என் மலர்
உள்ளூர் செய்திகள்

மேயர் ஜெகன் பெரியசாமி
போக்குவரத்தை சீர்படுத்தவும், விபத்தை குறைக்கவும் நடவடிக்கை - தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
தூத்துக்குடியில் போக்குவரத்தை சீர்படுத்தவும், விபத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போக்கு வரத்தை சீர்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி பொது மக்களிடம் தவறான கருத்து பரப்பப்படுகிறது என்று மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பொது போக்குவரத்தை சீர்படுத்த வும், விபத்துகளை தடுக்கும் வகையிலும், வி.இ.ரோடு, பாளைரோடு, (ராஜாஜி பூங்கா) ஜெயராஜ்ரோடு, அண்ணா நகர், சிதம்பரநகர் பிரதான சாலைகள், திருச்செந்தூர் ரோடு தெற்கு காவல் நிலையம் முதல், காமராஜ் கல்லூரி வரை நடைபாதைகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்க மாநகர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவினை தூத்துக்குடி மாநகரம் முழுவதும் நடைபாதையில் நிறுத்தப் படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தவறான தகவலை சிலர் பரப்பி வருகின்றனர்.
மாநகர பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
பொதுப் போக்குவரத்தை சீர்படுத்தவும், விபத்துக் களை தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறி னார்.
தூத்துக்குடியில் போக்கு வரத்தை சீர்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி பொது மக்களிடம் தவறான கருத்து பரப்பப்படுகிறது என்று மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பொது போக்குவரத்தை சீர்படுத்த வும், விபத்துகளை தடுக்கும் வகையிலும், வி.இ.ரோடு, பாளைரோடு, (ராஜாஜி பூங்கா) ஜெயராஜ்ரோடு, அண்ணா நகர், சிதம்பரநகர் பிரதான சாலைகள், திருச்செந்தூர் ரோடு தெற்கு காவல் நிலையம் முதல், காமராஜ் கல்லூரி வரை நடைபாதைகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்க மாநகர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவினை தூத்துக்குடி மாநகரம் முழுவதும் நடைபாதையில் நிறுத்தப் படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தவறான தகவலை சிலர் பரப்பி வருகின்றனர்.
மாநகர பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
பொதுப் போக்குவரத்தை சீர்படுத்தவும், விபத்துக் களை தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறி னார்.
Next Story






