search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா
    X

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா

    • சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது
    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வளைவிலிருந்து ஒலிம்பிக் நினைவு ஜோதி எடுத்து செல்லப்பட்டு பள்ளி வளாகத்தில் ஏற்றி வைக்கப்பட்டது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி–யில் 8 ஆம் ஆண்டு விளை–யாட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ராம்குமார் தலைமை தாங்கி விளையாட்டு போட்டி–களை தொடங்கி வைத்தார். துணைத் தலை–வர் மோகன–சுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் பல்வேறு தடகள விளை–யாட்டு போட்டிகள், அணி–வகுப்புகள் நடந்தது. விழாவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரஞ்சனா கலந்து–கொண்டு போட்டிகளில வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். அப்பாது அவர் பேசுகையில், பள்ளி குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் என எல்லோருக்கும் பிரச்சினை உள்ளது. அதைக்கண்டு பின்வாங்காமல் கையாளும் அணுகு முறையில் தான் நம் வாழ்க்கையில் சாதனை–யாளராக ஆக முடியும். எந்த ஒரு செயலிலும் விதிமுறையை மீறாத பழக்கம் வளர்த்துக்கொண்டு வரும் மனநிலை இருந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை அமைவதோடு நாம் என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறோமோ அதை அடைந்து விடலாம் என்றார். இதில் சிறப்பு விருந்தி–னராக திருச்சி மின்வா–ரிய பொருளாதார கட்டுப்பட்டாளர் வடிவேல் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் வளைவிலிருந்து ஒலிம்பிக் நினைவு ஜோதி எடுத்து செல்லப்பட்டு பள்ளி வளா–கத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. விழாவில் துணை முதல்வர்கள் சந்திரோதயம், ராஜேந்திரன், விளையாட்டு அலுவலர்கள் பிரபு, ராஜ் குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து–கொண்டனர். முன்னதாக முதல்வர் ஹேமா வரவேற்றார். முடி–வில் துணை முதல்வர் சாரதா நன்றி கூறினார்.


    Next Story
    ×