search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Udhayanidhi Stalin"

    • காலை உணவுத் திட்டத்தை, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்துள்ளார் நமது முதலமைச்சர்.
    • காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    கல்வியை கனவில் கூட நினைக்கத் தயங்கிய ஒரு தலைமுறையை பள்ளிக்கூடங்கள் நோக்கி அழைத்து வந்த முன்னாள் முதலமைச்சர்-பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் இன்று. கடைக்கோடி மனிதர்களின் முன்னேற்றம் என்ற ஒருமித்த சிந்தனையோடு, பெருந்தலைவர் காமராஜர்- முத்தமிழ் அறிஞர் கலைஞர் இடையே இருந்த அன்பும்-நட்பும் நாடறிந்தவை.

    விடுதலைப் போராட்டம்- மாநில முன்னேற்றத்துக்கான ஆட்சி நிர்வாகம் ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் என்று உழைத்த காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறிவித்தார்.

    இன்று காமராஜரின் பிறந்த நாளில், உலகமே போற்றி பின்பற்றுகிற காலை உணவுத் திட்டத்தை, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்துள்ளார் நமது முதலமைச்சர். இதனால் காலை உணவுத் திட்டம் மூலம் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்துள்ளது.

    கல்வி வளர்ச்சி நாளையொட்டி விரிவுபடுத்தப்பட்டுள்ள காலை உணவுத்திட்டம், நம் மாணவர்களின் கற்றல் திறனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம். பெருந்தலைவர் காமராஜரின் பணிகளை என்றும் போற்றுவோம். அவரது புகழ் ஓங்கட்டும்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    • அமைச்சர் பொன்முடி, கொள்கை பரப்புச்செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்பி. ஆகியோர் தலைமையில் மாலை 4 மணிக்கு திருவாமாத்தூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
    • திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கிறார்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது.

    இத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், இத்தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்கிரவாண்டி வருகிறார்.

    அமைச்சர் பொன்முடி, கொள்கை பரப்புச்செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்பி. ஆகியோர் தலைமையில் மாலை 4 மணிக்கு திருவாமாத்தூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    தொடர்ந்து, மாலை 5 மணிக்கு காணையிலும், 6 மணிக்கு பனமலைப்பேட்டையிலும், இரவு 7 மணிக்கு அன்னியூரிலும் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கிறார்.

    அதனை தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு தும்பூரிலும், 9 மணிக்கு நேமூரிலும், மாலை 5 மணிக்கு விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
    • தற்போதைய களநிலவரம், வழங்கப்படக் கூடிய சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூற உள்ளனர்.

    சென்னை:

    கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையத்துக்கு பின்பகுதியில் அமைந்துள்ள கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. மேலும் கள்ளச்சாராயத்தை குடித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    இதனிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரை கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

    அதன்படி, சம்பவ இடத்தில் கள நிலவரங்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். தற்போதைய களநிலவரம், வழங்கப்படக் கூடிய சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூற உள்ளனர்.

    • நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கமிஷனர் வே.அமுதவல்லி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    • குழந்தை தொடர்பான விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்சோ சட்டத்தை அமல்படுத்துதல் தொடர்பாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் போக்சோவுக்கு என தனி இணையதளம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

    இந்தநிலையில் https://www.pocsoportal.tn.gov.in என்ற போக்சோ இணையதளம், தனி நபர் பராமரிப்பு திட்ட செயலி, குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வதற்கான செயலி, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான கைபேசி செயலி போன்ற புதிய செயலிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கமிஷனர் வே.அமுதவல்லி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதில் போக்சோ இணையதள முகப்பு மூலம், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை போலீஸ் துறை, போக்சோ கோர்ட்டு, மகளிர் கோர்ட்டு மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை ஆகிய துறைகள், விவரங்களை உடனுக்குடன் பதிவு செய்யவும், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்படுவது முதல் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வரையும், ஒவ்வொரு நடவடிக்கையையும் அத்துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கண்காணித்து வழக்கை விரைவுபடுத்த முடியும்.

    மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீட்டு தொகையை தாமதமின்றி இணையதளம் மூலமாக நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தவும், துறை சார்ந்த உயர் அலுவலர்களால் வழக்கு துரிதமாக தீர்வு செய்வதை கண்காணிப்பதற்கும் இந்த இணையதளம் பயனுள்ளதாக அமையும். குழந்தை தொடர்பான விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 15 விளையாட்டுகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை 52 கோடி ரூபாய் செலவில் கடந்த 2023-ம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.
    • 2024 -ம் ஆண்டில், தமிழ்நாடு என்.சி.சி. இயக்குநரகம் ஒட்டுமொத்த மூன்றாவது இடத்தைப் பெற்றுப் புகழ் ஈட்டியது.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல துறைகள் இந்திய அளவில் முதன்மையாகவும், முன்னணியாகவும் திகழ்கின்றன. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பான நல்ல பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக, இன்று விளையாட்டுத் துறையிலும் தமிழ்நாடு இந்தியத் திருநாடு மட்டுமின்றி, உலகெங்கிலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் நாடுகளும் உற்று நோக்குவதோடு, பாராட்டுகளையும் தெரிவிக்கிறது.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அர்ப்பணிப்பு உணர்வுகளால், விளையாட்டுத் துறையில் வியக்கத்தகுந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அவரால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் மூலம் பதக்கங்களை வாரிக் குவித்துத் தமிழ்நாட்டுக்குப் பெருமைகளைத் தேடித் தந்துள்ளார்.

    முதலமைச்சர் இத்துறையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறைக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உத்தரவிட்டு உள்ளார்கள். இதன் பயனாக, சென்னையில் உலகத் தரத்திற்கு இணையான நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் நவீன வசதிகளும் புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    ஏறத்தாழ 40 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலும், சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தக்கூடிய வகையிலும் சென்னையில் அமையப்பெற்றுள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் மற்றும் 9 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையிலான நேரு உள் விளையாட்டரங்கம் ஆகியவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளோடு புதிய செயற்கை இழை தடகளப் பாதை, எல்.ஈ.டி மின்னொளி வசதிகள் நிறுவுதல் மற்றும் புனரமைப்புப் பணிகள் அனைத்தும் ரூபாய் 60 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நவீன விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கங்கள் அனைத்திலும் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள் அமைத்திட அதற்கான அறிவிப்பினை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.

    பல்வேறு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் வாயிலாக முதற்கட்டமாக, 10 சட்டமன்றத் தொகுதிகளில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் தலா 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் சென்னையில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல போட்டிகள் திறம்பட நடத்தப்பட்டு ஒன்றிய அரசின் சார்பிலும், பன்னாட்டு அளவிலும் பாராட்டுகளைப் பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்த விளையாட்டுத் துறையினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற வகையில், சென்னையில் உலகத்தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்திடத் திட்டமிடப்பட்டு, அதற்குரிய பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய திட்டமிடல் காரணமாக தமிழ்நாடு அரசும் இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏறத்தாழ 114 கோடி ரூபாய்ச் செலவில், உலகப்புகழ்பெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை மாமல்லபுரத்தில் ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகின் 186 நாடுகளை சார்ந்த

    2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வேறு எந்த நாட்டிலும் காணாத வகையில் தமிழக அரசின் விருந்தோம்பலை கண்டு வியந்து போற்றிய வரலாறு தமிழ்நாட்டில் தடம் பதித்தது.

    சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி, ஏ.டி.பி. சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டி, சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் போட்டி, ஆசிய ஆடவர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி, சர்வதேச அலை சறுக்குப் போட்டி, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. 15 விளையாட்டுகளை உள்ளடக்கிய மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை 52 கோடி ரூபாய் செலவில் கடந்த 2023-ம் ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது.

    ஜனவரியில் டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின முகாமில், தமிழ்நாடு இயக்குநரகம் ஒட்டு மொத்தமாக இரண்டாவது இடத்தைப் பெற்றது. மேலும் இந்நிகழ்வில் 6 பிரிவுகளில் தமிழ்நாடு என்.சி.சி இயக்குநரகம் "சிறந்த என்.சி.சி இயக்குநரகம்" என்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

    2024 -ம் ஆண்டில், தமிழ்நாடு என்.சி.சி. இயக்குநரகம் ஒட்டுமொத்த மூன்றாவது இடத்தைப் பெற்றுப் புகழ் ஈட்டியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இத்தகைய மகத்தான எண்ணற்ற விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களின் வாயிலாக தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக உருவாகி வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்.

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலின் போது 24 நாட்களாக பிரசாரம் மேற்கொண்டார்.

    பின்னர், தேர்தலின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து அவர் வாக்களித்தார்.

    தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலை உள்ளது.

    இதன் காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

    சென்னையில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் சென்றார்.

    அப்போது, விமானத்தில் பயணத்தின்போது தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தின் கேப்சனில் ரியல் ரவுடி என்று அவர் பதிவிட்டிருந்தார்.

    இந்த நிலையில், தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக மலையாள படமான ஆவேஷம் படத்தில் பகத் பாசில் வீடியோ போன்று உதயநிதியுடம், இன்பநிதியும் ரீல்ஸ் செய்தனர்.

    இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து அவர் வாக்களித்தார்.
    • தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலை உள்ளது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போகாத ஊர்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்று 24 நாட்களாக பிரசாரம் செய்திருந்தார்.

    தமிழ்நாடு முழுவதும் 39 பாராளுமன்ற தொகுதிகளில் 8,465 கிலோ மீட்டர் பயணம் செய்து 122 பிரசார முனைகளில் 3,726 நிமிடங்கள் பேசி மக்களை கவர்ந்தார். அவரது பேச்சை இறுதி வரை கலையாமல் மக்கள் ரசித்து கேட்டனர்.

    தேர்தலின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து அவர் வாக்களித்தார்.

    தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து நேற்று காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார்.

    ஓய்வுக்காக லண்டன் சென்றுள்ளதால் அவரது பயண நிகழ்ச்சிகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் 10-ந்தேதி சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்தை இந்தியா கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை.
    • உதயநிதி ஸ்டாலின் மீது சனாதன ஒழிப்பு கருத்து தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

    அப்போது சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போன்றவற்றை ஒழிப்பதுபோல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு விவாதத்தை கிளப்பியது. இந்த பேச்சுக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசிய உதயநிதி ஸ்டாலின் தண்டிக்கப்பட வேண்டும் என தெலுங்கானா காங்கிரஸ் முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

    ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு கருத்து குறித்த கேள்விக்கு கடும் கோபத்துடன் ஆவேசமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது:-

    உதயநிதியின் கருத்து தவறானது. இதனை நான் கண்டிக்கிறேன். அது அவரது எண்ணம். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என அவர் கூறியதற்காக தண்டிக்கப்பட வேண்டும்.

    ஒரு குடும்பத்திற்குள் கூட, தனிநபர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், உதயநிதியின் நிலைப்பாடு அவருடையது.

    தெலுங்கானா மாநிலத் தலைவர் மற்றும் முதல்-மந்திரி என்ற முறையில், சனாதன தர்மம் குறித்த கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த தவறான கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே நமது கொள்கை. மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தீங்கு விளைவிக்காமல் அனைத்து நம்பிக்கைகளையும் நிலை நிறுத்துவது முக்கியம்.

    பாஜகவின் "400 தொகுதிகளில் வெற்றி முழக்கம் என்பது தேர்தல் விளம்பரங்களுக்கு மட்டுமே பொருத்தமானது.

    தற்போது இது சாத்தியமில்லை. மக்களவையில் 400 இடங்கள் என்ற இலக்கை அடைய பா.ஜ.க. வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வாக்கு கேட்க வேண்டும்.

    குஜராத்தில் 26 இடங்களையும், ஹரியானாவில் உள்ள 10 தொகுதிகளிலும், டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றாலும் கூட. பீகாரில் 39 முதல் 40 இடங்களும், உத்தரபிரதேசத்தில் 62 இடங்களும், வங்காளத்தில் 18 இடங்களும், வட மாநிலங்களில் கணிசமான பெரும்பான்மையும் பெற்றால், 300 இடங்களில் மட்டுமே வெல்ல முடியும். பா.ஜ.க.வால் இலக்கை அடைய முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்- மந்திரி கூறிய கருத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    முதல்- மந்திரி ரேவந்த் ரெட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து அரசியலுக்கு வந்தவர். இவர் விரைவில் பா.ஜ.கவுக்கு சென்று விடுவார் என தெலுங்கானா எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ.500-க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
    • பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் தமிழகம் வராமல் இப்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார்.

    ஈரோடு:

    தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஈரோடு பாராளுமன்ற தொகுதி மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒத்தக்கடையில் தி.மு.க வேட்பாளர் கே.இ.பிரகாசுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது திறந்த வேனில் பொதுமக்கள் மத்தியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு பதிவு பெட்டியில் 3-வது இடத்தில் நமது உதயசூரியன் சின்னம் உள்ளது. ஆனால் ஜூன் 4-ந்தேதி நாம் முதலிடத்திற்கு வர வேண்டும். நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு ஆகும்.

    ஈரோடு பாராளுமன்ற முன்னாள் எம்.பி. கணேசன் மூர்த்தியை கடந்த தேர்தலில் 2.19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்தீர்கள். இந்த முறை நமது வேட்பாளர் கே.இ. பிரகாஷை குறைந்தது 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். 2021-ம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியை நாம் இழந்தோம். இருந்தாலும் நமது முதலமைச்சர் அந்த தொகுதி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி கூறினார்.

    இங்கு மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சோலார் பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சோலாரில் உலகத்தரம் மிக்க விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இன்னும் எண்ணற்ற பணிகள் இந்த பகுதியில் நடந்து வருகிறது. 2014-ம் ஆண்டு கியாஸ் சிலிண்டர் விலை எவ்வளவு இருந்தது. தற்போது எவ்வளவு உள்ளது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். தேர்தல் நேரம் என்பதால் கியாஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்துள்ளனர்.

    ஆனால் இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் கியாஸ் சிலிண்டர் மானியத்துடன் ரூ.500-க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். இதேபோல் பெட்ரோல் விலை ரூ.75-க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். டீசல் விலையும் 65-க்கு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். கண்டிப்பாக அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

    நமது முதல்வர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். யார் காலையும் பிடிக்கவில்லை. தவழ்ந்து தவழ்ந்து வரவில்லை. அப்படி முதலமைச்சர் ஆனவர் யார் என்று உங்களுக்கே நன்றாக தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு பாதம் வாங்கிய பழனிசாமி என்று பெயர் வைத்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து சென்று தான் முதல்வரானார்.

    பா.ஜ.க.வுடன் 4 வருடங்கள் கூட்டணியில் இருந்து விட்டு தமிழ்நாட்டின் உரிமைகள், மொழி, நிதி, கல்வி ஆகிய உரிமையை எடப்பாடி பழனிசாமி விட்டு கொடுத்தார். இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டார்.

    கலைஞர் இருந்த போது நீட் தமிழகத்திற்கு வரவில்லை. பிறகு ஜெயலலிதா இருந்த வரை நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.விற்கு பயந்து நீட் தேர்வை தமிழகத்தில் கொண்டு வந்து விட்டனர். இதன் விளைவு இதுவரை 7 ஆண்டுகளில் நீட் தேர்வால் 21 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலைமைகள் இருந்தது. இதற்கு முதல் பலி அனிதா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 1200-க்கு 1170 மதிப்பெண் எடுத்தார். இன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் அவர் ஒரு டாக்டர்.

    திமுக ஆட்சி வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட ரீதியான போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    நான்கு பேர் மட்டுமே பாரளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டார்கள். தி.மு.க. தலைவர் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை ஆகியவை குறைத்தார். பி.எம். மூலம் கொரோனா காலத்தில் பிரதமர் 32 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் இதுவரை கணக்கு காட்டவில்லை.

    சென்னை, தென் மாவட்டங்களில் வெள்ள பேரிடர் போது 2500 கோடி ரூபாய் மாநில அரசு நிதி வழங்கியது ஆனால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. இதனால் பிரதமரை 29 பைசா என்று சொல்லி தான் அழைக்க வேண்டும்

    ஜி.எஸ்.டி மூலம் வசூல் செய்யப்படும் மத்திய அரசு முறையாக சரிசமமாக மாநிலத்திற்கு நிதியை பகிர்ந்து வழங்குவதில்லை. கடந்த முறை தமிழகத்தில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது போல இந்த முறை 40/40வெற்றி பெற்று தமிழர்கள் மானமிக்க சுயமரியாதை உள்ளவர்கள் என்று நிரூபிக்க வேண்டும்.

    பிரதமர் நரேந்திர மோடி 10 ஆண்டுகளில் தமிழகம் வராமல் இப்போது தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகள் வாங்க வருகிறார்.

    2019-ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் 2021-ம் ஆண்டு நான் சென்று பார்த்த போது ஒரு செங்கல் மட்டுமே இருந்தது இது வடிவேலு திரைப்பட பாணியில் கிணற்றை காணவில்லை என்பது போல உள்ளது.

    எடப்பாடி பழனிசாமிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசினால் கோபம் வருகிறது விட்டால் என்னை அடித்து விடுவார் போல இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதை விட்டு மோடியிடம் பல்லை காட்டுகிறார்.

    எடப்பாடி பழனிசாமி அடிமை ஆட்சி நடத்திவிட்டு இப்போது தேர்தல் வந்தவுடன் பாஜக- அதிமுக கூட்டணி இல்லை என்று நாடகம் ஆடுகிறார்கள்.

    ஆளுநர் பாஜகவின் கைபாவையாக உள்ளார். தேசிய கீதமும், தமிழ் தாய் வாழ்த்தும் முக்கியம் என்று சொன்ன தலைவர் நம் தலைவர் ஸ்டாலின். அண்ணா வைத்த தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் என சொன்னவர் ஆளுநர்.

    மத்திய அரசு வழங்கும் 29 பைசாவை வைத்து கொண்டு இவ்வளவு நல்லது செய்யும் நிலையில் தேவையான நிதியை வழங்கும் ஆட்சி வந்தால் தமிழகத்திற்கு எப்படியெல்லாம் நலத்திட்டங்களை செய்யலாம் என்று நினைத்து பாருங்கள்.

    இந்திய கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கடந்த தேர்தலில் அடிமை அ.தி.மு.க.வை விரட்டி அடித்தது போல இந்த முறை அ.தி.மு.க. எஜமானர்கள் பா.ஜ.க. விரட்டி அடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் குரங்குச்சாவடி பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வேனில் நின்ற படியே பிரசாரம் செய்கிறார்.
    • தி.மு.க. வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் ராணிப்பேட்டையிலும், கெங்கவல்லியில் 6 மணிக்கும் வேனில் நின்றபடி பிரசாரம் செய்கிறார்.

    சேலம்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று ஓமலூர் அண்ணாசிலை சந்திப்பில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

    அதனை தொடர்ந்து நாளை (9-ந்தேதி) காலை 9 மணிக்கு சேலம் குரங்குச்சாவடி பகுதியில் சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வேனில் நின்ற படியே பிரசாரம் செய்கிறார்.

    தொடர்ந்து 10 மணிக்கு எடப்பாடி பஸ் நிலையம் அருகில் செல்லும் அவர் அங்கு வேனில் நின்ற படி சேலம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து பேசுகிறார்.

    தொடர்ந்து மாலை 5 மணிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசனை ஆதரித்து ஆத்தூர் ராணிப்பேட்டையிலும், கெங்கவல்லியில் 6 மணிக்கும் வேனில் நின்ற படி பிரசாரம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் மூன்று ரூபாய் திரும்ப கொடுக்கிறது
    • மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நாம் இந்திய கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இன்று பட்டுக்கோட்டையில் இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மோடி உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசு என்பது கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைத்தது மட்டுமே. ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வரும் முன்பு கேஸ் சிலிண்டர் விலை ரூ.450-ஆக இருந்தது. தற்போது ரூ.1200 என்பதை மறந்து விட கூடாது. 100 ரூபாய் குறைத்து ஏமாற்ற பார்க்கிறார்கள்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு கொடுக்கப்படும். பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75 , டீசல் ரூ.65 -க்கு கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதனை உறுதியாக அவர் நிறைவேற்றி தருவார்.

    ஜி.எஸ்.டி தொகை ஒரு ரூபாய் என்றால் நமது மாநிலத்திற்கு மத்திய அரசு கொடுக்கும் தொகை 29 பைசா மட்டுமே. ஆனால் பா.ஜனதா ஆளும் அதே உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் மூன்று ரூபாய் திரும்ப கொடுக்கிறது. நிதீஷ் குமார் ஆட்சி செய்யும் பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய் ஜிஎஸ்டி வரி கட்டினால் 7 ரூபாய் அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறது. அதனால்தான் அடுத்த முறை மோடியை நீங்கள் சந்திக்கும் போது மிஸ்டர் 29 பைசா என்று கூப்பிடுங்கள் என்று கூறுகிறேன் .

    ஏனென்றால் இந்த 29 பைசா என்பது இன்று செல்லாக்காசு. வரும் தேர்தலுக்குப் பிறகு மோடியும் செல்லாக்காசாகி விடுவார். இந்த முறை 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மாநில உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமென்றால் நாம் இந்திய கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாங்கள் மோடிக்கும், இ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம்.
    • எங்களுக்கு மரியாதை கொடுத்தால் திருப்பி கொடுப்போம். இல்லையென்றால் தூக்கி மிதிப்போம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலை அருகே தி.மு.க வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது :-

    மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் சேர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்துவிட்டன. இவற்றை மீட்டெடுக்க தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

    சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி , சசிகலா சிறைக்கு சென்றபோது அவர் யார் என கேட்டார். இத்தகைய குணம் கொண்ட எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு மட்டுமில்லாமல் அ.தி.மு.க.விற்கும் துரோகம் செய்து விட்டார்.

    கடந்த 10 ஆண்டுகளாக பிரதமாக உள்ள மோடி தமிழகத்திற்கு இதுவரை எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்திடம் இருந்து பெறும் ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே மத்திய அரசு திரும்பி வழங்கி உள்ளது.

    நாங்கள் மோடிக்கும், இ.டி.க்கும் (அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம். எங்களுக்கு மரியாதை கொடுத்தால் திருப்பி கொடுப்போம். இல்லையென்றால் தூக்கி மிதிப்போம். பா.ஜனதா, அ.தி.மு.க. ஆட்சியில் இழந்த தமிழக உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும். நமது தலைவர் (மு.க.ஸ்டாலின்) யாரை கை காட்டுகிறாரோ அவர் தான் பிரதமராக வர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×