரிய பாதுகாப்பின்றி நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் உயிர் பலி அதிகரித்து வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 இடங்களில் புதிதாக கான்கிரீட் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளது.
    • பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    கோவை:

    கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சி பகுதிகளில் பருவ மழை காலங்களில் மழைநீர் அதிகம் தேங்க கூடிய கிக்கானி பள்ளி சாலை, லங்கா கார்னர், மணியகாரன்பாளையம் சாலை, அவினாசி மேம்பாலம், வாலாங்குளம் ஆகிய 5 இடங்களில் புதிதாக கான்கிரீட் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளது.

    இதேபோல் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் உதவி கமிஷ னர் தலைமையில் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், சுகாதார ஆய் வாளர், தூய்மை பணியா ளர், ஒட்டுநர் ஆகியோரை கொண்ட கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. லங்கா கார்னர் சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப் பட உள்ளது.

    டைடில் பார்க் முதல் தண்ணீர் பந்தல் சாலை வரை தார் சாலை அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுந்தராபுரம் முதல் மதுக்கரை மார்க்கெட் வரை செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்ற பின்னர் தார் சாலை அமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டத்தை பொருத்தவரை மாநகராட்சியின் பழைய 60 வார்டுகளிலும் பாதாளசாக் கடை இணைப்பு குழாய் பதிக்கும் பணிகள் நிறைவ டைந்துள்ளது.மாநகராட்சியில் உக்கடம், ஒண்டிப்புதூர், நஞ்சுண்டாபுரம் ஆகிய 3 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல் பாட்டில் உள்ளன.

    மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக் கடை இணைப்பு குழாய் பதிக்கும் பணிகள் ஒரு சில இடங்களில் நடைபெற்று வருகிறது. விடுபட்ட இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளிலும் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

    கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள 32 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களில் தற்போது 6 மையங்கள் நல்ல நிலை யில் இயங்கி வருகின்றன. மீதமுள்ள மையங்களில் அவற்றின் தேவைக்கேற்ப அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு, செயல் பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

    தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின்கீழ் நமது மாநகராட்சிக்கு ரூ.70 கோடி நிதி வரப் பெற்றுள்ளது. அதேபோல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற ரூ.5 கோடி நிதியில் பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் மேற் கொள்ளவும், பூங்காக்கள் சீரமைப்பு போன்ற பணி கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தியாகராயநகர், பாண்டிபஜார் பகுதியிலும் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியதுதான் வியப்பிலும் வியப்பாக இருந்தது.
    • மழைநீர் வடிகால் அகலமாக இல்லாததும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.

    சென்னை:

    சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் வட சென்னை, தென்சென்னை பகுதிகளில் பல சாலைகள் வெள்ளத்தில் மிதப்பது வாடிக்கையாக உள்ளது.

    சென்னையின் வர்த்தக பகுதியான தியாகராயநகர், பாண்டிபஜார் பகுதியிலும் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியதுதான் வியப்பிலும் வியப்பாக இருந்தது.

    கடந்த பருவ மழையின்போது இந்த பகுதிகளில் மழைநீர் வடிய 1 வார காலம் ஆனது. மாம்பலம் கால்வாய் பகுதிக்கு செல்லும் பிரதான மழைநீர் வடிகால் பகுதிகளில் சரி வர தூர்வாராததே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது.

    பாண்டிபஜாரில் ஸ்மார்ட் சிட்டி சரிவர இல்லாததும் இதற்கு காரணம் என அறியப்பட்டது.

    இதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் மழைநீர் வடியாமல் போனதற்கு தூர்வாரும் பணியில் உள்ள குறைபாடுகளே காரணம் என கண்டறியப்பட்டது.

    அது மட்டுமின்றி மழைநீர் வடிகால் அகலமாக இல்லாததும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.

    இவற்றை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த பருவ மழையின்போது தண்ணீர் தேங்காத அளவுக்கு நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதுமட்டுமின்றி திருப்புகழ் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஒரு குழுவை அமைத்து ஆலோசனை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் திருப்புகழ் தலைமையிலான குழுவினர் சென்னை மற்றும் புறநகரில் ஐ.ஐ.டி. நிபுணர்களுடன் சென்று மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

    அது மட்டுமின்றி சென்னையின் பிரதான சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களை அகலப்படுத்தி கூவம், பக்கிங்காம் கால்வாய், மாம்பலம் கால்வாய், அடையாறு நல்லான் கால்வாய் பகுதிகளில் சேரும் வகையில் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து இருந்தனர்.

    பிரதான கால்வாய்களை பருவ மழை காலத்துக்கு முன்பே அதாவது செப்டம்பர் மாதத்திற்குள் தூர் வார வேண்டும் என்று அரசை கேட்டுக் கொண்டார்.

    அதன் அடிப்படையில் சென்னையில் மழைநீர் வடிகால் கால்வாய்களை தூர்வாரும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 40.80 கி.மீ. நீளத்துக்கு தூர்வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதாவது 32 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

    முடிவுற்ற பணிகளில் முக்கியமானதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள சீத்தம்மாள் காலனி, தி.நகர் ஜி.என்.செட்டி சாலை, பசுல்லா சாலை, கே.கே.நகர் ராஜ மன்னார் சாலை, அசோக் நகர், வேப்பேரி பூந்தமல்லி நெடுஞ்சாலை, ரிப்பன் பில்டிங் அஜீஸ்நகர், பராங்குசபுரம் ஆகிய பகுதிகளில் முழுமையாக பணிகள் முடிந்துள்ளது.

    இதேபோல் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் 2-வது பகுதியாக 20.03 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 12 சதவீத பணிகள் முடிந்துள்ளது.

    அம்பத்தூர், கொளத்தூர், கத்திவாக்கம், எண்ணூர் பகுதிகளிலும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளன. கோவளம், கொசஸ்தலை ஆறு பகுதிகளிலும் 1173.88 கி.மீ. நீளத்துக்கு ரூ.5,054 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    சென்னையை பொறுத்த வரை மழைநீர் தேங்கும் பகுதியாக 564 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் இந்த முறை மழைநீர் தேங்காத அளவுக்கு தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    திருப்புகழ் ஐ.ஏ.எஸ். தலைமையிலான குழுவினர் அளித்துள்ள பரிந்துரையை ஏற்று ஐ.ஐ.டி. நிபுணர்கள் ஆலோசனைப்படி இங்கு மழைநீர் வடிகால் வதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    சென்னையில் மழை காலத்துக்கு முன்பாகவே ஒரே நேரத்தில் 1058 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் கட்டும் பணி நடைபெற்று வருவது இதுவே முதல் முறையாகும். இந்த பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயித்து உள்ளனர்.

    இந்த பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

    ×