என் மலர்

    நீங்கள் தேடியது "Minister Udhayanidhi Stalin"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன்.
    • தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது குறித்தும், நிறைவேற்றப்படுகின்ற பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

    திருவாரூர்:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் மாவட்ட சுற்றுபயணத்தை முடித்து விட்டு நேற்று மாலை திருவாரூர் மாவட்டத்துக்கு வந்தார். மன்னார்குடி அடுத்த வடுவூரில் ரூ.7 கோடியில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார்.

    பின்னர் வடுவூரில் இருந்து புறப்பட்டு திருவாரூரை அடுத்த காட்டூரில் உள்ள கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். இரவு திருவாரூர் சுற்றுலா ஆய்வு மாளிகையில் தங்கினார்.

    இன்று காலை மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து பார்வையிட்டார். பின்னர் கருணாநிதி, அவரது பெற்றோர் முத்துவேல்-அஞ்சுகம், முரசொலி மாறன் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    கலைஞர் இல்ல நினைவகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பு எழுதினார்.

    தொடர்ந்து அவருக்கு, தி.மு.க. தொண்டர்கள் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்ட உபகரணங்களை பரிசாக வழங்கினர்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    விடியலை நோக்கி பிரசாரத்தில் கடந்த ஆட்சியில் இதே கலைஞர் இல்லம் முன்பு கைதானேன். தற்போது அமைச்சராக வந்துள்ள தருணம் மகிழ்ச்சி அளிக்கிறது. மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் மக்கள் பணியாற்றுவேன். செல்லும் வழியெல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது. முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கிறார்கள். அவைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அரசு திட்டங்களின் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு ரூ.5 கோடியில் 316 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேன். தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்கள் மக்களிடம் சென்றுள்ளது குறித்தும், நிறைவேற்றப்படுகின்ற பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். திருக்குவளையில் இருந்து திருவாரூர் வரும் வழியில் ஏராளமான பொதுமக்கள் வரவேற்பு அளித்ததால் இங்கு வர தாமதம் ஏற்பட்டது.

    எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதுதான் திராவிட மாடல். குடும்பத்திற்கு ஒருவருக்காவது அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதை இலக்காக வைத்து முதல்-அமைச்சர் பணியாற்றுகிறார். அவரோடு, அவர் காட்டுகின்ற வழியில் நாங்களும் பணியாற்றி வருகிறோம்.

    மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்த அரசுக்கு அனைவரும் துணையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, எம்.எல்.ஏ.க்கள் கலைவாணன், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
    • இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

    அரியலூர்:

    அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கலையரங்கத்துக்கு மாணவி அனிதா பெயர் சூட்டப்படுவதால், மருத்துவக்கல்வி பயில வரும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள், எதிர்ப்புகள் குறித்து தெரிந்து கொள்வார்கள்.

    நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான ரகசியம் என்னிடம் உள்ளது என கூறிவந்தது என்னவெனில், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என்பதே.

    நான் பிரதமர் மோடியை சந்தித்தபோது கூட, நீட் தேர்வு ரத்து செய்யும் வரை, நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் தொடரும் என்று தெரிவித்து வந்தேன். தமிழகத்தில் அரசின் திட்டங்களான மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தில் 250 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர்.

    புதுமைப் பெண் திட்டத்தில் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 1 கோடியே 10 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர்.

    அதேபோல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், இன்னுயிர் காக்கும் 48 திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் என பல்வேறு திட்டங்களினால் மக்கள் பயனடைந்து வருகின்றனர் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது, 5 லட்சம் கோடி கடனை முந்தைய அரசுவிட்டு சென்றது. அதனை திறம்பட கையாண்டு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம்.
    • வீட்டில் அரசியல் பேசுங்கள், அப்போதுதான் என்ன நடக்கிறது என்பது தெரியும்.

    பீளமேடு:

    திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    கரூர் மாவட்ட அமைச்சராக இருந்தாலும் கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் நியமித்தார். அவர் உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத வெற்றியை தேடி தந்தவர். அவர் தான் முழு வெற்றிக்கு காரணம். கடுமையான உழைப்பாளி.

    மணமக்களுக்கு தாலி, பட்டு வேட்டி, சேலை உள்பட சீர்வரிசை பொருட்களை பார்த்து பார்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்துள்ளார்.

    இங்கு நடந்தது சுயமரியாதை திருமணம். அந்த காலத்தில் இந்த மாதிரியான சுயமரியாதை திருமணத்தை யாரும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அதற்கு அங்கீகாரம் கொடுக்க வலியுறுத்தியவர் பெரியார். முன் மொழிந்தவர் அண்ணா.

    அதனால் தான் தொடர்ந்து கலைஞரும், முதலமைச்சரும் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வருகின்றனர்.

    யாரும் யாருக்கும் அடிமை இல்லை. மணமக்கள் அ.தி.மு.க, பா.ஜ.க போல் இருக்காதீர்கள். யாருடைய காலிலும் விழாதீர்கள். காலில் விழுந்தவர்கள் நிலைமை என்ன என்பது தெரியும். பெற்றோர், அவரவர் முன்னோர்களின் கால்களில் மட்டுமே விழ வேண்டும்.

    தவறு செய்தால் மனைவி காலில் கூட விழலாம். ஆனால் எப்போதும் உங்கள் உரிமையை மட்டும் விட்டு கொடுக்காதீர்கள்.

    இங்கு வந்துள்ள மணமக்களுக்கும் மற்றும் அவர்களது உறவினர்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் மட்டும் வைக்கிறேன். உங்களுக்கு பிறக்க கூடிய குழந்தைகளுக்கு நீங்கள் சுத்தமான தமிழ் பெயர்கள் வையுங்கள்.

    கொஞ்சம், கொஞ்சமாக இந்தி மொழியை கொண்டு வருகிறார்கள். தற்போது என்ன பெயர் வைக்கிறார்கள் என்றே தெரியவில்லை. சிலர் வாயில் நுழைய முடியாத அளவுக்கு பெயர்களை வைக்கிறார்கள். எனவே சுத்தமான தமிழ் பெயர் வையுங்கள்.

    வீட்டில் அனைவரும் அரசியல் பேச வேண்டும். தமிழ்நாட்டில், முதலமைச்சர் என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மத்திய அரசு என்ன செய்கிறது?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது, 5 லட்சம் கோடி கடனை முந்தைய அரசுவிட்டு சென்றது. அதனை திறம்பட கையாண்டு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறோம். எனவே வீட்டில் அரசியல் பேசுங்கள், அப்போதுதான் என்ன நடக்கிறது என்பது தெரியும்.

    அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.கவினர் தேர்தல் வரும்போது தான் வெளியே வருவார்கள். தேர்தல் முடிந்ததும் உள்ளே சென்று விடுவார்கள். தற்போது இடைத்தேர்தலுக்கு வந்தார்கள். இனி அடுத்த 8 மாதங்களுக்கு வர மாட்டார்கள். மீண்டும் பாராளுமன்ற தேர்தலின் போது தான் வருவார்கள்.

    ஆனால் நாங்கள் தேர்தல் நடைபெறாத நேரத்தில் கூட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம். நாங்கள் மக்களோடு இருந்து மக்களுக்காக பணி செய்வோம். எனவே நீங்கள் இந்த அரசுக்கு எப்போதும் துணை இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவை-அவினாசி சாலையில் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் மஹாலில் தி.மு.க சார்பில் 81 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.

    கோவை:

    தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    இதற்காக அவர் நேற்று இரவு கரூரில் இருந்து கார் மூலமாக கோவைக்கு வருகை தந்தார். அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.கவினர் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இரவு தங்கி ஓய்வெடுத்தார்.

    இன்று காலை 10 மணிக்கு கோவை-அவினாசி சாலையில் சின்னியம்பாளையத்தில் உள்ள பிருந்தாவன் மஹாலில் தி.மு.க சார்பில் 81 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    தொடர்ந்து மணமக்களுக்கு பட்டு புடவை, பட்டு வேஷ்டி, கட்டில், மெத்தை, பிரிட்ஜ், டிவி, 2 குத்துவிளக்கு, ஹாட்பாக்ஸ், மிக்ஸி, கிரைண்டர், சில்வர் குடம், சில்வர் பாத்திரம், தாம்பூழம், பீரோ உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான 70 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், துணைமேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் எம்.பி. நாகராஜ், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், மற்றும் செந்தில் கார்த்திகேயன், மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் ஆரோக்கிய ஜான், சிங்கை ரவிச்சந்திரன், கோட்டை அப்பாஸ், இைளஞரணி பாலாஜி விக்னேஷ், வக்கீல் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர் கொடிசியா அருகே ரேக்ளா போட்டியை தொடங்கி வைத்து போட்டியை கண்டு ரசித்தார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

    தொடர்ந்து கோவை வ.உ.சி. மைதானத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அங்கு தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் சாரஸ் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கலெக்டர் கிராந்திகுமார் பாடி, அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இன்று மாலை 5.30 மணிக்கு கொடிசியா மைதானத்தில் தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. அந்த பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று தி.மு.கவின் மூத்த முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி, தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • புதுமைப்பெண் திட்டத்தால் இன்றைக்கு உயர்கல்வி பெறும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
    • இந்த 22 மாதங்களில் முதலமைச்சர் நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியலிட இங்கு நேரம் போதாது.

    கரூர்:

    கரூர் மாவட்டம் ராயனூரில் இன்று 1 லட்சத்து 22 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.267 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    உழைப்பின் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் கரூர் மாவட்டம் வளர்ச்சி பாதையில் செல்கிறது. அமைச்சர் செந்தில்பாலாஜி எதை செய்தாலும், எந்த நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்றாலும் அதனை மற்றவர்கள் பார்த்து பிரமிக்கும் அளவுக்கு செய்து காண்பிப்பார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் தனது சட்டமன்ற பணியை கரூர் மாவட்டத்தில் தொடங்கினார்.

    5 முறை முதலமைச்சராக, 13 முறை சட்டமன்ற உறுப்பினராக, 80 ஆண்டு காலம் அரசியல் பணியை கலைஞர் முதன் முதலாக கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடங்கினார்.

    சென்றமுறை நான் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது நீங்களும் குளித்தலை தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று செந்தில் பாலாஜி என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய வேண்டி இருப்பதால் அது சின்ன தொகுதியாக இருக்க வேண்டும் என்று கருதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டேன்.

    இருப்பினும், அவர் கூறிய படி கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுத்தந்தார். கரூர் மிகவும் சிறப்பு வாய்ந்த மாவட்டமாகும். இங்கு ஒரு வேலையை தொடங்கும்போது கிடைக்கும் உற்சாகம், வெற்றி கரூர் மாவட்டத்தை நம்பர் ஒன்றாக திகழ செய்கிறது.

    மற்ற மாவட்டங்களுக்கு கரூர் மாவட்டம் முன்மாதிரியாக திகழ்கிறது. கரூர் ஒரு தொழில் நகரம். லாரி மற்றும் பேருந்து பாடி கட்டும் தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. கொசுவலை உற்பத்தியில் இந்தியாவிற்கு முன்னோடியாக இருக்கிறது. அந்த வகையில், ரூ.1,800 கோடிக்கு கொசுவலை உற்பத்தி கரூரில் நடைபெறுகிறது. மேலும் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு போர்வைகள் தயாரித்து இந்தியாவில் பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்ற போது, வாக்களித்த மக்களுக்கு உழைக்க வேண்டும், வாக்களிக்காத மக்களும் வாக்களிக்கவில்லையே என்று எண்ணும் அளவுக்கு மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கூறினார்.

    அதன்படி எண்ணற்ற திட்டங்களை முதல்வர் கொண்டுவந்து செயல்படுத்தி வருகிறார். ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் இலவச மின்சாரம் கேட்டு கிடப்பில் போடப்பட்ட மனுக்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி இந்த 22 மாத ஆட்சியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு அமைச்சர செந்தில்பாலாஜியின் முன்னெடுப்பினால் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    ஒரு லட்சமாவது பயனாளிக்கு சென்னையில் நடந்த விழாவில் நானும், முதல்வரும் அதற்கான உத்தரவினை வழங்கினோம். ஒரு லட்சத்து 50 ஆவது பயனாளிக்கு முதல்வரே இங்கு நேரில் வந்து வழங்கினார்.

    முதலமைச்சர் கொண்டுவந்த மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தில் இந்த 22 மாத ஆட்சியில் 250 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள். கரூர் மாவட்டத்தில் மட்டும் 31 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பஸ்களை பார்த்தாலே ஸ்டாலின் பஸ் வருகிறது என்று தாய்மார்கள் சொல்கிறார்கள்.

    அதேபோன்று, ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ஒன்றரை லட்சம் குழந்தைகள் பயனடைந்தார்கள். இப்போது 2 லட்சம் குழந்தைகள் பயனடையும் வகையில் திட்டத்தை முதலமைச்சர் விரிவாக்கம் செய்துள்ளார்.

    ஒரு தந்தையாக இருந்து குழந்தைகள் பசியோடு வரக்கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். கல்விக்கும், மருத்துவத்திற்கும் முதல்வர் முன்னுரிமை அளித்து வருகிறார்.

    புதுமைப்பெண் திட்டத்தால் இன்றைக்கு உயர்கல்வி பெறும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த 22 மாதங்களில் முதலமைச்சர் நிறைவேற்றியுள்ள திட்டங்களை பட்டியலிட இங்கு நேரம் போதாது. ஏற்கனவே மாயனூரில் கலைஞர் ஆட்சியில் 1 டி.எம்.சி. தண்ணீரை தேக்கும் அளவுக்கு தடுப்பணை கட்டப்பட்டது.

    தற்போது குளித்தலை மருதூர் மற்றும் நெரூர் ஆகிய இரண்டு இடங்களில் ரூ.1,450 கோடியில் தடுப்பணைகள் கட்ட முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    தேர்தல் காலத்தில் மட்டுமல்ல, எப்போதும் உங்களுடன் இருந்து, உங்களுக்கான உழைப்பவர்கள்தான் தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க. அரசு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சரின் திட்டங்கள் இன்றைக்கு நாடு முழுவதும் பரவி இருக்கிறது. முதல்வரின் திட்டங்களை மக்கள் கொண்டாடுகிறார்கள். இன்னும் இருக்கக்கூடிய 3 ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் கொடுத்த 100 சதவீத வாக்குறுதிகளையும் அவர் செய்து முடிப்பார். உங்களுக்கு என்ன தேவையோ, எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். ஒரு அண்ணனாக, தம்பியாக, மகனாக, பேரனாக, உங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக இருந்து உழைக்க என்னால் முடிந்த அளவுக்கு உழைப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கட்சியினரிடம் கேட்டறிந்தார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவையில் நாளை தி.மு.க சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம், பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கரூரில் இருந்து கார் மூலமாக இன்று இரவு கோவைக்கு வருகிறார்.

    அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.கவினர் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

    நாளை காலை 10 மணிக்கு கோவை-அவினாசி சாலையில் உள்ள பிருந்தாவன் மஹாலில் தி.மு.க. சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடக்கிறது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 70 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    பின்னர் காலை 11.30 மணிக்கு கொடிசியா அருகே ரேக்ளா போட்டியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து போட்டியை கண்டு ரசித்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

    பகல் 12.10 மணியளவில் கார் மூலமாக கோவை வ.உ.சி. மைதானத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அங்கு தேசிய அளவிலான மகளிர் சுய உதவிக்குழு பொருட்களின் சாரஸ் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.

    இந்த விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பின்னர் மாலை 5.30 மணிக்கு கொடிசியா மைதானத்தில் தி.மு.க சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    பொதுக்கூட்டத்தில் தி.மு.கவின் மூத்த முன்னோடிகள் 2 ஆயிரம் பேருக்கு பொற்கிழிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில் இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் பார்வையிட்டு அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கட்சியினரிடம் கேட்டறிந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகள், ரத்த தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • கோவைப்புதூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழிகள் வழங்குகிறார்.

    கோவை:

    கோவையில் வருகிற 5-ந்தேதி 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார்.

    இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகள், ரத்த தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி கோவை வருகிறார். அன்று கொடிசியாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

    அன்று பகல் 11.30 மணிக்கு வ.உ.சி. மைதானத்தில் அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    மாலை 4.30 மணிக்கு கொடிசியாவில் மாட்டு வண்டி பந்தயத்தை தொடங்கி வைத்து பரிசு வழங்குகிறார். மாலை 5 மணிக்கு கோவைப்புதூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழிகள் வழங்குகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், மின் இணைப்புடன் இதுவரை 2 கோடியே 60 லட்சம் பேர் இணைத்துள்ளனர். இனி ஆதார் எண் இணைக்க கால நீட்டிப்பு அளிக்கப்படாது. காற்றாலைகளின் மூலம் உற்பத்தி செய்த மின்சாரம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு உள்ளது என்றார்.

    உதயநிதி ஸ்டாலின் வருகை தொடர்பாக கோவை மாவட்ட ஒருங்கிணைந்த தி.மு.க. செயற்குழு கூட்டம் கோவை சிட்ராவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி. நாகராஜ், முன்னாள் மேயர் ராஜ்குமார், கோட்டை அப்பாஸ், கோகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை டெல்லியில் உள்ள கிரிஷி பவனில் சந்தித்தார்.
    • தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விவரித்து பேசினார்.

    சென்னை:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார்.

    டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் கவர்னரும் தற்போதைய பஞ்சாப் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இதைத் தொடர்ந்து இன்று மதியம் 1.15 மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார்.

    அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக விவரித்து பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
    • இன்று இரவு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

    சென்னை:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி சென்றார்.

    டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் மேகநாத ரெட்டி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

    தொடர்ந்து இன்று மாலை 3 மணியளவில் டெல்லி தமிழ்ச் சங்க நிர்வாகிகள், டெல்லி முத்தமிழ் பேரவை நிர்வாகிகள் மற்றும் டெல்லி தமிழ் கல்விக் கழக நிர்வாகிகள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார்கள்.

    அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் டெல்லியில் பணிபுரியும் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். பின்னர் இரவு 7 மணியளவில் பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    இதைத் தொடர்ந்து இன்று இரவு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். பின்னர் மத்திய விளையாட்டுத் துறை மந்திரியையும் சந்திக்க இருக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
    • பிரதமர் மோடியை நாளை சந்திக்க உதயநிதி ஸ்டாலின் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றார். அதனைத் தொடர்ந்து விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்றார்.

    பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இல்ல விழா நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மேலும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க உதயநிதி ஸ்டாலின் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோரையும் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.