search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mayor"

    • இந்திரா காந்தி சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேறும் வடிகால்கள் ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
    • வீரநாயக்கன் தட்டில் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    பி.எம்.சி. பள்ளிக்கு செல்லும் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு மற்றும் இந்திரா காந்தி சிலையை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேறும் வடிகால்கள் ஆகியவற்றை மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த பணி இரவு, பகலாக நடைபெற்று வருகின்றது. இதே போல பி.எம்.சி பள்ளியை சுற்றியுள்ள பகுதிகள், பாரதி நகர், ஹவுசிங் போர்டு, ஆர்.கே.கார்டன், பால்பாண்டி நகர், சின்னமணி நகர், மற்று சிலோன் காலனி ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் மற்றும் இரவு, பகலாக நடைபெற்று வரும் மழை நீர் அகற்றும் பணிகளையும் மேயர் பார்வையிட்டனர்.

    தொடர்ந்து வீரநாயக்கன் தட்டில் ஸ்மார்ட் வகுப்பறை யுடன் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி தொடக்கப் பள்ளி பணிகள் நிறை வடைந்ததால் மாண வர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

    அதனையும் கட்டபொம்மன் நகர், அத்திமரபட்டி, ஜெ.எஸ் நகர், ராஜூ நகர், சாமி நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகளையும் சாந்தி நகர், சக்தி நகர்,ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுத்ததையும் லூர்தம்மாள்புரம், கலைஞர் நகர், மற்றும் மேரிஸ் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழை நீர் அகற்றும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், தி.முக. பகுதி செயலாளரும், மண்டல தலைவர்களுமான சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் பச்சிராஜன், சரவணக்குமார், முத்துவேல், பொன்னப்பன்,மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மேயரின் நேர்முக உதவி யாளர் ரமேஷ், பிரபாகரன், ஜோஸ்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி மினி பஸ் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • பின்னர் சில நிபந்தனைங்களுடன் மினி பஸ்கள் இன்று முதல் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தின் உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி யில் சமீபத்தில் திறப்பு விழா கண்ட அண்ணா (பழைய) பஸ் நிலையத்தில், மினி பஸ்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    பேச்சுவார்த்தை

    இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி மினி பஸ் உரிமையாளர் சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது அவர்களி டம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பஸ் நிலையத்தின் உள்ளே வந்து செல்வதற்கு அதிகாரிகளுடன் கலந்தா லோசித்து வாய்ப்புகள் ஏற்படுத்தி தருவதாக உறுதி யளித்தார்.பின்னர் சில நிபந்தனங்க ளுடன் மினி பஸ்கள் இன்று முதல் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தின் உள்ளே சென்று வர அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மினி பஸ்கள் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றன. இதனை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று காலை நேரில் சென்று பார்வை யிட்டார்.

    நிகழ்ச்சியின் போது தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, பகுதி செய லாளரும், மாமன்ற உறுப்பி னருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பி னர்கள் ஜான் சீனிவாசன், சரவணகுமார், பகுதி சபா உறுப்பினர் ஆர்தர் மச்சாது மற்றும் மாநகராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வெறிநாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
    • ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் ரவுண்டானா அருகில் மாநகராட்சி சார்பில் வெறி நாய்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. மேயர் இந்திராணி தலைமை வகித்தார். ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். இந்த சிறப்பு முகாமில் மண்டலம் 3-க்கு உட்பட்ட56, 57, 58 ஆகிய வார்டுகளில் திரியும் 111 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் தெருக்களில் பொது மக்களை அச்சு றுத்தும் வகையிலும், போக்குவரத்து இடையூ றாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலும் நாய்கள் சுற்றி திரிகின்றன.

    பல்வேறு இடங்களில் பொதுமக்களை நாய்கள் கடித்தாக புகார்கள் வந்தன. இதையடுத்து ''நாய்கடி ரேபிஸ்" தடுப்பு நடவடிக்கையாக மாநக ராட்சி சார்பில் வெறிநாய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 18.9.2023 முதல் 28-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை அந்த அந்த பகுதிகளில் வரும் மாநகராட்சி வாகனங்கள் மூலம் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

    இம்முகாமில் மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் வினோத் குமார், உதவி ஆணையாளர் வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேசு வரன், சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர் கவிதா, கால்நடை மருத்துவர் ஜெயகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.
    • ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது.

    கோவை:

    கோவை பீளமேட்டில் நடந்த ஓணம் விழாவில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் பங்கேற்றார்.

    அப்போது அவர் அங்குள்ள மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மலையாள சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். தமிழக முதலமைச்சர் கூட மலையாளத்தில் வாழ்த்து சொல்லி இருக்கிறார். அதுபோல, தீபாவளிக்கும் முதலமைச்சர் வாழ்த்து கூறினால் அவர் அனைவருக்குமான முதலமைச்சராக செயல்படுவார் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கும்.

    ஓணத்திற்கு வாழ்த்து சொல்கின்ற நீங்கள் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு.

    கோவை மாநகராட்சி மேயர் மற்றும் குடும்பத்தினர் மீது இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். அரசின் முதன்மையான பதவியில் இருப்பவரின் குடும்பத்தின் மீது இது போன்ற புகார்கள் வருகிறபோது, மாநில அரசு இதனை தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது எல்லாம் மக்களை மிரட்டுவது, சட்டத்தை தங்களுக்கு சாதமாக மாற்றுவது சர்வசாதாரணமாகி விட்டது. கோவை மேயர் குடும்பத்தினர் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்பது கட்சி சார்பற்றது. ஆதாரங்கள், சாட்சியங்கள் இருப்பதை வைத்து மத்திய அரசின் துறைகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு கட்சி பாகுபாடு பார்ப்பது கிடையாது. ஆதாரத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார்.
    • உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேயராக இருப்பவர் முனேஷ் குர்ஜார். இவரது கணவர் சுஹில்.

    பெண் மேயரின் கணவர் சுஷில் குர்ஜார் நிலம் குத்தகை வழங்கியதற்கு ஈடாக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளார். அவர் வீட்டில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

    சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார்.

    லஞ்ச ஒழிப்பு துறையினர் வீட்டில் சோதனை நடத்தி ரூ.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சுஷில் குர்ஜாருடன் அவரது உதவியாளர்கள் நாராயண் சிங், அனில் துபே ஆகியோரும் பிடிபட்டனர்.

    சுஷில் தனது உதவியாளர்கள் மூலம் நிலம் குத்தகைக்கு விண்ணப்பித்த நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் செய்தார். அவர்கள் பொறி வைத்து சுஷிலை பிடித்தனர்.

    அவரது உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    லஞ்சம் வாங்கிய போது மேயர் முனேஷ் குர்ஜார் இருந்தார். அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கருதியும், வழக்கு விசாரணையில் தலையிடக் கூடும் என்பதாலும் அவரை மேயர் பதவியில் இருந்து மாநில காங்கிரஸ் அரசு அதிரடியாக நீக்கி உத்தர விட்டது. இரவோடு இரவாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவர் கவுன்சிலர் பதவியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். 

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திருவிளக்கு பூஜையில் மாணவிகள் பங்கேற்றனர்.
    • மேயர் இந்திராணி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் உலக நலனுக் காக ஆடி வெள்ளியை யொட்டி 1,008 திருவிளக்கு பூஜை அனுஷாதேவி அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ராமசுப்பையா வரவேற்றார். கல்லூரி தலைவர் ராஜ கோபால், உதவி தலைவர் ஜெயராம், கல்லூரி செயலாளர் விஜய ராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, முதல்வர் ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் (பொறுப்பு) பிரபு, அறக்கட்டளை உபயதாரர் மகாலட்சுமி தர்மராஜ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சிறப்பு அழைப் பாளராக மதுரை மாநக ராட்சி மேயர் இந்திராணி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து 1,008 திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 2-வது ஸ்தானிகர் ரமேஷ் பட்டர் தலைமையில் கல்லூரி மாணவிகள், பேரா சிரியைகள் அனைவரும் திருவிளக்கு ஏற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல், மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்திராகாந்தி, ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட னர். விழாஏற்பாட்டினை கல்லூரியின் பொருளாதார துறை உதவி பேராசிரியை விஷ்ணு சுபா, தமிழ்துறை உதவி பேராசிரியை பரிமளா ஆகியோர் செய்திருந்தனர்.

    • நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் , துணை மேயர் பாலசுப்ரமணியம் , மண்டல தலைவர்கள் , மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் மாநகராட்சி கவுன்சிலர்கள் பயிற்சி முகாமிற்கு வந்திருந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மாநகராட்சி சார்பில் மேயர், துணை மேயர் , மண்டல தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வந்திருக்கக் கூடிய நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் உயர் அதிகாரிகள் யாரும் ஏன் வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிகழ்ச்சி ஒரு வாரத்திற்கு முன்னதாகவே திட்டமிட்ட நிலையில் திடீரென முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் ஆய்வு கூட்டம் தேதி குறிக்கப்பட்டதால் அங்கு சென்று விட்டதாக அதிகாரிகள் தெரிவித்து மாமன்ற உறுப்பினர்களை சமரசம் செய்தனர்.

    இதன் பின்னர் பள்ளி மேலாண்மை குழுவின் உரிமைகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபட்டனர்.

    • தூத்துக்குடி மாநாகராட்சியின் சுகாதாரம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது.
    • மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் பசுமையான வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதால் கடந்த மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் தூத்துக்குடி மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளோம்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து பழைய துறைமுகம் வரை செல்லும் தமிழ் சாலையின் இருபுறமும் தேங்கியுள்ள மணல் திட்டுகள் மற்றும் கற்களை அகற்றும் பணியினை மாநகர கமிஷனர் தினேஷ்குமார் முன்னிலையில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    முன்னதாக மாலையில் தூத்துக்குடி மாநாகராட்சியின் சுகாதாரம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. இதில் கமிஷனர், தலைமை சுகாதார அதிகாரி, சுகாதார அலுவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள்,தூய்மைக் காவலர்கள், கண்கானிப்பாளர்கள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் போல்பேட்டை பிரதான சாலையினை அகலப்படுத்தும் பணி நிறைவுற்றுள்ளது. அதனை அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு வரை நீட்டித்து முடிக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறியிருந்தார். அதன்படி தற்பொழுது நடைபெற்று வருகின்ற சாலை அகலப்படுத்தும் பணியினை மேயர் ஜெகன் பெரிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், இந்த பணிகளினால் பெருமளவு போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். மாநகரின் 60 வார்டுகளிலும் முழுமையான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மாசு இல்லாத மாநகராட்சியை உருவாக்கும் வகையில் பசுமையான வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதால் கடந்த மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை மூலம் தூத்துக்குடி மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு விருது பெற்றுள்ளோம். அனைத்து பகுதிகளிலும் தூய்மையை கடைப்பிடிக்கும் விதமாக எட்டையாபுரம் போல்பேட்டை 60-வது அடி சாலைப்பகுதியில் மாசு தூசி படியாத வகையில் கால்வாய் ஒட்டிய பகுதிகளில் குறிப்பிட்ட அளவிற்கு புதிதாக தார்சாலை மற்றும் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு அமெரிக்கன் மருத்துவமனை 4 வழித்தட முகப்பு வரை பதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் முதன்மை மாநகராட்சியாக தூத்துக்குடியை கொண்டு வரும் வகையில் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுரையின்படி கடந்த காலங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிதாக கால்வாய் அமைக்கப்பட்டு சாலைகள் அமைக்கும் பணியை 60 சதவீதத்திற்கு மேல் நிறைவு பெற்றுள்ளது. 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் செய்யாத பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். எல்லா பகுதிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ், கவுன்சிலர்கள் தெய்வேந்திரன்,முத்துவேல் முன்னாள் கவுன்சிலர் ரவிந்திரன், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன்,ஜாஸ்பர், வட்டச்செயலாளர் முனியசாமி, மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர் மச்சாது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மழை காலங்களில் தேங்கும் தண்ணீர், மழைநீர் வடிகாலின் வழியாக குளத்திற்கு வரும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடி புதியபஸ் நிலையம் அருகில் புதிய சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்து மேலூர் ரெயில் நிலைய பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது அதனை மேயர் நேரில் பார்வையிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வி.எம்.எஸ்.நகர் குட்டத்து மாடசாமி கோவில் அருகில் உள்ள குளம் மாநகராட்சி சார்பில் புனர மைக்கப்பட்டது. அதனை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    குளத்தை சுற்றிலும் மரங்கள் நடப்படும்

    அப்போது அவர் கூறுகையில், இந்த பகுதியில் மழை காலங்களில் தேங்கும் தண்ணீர், மழைநீர் வடிகாலின் வழியாக குளத்திற்கு வரும்படி வழி வகை செய்யப் பட்டுள்ளது. கடுமையான கோடை காலத்திலும் குளத்தில் நீர் இருப்பதை பார்ப்பதற்கு மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வருங் காலங்களில் குளத்தை சுற்றிலும் மரங்கள் நடப்படும் என்றார்.

    தொடர்ந்து தூத்துக்குடி புதியபஸ் நிலையம் அருகில் புதிய சாலை அமைக்கும் பணிகள் முடிவடைந்து மேலூர் ெரயில் நிலைய பொது மக்களின் பயன் பாட்டிற்கு வந்துள்ளது. அதனை மேயர் நேரில் பார்வையிட்டார். அப்போது எட்டையாபுரம் சாலை, ஜெயராஜ் சாலைக்கு செல்லும் ரெயில்வே பயணிகளும், பொதுமக்களும் பயன்படுத்துவதற்கு வசதியாக ரெயில்வே பாலத்தின் அருகில் உள்ள பகுதிகளில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு அங்கு விரைவில் நெடுஞ் சாலைதுறை மூலமாக புதிய தார்ச்சாலைகள், மாநக ராட்சி சார்பில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதால் அதனையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேயர் உத்தரவு

    அப்போது அந்த பாலத்தின் கீழ் உள்ள பாதையில் பொது போக்கு வரத்திகு இடையூராக இருந்த பொருட்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்ட மேயர் இரவு நேரத்திலும் சாலை யை பயன்படுத்துவதற்கு வசதியாக மின் விளக்குகளும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார்.

    ஆய்வின் போது மாநகர தி.மு.க. துணை செயலா ளரும், கவுன்சிலருமான கீதாமுருகேசன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவி யாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் நிர்வாகிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கதிரேசன் கோவில் தெருவில் உள்ள 2-ம் கேட் வரதவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமிக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    • தொடர்ந்து விழாவை முன்னிட்டு நடைபெற்ற அனைதானத்தை மேயர் தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி வி.எம்.எஸ்.நகர் பகுதியில் நடைபெற்று வரும் புதிய தார்சாலை பணி மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் இந்த பகுதியில் சீரான குடிநீர் கிடைக்க செய்ததற்காக மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக கூறினார்கள்.

    இதனைத்தொடர்ந்து சண்முகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, முத்தம்மாள் காலனி 5-வது தெருவில் நடைபெற்று வரும் புதிய தார்சாலை பணி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கதிரேசன் கோவில் தெருவில்

    உள்ள 2-ம் கேட் வரதவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமிக்கு கோவில் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விழாவை முன்னிட்டு நடைபெற்ற அனைதானத்தை மேயர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளின் போது மாநகர கவுன்சிலர்கள் கீதாமுருகேசன்,ரெங்கசாமி, சுப்புலெட்சுமி, முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், மீனாட்சிசுந்தரம், வட்டச்செயலாளர் பொன்ராஜ், போல்பேட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் பொன்னுசாமி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சியில் முக்கிய பகுதிகளில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.
    • கூட்டத்தில், மாநகர பகுதிகளில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் முக்கிய பகுதிகளில் புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது.

    அந்த பிரதான சாலைகளில் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் முழு அளவில் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருந்து வந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியில் போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிடா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தூத்துக்குடி யில் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பல் அடுக்கு வாகன நிறுத்துமிடப் பகுதிகளில் வாகன போக்குவரத்தினை ஒழுங்குப்படுத்துவது, மாநகர பகுதிகளில் இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    முக்கிய முடிவுகள்

    இதில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அதனை உடனடியாக செயல்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 4 -வது வார்டு மற்றும் 16-வது வார்டு பகுதியில் பூமி பூஜை இன்று நடைபெற்றது.
    • விழாவில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்துக்குட்பட்ட 4 -வது வார்டு மற்றும் 16- வது வார்டு பகுதியில் மழை நீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இதில் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் ,முன்னாள் மண்டல தலைவர் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர்கள் கோபாலகிருஷ்ணன் ,தமிழ்ச்செல்வி கனகராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×