search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள்"

    • மிஷின் வீதியில் உள்ள காசாபிலங்கா வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடந்தது.
    • ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் கிராமப்புற பெண்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் முயற்சியால் விதவிதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

    இந்த நவீன ஆடைகளை அறிமுகப்படுத்தும் விதமாக புதுவை மிஷின் வீதியில் உள்ள காசாபிலங்கா வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடந்தது.

    இதில் 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்களும், இளைஞர்களும் விதவிதமான ஆடை மற்றும் அணி கலன்களை அணிந்து ஸ்டைலாக நடந்து வந்தனர்.

    இதனை ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

    கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

    • பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்துள்ள பூமலூர் கோகுல் கார்டன் பகுதியை சேர்ந்த பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது திடீரென தங்கள் பகுதிக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர கோரி தாங்கள் கொண்டு வந்த விளக்குகளை ஏற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதில் பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பூமலூர் ஊரட்சிக்கு உட்பட்ட பூமலூர் கிராமம் கோகுல் கார்டன் பகுதியில் 250 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவரிடம் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு மின்விளக்கு, சாக்கடை வசதி செய்து தரக்கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொது மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

    • பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும் இருவரும் சரமாரியாக மாறி மாறி தாக்கி கொண்டனர்.
    • இரு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில் :

    குலசேகரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அழகு கலை பயிற்சி முடித்த அவர் தற்போது நாகர்கோவில் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியில் அழகு கலை பயிற்சி பெற்ற மற்றொரு பெண்ணும் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவரும் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் வந்தனர். அப்போது இருவருக்கும் பஸ்சில் வைத்து தகராறு ஏற்பட்டது.

    அதோடு பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும் இருவரும் சரமாரியாக மாறி மாறி தாக்கி கொண்டனர். ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கியதுடன் கடித்தும் கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக இருவரும் வடசேரி போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ் நிலையத்தில் இரு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
    • பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள்.

    முசிறி:

    என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். அவரது 61-வது நாள் நடைபயண யாத்திரை நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்றது. முசிறி புதிய பேருந்து நிலையத்தில் நடைபயணம் தொடங்கப்பட்டு முசிறி-துறையூர் பிரிவு சாலை வழியாக முசிறி கைகாட்டியில் முடிவடைந்தது.

    வழியில் அண்ணாமலை முசிறி பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் பட்டியல் அணி சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 6 பெண்களுக்கு தையல் எந்திரத்தை வழங்கினார்.

    தமிழகத்தில் நியாய விலை கடையில் வழங்கும் அரிசிக்கு மத்திய அரசு கிலோ விற்கும் 32 ரூபாய் வழங்குகிறது. தமிழக அரசு 2 ரூபாய் வழங்குகிறது. தமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகள் கிசான் அட்டை பெற்று விவசாய கடன் பெற்று வருகின்றனர்.

    இயற்கை விவசாயத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. ஆவின் பாலில் நடக்கும் ஊழலை பா.ஜ.க. கண்டிக்கிறது. ஆவினிலிருந்து வரும் பால் தரக் குறைவாக உள்ளது. 2022-ம் ஆண்டு ஒரு நாளுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 38 லட்சமாக உள்ளது, 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது.

    தமிழகத்தில் அரசே காவிரி மணலை திருடுகிறது. இந்திய துணை கண்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 467 கோடி ரூபாய்க்கு 2 நாட்களில் மதுபானம் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாராயத்திற்கு சிறப்பிடம் பெற்றது தமிழகம்.

    விஞ்ஞான முறையில் ஊழல் செய்து கொண்டிருப்பவர்கள் தி.மு.க.வினர். பாரதிய ஜனதா கட்சியின் கனவு பெரிது, பெரிய ஊர்கள் வளர்கிறது, சின்ன ஊர்கள் தேய்கிறது, கிராமங்கள் முன்னேற வேண்டும். விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை, மையமாகக் கொண்டு அரசியல் நடத்துவோம், இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

    பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நல்லாட்சி அமைவதற்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வடலூரில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதை உறுதிபடுத்த வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் தூங்கா நகரம் என்று கூறும் அளவிற்கு 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கு இங்கிருந்து பஸ்கள் இயக்கப்படும். அதனால் வடலூர் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறி, அதற்கேற்ப வாழ்ந்து காட்டிய ராமலிங்க அடிகளார் என்கிற வள்ளலார் பிறந்த பகுதி வடலூராகும். இங்கு அமைந்துள்ள ஞானசபை உலகளவில் பிரசித்தி பெற்றதாகும்.இந்த நகரின் மையப்பகுதியில் ராகவேந்திரா நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு செல்வந்தர்களும், வசதி படைத்தவர்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு பெரும்பாலும், வயதானவர்களும், பெண்களும் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களது குடும்பத்தார் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் பணி செய்கின்றனர்.நேற்று முன்தினம் நள்ளிரவு அண்ணா நகருக்கு 2 மர்நபர்கள் வந்தனர். ஆஜானு பாகுவான இளைஞர்களாகிய இருவரும் கால்சட்டை மட்டும் அணிந்திருந்தனர். தங்களின் செறுப்பினை இடிப்பில் கட்டியிருந்த கயிறில் தொங்கவிட்டிருந்தனர். மேலும், கண்களை தவிர வேறெதும் தெரியாத அளவிற்கு முகமூடி அணிந்திருந்தனர்.அண்ணாநகரில் இருந்த ஒரு வீட்டின் பின்புறம் சென்ற அவர்கள், பின்பக்க கதவினை உடைத்து உள்ளே நுழைந்தனர். அறையில் படித்திருந்த கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக் கயிறை பறித்தனர். இதனால் பதறிப்போய் எழுந்த கர்ப்பிணி, வாலிபர்களை எட்டி உதைத்து கூச்சலிட்டார்.மருமகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த மாமனார் வாலிபர்களை தாக்கினார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய மர்மநபர்கள் தப்பிக்க முயன்றனர். மாமனாரும், மருமகளும் அவர்களை விரட்டியபோது, கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து பக்கத்து தெருவிற்கு சென்ற மர்மநபர்கள், மற்றொரு வீட்டின் பின்பக்க கதவினை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டிற்குள் இருந்த மனநலம் குன்றிய பெண்ணின் காதில் இருந்த கம்மலை திருடினர். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தாரிடம் இருந்து 2 வாலிபர்களும் தப்பி விட்டனர்.அண்ணாநகரை விட்டு வெளியேறி 2 வாலிபர்களும் அருகில் உள்ள ராகவேந்திரா நகருக்கு சென்றனர். நகரின் கடைசி வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றனர். பின்பக்க கதவை உடைக்க முயற்சித்தனர். சுமார் ஒன்னரை மணி நேரம் போராடியும் கதவினை உடைக்க முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்து 2 வாலிபர்களும் வெளியேறினர். இது அந்த வீட்டிலிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியது.இந்த 3 குடும்பத்தாரும், நேற்று காலை வடலூர் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்த போலீசாரிடம் புகார் கொடுத்தனர். 3 பேரும் கூறிய அங்க அடையாளங்கள் ஒன்றாக இருந்தது. இதையடுத்து ராகவேந்திரா நகரில் இருந்த வீட்டில் பதிவாகிய சி.சி.டி.வி. கேமிரா பதிவினை மற்றவர்களுக்கு போலீசார் காட்டினர். அவர்களும் தங்களது வீட்டிற்கு வந்தவர்கள் இவர்கள் தான் என்று உறுதிபடுத்தினர்.எப்போதும் பரபரப்பாக காணப்படும் வடலூர் நகரின் மையப்பகுதியில் மூகமூடி அணிந்த 2 வாலிபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு தப்பியுள்ளனர். மேலும், கர்ப்பிணி பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக புகாரினை பெற்ற வடலூர் போலீசார், முகமூடி அணிந்த மர்மநபர்களை பிடித்த பிறகு வழக்கு பதிவு செய்கிறோம் என்று கூறி அவர்களை அனுப்பிவிட்டனர்.

    இந்த சம்பவம் வடலூர் நகரில் வசிப்பவர்களுக்கு மிகவும் வேகமாக பரவியது. இதனால் இரவு நேரங்களில் வடலூர் நகரில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். வடலூர் போலீசாரை பொறுத்தவரையில் காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணிவரை மட்டுமே பணி செய்கின்றனர். இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடுவது இல்லை. இதனால் தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, கடலூர் மாவட்ட நிர்வாகமும், போலீஸ் சூப்பிரண்டும் இதில் தலையிட வேண்டும். வடலூரில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்வதை உறுதிபடுத்த வேண்டும். முகமூடி கொள்ளையர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும். வடலூர் மக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடலூர் நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாங்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 6 ஆண்டுகள் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம்
    • மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார் என தொடர்ந்து 6 ஆண்டுகள் மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை.

    காங்கயம்:

    ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டாவை வழங்க வலியுறுத்தி செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் எல்லப்பாளையம்புதூர் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 பெண்கள் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை காங்கயத்தில் சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-

    எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியில் 20 குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் கூட்டுக் குடும்பத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 6 ஆண்டுகள் தொடர்ந்து மனு கொடுத்து வருகிறோம். இது குறித்து ஆதிதிராவிட நலத்துறை, ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கள ஆய்வு செய்து மேற்கண்ட 20 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கலாம் என விசாரணையில் உறுதி செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், காங்கயம் தாசில்தார் என தொடர்ந்து 6 ஆண்டுகள் மனுக்கள் கொடுத்தும், தற்போது வரை எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கவில்லை. எனவே சொந்த வீடோ அல்லது வீட்டுமனைப் பட்டாவோ இல்லாமல் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிங்கம்புணரியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார்.
    • அரசின் நலத்திட்டங்களை பெற்று பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள மண்டபத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விநியோக தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பெண்களுக்கு உரிமைத்ெதாகை வழங்கி 2-ம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-சிவகங்கை மாவட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,784 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

    முதல் கட்டத்தில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 113 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-ம் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதை யடுத்து மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 897 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர 66 ஆயிரத்து 700 பெண்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகையும் பெற்று வருகின்றனர். இதன் வாயிலாக சராசரியாக 75 சதவீத பெண்கள் அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

    பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள் அதனை சிறந்த முறையில் பயன் படுத்தி கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, முன்னாள் அமைச்சர் தென்னவன், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, துணைத்தலைவர் இந்தியன்செந்தில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ரம்யா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய அயலக அணி சன் சீமான் சுப்பு, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள்.
    • பெண்கள் தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்துவது இல்லை.

    குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் பெண்கள் பலரும், தங்களுடைய உடல்நலனில் கவனம் செலுத்துவது இல்லை. இதனால் குறிப்பிட்ட வயதிற்கு பின்பு பல பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். இவற்றை தடுக்க பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

    மனநலம்:

    உளவியல் ரீதியாக ஆண்களை விட பெண்கள், மனச்சோர்வு மற்றும் பதற்றத்தால் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனச்சோர்வு, பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினையாக மாறி வருகிறது. கர்ப்ப காலத்திலும், அதற்கு பிறகும் இந்த விஷயத்தில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால், பலரும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்.

    அடிக்கடி மனச்சோர்வு, பதற்றம் ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் நாளடைவில் குடும்ப வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே 2 வாரங்களுக்கு மேல் மனச்சோர்வு சார்ந்த பிரச்சினைகள் இருப்பதை உணர்ந்தால், அதை புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    இதய நோய்கள்:

    சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில், வாழ்க்கை முறை மாற்றத்தால் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. சிறு சிறு அறிகுறிகளை கவனிக்காமல் பெண்கள் அலட்சியம் காட்டுவதுதான் இதற்கு முக்கிய காரணமாகும். மாரடைப்பு ஏற்படும்போது ஆண்களைப்போல இல்லாமல், பெண்களுக்கு வேறுவிதமான அறிகுறிகள் தென்படும்.

    நெஞ்சுவலி. மூச்சுத் திணறல், குமட்டல், வாந்தி, முதுகு, கழுத்து அல்லது தாடை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமானது.

    தூக்கமின்மை:

    உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணமாக இருப்பது தூக்கமின்மை. இதயநோய், உடல் பருமன் மற்றும் மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. பெரியவர்களுக்கு இரவில் 7 முதல் 8 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியமானது. தியானம், யோகா, மிதமான உடற்பயிற்சிகள் செய்வது. வெந்நீரில் குளிப்பது, நடைப்பயிற்சி மேற்கொள்வது போன்றவை தூக்கத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழிகளாகும்.

    மருத்துவ பரிசோதனைகள்:

    பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். வயதை பொறுத்தும் சில பரிசோதனைகளை பெண்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

    கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோயை கண்டறிவதற்கான பேப் ஸ்மியர் சோதனைகள், மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்கும் மேமோகிராம் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனைகள், எலும்பு தேய்மானத்தை கண்டறிய உதவும் பரிசோதனைகள், கால்சியம் குறைபாடு, பாலியல் சார்ந்த தொற்றுகளை கண்டறிய உதவும் எஸ்.டி.டி. ஸ்கிரீனிங், குடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சினைகளை கண்டறிய உதவும் கொலோனோஸ் கோபி போன்ற பரிசோதனைகளை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மேற்கொள்வது நல்லது.

    • புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது.
    • ரத்தப் பரிசோதனை மூலம் கொழுப்பின் அளவை கண்டறியலாம்.

    குடும்ப நலன் நாடும் பெண்கள் தங்கள் நலனில் போதிய அக்கறை கொள்ளாததால் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒருசில பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் பெரிய அளவிலான ஆபத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அதற்கு செய்ய வேண்டிய சில பரிசோதனைகள் குறித்து பார்ப்போம்..

    புற்றுநோய்

    உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் புற்றுநோய் பெண்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. அதிலும் பல பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இளம் வயது பெண்கள் கூட இந்த புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் 20 வயதை கடந்த பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    மார்பக புற்றுநோயும் வயது வித்தியாசமின்றி பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்குரிய பரிசோதனையையும் அவசியம் மேற்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான மேமோகிராம் சோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது.

    கொழுப்பு பரிசோதனை

    ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்ந்தால், பல்வேறு வகையான பிரச்சினைகள் ஏற்படலாம். அதனால் குறிப்பிட்ட காலகட்டத்தில் கொழுப்பு அளவை கண்டறிய வேண்டியது அவசியமானது. சாதாரண ரத்தப் பரிசோதனை மூலமே கொழுப்பின் அளவை கண்டறிந்துவிடலாம். அதனால் 5 ஆண்டு களுக்கு ஒருமுறையாவது கொழுப்பு பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது. 20 வயதை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

    தைராய்டு பரிசோதனை

    கழுத்து பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பியின் முக்கியமான பணி, தைராக்சின் என்ற ஹார்மோனை சுரப்பதுதான். இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமானால் ஹைப்பர் தைராய்டிசம், குறைந்தால் ஹைப்போ தைராய்டிசம் என்ற பாதிப்பு உண்டாகும். ஆரம்ப நிலையிலேயே தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்தால் மருந்துகளின் மூலம் குணப்படுத்திவிட முடியும்.

    கழுத்தில் வீக்கம் அல்லது கட்டி இருந்தால் அது பெரும்பாலும் தைராய்டு கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதனை செய்வதன் மூலமே கண்டறிய முடியும். ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்துவிட்டால் நோய் பாதிப்பின் வீரியத்தை கட்டுப்படுத்திவிடலாம்.

    கண்பார்வை பரிசோதனை

    பெண்கள் பலரும் கண் பார்வை பரிசோதனை மேற்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதன் அவசியத்தை புரிந்து கொள்வதுமில்லை. கண் பார்வையில் சிறு குறைபாடு தென்படும்போதே கவனம் செலுத்தாமல் அலட்சியப்படுத்திவிடுகிறார்கள்.

    நாளடைவில் கண் பார்வை குறைபாடு பிரச்சினை அதிகரிக்க தொடங்கிவிடுகிறது. ஆண்டுக்கு ஒருமுறையாவது கண் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. கண்ணாடி அணியுமாறு மருத்துவர் பரிந்துரைத்த நபர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

    எலும்பு அடர்த்தி சோதனை

    எலும்புகள் பலவீனம் அடைந்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். எலும்புகளின் அடர்த்தியில் மாறுபாடு ஏற்படும்போது கடுமையான விளைவுகளை அனுபவிக்க நேரிடும். எலும்பின் அடர்த்தியை முன்கூட்டியே பரிசோதனை செய்து அறிந்து கொண்டால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

    பெண்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை இந்த பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. அதிலும் 65 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் நிற்கும் காலகட்டமான மெனோபாஸ் சமயத்தில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    • நாகர்கோவிலில் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இன்று நடந்தது. விழா வுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி னார். கலெக்டர் ஸ்ரீதர் வர வேற்றார்.

    சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலாளர் தாரேஸ் அகமது முன்னிலை வகித்தார். விஜய்வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டு மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 27 ஆயிரம் கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டது.

    பின்னர் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    நாடே திரும்பி பார்க்கிற வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1000 டெபிட் கார்டுகள் மற்றும் 255 மகளிர் சுயதவிக்குழுக்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்து சகோதரிகளுக்கு ரூ.27 கோடி அளவில் கடனுதவி வழங்கும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தமிழகத்தில் 1 கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மட்டும், கிட்டத்தட்ட 2 லட்சத்து 82 ஆயிரம் பேர் பயன் பெற்று உள்ளனர்.

    ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய திட்டம் செயல்படுத்தப்பட்டது, இதுவே முதல்முறை. இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி தான் உங்களுக்கு உரிமைத் தொகை வழங்குவதற்கான தேதி என்றாலும், ஒரு நாள் முன்னதாக 14-ந் தேதியே அரசால் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது 1000 டெபிட் கார்டுகளை வழங்குகிறோம் என்றால், இவை பணம் எடுப்பதற்கான கார்டுகள் மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிற துருப்புச்சீட்டு.

    இந்தத் திட்டத்தை பின்பற்றி, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்ப டும் என வாக்கு றுதிகள் வழங்கப் பட்டு வருகின்றன.

    எந்த ஒரு அரசு திட்டத்தை செயல்படுத்தும் போதும், மேல்முறையீடு செய்கிற வசதி இருக்காது. ஆனால், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை பொறுத்தவரை, விண்ணப்பம் ஏற்கப்படாத வர்கள், மீண்டும் மேல்முறையீடு செய்கிற வசதியைச் செய்துள்ளோம். இதுவரை 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

    மகளிர் மட்டுமன்றி திருநங்கையர், மாற்றுத் திறனாளிகளும் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகின்றனர். நான் சட்டமன்றத்தில் பேசியது போல், தகுதியுள்ள ஒரு மகளிர் கூட இந்த திட்டத்தில் இருந்து விடு பட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல் பட்டு வருகிறோம்.

    மகளிர் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் எனும் உயரிய எண்ண த்தோடு அரசு செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி வழங்க இந்தாண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன் ஒரு பதியாகத்தான் தற்போது இங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் 25 ஆயிரம் பேருக்கு ரூ. 27 கோடி மதிப்பில் கடன் உதவிகளை வழங்கியுள்ளோம்.

    பெண்ணுரிமை குறித்து தந்தை பெரியார் கண்ட கனவுகளுக்கு எல்லாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. கலைஞர் அதை செய்தார். கலைஞரை தொடர்ந்து முதல்-அமைச்சரும் மகளிர் முன்னேற்றத்துக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.

    பெண்கள் முன்னேற்றம் 3 வழிகளில் தடுக்கப்பட்டி ருக்கிறது என்று பெரியார் சொன்னார். ஒன்று, கலாச்சார ரீதியாக தடுக்கப்பட்டிருக்கிறது. 2, சட்ட ரீதியாக தடுக்கப்பட்டி ருக்கிறது. 3, பொருளாதார ரீதியாக தடுக்கப்பட்டி ருக்கிறது.

    இந்த 3 தடைகளை யும் நீக்கினால் போதும் பெண்கள் சுதந்திரமாக வாழக் கூடிய நிலை ஏற்படும் என்று பெரியார் சொன்னார்.

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. பெண்களுக்கு படிப்புத் தேவையில்லை. குடும்பத்தைப் பார்த்துக் கொள்வது மட்டும் தான் பெண்களுக்கு வேலை. இப்படி தான் நம்முடைய சமுதாயம் ஒரு காலத்தில் இருந்தது.

    இவற்றை எதிர்த்து பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தது நம்முடைய திராவிட இயக்கம். அரசின் திட்டங்கள் எல்லாம் கலாச்சார ரீதியாக முடக்கப்படும் பெண்களை முன்னேற்று வதற்கான திராவிட மாடல் திட்டங்கள்.

    2-வதாக, சட்ட ரீதியாகப் பெண்களுக்கு இருந்த முட்டுக்கட்டை என்ன? ஒரு தாய் வயிற்றில் பிறந்தாலும், ஆண் பிள்ளைக்கு மட்டும் தான் அப்பா சொத்திலே உரிமை இருக்கிறது. பெண் பிள்ளைக்கு சொத்திலே உரிமை கிடையாது என்கிற நிலை தான் சட்ட ரீதியாக இருந்தது.

    ஆனால், கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது தான், தந்தை சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று 30 வருடங்களுக்கு முன்பே இதற்கான சட்டத்தை நிறைவேற்றினார்..இன்றைக்கு எல்லா பெண்களுக்கும் சொத்திலே உரிமைக் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணம் நமது தி.மு.க. அரசு கொண்டு வந்த சட்டம் தான்.அடுத்ததாக, பொருளாதார ரீதியில் பெண்களுக்கு இருக்கக் கூடிய முட்டுக்கட்டைகள் என்ன?

    ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது, பணத்தி ற்காக தனது அப்பாவை எதிர்பார்க்க வேண்டும். அந்தப் பெண் வளர்ந்து திருமணம் ஆனதும் பணத்திற்காக கணவனை எதிர்பார்க்க வேண்டும். வயது முதிர்ந்த காலத்தில் பணத்திற்காக தனது மகனை எதிர்பார்த்திருக்க வேண்டும். இப்படி தான் இருக்கிறது பெண்களின் நிலை.

    இந்த நிலைமை மாறி, பெண்கள் ஆண்களுக்கு சமமாக வளர வேண்டு மானால் அவர்களும் ஆண்களைப் போல தாங்கள் விரும்பும் கல்வியைக் கற்க வேண்டும். தங்கள் அறிவுக்கும் ஆற்றலுக்கும் ஏற்ற வேலையிலே அமர வேண்டும்.

    நாட்டிலேயே முதல்முறையாக கலைஞர் 1989-ம் ஆண்டே மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கினார். கலைஞர் வழியில், திராவிட மாடல் அரசு பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பள்ளியில் இருந்து கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்குகிறது.

    படிப்பதற்காக அல்லது வேலைக்காக பெண்கள் பயணம் செய்வதற்கு வாய்ப்பாக மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்துப் பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    31 ஆயிரம் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டித் திட்டம் மிக முக்கியமானது. 17 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.

    இதுவரை நமது அரசு நிறைவேற்றிய மகளிர் முன்னேற்றத் திட்டங்களி லேயே முதன்மையானது என்று சொல்லக் கூடிய திட்டம் தான் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்.

    இந்த திட்டத்திற்கு முதல்-அமைச்சர் வைத்திருக்கும் பெயர் தான் இதிலே முக்கியமானது. இந்த திட்டம் மகளிருக்கான உரிமை என்பதால், இதற்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று பெயர் வைத்துள்ளார்.

    பெண்களுடைய உழைப்புக்கு ஓர் அண்ண னாக இருந்து முதல்-அமைச்சர் இப்போது அங்கீகாரம் கொடுத்தி ருக்கிறார். உங்களுடைய மகனாக, – சகோதரனாக இருந்து இதைப் பார்த்து நான் பெருமகிழ்ச்சி அடை கிறேன்.

    பெண்கள் கல்வியிலே, பொருளாதாரத்திலே உயர வேண்டும். அதேபோல் பொது வாழ்க்கையிலும் பெண்கள் அதிகமாக ஈடுபட வேண்டும். அப்போது தான் உங்களுக்கான உரிமைகளை நீங்கள் வலியுறுத்தி பெற முடியும். பெண்கள் செல்போன் பயன்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நிறைய செய்தி கள் வரும். அப்படி வருகிற செய்திகள் உண்மையா? பொய்யா? என்று நீங்கள் ஆராய்ந்து அதனை மற்ற வர்களுக்கு ஷேர் செய்ய வேண்டும்.

    இப்போது, உள்ளாட்சிப் பதவிகளில் 50 சதவீதம் பெண்கள் வந்திருக்கி றார்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் உள்ள மேயர், நகராட்சி மன்றத் தலைவர், –பேரூராட்சித் தலைவர், – மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், ஒன்றியக்குழு தலைவர், – ஊராட்சி மன்றத் தலைவர் ஆகிய பதவி களில் 50 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். இந்த சாதனையை நடத்திக் காட்டியது திராவிட மாடல் அரசு.

    பெண்கள் பொருளா தாரத்தில் தன்னிறைவுப் பெற்றவர்களாக இருப்பது தான் பெண்ணுரிமைக்கான அடித்தளம். இந்த நேரத்தில் மகளிருக்கு ஒரு வேண்டு கோளை வைக்கிறேன். தந்தை பெரியார் அவர்கள் சொன்னது தான். மகளிர் நீங்கள் அனைவரும் முற்போக்காகவும் பகுத்தறி வுடனும் சிந்திக்க வேண்டும். சுதந்திரமாக சிந்திக்க வேண்டும்.

    அப்போது தான் உங்க ளுக்கு பிறக்கும் குழந்தை களும் முற்போக்காக, சுதந்திரமாக சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பா ர்கள். எனவே, மகளிர் நிறைய படிக்க வேண்டும், முற்போக்காக சிந்திக்க வேண்டும். அப்போது தான் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் முன்னேற முடியும்.

    ஆண்களை விட பெண்கள் தான் தங்களு டைய வருமானத்தில் பெரும்பகுதியை தங்கள் குடும்பப் பராமரிப்புக்காக செலவிடுகிறார்கள்.

    எனவே, பொருளா தாரத்தில் பெண்கள் வளர்வது நமது வீட்டிற்கும், சமுதாயத்திற்கும், ஒட்டு மொத்த நாட்டிற்கும் மிகப்பெரிய பலனைத் தரும்.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஒவ்வொரு வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிய தூண்டுகோலாக அமையப் போகிறது.

    இங்கு வந்துள்ள, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயனாளிகளுக்கும், – மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கும் எனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த சகோதரிகளுக்கு வழங்கப்படும் இந்த கடனு தவியை, முதல்-அமைச்சர் வெறும் கடன் தொகையாக பார்க்கவில்லை. மாறாக சுய உதவிக் குழு சகோதரிகளின் உழைப்பிற்கான நம்பிக்கைத் தொகை யாகத் தான் பார்க்கிறார்கள்.

    தி.மு.க. அரசின் சாதனை களை எடுத்துச் சொல்ல நீங்கள் ஒவ்வொருவரும் தூதுவர்களாக மாறிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசி னார். முடிவில் வருவாய் அதிகாரி பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.விழாவில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கான கைப்பந்து போட்டியில் பரமக்குடி அணி முதலிடம் பெற்றது.
    • சென்னை முகமது ஏ.ஜே. பொறியியல் கல்லூரியின் இயக்குனர் சதக் தம்பி நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    கீழக்கரை முகமது சதக் அறக்கட்டளை 50-வது ஆண்டு பொன் விழாவை யொட்டி ராமநாதபுரம் மாவட்ட பெண்களுக்கான கைப்பந்து போட்டி முகமது சதக் விளையாட்டு மைதா னத்தில் நடைபெற்றது. போட்டியில் மாவட்டத்தில் இருந்து 20 அணிகள் நாக் அவுட் முறையில் மோதின.

    அதில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் தங்க பதக்கத்தை பரமக்குடி ஆர்.எஸ்.வி.சி. அணியினரும் 2-ம் பரிசு ரூ.8 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை ராமநாதபுரம் வேலு மனோ கரன் கலை மற்றும் அறி வியல் கல்லூரி அணி மாணவிகளும் 3-ம் பரிசு ரூ.6 ஆயிரம் மற்றும் வெண் கல பதக்கத்தை கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி அணி மாணவிகளும் 4-ம் பரிசை ராமநாதபுரம் செய்யது அம்மாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளும் கைப்பற்றினர்.

    பரிசளிப்பு விழாவுக்கு முகமது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை நிர்வாக இயக்குனர்கள் ஹாமிது இபுராகிம், ஹபீப் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நவ்ரா பாத்திமா வரவேற்றார். முடிவில் சென்னை முகமது ஏ.ஜே. பொறியியல் கல்லூரியின் இயக்குனர் சதக்தம்பி நன்றி கூறினார்.

    இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முஹைதீன் இப்ராகிம், கவுன்சிலர் முக மது காசிம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆர்.டி.ஓ. மூலம் கள ஆய்வு செய்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இதனை ஏற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

    நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் கலெக்டர் மகாபாரதி, டிஆர்ஓ. மணிமேகலை ஆகியோர் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதற்குரிய பதிலை அளித்தனர்.

    கூட்ட அரங்கில் மனு கொடுக்க வந்த மக்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில் 60க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கூட்ட அரங்கிற்குள் நுழைந்து கலெக்டரை முற்றுகையி ட்டனர்.

    தொடர்ந்து தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கா ததால் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் கலெக்டர் மகாபாரதி பெண்களிடம் தங்களது விண்ணப்பங்கள் பரிசீலனையும் உள்ளது.

    ஆர்.டி.ஓ. மூலம் கள ஆய்வு செய்து விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதனை ஏற்று பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் விண்ணப்பித்த பத்தாயிரத்திற்கும் மேற்ப ட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காமல் மறு விண்ணப்பம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பதிவு செய்ய தாமதமா னவர்களை உடனடியாக பதிய பதிவு செய்யப்படும் என உத்தரவிட்டனர்.

    ×