search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மழைநீர் வடிகால் அமைக்க நிதி ஒப்புதல்- பெருநகர வளர்ச்சி குழும கூட்டத்தில் முடிவு
    X

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் மழைநீர் வடிகால் அமைக்க நிதி ஒப்புதல்- பெருநகர வளர்ச்சி குழும கூட்டத்தில் முடிவு

    • 275-வது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
    • உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    சென்னைப் பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 275-வது குழுமக் கூட்டம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் 2023- 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் 27 திட்டங்களுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலை வசதிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் அமைப்பதற்கு நிதி ஒப்புதல் வழங்குவது குறித்தும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலிப்பது குறித்தும் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், தொழில், சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம் (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி, போக்குவரத்துத்துறை சிறப்புச் செயலாளர் வெங்கடேஷ் , சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கர், நிதித் துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநெரே, குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×