search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரில் கடத்தல்"

    • வேப்பூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது எதிரே வந்த கார் மோதியது.
    • காரை பரி சோதனை செய்தபோது போதை பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுக்கா கோலத்துகோம்பை கிராமத்தைச் சேர்ந்த வர் வேலாயுதம் ( வயது 65 ) இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் தங்கதுரையும்( வயது 23) என்பவரும் கீழ்குப்பம் அருகே உள்ள செம்பா குறிச்சி கிராமத்திற்கு சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் சென்று மீண்டும் வாழப்பாடிக்கு செல்ல குரல் மும்முனை சந்திப்பில் உள்ள வேப்பூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது எதிரே வந்த கார் மோதியது.

    இதில் வேலாயுதம், தங்கதுரை ஆகியோருக்கு பலத்த அடிப்பட்டது. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற காரை அப்பகுதி வாலிபர்கள் பின் தொடர்ந்து பிடிக்க முயற்சி செய்தனர். அந்தக் காரை வாசுதேவனூர் அருகே உள்ள சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார்.இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் அடிப்பட்ட இருவர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விபத்தை ஏற்படுத்திய காரை பரி சோதனை செய்தபோது போதை பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 44 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 70 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற டிரைவரை காரில் இருந்த ஆதார் கார்டில் உள்ள முகவரியை வைத்து தேடிவந்த நிலையில் சின்னசேலம் மூங்கில் பாடி ரோட்டில் வசித்து வந்த டிரைவர் ஆதிராஜாராமை ( வயது35) அதிரடியாக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
    • 3பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர் :

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, உலகநாதன், ஆகியோர் தலைமையில் போலீசார் குள்ளஞ்சாவடி அருகே பெருமாள் ஏரிக்கரை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்பொழுது வடலூரில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா சுமோ காரினை வழிமறித்து சோதனை செய்தனர் .அதில் 11 மூட்டை ஹான்ஸ் 5 மூட்டை, கூல் லிப் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் காரில் வந்த இளைஞர்கள் 3பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குறிஞ்சிப்பாடி பாலாஜி (வயது33), வடலூர் ஆபத்தானரணபுரம் பூசாலிக்குப்பம் மகாராஜன் (27), வடலூர் ஆபத்தானரணபுரம் மாரியம்மன் கோவில் தெரு விக்னேஷ் (21)என்பது தெரிய வந்தது இதனைத்தொடர்ந்து 3 பேரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 200 கிலோ, ஹான்ஸ், கூல் லிப் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • மூட்டைகளை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா மற்றும் புகையிலை போன்றவற்றை இருந்தது.

    கடலூர்:

    நெய்வேலி அருகே பொன்னாரி அகரம் சுங்கச்சாவடி அருகே ஊமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருந்தா தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது பல மூட்டைகள் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மூட்டைகளை திறந்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா மற்றும் புகையிலை போன்றவற்றை இருந்தது.

    இதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கார் மற்றும் இரண்டு நபர்களை பிடித்து வந்து ஊமங்கலம் போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் சங்கர் ராம் (வயது 34), லக்குமா ராம் (27) என்பது தெரிய வந்தது. இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 16 மூட்டைகள் ஹான்ஸ், 12 மூட்டைகள் பான் மசாலா, 12 மூட்டைகள் புகையிலை போன்றவற்றை கொண்டு வந்தது தெரிய வந்தது . மேலும் இதன் எடை சுமார் 350 கிலோ 6 லட்சம் மதிப்பாகும். 

    இது குறித்து ஊமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கர் ராம், லக்குமா ராம் ஆகியோரை கைது செய்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மாணவர்கள் 3 பேரையும் காரில் ஏற்றி கடத்தி சென்றது.
    • கடத்தி சென்று அடித்து உதைத்த கும்பல் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்?, எதற்காக கடத்தலில் ஈடுபட்டு தாக்கினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த தும்பிப்பாடி கிராமம் தொட்டியனூர் பகுதியை சேர்ந்தவர் பாப்பையன். இவருடைய மகன் நாகராஜ். இவர் மேச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். நாகராஜும், அதே ஊரை சேர்ந்த சண்முகம் என்பவரும் ஒரே கல்லூரி ஒன்றாக பி.பி.ஏ படித்து முடித்துள்ளனர்.

    இந்தநிலையில், நேற்று படிப்பு சான்றிதழ் வாங்குவதற்காக மேச்சேரி கல்லூரிக்கு நாகராஜ், சண்முகம்மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேர் மோட்டார்சைக்கிளில் சென்றுள்ளனர். மேச்சேரி சென்ற 3 திரும்பி வரும்போது, மேச்சேரி அருகேயுள்ள சந்திரமாள் கடை பகுதியில் உள்ள ஒரு டீ கடையில் 3 பேரும் டீ குடித்துள்ளனர். அப்போது ஆம்னி கார் ஒன்று அவர்கள் அருகில் வந்து நின்றது.

    பின்னர் அதிலிருந்து இறங்கிய ஒரு கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, மாணவர்கள் 3 பேரையும் காரில் ஏற்றி கடத்தி சென்றது. பின்னர் அருகில் உள்ள ஏரிக்கு அவர்களை கொண்டு சென்றனர். பின்னர் அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர், 3 பேரையும் சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், வெட்டி கொலை செய்துவிடுவதாகவும், ஜெயிலுக்கு செல்வ தெல்லாம் ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல என்றும் கூறியபடியே கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

    அப்போது அங்கு வந்த ஒருவர், நான் கடத்தி வர சொன்னது இவர்கள் இல்லை, அவர்களை விட்டுவிடுங்கள் என்று கூறிய பின்னர் 3 பேரையும் உயிரோடு விட்டனர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த மாணவர்கள் 3 பேரும் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இது குறிதித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறுகையில் சரியான நேரத்தில் அந்த நபர் வராவிட்டால், எங்களை அடித்தே கொலை செய்திருப்பார்கள் என கண்ணீர் மல்க கூறினர்.

    இந்த கடத்தல் சம்பவம் குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவன் நாகராஜ் உட்பட 3 பேரை காரில் கடத்தி சென்று அடித்து உதைத்த கும்பல் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்கள்?, எதற்காக கடத்தலில் ஈடுபட்டு தாக்கினர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவர்களை கடத்தி மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×