search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Carjacking"

    • வேப்பூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது எதிரே வந்த கார் மோதியது.
    • காரை பரி சோதனை செய்தபோது போதை பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுக்கா கோலத்துகோம்பை கிராமத்தைச் சேர்ந்த வர் வேலாயுதம் ( வயது 65 ) இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் தங்கதுரையும்( வயது 23) என்பவரும் கீழ்குப்பம் அருகே உள்ள செம்பா குறிச்சி கிராமத்திற்கு சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் சென்று மீண்டும் வாழப்பாடிக்கு செல்ல குரல் மும்முனை சந்திப்பில் உள்ள வேப்பூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது எதிரே வந்த கார் மோதியது.

    இதில் வேலாயுதம், தங்கதுரை ஆகியோருக்கு பலத்த அடிப்பட்டது. பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற காரை அப்பகுதி வாலிபர்கள் பின் தொடர்ந்து பிடிக்க முயற்சி செய்தனர். அந்தக் காரை வாசுதேவனூர் அருகே உள்ள சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார்.இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் அடிப்பட்ட இருவர்களையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் விபத்தை ஏற்படுத்திய காரை பரி சோதனை செய்தபோது போதை பொருள் பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 44 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 70 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பிச்சென்ற டிரைவரை காரில் இருந்த ஆதார் கார்டில் உள்ள முகவரியை வைத்து தேடிவந்த நிலையில் சின்னசேலம் மூங்கில் பாடி ரோட்டில் வசித்து வந்த டிரைவர் ஆதிராஜாராமை ( வயது35) அதிரடியாக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வழி கேட்பதுபோல் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    வாணாபுரம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சோலை சேகரன் என்பவரின் மகன் நாதஸ்டிமுருகன் (வயது 27). இவர் தனக்கு சொந்தமான காரை வேலூருக்கு சென்று பிறகு மீண்டும் ராமநாதபுரம் சென்று கொண்டிருந்தார்.

    தச்சம்பட்டு அருகே சென்றபோது அங்குள்ள ஏரிக்கரை ஓரத்தில் நின்று இயற்கை உபாதையை கழிக்க இறங்கினார். அப்போது அவரது பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் திருவண்ணாமலைக்கு செல்ல வழி கேட்டுள்ளனர்.

    அதற்கு நாதஸ்டிமுருகன் நீங்கள் வந்த வழியில் தான் செல்ல வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து திடீரென 4 பேரும் நாதஸ்டி முருகனை தாக்கி விட்டு அவர் ஓட்டி வந்த காரை கடத்திச் சென்றனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபரை தாக்கி கார் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது.
    • 3பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    கடலூர் :

    கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப்பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, உலகநாதன், ஆகியோர் தலைமையில் போலீசார் குள்ளஞ்சாவடி அருகே பெருமாள் ஏரிக்கரை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்பொழுது வடலூரில் இருந்து கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்த டாட்டா சுமோ காரினை வழிமறித்து சோதனை செய்தனர் .அதில் 11 மூட்டை ஹான்ஸ் 5 மூட்டை, கூல் லிப் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் காரில் வந்த இளைஞர்கள் 3பேரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குறிஞ்சிப்பாடி பாலாஜி (வயது33), வடலூர் ஆபத்தானரணபுரம் பூசாலிக்குப்பம் மகாராஜன் (27), வடலூர் ஆபத்தானரணபுரம் மாரியம்மன் கோவில் தெரு விக்னேஷ் (21)என்பது தெரிய வந்தது இதனைத்தொடர்ந்து 3 பேரை கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 200 கிலோ, ஹான்ஸ், கூல் லிப் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ×