search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    திருச்சுழி

    சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சுழியில் வைத்தியலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி ஏற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கணேசன் தலைமையில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் பாண்டி சங்கர் ராஜா, பள்ளி தலைமை ஆசிரியை கவிதா மற்றும் ஆசிரியர்கள் கனகராஜ், செல்வராஜ், கதிரேசன், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், கிராம உதவியாளர் இளவரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×