search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை  அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கலந்து கொண்டவர்கள் எடுத்த போது படம்.

    உடுமலை அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
    • பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொறுப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சி வயல், மாவடப்பு, குலிப்பட்டி, குருமலை, மேல் குருமலை உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த சூழலில் நேற்று உடுமலை உட்கோட்ட காவல்துறை சார்பாக தளிஞ்சி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் கலந்து கொண்டு மலைவாழ் மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றியும் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பது சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட அமராவதி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ,வனத்துறையினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×