search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sale of gutka"

    • ரூ.2 ஆயிரம் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    வாலாஜா நகரில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஒரு பங்க் கடையில் சோதனை நடத்தினர்.

    சோதனையில் கடையில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது அதை தொடர்ந்து போலீசார் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் சேட்டு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, கடைக்கு சீல் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர்.
    • குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சமத்துவபுரம் மேடு பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருளான குட்கா பதுக்கி வைத்திருப்பதாக சித்தோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது குடோனில் வடமாநில வாலிபர் ஒருவர் காரில் சில மூட்டைகளை ஏற்றிக்கொண்டு இருந்தார். போலீசார் குடோனுக்குள் அதிரடியாக நுழைந்த போது அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. சுமார் 1000 கிலோ குட்கா அதாவது ஒரு டன் குட்கா இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும்.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் அந்த வடமாநில வாலிபர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் ஈரோடு பிருந்தா வீதியை சேர்ந்த தலராம் (35) என்பது தெரிய வந்தது.

    இவர் கடந்த 2 மாதமாக இந்த பகுதியில் பழைய துணிகளை வியாபாரம் செய்வதாக கூறி குடோன் வாடகைக்கு எடுத்து குட்காவை பல்வேறு இடங்களில் இருந்து வாங்கி அதனை ஈரோடு மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தலராமை தேடி வருகின்றனர். மேலும் 1000 கிலோ குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் குட்கா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தூத்தாரிபாளையத்தில் சத்தியநாதன் ( 30) என்பவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
    • 25 பாக்கெட்டுகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் செல்வராஜ் (வயது 50) என்பவரது மளிகை கடையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 7 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதுபோல் மானாசிபாளையத்தில் உள்ள பூபாலன் (55 ) என்பவரது கடையில் இருந்து 7 பாக்கெட்களும், கிருஷ்ணாபுரத்தில் உள்ள மணிகண்டன்(26) என்பவரது மளிகை கடையில் இருந்து 10 பாக்கெட்டுகளும் என மொத்தம் 25 பாக்கெட்டுகள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

    அது போல் பொங்கலூரை அடுத்த வெள்ள நத்தம் பகுதியை சேர்ந்த பழனிசாமி (52) என்பவரது தோட்டத்தில் கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்ததில் அவர் வைத்திருந்த 5 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அதுபோல் தூத்தாரிபாளையத்தில் சத்தியநாதன் ( 30) என்பவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

    அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கேத்தனூரில் அழகு ராஜா என்பவரிடமிருந்து 10 மது பாட்டில்களும், சந்தமநாயக்கன் பாளையம் முருகேசன்(50) என்பவரிடமிருந்து 7 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    • போலீசார் சோதனையில் சிக்கினர்
    • 12 மூட்டைகள் பறிமுதல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் எஸ்பி தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உமராபாத் போலீஸ் நிலையத்தின் அருகில் உள்ள மளிகைக் கடையில் சோதனை நடத்தினர்.

    அங்கிருந்து 12 மூட்டை குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். இதையடுத்து கடைகாரரை போலீசார் கைது செய்தனர். கைது செய்த எஸ்பி தனிப்படை போலீசார் உமராபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அதை தொடர்ந்து ஆம்பூர் கஸ்பா பகுதியில் பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குட்கா பொட்டலங்களை பறிமுதல்
    • ஆம்பூரில் உள்ள கடைகளில் போலீசார் திடீர் சோதனை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைமை ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் யில், டவுன் போலீசார் ஆம்பூரில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது குட்கா விற்றதாக புதுமனை கே.எம் நகர் முதல் தெருவை சேர்ந்த கலீம் (வயது 33), ரஹ் மான் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த முகமது ஆசிப் (27), வெங்கிளி பகுதியை சேர்ந்த பாரூக் (47), சாய்பான்ஷா கொல்லை பகுதியை சேர்ந்த அப்ரோஸ் (39), கஸ்பா பி பகு தியை சேர்ந்த ரபீல் உல் (59) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

    • 72 பாக்கெட்டுகள் பறிமுதல்
    • வியாபாரி கைது

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் ஊராட்சி எம்சி ரோட்டில் நேற்று மாலை ஆம்பூர் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது எம்சி ரோட்டில் உள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வியாபாரியை கைது செய்தனர். போலீசார் கடையில் இருந்த தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் 72 பாகெட்களை பறிமுதல் செய்தனர்.

    • விழுப்புரம் அருகே குட்கா, பான் மசாலா விற்ற கடைக்கு வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் கடைக்கு சீல் வைத்தனர்.
    • தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை ஒழிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

    இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் போலீசார் மூலம் எடுக்கப்பட்டு இதனை செய்பவர் மீது கடுமையாக தண்டிக்கப்படுபவர் எனவும் தெரிவித்தார்.இதன் மூலம் இந்த புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோறை முழுமையாக தடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தனிப்படை அமைத்து தீவிர சோதனை வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி சாலையில் உள்ள அப்பம்பட்டு பகுதியில் மளிகை கடை ஒன்று உள்ளது. அந்த கடையை அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவர் நடத்தி வருகிறார். அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற புைகயிலைப் பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவல் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கடையில் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பது உறுதியானது. உடனே செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். மேலும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் கடைக்கு சீல் வைத்தனர் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • வியாபாரி கைது
    • ஜெயிலில் அடைப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் கள்ள சாராயம் மது பாட்டில்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அச்சமங்கலம் அருகே உள்ள அடியத்தூர் கிராமத்தை சேர்ந்த திருப்பதி (வயது 54) என்பவர் அவரது பெட்டிக்கடையில் அரசு தடை செய்துள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்று கொண்டிருந்தது தெரிய வந்தது.

    இதனையெடுத்து போலீசார் அவரது கடையில் சோதனை செய்தபோது விற்பனைக்கு வைத்திருந்த 3 கிலோ குட்பா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து திருப்பதியை கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ×