search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ECE"

    • தேர்தல் வாக்குப்பதிவு சதவீத தரவுகள் திருத்தப்பட்டது குறித்து கார்கே கடிதம்.
    • வாக்குப்பதிவு குறித்த தரவுகள் முரண்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவாக உள்ளது.

    பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ளன. வாக்குப்பதிவு காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். சில காரணங்களுக்கான ஒன்றிரண்டு இடங்களில் நேரம் மாற்றப்படலாம்.

    வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தோராயமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும். அடுத்த 24 மணி நேரத்திற்குள் சரியான வாக்குப்பதிவு தரவுகள் வெளியிடப்படும். ஆனால் முதற்கட்டம் மற்றும் 2-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகும் வாக்குப்பதிவு தரவுகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் திருத்தம் செய்து வெளியிடப்பட்டது. ஐந்து முதல் ஆறு சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியிருந்ததாக தகவல் வெளியானது.

    இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். தேர்தல் ஆணையமும் விளக்கம் அளித்திருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவரும், இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான மல்லிகார்ஜூன கார்கே, இது தொடர்பாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    அதில் வாக்குப்பதிவு சதவீத தரவுகள் குறித்த முரண்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவாக உள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    தேர்தல் ஆணையம் மீது சந்தேகத்தை எழுப்பும் வகையில் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மல்லிகார்ஜூன கார்கேவை கடுமையாக எச்சரித்துள்ளது.

    தேர்தல் ஆணையம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள சுமத்தியுள்ளார். தேர்தல் சுமூகமாகவும் நியாயமான முறையிலும் நடந்து வருவதில் குழப்பத்தையும் தவறான கருத்தை பரப்பி இடையூறுகளை உருவாக்கும் நோக்கில் கடிதம் இருப்பதாக கண்டித்துள்ளது.

    சந்தேகங்கள் மற்றும் நல்லிணக்கமின்மை தவிர, அசாதாரண சூழ்நிலையை உருவாக்கலாம். நேரடி தேர்தல் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தின் மீதான ஆக்கிரமிப்பு எனவும் தெரிவித்துள்ளது.

    மேலும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தேர்தல் நடத்தை விதிகளை நேரடியாக பாதிக்கும் எந்தவொரு செயலுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வெளியே வந்து வாக்களிக்க சிரமமாக இருக்கும்.
    • 37 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெயில் வாட்டி வதைக்கிறது.

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவை தொகுதிகள் உள்ளன. 14 இடங்களுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. 2-வது கட்டமாக வருகிற 7-ந்தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    தற்போது நாடு முழுவதும் வெயில் வாட்டி வதைக்கிறது. மக்கள் வெளியேற வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்ட தேர்தல் வாக்குப்பதிவின்போது குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதற்கு வெயில் முக்கிய காரணம்.

    வழக்கமாக காலை ஏழு மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளரக்ள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வெயில் காரணமாக வாக்குப்பதிவு நேரத்தை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நீட்டிக்க வேண்டும் என கர்நாடகா மாநில பா.ஜனதா தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது.

    கார்நாடகா மாநில பா.ஜனதா அந்த மனுவில் "காலை 10 மணி முதல் மாலை ஐந்து மணி வரை வாக்களிக்க மக்கள் வெளியே வருவது மிகவும் கடினமானதாக இருக்கும். 14 தொகுதிகளை உள்ளடக்கிய வடக்கு கர்நாடகாவில் வெப்பநிலை 37 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை இருந்து வருகிறது. அபாய நிலையை வெப்பநிலை எட்டியுள்ளது. இது தேர்தல் நாளில் மக்கள் வாக்களிக்க கஷ்டமானதாக இருக்கும். வாக்குப்பதிவை சிறப்பாக நடத்த, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 15-க்கும் மேற்பட்ட சம்பவங்களை தேர்தல் ஆணையம் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.
    • இது தேர்தல் நியாயம் மற்றும் சுதந்திரமான நடைபெற தடையாக இருக்கும்.

    மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், பா.ஜனதா தேசிய செய்தி தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, கட்சி தலைவர் ஓம் பதக் ஆகியோர் இன்று தேர்தல் கமிஷனரை சந்தித்து புகார் அளித்தனர். அந்த புகாரில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அரசியலமைப்பு மாற்றப்படும் போன்ற பொய்களை பரப்பி சமூகத்தில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்குகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக திரிவேதி கூறுகையில் "தனிப்பட்டவர்கள், கொள்கைகள் மற்றும் அரசியலமைப்பு சிஸ்டம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் மற்ற எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய்களை பரப்பி வருகிறது. சமூகத்தில் பதற்றமான சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற 15-க்கும் மேற்பட்ட சம்பவங்களை தேர்தல் ஆணையம் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

    இது தேர்தல் நியாயம் மற்றும் சுதந்திரமான நடைபெற தடையாக இருக்கும். அமைப்பு அடிப்படையில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் செய்து வருகின்றன. தொடர்ந்து செய்து வரும் நிலையில், அதன் சமூக வலைத்தள பிரிவுகள் தொடர்ந்து அதே பொய்களை தெரிவித்து வருகின்றன" என்றார்.

    இந்த விவகாரம் தேர்தலை நியாயமாக மற்றும் சுதந்திரமாக நடத்த சவாலாக இருக்கும் என தேர்தல் ஆணையத்திடம் எச்சரித்துள்ளோம் என சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

    ×