search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு"

    • விளையாட்டுக்களால் மனித சமுதாயம் பல்வேறு வளர்ச்சிகளை அடைகிறது.
    • விளையாட்டுக்கள் மூலம் மனித குலம் அமைதி பெறுவதே ஐநா சபையின் நோக்கமாகும்

    வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 6 - ந்தேதி நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் உள்ள  மக்கள் வாழ்வில் விளையாட்டு நேர்மறையான பங்கை அங்கீகரிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

    இன்று 6 -ந்தேதி இந்த 2024- ம் ஆண்டிற்கான உலகளாவிய அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களை மேம்படுத்துவதற்கான விளையாட்டு,  சர்வதேச தினமாக கடைபிடிக்கப்படுகிறது.




    2013 -ல் ஐக்கிய நாடுகள் (UN) பொதுச் சபையால் ஏப்ரல் 6 -ந் தேதி வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டது. விளையாட்டுக்கள் மூலம் ஏற்படும் உடல் வலிமை, மனஅமைதியை ஐநா சபை அங்கீகரித்துள்ளது. இதன்காரணமாக தனிநபர் மற்றும் குழுக்களை ஒன்றிணைத்து, பல்வேறு விளையாட்டுக்களை மேம்படுத்தி வருகிறது.

    உலக அளவிலான விளையாட்டுகள், மற்றும் சிறு விளையாட்டுக்களில் ஆர்வமுடன் பங்கேற்கும் நபர்களால் விளையாட்டு போட்டிகள் மேம்படுத்தப்படுகிறது. விளையாட்டுக்களால் மனித சமுதாயம் பல்வேறு வளர்ச்சிகளை அடைகிறது.

    விளையாட்டுக்கள் மூலம் மனித குலம் எளிதில் அமைதி பெறுவதே ஐநா பொது சபையின் நோக்கமாகும்.



    இந்த விளையாட்டு பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக, ஏப்ரல் 6- ந்தேதியை ஐ.நா பொது சபை வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினமாக (IDSDP) அறிவித்து உள்ளது.

    இந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன.மனித சமுதாய வளர்ச்சிக்கு விளையாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைந்து வருகிறது. இந்த தினத்தில் விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் உலகம் முழுவதும் அமைதி பெற நாம் அனைவரும்  சபதமேற்போம்.

    • இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது
    • இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது

    விளையாட்டு, இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்கு, குரூப் தலைவர் எம். வினித் கர்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-

    இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது. 2023-ல் கிரிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.15,000 கோடியைத் தாண்டி உள்ளது.

    மேலும், கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளின் பங்கு 13 சதவீதம். 2022-ஆம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் மொத்த வருவாய் ரூ.15,766 கோடியாக அதிகரித்து 11 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வருவாயில் ஸ்பான்சர்ஷிப் செலவுகள், மீடியா செலவுகள் மற்றும் ஒப்புதல் கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.

    விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பு விஷயத்தில் பின் தங்கியுள்ளது. ஸ்பான்சர்ஷிப் செலவுகள் 2022 -ஐ விட 24 சதவீதம் அதிகரித்து 2023 -ல் ரூ.7,345 கோடியாக உயர்வு அடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
    • உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள்.

    இன்று உடல் பருமன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதனால் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பலரும் பல ஆயிரங்களை செலவு செய்கின்றனர். குறிப்பாக உடல் எடையைக் குறைப்பதற்காக டயட், ரன்னிங், நடைப்பயிற்சி, ஜிம், விளையாட்டு, யோகா என ஏராளமான வழிமுறைகளை மாதக்கணக்கில் கடைப்பிடிக்கிறார்கள். இதற்காக தினமும் சில மணி நேரங்களை ஒதுக்குகிறார்கள்.

    அத்துடன் எடை குறைப்பிற்காகவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார்கள். ஆனாலும் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு சரியான ரிசல்ட் கிடைப்பதில்லை.

    இந்தநிலையில், ``உணவை பார்க்கும் விதத்தை மாற்றுங்கள். உங்களால் மன நிறைவாக சாப்பிட முடியும். அதேநேரத்தில் உங்களின் எடையும் குறையும்...'' என்று அடித்துச் சொல்கிறது இங்கிலாந்தில் செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு. இந்த ஆய்வை மேற்கொண்ட `அய்ன் ட்ரீ' மருத்துவமனை, 500 பேரிடம் உணவு குறித்த சர்வேயை எடுத்திருக்கிறது. இந்த ஆய்வை ராபர்ட் என்ற மருத்துவர் தலைமையேற்று, நடத்தி முடித்திருக்கிறார்.

    ``உணவை எப்படி வேறு விதமாக பார்ப்பது?'' என்ற கேள்விக்கு ராபர்ட் பதில் அளிக்கிறார்.

    ``உணவுக்கும், மனதுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நவீன வாழ்க்கையின் பரபரப்பில் அவசர அவசரமாக ஒரு கடமையை நிறைவேற்றுவதை போல சாப்பிடுகிறோம். சாப்பிடும் நேரத்தில் கூட மனதை எங்கேயோ அலையவிட்டு பதற்றத்துடன் இருக்கிறோம். அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே உணவை உள்ளே தள்ளுகிறோம். நமக்கு பசிக்கவில்லை அல்லது உணவு பிடிக்கவில்லை என்றாலும் கூட நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்பது எழுதப்படாத ஒரு விதியாகவே ஆகிவிட்டது.

    முக்கியமாக சுவையானதை தேடித்தேடி சாப்பிடுகிறோம். அது உடலுக்கு ஆரோக்கியமானதா என்று கூட பார்ப்பதில்லை. முதலில் இந்த பழக்கத்தை மாற்றுங்கள். தியானத்தில் ஈடுபடுவதை போல முழு மனதையும் செலுத்தி உணவை உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவை தேடிப்பிடித்து சாப்பிடுங்கள். முக்கியமாக, பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் எடை குறைவது மட்டுமல்லாமல் உணவைப் பார்க்கும் விதமே மாறி இருக்கும்'' என்றார்.

    • இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
    • முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட்கோலி. ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில், சிறிய ஓய்வுக்கு பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் மீண்டும் அணிக்கு திரும்பினார்.

    அதனைத்தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இங்கிலாந்து அணி இதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜன.25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய அணி நிர்வாகத்திடம் அவர் கூறியதாவது, " நாட்டிற்காக எப்போதும் விளையாடுவது தான் என்னுடைய பணி. இருப்பினும் சில தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளேன்" எனக் கூறியுள்ளார். விராட் கோலியின் இந்த முடிவிற்கு இந்திய அணி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    • டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார்
    • சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பாட் கம்மின்ஸ் பெற்றார்.

    டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் திகழ்வார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும் போது, கேப்டனுக்கு இப்போது முப்பது வயதுதான் ஆகிறது. இன்னும் அவர் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் விளையாட வேண்டும். சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிராட்மேனுக்குப் பிறகு கம்மின்ஸ் இருப்பார். "டான் பிராட்மேனை விட சிறந்தவராக இருப்பார் என நினைக்கவில்லை, ஆனால் டான் பிராட்மேனுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக பேட் கம்மின்ஸ் இருப்பார்" என நம்புவதாக தெரிவித்தார்

    ஏனென்றால், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின் ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய கம்மின்ஸ் தனது சிறப்பான ஆட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். கடந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவை அதன் 6-வது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு வழிநடத்தினார். மேலும் ஒவ்வொரு போட்டியிலும் பத்து விக்கெட்டுகள், இரண்டு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாக ஆடினார்.

    சமீபத்தில் துபாயில் நடந்த ஐபிஎல் விற்பனையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் ரூ 20.50 கோடிக்கு பேட் கம்மின்ஸ் ஒப்பந்தம் செய்தார். அதன் பிறகு ஐபிஎல் வரலாற்றில் விலைமதிப்பற்ற வீரராக திகழ்ந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 1,001 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் டாப் விக்கெட் மேக்கர் என்ற பட்டத்தை பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் கம்மின்ஸ் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை பல்லாவரத்தில் தனியார் பாதுகாவலர்கள் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய சைலேந்திரபாபு, தனியார் பாதுகாவலராக பணிபுரியும் பணியாளர்கள் காவல் துறையினருடன் நன்கு பழக வேண்டும் என்றும், குற்றங்களை தடுக்க மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் போதை பொருளை ஒழிப்பதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போதை பொருளை சமுதாயத்தில் இருந்து ஒழிக்க ஆசிரியர்கள் பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும். இளைஞர்கள் மாணவர்களை காலையில் ஒரு மணி நேரம் ஓட வைக்க வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டு துறையில் ஈடுபடுத்தினால் மாணவர்களை போதை பழக்கம் நெருங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாவட்ட விளையாட்டு போட்டியில் ரிதம் சிறப்பு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • ஆசிரியை கிறிஸ்டி வரவேற்றார்.

    Virudhunagar News Rhythm Special School students achievement

    ராஜபாைளயம்

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடைபெற்றது. போட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். போட்டியினை விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    இந்த போட்டியில் ராஜபாளையம் ரிதம் சிறப்பு பள்ளியை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். மாணவி கனிமொழி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதலில் கவுரி முதலிடமும், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட வர்களுக்கான கிரிக்கெட் பந்து எரிதலில் சுஹேல் முதலிடமும், மற்றும் தடை தாண்டி ஓடுதல் பெண்கள் பிரிவில் அமலா முதலிடமும், ஆண்கள் பிரிவில் நந்தகுமார் முதலிடம் வெற்றி பெற்றனர். மேலும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜீவிதா மூன்றாம் இடமும், ஓடி நீளம் தாண்டுதலில் ஆண்கள் பிரிவில். தீபக் மூன்றாம் இடமும், தடைகளை தாண்டி ஓடுதல் ஆண்கள் பிரிவில் சிவகுருநாதன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

    போட்டியில் வென்ற மாணவர்களை ரிதம் சேரிடபிள் டிரஸ்ட் மேனேஜிங்டிரஸ்டி கதிரேசன், செகரட்டரி,பால்ராஜ் மற்றும் டிரஸ்டிகள் கோடியப்பன், ,கவுதமன், இளங்குமரன் ஆகியோர் பாராட்டினார்கள். முதல்வர் வெங்கட்டரமணன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர் அருண் வெங்கடேஷ் நன்றி கூறினார்..முன்னதாக ஆசிரியை கிறிஸ்டி அனைவரையும் வரவேற்றார்..

    • மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் புதுக்கோட்டை தனியார் பள்ளி சாதனை
    • மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளி மாணவர் சிறந்த வீரராக தேர்வு

    புதுக்கோட்டை,

    தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சி மண்டல அளவில் கால்பந்து போட்டி பிஷப் தேவ தாஸ் அம்புரோஸ் வித்யாலயா சீனியர் செ கண்டரி பள்ளியில் நடை பெற்றது.இதில் 39 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். பதினைந்து வயதுக்கு உட்பட்ட பிரிவில் மவுண்ட் சீயோன் சர்வ தேசப் பள்ளி மாண வர்கள், கலந்து கொண்டு, மூன்றா மிடம் பிடித்து சாதனை படைத்தனர். 9-ம் வகுப்பு மாணவன் விஜய் மல்லை யப்பன் இந்த தொடரில் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டார்.இப்போட்டிக்கு பள்ளி யில் இருந்து 16 மாண வர்களை கொண்ட குழு விற்கு குறுகியகாலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்க ளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும்,பயிற்சியாளருமான ரூடவ்ஸ்வரன்யும், பள்ளி யின் தலைவர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்த லைவர் ஏஞ்சலின் ஜோ னத்தன், பள்ளியின் முதல்வர் ஜலஜாகுமாரி ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரி வித்தனர்.

    • பத்ரகாளியம்மன் பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
    • மாணிக்கவேல் ராஜன் நன்றி கூறினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் மேல்நிலைப் பள்ளியின் 35-வது ஆண்டு விளையாட்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார் கல்வி மாளிகை முன்பு நடந்தது. உறவின்முறை சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

    மேல்நிலைப்பள்ளி செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் சிவாஜி, சங்க பிரதிநிதி வைரமணி, பள்ளி முதல்வர் ரதி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைவர் கரிகாலன் வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு கலை கதிரவன், மாவட்ட சிலம்ப கழக செயலாளர் மணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.

    தொடர்ந்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் மெட்ரிக் பள்ளி உறுப்பினர் மாணிக்கவேல் ராஜன் நன்றி கூறினார்.

    • மாநில அளவிலான போட்டியில் விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.
    • ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சி சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பக்கிரிச்சாமி. கூலி தொழிலாளி.

    இவரது மனைவி செம்மலர்.

    இந்த தம்பதிக்கு அஜிஷா என்ற மகள் உள்ளார்.

    இவர் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கலை கல்லூரியில் 3-ம் ஆண்டு தமிழ் இளங்கலை படித்து வருகிறார்.

    அஜிஷா சிறு வயது முதலே வில்வித்தை மீது அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பமாக இருந்தாலும் தன் மகள் ஆசைபட்டால் என்பதற்காக பக்கிரிச்சாமி அஜிதாவை திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் கராத்தே ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சியில் சேர்த்துள்ளார்.

    மாணவியும் சிறப்பாக பயிற்சி பெற்று ஒன்றிய, மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடி பதக்கம் வென்றுளார்.

    மேலும், இவர் மாநில அளவிலான வில்வித்தை போட்டிக்கு தேர்வாகி சிறப்பாக விளையாடி முதலிடமும் பிடித்துள்ளார்.

    தொடர்ந்து, இவர் சர்வதேச விளையாட்டு போட்டிக்கு தயாராகி உள்ளார்.

    இந்நிலையில், போட்டியில் விளையாடு வதற்கு வில்-அம்பு கருவி வாங்க வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்திற்கு மேல் உள்ளது. ஏழ்மை குடும்பம் என்பதால் வில்-அம்பு வாங்க முடியாத நிலைக்கு மாணவி தள்ளப்பட்டுள்ளார்.

    எனவே, தமிழக அரசு வில்-அம்பு வாங்குவதற்கு நிதி உதவி அளித்தால் சர்வதேச போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

    தனது கனவு நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துைற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின .
    • ஆண்களுக்கான கபடி 26-ந் தேதியும், பெண்களுக்கான கபடி 27-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று 15 வயது முதல் 25 வயது வரையிலான மாணவ- மாணவிகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின .

    முதல் நாளான இன்று ஆண்களுக்கான கைப்பந்து , கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளை துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மேயர் சண் .ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி.

    உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், தி.மு.க. பகுதி செயலாளர் சதாசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி, விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராணி கண்ணன், விளையாட்டு பயிற்சியாளர் பாபு மற்றும் ஆசிரிய , ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நாளை பெண்களுக்கான கையுந்து விளையாட்டு போட்டிகள், கால்பந்து போட்டிகள் 26-ந் தேதியும் நடைபெறும்.

    இதேபோல் ஆண்களுக்கான கபடி 26-ந் தேதியும், பெண்களுக்கான கபடி 27-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு கையுந்து பந்து விளையாட்டு போட்டிகள் ( ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.15000, 2-ம் பரிசாக ரூ.10000, 3-ம் பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.

    கால்பந்து போட்டியில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.25000, 2-ம் பரிசாக ரூ.20000, 3-ம் பரிசாக ரூ.10000 வழங்கப்படும். கபடி போட்டியில் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு ) முதல் பரிசாக ரூ.20000, 2-ம் பரிசாக ரூ.10000, 3-ம் பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.

    • அப்போது வைக்கோல் போரில் இருந்த வந்த விஷ பாம்பு இவரை கடித்தது.
    • தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மகன் நவீன் (வயது 11). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று மாண வர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டி ருந்தார். அப்போது வைக்கோல் போரில் இருந்த வந்த விஷ பாம்பு இவரை கடித்தது.

    இதனையடுத்து நவீனை கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனு மதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாணவன் நவீன் இறந்து போனார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×