search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drug Awareness"

    • கல்லூரி மாணவர்களுக்கு போதை அற்ற தமிழகம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர்.
    • கல்லூரி மாணவர்கள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப் மற்றும் ஆன்டி நர்கோடிக்ஸ் செல் ஆகியவை தேனி ஆல் தி சில்ரன் அறக்கட்டளையுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை அற்ற தமிழகம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தினர். ஆங்கிலத்துறை இணைப்பேராசிரியர் ராஜேஷ் வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் ஜோஷி பரம்தொட்டு முன்னிலை வகித்து உரையாற்றினார்.

    தேனி (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சப்-இன்ஸ்ெபக்டர் நாகேந்திரன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் ஆகியோர் போதை அற்ற தமிழகத்தினை உருவாக்குவதில் கல்லூரி மாணவர்களின் பங்கு குறித்து விழிப்புணர்வு உரை ஆற்றினர். உளவியல் ஆலோசகர் பழனிச்சாமி போதைப் பழக்கம் ஓர் மனநோய் என்பது குறித்து உரையாற்றினார்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தமிழ்த்துறைத் தலைவர் ஆனந்த், ரெட் ரிப்பன் கிளப்பின் பொறுப்பாளர் டேவிட் பூண், ஆண்டி நர்கோடிக்ஸ் செல் பொறுப்பாளர் சந்திரமோகன் செய்திருந்தனர். கல்லூரி மாணவர்கள் போதை பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். ஆல் தி சில்ரன் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் போக்சோ மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தீரன்பாசறை சாார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    நிகழ்ச்சியில் ஈரோடு அரசு குழந்தைகள் காப்பக முன்னாள் மருத்துவர்.அசோக் ஆலோசனைகள் வழங்கினார். பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    கோபி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி கலந்து கொண்டு கருத்துக்களை கூறினார். தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்.

    தீரன்பாசறை செயலாளர் துளசிமணி நன்றி கூறினார். 300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • போலீசார் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ராயபுரம்:

    காசிமேட்டில், வண்ணாரப்பேட்டை போலீசார் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காசிமேடு கடலில் படகு போட்டி மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன.

    இதனை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட செயலாளர் இளைய அருணா, போலீஸ் இணை கமிஷனர் ரம்யாபாரதி, துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

    கிரிக்கெட் மற்றும் படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நடிகர் சிவா, இயக்குனர் விக்னேஷ்ராஜா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் லட்சுமிபதி பாலாஜி, இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி, ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாட்டுப்புற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்
    • தப்பாட்டம், வில்லுப்பாட்டு, உடுக்கை, பம்பை, கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை சமூகநலத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

     புதுவை அரசு சமூகநலத்துறை மூலம் போதை பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தெருக்கூத்து, பொம்மலாட்டம், நாட்டுப்புறப்நடனம், சிலம்பம், தப்பாட்டம், வில்லுப்பாட்டு, உடுக்கை, பம்பை, கரகாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    எனவே புதுவை, காரைக்காலில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்த தகுதிவாய்ந்த கலைஞர்கள் குழுவிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலைஞர்கள் தங்கள் முழு விபரம் அடங்கிய விண்ணப்பத்துடன் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை இணைத்து இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மாநிலம் தழுவிய விளையாட்டு நிகழ்வுகள் மூலம் விழிப்புணர்வு செய்யவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    • போலீசார் துண்டு பிரசுரம் வழங்கினர்
    • போதை பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத் யன் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து அந்தந்த போலீஸ் நிலையங்கள் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதன்படி சோளிங்கர் பஸ் நிலையத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட் களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், விபத்துக்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

    • தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி அம்பை பூக்கடை பஜாரில் தொடங்கியது.
    • இதில் ஆண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும், பெண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    சிங்கை:

    தமிழ்நாடு காவல்துறை மற்றும் விளையாட்டுத் துறையினர் இணைந்து நடத்திய மினி மாரத்தான் போட்டி அம்பை பூக்கடை பஜாரில் தொடங்கியது. ஏ.எஸ்.பி. பல்பீர்சிங் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். பெண்கள் பிரிவு போட்டி அகஸ்தியர் பட்டி கேம்பிரிட்ஜ் பள்ளியில் இருந்து தொடங்கியது. இதை மணிமுத்தாறு சிறப்பு காவல் படை 12-ம் அணி தலைவர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    மினி மாரத்தான் போட்டி யில் 3000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டார்கள். இதில் ஆண்கள் பிரிவில் 20 பேர்களுக்கும் பெண் கள் பிரிவில் 20 பேர்க ளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மினி மாரத்தான் போட்டியில் மாணவ- மாணவிகள், விளையாட்டுத் துறையினர், காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

    • போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும்.
    • போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்து விளக்கப்பட்டது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார். மேலும் போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் குஞ்சப்பனை பகுதி பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும், போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பன குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
    • பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர்மீதும் அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    அதனை தொடர்ந்து. மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக சோலூர்மட்டம் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் தலைமையில் நேற்று எஸ்.கைகாட்டி மற்றும் ஓம்நகர் பகுதி பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும் போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பன குறித்தும் மக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

    • 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்
    • கல்லூரி மாணவர்கள் ஏராளானோர் பங்கேற்பு

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை குறித்து கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள் சார்பில் போலீசார் பொதுமக்களுக்கும் கடை உரிமையாளருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இது மட்டுமல்லாமல் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு தனி படை பிரிவினர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு போதை பொருட்களை விற்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு அவர்கள் விற்பனைக்கு வைத்துள்ள கஞ்சா, ஹான்ஸ், பான் மசாலா, மது பாட்டில்கள், கள்ள சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நாட்டறம்பள்ளி அருகே எல்லப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று மாலை போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது தங்கள் வசிக்கும் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்க துண்டு பிரசுரத்தில் இருக்கும் தொலைபேசி எண்ணை 24 மணி நேரம் முழுவதும் தொடர்பு கொள்ளலாம். மேலும் போதைப் பொருட்களின் தீமை குறித்து எடுத்துக் கூறி அடுத்த தலைமுறையை காக்க உங்களிடமிருந்து இந்தப் பணி துவங்கட்டும். இதனால் அனைத்து தரப்பு மக்களும் சமுதாயத்தில் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாதவாறு தடுக்க எங்களுக்கு உதவி புரிய வேண்டும் என கூறினார்.

    மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், தனிப்பிரிவு ஏட்டு செந்தில் பள்ளி முதல்வர் பாஸ்கர் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை
    • எஸ்.பி. எச்சரிக்கை

    செங்கம்:

    செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் செங்கம் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் நேற்று செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது எஸ்.பி. கார்த்திகேயன் பேசுகையில்:-

    பள்ளி மாணவர்கள் பள்ளி பருவத்தில் தேவையில்லாத சமூக வலைதளங்கள் மற்றும் போதை வஸ்து போன்ற பழக்கங்களுக்கு உள்ளாக கூடாது என்றும், கஞ்சா உள்பட போதை பொருட்கள் பயன்படுத்தும் சகமாணவர்கள் அல்லது பயன்படுத்த வற்புறுத்தும் மாணவர்கள் குறித்த தகவலை எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர்களிடமும் அல்லது போலீசாரிடம் தெரிவிக்கலாம்.

    வருங்காலம் இந்தியா மாணவர்கள் கையில் தான் உள்ளது, மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறையில் படித்து முன்னேறி தங்களது பங்களிப்பை இந்திய நாட்டிற்கு அளிக்க வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. சின்னராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமரன், தலைமை ஆசிரியர் காமத், கவுன்சிலர் முருகமணி உள்பட ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-

    கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக தனி படைகள் அமைக்கப்பட்டு+ செயல்பட்டு வருவதாகவும், கஞ்சா விற்பனை செய்து சிறைக்கு சென்று திரும்பியவர்கள், பிணையில் வெளிவந்தவர்கள் உள்ளிட்டோர் குறித்த பதிவேடுகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இனிவரும் காலங்களில் போதை பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க தேவையான அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது, பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை போலீசாருக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.

    கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றார்.

    • போலீஸ் நிலையம் சார்பில் நடந்தது
    • ஹெல்மெட் அணிவதின் அவசியம் என அறிவுரை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் வந்தவாசி சாலையில் உள்ள சேத்துப்பட்டு, பழம்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருட்களின் தீமை மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து சேத்துப்பட்டு, போலீஸ் நிலையம் சார்பில் விழிப்புணர் நிகழ்ச்சி நடந்தது.

    சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, அரசினர் மேல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே போதை பொருட்களின் தீமை, அதனால் ஏற்படும் விளைவுகள், மற்றும் போதை பொருள்ஒழிப்பு, ஹெல்மெட் அணிவதின் அவசியம், ஆகியவை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் தலைமை காவலர் ரமேஷ், மற்றும் போலீசார் ஆகியோருடன் இருந்தனர்.

    • திருச்சி மாவட்டகலெக்டர் பிரதிப் குமார் அறிவுறுத்தலின்படி லால்குடி நகராட்சி பகுதியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியை சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.

    திருச்சி :

    லால்குடி நகராட்சி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ தொடங்கிவைத்தார்.

    மாவட்டகலெக்டர் பிரதிப் குமார் அறிவுறுத்தலின்படி லால்குடி நகராட்சி பகுதியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    முன்னதாக சந்தைப்பேட்டை புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நகராட்சி ஆணையர் குமார் துணைத்தலைவர் சுகுனா ராஜ்மோகன் முன்னிலையில் சவுந்தரபாண்டியன் எம் எல் ஏ கொடி அசைத்து தொடங்கிவைத்து பேரணியில் கலந்துகொண்டார்.

    பேரணியில் லால்குடி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் நெஸ்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவ-மாணவிகள் எல் என் பி பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியும் கோஷமிட்டு பேரணியில் சென்றனர்.

    பேரணி சந்தைப்பேட்டையில் தொடங்கி கடைவீதி பஸ் நிலையம் அரியலூர் சாலையில் தனியார் திருமணமண்டபம் அருகே நிறைவுற்றது. இதில் நகராட்சி பணியாளர்கள் தன்னார்வலர்கள் பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    ×