search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை தேர்தல்"

    • தேர்தல் வாக்குப்பதிவு சதவீத தரவுகள் திருத்தப்பட்டது குறித்து கார்கே கடிதம்.
    • வாக்குப்பதிவு குறித்த தரவுகள் முரண்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவாக உள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. வாக்குப்பதிவு காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். சில காரணங்களுக்கான ஒன்றிரண்டு இடங்களில் நேரம் மாற்றப்படலாம்.

    வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தோராயமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்குள் சரியான வாக்குப்பதிவு தரவுகள் வெளியிடப்படும். ஆனால் முதற்கட்டம் மற்றும் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகும் வாக்குப்பதிவு தரவுகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் திருத்தம் செய்து வெளியிடப்பட்டது. ஐந்து முதல் ஆறு சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியிருந்ததாக தகவல் வெளியானது.

    இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். தேர்தல் ஆணையமும் விளக்கம் அளித்திருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவரும், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான மல்லிகார்ஜூன கார்கே, இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அதில் வாக்குப்பதிவு சதவீத தரவுகள் குறித்த முரண்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    தேர்தல் ஆணையம் மீது சந்தேகத்தை எழுப்பும் வகையில் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மல்லிகார்ஜூன கார்கேவை கடுமையாக எச்சரித்துள்ளது.

    தேர்தல் ஆணையம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள சுமத்தியுள்ளார். தேர்தல் சுமூகமாகவும் நியாயமான முறையிலும் நடந்து வருவதில் குழப்பத்தையும் தவறான கருத்தை பரப்பி இடையூறுகளை உருவாக்கும் நோக்கில் கடிதம் இருப்பதாக கண்டித்துள்ளது.

    சந்தேகங்கள் மற்றும் நல்லிணக்கமின்மை தவிர, அசாதாரண சூழ்நிலையை உருவாக்கலாம். நேரடி தேர்தல் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தின் மீதான ஆக்கிரமிப்பு எனவும் தெரிவித்துள்ளது.

    மேலும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நடத்தை விதிகளை நேரடியாக பாதிக்கும் எந்தவொரு செயலுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

    • ஜூன் 4-ந்தேதி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை தொடங்குவோம்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ஒருவரான ராகுல் காந்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அதில் "ஜூன் 4-ந்தேதி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை தொடங்குவோம்.

    மோடியின் பொய் பிரச்சாரத்தை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம். வேலையை தேர்ந்தெடுங்கள் வெறுப்பை அல்ல. பதவி கைவிட்டுப் கோகும் பயத்தில் மோடி பல்வேறு நாடகங்களை நடத்தி வித்தை காட்டுகிறார்" இளைஞர்கள் உத்தரவாதம் குறித்து பேசியுள்ளார்.

    • 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவு.
    • இரவு 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்காளர்கள் காலை முதலே ஆர்வமுடன் வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    மாலை வாக்குப்பதிவுகள் முடிந்த நிலையில், நேற்றிரவு 8 மணி நிலவரப்படி 61.45 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்நிலையில், நேற்று இரவு 11 மணி வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, 13 மாநிலங்களில் உள்ள 93 தொகுதிகளில் மொத்தம் 64.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் 81.61 சதவீதம்

    பீகார் 58.18 சதவீதம்

    சத்தீஸ்கர் 71.06 சதவீதம்

    தாத்ரா, டயு மற்றும் டாமன் 69.87 சதவீதம்

    கோவா 75.20 சதவீதம்

    குஜராத் 58.98 சதவீதம்

    கர்நாடகா 70.41 சதவீதம்

    மத்திய பிரதேசம் 66.05 சதவீதம்

    மகாராஷ்டிரா 61.44 சதவீதம்

    உத்தரப்பிரதேசம் 57.34 சதவீதம்

    மேற்கு வங்காளம் 75.79 சதவீதம்

    • தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி கேலித்கூத்தாக மாறி வருகிறது.
    • அதற்கு மோடி நடத்தி விதி என மறுபெயரிட வேண்டும்.

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் மவுனம் காத்து வருகிறது. பா.ஜனதா ஆட்சியில் தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி மோடி நடத்தை விதியாக மாறிவிட்டது என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    மோடி மற்றும் மற்ற பா.ஜனதா தலைவர்களின் வெறுப்பு நிறைந்த பேச்சுகள் குறைந்த சாதி இந்துக்கள், சிறுபான்மையினர், மற்ற விளிம்பு நிலையில் உள்ள பிரிவுகளில் உள்ள மக்களை மிரட்டுவதுபோன்று உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் மவுனம் காத்து வருகின்றது.

    தேர்தல் ஆணையத்தின் மாதிரி நடத்தை விதி கேலித்கூத்தாக மாறி வருகிறது. அதற்கு மோடி நடத்தி விதி என மறுபெயரிட வேண்டும். இருந்தபோதிலும், நாட்டு மக்களின் உரிமைகளை மீறும் ஒவ்வொரு செயலுக்கு எதிராகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.

    2014-ல் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது?. சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? பெண் குழந்தைகளை பாதுகாப்பதாக கூறிய அவருடைய "Beti Banchao Beti Padao" என்ன ஆனது?.

    அன்னபூர்னா பந்தர் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் ஏழை பெண்களுக்கு 3 ஆயிரம் கொடுப்பதாக போலி வாக்குறுதியை அளித்து வருகிறார்கள். பா.ஜனதா 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்தவர்களுக்கான சம்பளத்தை மூன்று வருடங்களாக நிறுத்தி வைத்துள்ளது. பா.ஜ.க.வும் அரிசிக்கு ஒரு பைசா கூட விடுவிக்கவில்லை, எங்கள் ஏழைகள் நெருக்கடியை உணரக்கூடாது என்பதற்காக முழுத் தொகையையும் நாங்கள் தோளில் சுமந்துள்ளோம்.

    பா.ஜனதா 3-வது முறையாக ஆட்சிக்கு வந்தால், தலித்கள் மற்றும் மற்ற சமூகத்தினரை நாட்டில் இருந்து வெளியேற்றும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தி தலித்கள், எஸ்டிகள், ஓபிசிக்கள் மற்றும் இஸ்லாமியர்களின் அடையாளத்தை இழக்க சதி செய்கிறது.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • இன்று நாட்டின் எல்லா பகுதியிலும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
    • தலித்கள், பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள்.

    மக்களவை தேர்தலில் இன்று 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இன்று நாட்டின் எல்லா பகுதியிலும் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பின்மையை எதிர்கொண்டு வருகிறார்கள். பெண்கள் அட்டூழியங்களை (கொடுமைகள்) எதிர்கொண்டு வருகிறார்கள். தலித்கள், பழங்குடியினர்கள், பிற்படுத்தப்பட்டோர்கள், சிறுபான்மையினர்கள் பயங்கரமான பாகுபாட்டை எதிர்கொண்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா ஆகியவற்றின் நோக்கத்தால் இந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தை பெற வேண்டும் என்பதுதான் அவர்களுடைய நோக்கம். அரசியல் ஆதாயத்திற்காக அவர்கள் வெறுப்புணர்வை வளர்த்துள்ளனர். அனைத்து வகையிலான வளர்ச்சிக்கும், உரிமைகள் பறிக்கப்பட்டவர்களின் நீதிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் மற்றும் நான் எப்போதுமே போராடி வருகிறோம்.

    அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அர்ப்பணித்துள்ளது. அனைவருடைய சிறந்த எதிர்காலத்திற்காகவும், ஒன்றிணைந்து வலுவான மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை கட்டமைக்க காங்கிரஸ்க்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு சோனியா காந்தி அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது.
    • அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம்.

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் தார் என்ற பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

    அம்பேத்கரை காங்கிரஸ் குடும்பத்தினர் மிகவும் வெறுக்கின்றனர் என்பதுதான் உண்மை. பா.ஜனதா 400 இடங்களை பெற்றால், பிரதமர் மோடி அரசியலமைப்பை மாற்றிவிடுவார் என காங்கிரஸ் வதந்தியை பரப்பு வருகிறது.

    பா.ஜனதா தலைமையிலான கூட்டணி பாராளுமன்றத்தில் ஏற்கனவே 400 இடங்ளுக்கு மேல் பெற்றுள்ளது. நாங்கள் அதை ஜம்மு-காஷ்மீர் மாநலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த அந்தஸ்திற்கான சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்காக பயன்படுத்தினோம் என்பதை மக்கள் புரிந்து கொள்வது முக்கியமானது.

    காங்கிரஸ் மீண்டும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டு வரக்கூடாது என்பதில் மோடி 400 இடங்களை விரும்புகிறார். அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பாப்ரி லாக் போட்டுவிடக்கூடாது என்பதற்காக மோடி 400 இடங்களை விரும்புகிறார்.

    ஓபிசி இடஒதுக்கீட்டை அவர்களது வாக்கு வங்கிக்கு அளிப்பதை தடுத்த மோடி 400 இடங்களை விரும்புகிறார். எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டை கடந்த ஆண்டுகளாக நீட்டிக்க 400-க்கும் அதிகமான இடங்களை பயன்படுத்தியுள்ளோம். பழங்குடியின பெண்ணை நாட்டின் ஜனாதிபதியாக நியமனம் செய்ய, பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பயன்படுத்தியுள்ளோம்.

    மோடி 400 இடங்களை கேட்பது நாட்டின் காலி இடங்களை, தீவுகளை மற்ற நாடுகளுக்கு காங்கிரஸ் அளித்து விடக்கூடாது என்பதற்காகத்தான். எஸ்.சி., எஸ்.டி, மற்றும் ஓபிசி-யின் இடஒதுக்கீடு பறிக்கப்பட்டு அவர்களுடைய வாக்கு வங்கிக்குக்கு அளிக்க முடியாது. வாக்கு வங்கியின் அனைத்து ஜாதிகளும் ஓபிசி என ஒரே இரவில் அறிவிக்க முடியாது.

    அரசியலமைப்பை உருவாக்குவதில் அம்பேத்கருக்கு பங்கு மிகக்குறைவு என்றும், அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் நேரு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தார் என்றும் காங்கிரஸ் கூறத் தொடங்கியது. அம்பேத்கரையும் அரசியல் சாசனத்தையும் முதுகில் குத்தியது காங்கிரஸ்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • குஜராத்தில் 25 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
    • பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கிறார்.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை 3-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகள் உள்ளன. சூரத் தொகுதியில் முகுஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் நடத்தப்படாது. மற்ற 25 தொகுதிகளில் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.

    மோடி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் அகமதாபாத்தில் உள்ள நிஷான் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய இருக்கிறார்.

    இந்த பள்ளியில் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நேற்று அகமதாபாத்தில் வாக்கிற்காக ஓட்டம் என்ற பெயரில் மாரத்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 100 சதவீதம் வாக்குப்பதிவு என்பதற்கான வழிப்புணர்வு ஓட்டமாக இந்த மாரத்தான் நடத்தப்பட்டது.

    2014 மற்றும் 2019-ல் பா.ஜனதா 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தற்போது முழுமையாக கைப்பற்றும் நம்பிக்கையில் உள்ளது.

    இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 24 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    • அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.
    • கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.

    உத்தரப் பிரதேசம் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே இன்று காலை வெளியிட்டார். ரேபரேலி தொகுதியில் ராகுல், அமேதி தொகுதியில் கேஎல் சர்மா போட்டியிடுவதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தபோது சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோரும் உடன் இருந்தனர்.

    ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும் களம் காண்கிறார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், தனக்கு ரூ.20 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார்.

    பிரமாண பத்திரத்தில் அவர் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு குறித்த தகவல் பின் வருமாறு:-

    1. அசையும் சொத்துக்களின் மதிப்பு 9.24 கோடி ரூபாய் ஆகும்.

    2. அசையா சொத்துக்களின் மதிப்பு 11.15 கோடி ரூபாய் ஆகும்.

    3. சொந்த வாகனம் கிடையாது.

    4. அடுக்குமாடி குடியிருப்பு கிடையாது.

    5. கையில் 55 ஆயிரம் ரூபாய் உள்ளது.

    6. வங்கியில் 26.25 லட்சம் ரூபாய் டெபாசிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

    7. 4.33 கோடி ரூபாய் மதிப்பில் பத்திரங்கள் மற்றும் பங்குகள் உள்ளன.

    8. 3.81 கோடி ரூபாய் மதிப்பில் மியூட்சுவல் நிதி உள்ளது.

    9. 15.21 லட்சம் ரூபாய் மதிப்பில் கோல்டு பத்திரம் உள்ளது.

    10. 4.20 லட்சம் ரூபாய் அளவில் நகைகள் உள்ளன.

    11. 9 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளது.

    12. தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் உள்ளது.

    இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    • வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், விழுப்புரம் தொகுதி வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் வேலை செய்யாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை 9.28 மணி அளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஸ்ட்ராங் ரூமுக்கான சிசிடிவி கேமராக்கள் திடீரென நின்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    வேட்பாளர்களின் முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மீண்டும் 9.56 மணிக்கு மீண்டும் சிசிடிவி செயல்பட தொடங்கியது.

    யுபிஎஸ்-ல் மின்தடை ஏற்பட்டு, பின் அது சரி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவரும், ஆட்சியருமான பழனி விளக்கம் அளித்துள்ளார்.

    • பாஜக-வுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது.
    • தெற்கில் 2019-ஐ விட மிகவும் மோசமான முடிவுதான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சசி தரூர் போட்டியிட்டுள்ளார். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கைக்காக காத்திருக்கிறார்.

    இவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    பா.ஜனதா சொல்லும் 400 இலக்கு என்பது ஜோக். 300 என்பது சாத்தியமற்றது. 200 என்பது கூட அந்த கட்சிக்கு சவாலானதாக இருக்கும்.

    கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் ஆகிய தென் மாநிலங்களில் ஒரு சீட் கூட கிடைக்காது. தெற்கில் 2019-ஐ விட மிகவும் மோசமான முடிவுதான் பா.ஜனதாவுக்கு கிடைக்கும். கடந்த மாதம் 26-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மூலம் 190 இடங்களில் தேர்தல் முடிந்துள்ளது. என்னுடைய தரவுகள்படி, எங்கள் கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் நேர்மறையாக முடிவு கிடைக்கும் என தெரியவந்துள்ளது. மிகப்பெரிய அலையாக இருக்கும் என நாங்கள் கூறவில்லை. ஆனால், அரசாங்கத்திற்கு ஆதரவாக இல்லை. தற்போது வரை நாங்கள் முன்னணியில் உள்ளோம். தேவையில்லாத இந்த நீண்ட கால தேர்தலில் இன்னும் ஐந்து கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.

    திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் வெற்றி பெற்றால், இந்த தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும், நீண்ட காலம் இந்த தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் என்ற பெருமையையும் பெறுவார்.

    • உங்கள் பேச்சுகளில் உள்ள பொய்கள் நீங்கள் நினைத்ததை கொண்டிருக்கவில்லை என்பதுபோல் கடிதம் தோற்றமளிக்கிறது.
    • இப்போது உங்கள் வேட்பாளர்கள் உங்கள் பொய்களைப் பெரிதாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

    காங்கிரஸ் கட்சி எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி-யின் இடஒதுக்கீடுகளை பறித்து அவர்களுக்கு வாங்கி வங்கிக்கு கொடுக்க இருப்பதாகவும், மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இருப்பதாகவும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது தொடர்ந்து கூறி வருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஏழை, விளிம்பு நிலையில் இருப்பவர்கள், பெண்கள், ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழிலாளர் வகுப்பை சேர்ந்தவர்கள், தலித் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட ஒவ்வொரு இந்தியனும் எங்களுடைய வாக்கு வங்கி. வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதற்குப் பதிலாக கடந்த 10 ஆண்டுகளில் உங்களுடைய அரசு செய்த செயல்பாட்டை மக்களிடம் தெரிவித்து வாக்கு கேளுங்கள்.

    தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில், வேட்பாளர்களிடம் வாக்கு கேட்கும்போது என்ன தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து பார்த்தேன்.

    கடிதத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது உங்களுக்குள் மிகுந்த விரக்தியும் கவலையும் இருப்பதாகத் தெரிகிறது. இது பிரதமரின் அலுவலகத்திற்குப் பொருந்தாத மொழியைப் பயன்படுத்த உங்களை வழி நடத்துகிறது.

    உங்கள் பேச்சுகளில் உள்ள பொய்கள் நீங்கள் நினைத்ததை கொண்டிருக்கவில்லை என்பதுபோல் அந்தக் கடிதம் தோற்றமளிக்கிறது. இப்போது உங்கள் வேட்பாளர்கள் உங்கள் பொய்களைப் பெரிதாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது உண்மை ஆகாது.

    எங்கள் தேர்தல் அறிக்கை உத்தரவாதங்கள் மிகவும் எளிமையானவை மற்றும் தெளிவானவை, நாங்கள் அதை விளக்க வேண்டியதில்லை. உங்கள் நலனுக்காக, அவற்றை மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன் (தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியமான விசயங்களை குறிப்பிட்டுள்ளார்).

    காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொள்கிறது என்று நீங்களும் உள்துறை அமைச்சரும் சொல்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் கண்ட ஒரே திருப்திப்படுத்தும் கொள்கை, நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சீனர்களைத் திருப்திப்படுத்துவதுதான். இன்னும் நீங்கள் சீனாவை ஊடுருவிகள் என அழைக்க மறுக்கிறீர்கள். நீங்கள் ஒருவர் கூட ஊடுருவவில்லை எனக்கூறி கல்வான் பள்ளத்தாக்கில் வீர மரணம் அடைந்து 20 வீரர்களை இழிவு படுத்துகிறீர்கள்.

    சீனாவுக்கு க்ளின் சீட் வழங்கி, இந்தியாவின் வழக்கை பழவீனப்படுத்தி, மேலும் போர்க்குணமாக்கியுள்ளனர். ராணுவ கட்டமைப்புகளை அருணாச்சல பிரதேசம், லடாக், உத்தரகாண்ட் எல்லையில் உருவாக்கி தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில்தான் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் மதிப்பு 54.76 சதவீதம் அதிகரித்து, 2023-24-ல் 101 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது.

    மக்கள் தொகை அடிப்படையில் அரசியலமைப்பு 16-வது பிரிவின்படி எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்பது குறித்து விளக்க வேண்டும்.

    உங்கள் கடிதத்தில் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிக்கப்பட்டு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளீர்கள். குஜராத்தில் ஏழை தலித் விவசாயிகளிடம் இருந்து மோசடி செய்து பாஜகவுக்கு தேர்தல் பத்திரமாக வழங்கப்பட்ட ரூ.10 கோடியை உங்கள் கட்சி திருப்பி கொடுக்குமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

    முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் குறைந்த வாக்காளர்கள் வாக்களித்ததால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். உங்கள் கொள்கைகள் அல்லது உங்கள் பிரச்சார உரைகளில் மக்கள் ஆர்வமாக இல்லை என்பதை இது காட்டுகிறது. இது கோடை வெயிலால் அல்ல, உங்களின் கொள்கைகளால் ஏழைகள் வாடுகிறார்கள்.

    உங்கள் தலைவர்களால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதைப் பற்றி பேச உங்களுக்கு ஆர்வம் இல்லை.

    வெறுப்புப் பேச்சுக்களுக்குப் பதிலாக, கடந்த பத்து வருடங்களில் உங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு வாக்குஅளிக்கும்படி கேட்பது சிறந்ததாக இருக்கும். தேர்தல் முடிந்ததும், தவிர்க்க முடியாத தோல்வியைத் தவிர்க்கும் வகையில் மக்களைப் பிளவுபடுத்தும் மற்றும் வகுப்புவாதப் பேச்சுக்களில் ஈடுபட்ட பொய்கள் நிறைந்த பிரதமராக மட்டுமே மக்கள் உங்களை நினைவு கூர்வார்கள்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • வானிலை காரணமாக தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தல்.
    • மெகபூபா முப்தி உள்பட 21 பேர் போட்டியிடுகிறார்கள்.

    ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதிக்கு மே 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    மோசமான வானிலை காரணமாக தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என பா.ஜனதா உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தின. அதேவேளையில் உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தேர்தலை ஒத்தி வைக்கக் கூடாது தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

    இதற்கிடையே ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்திடம் இது தொடர்பாக உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது.

    இந்த நிலையில் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதியில் மே 7-ந்தேதிக்குப் பதிலாக மே 25-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மெகபூபா முப்தி போட்டியிடுகிறார். தேசிய மாநாடு கட்சி சார்பில் மியான் அல்டாஃப் போட்டியிடுகிறார். 21 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இதனால் அனந்த்நாக்-ரஜோரி தொகுதி 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் இருந்து 6-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    ×