search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருள்"

    • காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போக்சோ மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தீரன்பாசறை சாார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் ஈரோடு அரசு குழந்தைகள் காப்பக முன்னாள் மருத்துவர்.அசோக் ஆலோசனைகள் வழங்கினார். பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி கலந்து கொண்டு கருத்துக்களை கூறினார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்.

    தீரன்பாசறை செயலாளர் துளசிமணி நன்றி கூறினார். 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
    • வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

    புதுடெல்லி:

    எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து டெல்லிக்கு வந்து விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது நைஜீரிய பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அதிகாரிகள், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவரது வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை வெளியே எடுத்தனர்.

    95 ஓவல் வடிவ காப்ஸ்யூல்கள் எடுக்கப்பட்டன. அவற்றுக்குள் போதை பொருள் இருப்பது தெரிந்தது. 511 கிராம் எடையுள்ள போதை பொருள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.

    இதையடுத்து நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டார். அயன் பட பாணியில் போதை பொருளை மாத்திரைகளாக விழுங்கி அப்பெண் கடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வேப்பூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது எதிரே வந்த கார் மோதியது.
    • காரை பரி சோதனை செய்தபோது போதை பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுக்கா கோலத்துகோம்பை கிராமத்தைச் சேர்ந்த வர் வேலாயுதம் ( வயது 65 ) இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் தங்கதுரையும்( வயது 23) என்பவரும் கீழ்குப்பம் அருகே உள்ள செம்பா குறிச்சி கிராமத்திற்கு சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் சென்று மீண்டும் வாழப்பாடிக்கு செல்ல குரல் மும்முனை சந்திப்பில் உள்ள வேப்பூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது எதிரே வந்த கார் மோதியது.

    இதில் வேலாயுதம், தங்கதுரை ஆகியோருக்கு பலத்த அடிப்பட்டது. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற காரை அப்பகுதி வாலிபர்கள் பின் தொடர்ந்து பிடிக்க முயற்சி செய்தனர். அந்தக் காரை வாசுதேவனூர் அருகே உள்ள சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார்.இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் அடிப்பட்ட இருவர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விபத்தை ஏற்படுத்திய காரை பரி சோதனை செய்தபோது போதை பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 44 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 70 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற டிரைவரை காரில் இருந்த ஆதார் கார்டில் உள்ள முகவரியை வைத்து தேடிவந்த நிலையில் சின்னசேலம் மூங்கில் பாடி ரோட்டில் வசித்து வந்த டிரைவர் ஆதிராஜாராமை ( வயது35) அதிரடியாக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர்.
    • குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சமத்துவபுரம் மேடு பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது குடோனில் வடமாநில வாலிபர் ஒருவர் காரில் சில மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். போலீசார் குடோனுக்குள் அதிரடியாக நுழைந்த போது அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. சுமார் 1000 கிலோ குட்கா அதாவது ஒரு டன் குட்கா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும்.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் அந்த வடமாநில வாலிபர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் ஈரோடு பிருந்தா வீதியை சேர்ந்த தலராம் (35) என்பது தெரிய வந்தது.

    இவர் கடந்த 2 மாதமாக இந்த பகுதியில் பழைய துணிகளை வியாபாரம் செய்வதாக கூறி குடோன் வாடகைக்கு எடுத்து குட்காவை பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி அதனை ஈரோடு மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர். மேலும் 1000 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • வெள்ளை மாளிகை முழுவதும் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப பட்டிருக்கும். அக்கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும்.

    இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வெள்ளை மாளிகை முழுவதும் வழக்கமான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு வெள்ளை பவுடர் போன்று ஒரு பொருள் கண்டெடுக்கப்பட்டது.

    இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் அது தாக்குதலுக்கான நாச வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த சமயத்தில் அதிபர் ஜோபை டன் வெள்ளை மாளிகையில் இல்லை.

    வெள்ளை மாளிகைக்கு உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர். முன் எச்சரிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    அந்த மர்ம பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்பு துறை உறுதிப்படுத்தியது. பின்னர் மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் அது கோகைன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    • போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    திருச்சுழி

    சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சுழியில் வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி ஏற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கணேசன் தலைமையில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் பாண்டி சங்கர் ராஜா, பள்ளி தலைமை ஆசிரியை கவிதா மற்றும் ஆசிரியர்கள் கனகராஜ், செல்வராஜ், கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், கிராம உதவியாளர் இளவரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அன்னப்பராஜா பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
    • மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதை தடுப்பு மன்றத்தின் சார்பில், போதை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் பள்ளிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடை பெற்றது. தலைமையாசிரியர் நல்லாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் பேசுகையில், இன்றைய நாளில் மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்து வருவதால், கல்வியில் நாட்டமின்மை, ஒழுக்கக்கேடுகள், சமூகவிரோதச் செயல்பாடுகள், சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    இவைகளிலிருந்து மாணவர்கள் விடுபடவேண்டும் என்றார். கூட்டத்தில் போதை தடுப்பு மன்ற உறுப்பினர்களும் மேல்நிலை வகுப்பு மாணவ-மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார். 

    • குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
    • பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், மாவடப்பு, குலிப்பட்டி, குருமலை, மேல் குருமலை உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த சூழலில் நேற்று உடுமலை உட்கோட்ட காவல்துறை சார்பாக தளிஞ்சி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் கலந்து கொண்டு மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட அமராவதி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ,வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

    • போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • கடலூர் ஜவான் பவன் சாலையில் தொடங்கி அண்ணா பாலம் வழியாக கடலூர் டவுன்ஹால் வரை சென்று முடிவடைந்தது.

    கடலூர்:

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கடலூர் ஜவான் பவான் சாலையில் நடைபெற்றது. இப் பேரணியை கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதனை தொடர்ந்து போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, உதவி ஆணையர் லூர்துசாமி, கோட்ட கலால் அலுவலர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்தப் பேரணி கடலூர் ஜவான் பவன் சாலையில் தொடங்கி அண்ணா பாலம் வழியாக கடலூர் டவுன்ஹால் வரை சென்று முடிவடைந்தது. அப்போது போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்த பேரணியில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதி பெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர் சரத் தினகரன், கல்லூரி மாணவ -மாணவிகள், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • சின்னார்கலால் சோதனை சாவடி அருகே போலீசார் காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • கொச்சி பகுதியிலும் போதை பவுடர் மற்றும் ஹாசிஸ் எண்ணை கடத்தி வந்த 2 பேர் பிடிப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த போதை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் மாநில எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் தமிழகத்தின் உடுமலை பேட்டை வழியாக கேரளாவின் மறையூருக்கு ஒரு கார் வந்தது. சின்னார்கலால் சோதனை சாவடி அருகே போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கஞ்சா மற்றும் போதை பவுடர் இருந்தது. அதனை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் காரில் இருந்த தாம்சன் செபாஸ்டியான் (வயது 23) மற்றும் அவரது கூட்டாளிகள் உள்பட 4 பேர் பிடிப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தேவிகுளம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். போதை பொருள் கடத்தி வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுபோல கொச்சி பகுதியிலும் போதை பவுடர் மற்றும் ஹாசிஸ் எண்ணை கடத்தி வந்த 2 பேர் பிடிப்பட்டனர். இவர்களில் ஒருவர் மாணவர் ஆவார். 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் எங்கிருந்து போதை பொருளை கடத்தி வந்தனர் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபோல கொச்சியை அடுத்த கலூர், பச்சலம், எமலக்கரை பகுதியில் போதை பொருள் விற்றதாக வடமாநில தொழிலாளி ஒருவரும் சிக்கினார். அவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்தும் போதை பொருள்களை பறிமுதல் செய்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் கொச்சி மற்றும் மறையூர் பகுதிகளில் போதை பொருள் வைத்திருந்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • தற்போது சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் அம்ரித்சர் பகுதியில் கீழே விழுந்தது.
    • இதில் இருந்த போதை பொருளின் மதிப்பை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    சர்வதேச எல்லை பகுதியில் பஞ்சாப் வழியே இந்தியாவுக்குள் போதை பொருளை கொண்டுவந்த பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். கடந்த நான்கு நாட்களில் இது போன்ற டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் அம்ரித்சர் பகுதியில் கீழே விழுந்தது. கீழே விழுந்த கருப்பு நிற டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அளவில் பெரியதாகவும், கருப்பு நிறத்திலும் இருந்த டிரோனில் சந்தேகத்திற்குரிய போதை மருந்து வைக்கப்பட்டு இருந்தது. இதில் இருந்த போதை பொருளின் மதிப்பை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.

     

    மே 19 ஆம் தேதி முதல் இந்திய எல்லைக்குள் இதே போன்று அத்துமீறி நுழைந்த ஐந்தாவது டிரோன் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பல சமயங்களில் டிரோன் பறந்து வருவது போன்ற சத்தம் மட்டும் கேட்கும். ஆனால் விசாரணையில் டிரோன் எதுவும் மீட்கப்படாத சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

    ஏற்கனவே இரண்டு டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. மூன்றாவது டிரோன் ஊடுறவ முயன்ற போது சுட்டதில், அது பாகிஸ்தான் எல்லை பகுதியில் வீழ்ந்தது என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மே 20 ஆம் தேதி ஊடுறவிய டிரோனில் 3.3 கிலோகிராம் போதை பொருள் இருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

    • பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் தான் சித்தாந்த்.
    • பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சித்தாந்தின் சகோதரி ஆவார்.

    பெங்களூரு :

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருக்கும் சொகுசு ஓட்டல் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அதில் விருந்தில் போதை பொருள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, சிலரை கைது செய்து, சோதனைக்காக அவர்களின் ரத்தமாதிரி எடுக்கப்பட்டது.

    35 பேரில் 5 பேர் போதை பொருள் பயன்படுத்தியது ரத்த பரிசோதனையில் தெரிய வந்தது. அதில் பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூரும் ஒருவர். போலீசார் சித்தாந்த் கபூரை கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாலிவுட் நடிகர் சக்தி கபூரின் மகன் தான் சித்தாந்த். பிரபல பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சித்தாந்தின் சகோதரி ஆவார். முன்னதாக பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது இந்தி திரையுலகை சேர்ந்த பலரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் ஷ்ரத்தா கபூரும் ஒருவர். ஆனால் அவருக்கு எதிராக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

    பெங்களூரு ஓட்டலில் நடந்த போதை விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், போதை பொருட்களை உட்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் நடிகை ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுபற்றி பெங்களூரு நகர கிழக்கு டி.சி.பி. பீமசங்கர் எஸ் குலெட் செய்தியாளர்களிடம் கூறும்போது, சித்தாந்த் கபூர் போதை பொருட்களை எடுத்துள்ளார் என மருத்துவ பரிசோதனை உறுதிப்படுத்தி உள்ளது.

    அவரை முன்பே கைது செய்து, அதன் பின்னரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என நேற்று கூறினார். தொடர்ந்து அவரை காவலுக்கு எடுத்து விசாரிக்க இருக்கிறோம் என கூறினார். இந்நிலையில் அவர் கூறும்போது, காவல் நிலைய ஜாமீன் அடிப்படையில் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேரை விடுவித்து உள்ளோம். தேவைப்பட்டால் விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு அழைப்பு விடப்படும். அதன்பேரில் அவர்கள் நேரில் ஆஜராவார்கள் என்று குலெட் கூறியுள்ளார்.

    ×