search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருநகர வளர்ச்சி குழுமம்"

    • 275-வது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
    • உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 275-வது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2023- 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 27 திட்டங்களுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் அமைப்பதற்கு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலிப்பது குறித்தும் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தொழில், சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம் (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி, போக்குவரத்துத்துறை சிறப்புச் செயலாளர் வெங்கடேஷ் , சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர், நிதித் துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநெரே, குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விளையாட்டு நகரம் அமைப்பதற்காக செம்மஞ்சேரி, குத்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய இடங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தேர்வு செய்துள்ளது.
    • கூட்டத்தில் ஒவ்வொரு இடங்களின் சாதக பாதகங்கள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    சென்னை:

    தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது விளையாட்டு துறைக்கு அதி நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தது.

    அதன்படி விளையாட்டு துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு நகரம் அமைக்கப்படுகிறது. இதில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுகள் நடத்தப்படும். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மூலம் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

    இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், அரசின் சின்ன சின்ன திட்டங்களை கண்காணிக்க நடந்த ஆய்வின் போது, உலகத்தர விளையாட்டு நகர திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் விளையாட்டு நகரம் அமைக்கக் கூடிய 3 இடங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்தது' என்று கூறி இருந்தார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் அமைய உள்ள உலகத்தர விளையாட்டு நகரத்தில் ஒரு பெரிய ஸ்டேடியம், கால்பந்து மைதானம், தடகள விளையாட்டு பகுதி, ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம் போன்ற வசதிகள் இருக்கும். விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் இடம் இதில் இடம் பெற்றிருக்கும். விளையாட்டு நகரம் அமைப்பதற்காக செம்மஞ்சேரி, குத்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய இடங்களை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே வண்டலூர் மற்றும் குத்தம்பாக்கம் அருகே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பஸ் நிலையங்களை அமைத்து வருகிறது. 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விளையாட்டு நகரம் அமைக்கப்படும்.

    இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு இடங்களின் சாதக பாதகங்கள் குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×