search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உரிமைத்தொகை"

    • 5 கோடி பயனர்களுக்கு வங்கி கணக்கில் 10 ஆயிரம் பஹ்ட் செலுத்தப்படும்
    • பல பில்லியன் டாலர்கள் செலவாகும் என்பதால் பொருளாதார நிபுணர்கள் எதிர்த்தனர்

    தாய்லாந்து நாட்டின் கரன்சி பஹ்ட் (baht) என்றழைக்கப்படும். அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளதால், பஹ்ட், மதிப்பிழந்து வருகிறது.

    நாட்டின் நிதிநிலைமையை மீண்டும் சீராக்க, 61 வயதான தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் (Srettha Thavisin) பல முயற்சிகளை எடுக்க உள்ளார். அதில் ஒன்றாக அந்நாட்டு மக்கள் 5 கோடி பேருக்கு "டிஜிட்டல் வாலட் ப்ரோக்ராம்" (Digital Wallet Program) எனும் திட்டத்தின்படி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும், 10,000 பஹ்ட் - ரூ.23,323.76 ($280) - மின்னணு முறையில் செலுத்தவிருக்கிறார்.

    இதற்கு பயனாளியாக தகுதி பெற விரும்பும் குடிமக்கள், மாதம் 70,000 பஹ்ட்டிற்கு குறைவாக வருமானம் ஈட்ட வேண்டும்; 5 லட்சம் பஹ்ட்டிற்கு குறைவாக வங்கியில் இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

    முன்னர் 16 வயதிற்கு மேற்பட்ட 5 கோடியே 60 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதாக இருந்த டிஜிட்டல் வாலட் திட்டத்தின் பயனர்கள் எண்ணிக்கை, சற்று குறைக்கப்பட்டு 5 கோடி பேர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த வருட மே மாதம் முதல் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

    மொத்தம் 14 பில்லியன் அமெரிக்க டாலர் இத்திட்டத்திற்காக தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

    "இந்த திட்டத்தால் நன்மையை விட தீமையே அதிகம் விளையும்" என அந்நாட்டின் பொருளாதார நிபுணர்களும் முன்னாள் வங்கி உயரதிகாரிகளும் எச்சரித்ததை பிரதமர் ஸ்வெத்தா பொருட்படுத்தவில்லை.

    இதற்கான சிறப்பு மசோதாக்கள் அடுத்த வருடம் தாய்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    தனது இந்த முயற்சி, நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மேலே கொண்டு வர உதவும் என பிரதமர் ஸ்ரெத்தா உறுதியாக நம்புகிறார். பிரதமர் ஸ்ரெத்தா, நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் அதிபராக விளங்கிய பெரும் கோடீசுவரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இலவசமாக மக்களில் பெரும்பகுதியினருக்கு பணம் வழங்குவது குறித்த சாதக-பாதகங்கள் இந்தியாவிலும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த பழக்கம் அயல் நாடுகளிலும் தொடங்கி விட்டதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் உரிமைத்தொகை வழங்கும் விழா நடந்தது.
    • விழாவில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் 2-ம் கட்ட மகளிர் உரிமைதொகை விநியோக தொடக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து ெகாண்டு புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை விநியோகத்தை தொடங்கி வைத்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு 17,417 புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகைக்கான வங்கி பற்று அட்டைகளை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சாத்தூர் ராமச்சந்திரன் பேசிய தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 3 லட்சத்து 6 ஆயிரத்து 919 பெண்களுக்கும், இன்று 2-ம் கட்டமாக 17 ஆயிரத்து 417 பெண்களுக்கும் என மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரத்து 336 பெண்களுக்கு இந்த கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

    பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுப்பதும், பெண்களின் வாழ்வா தாரத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்க மாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிங்கம்புணரியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டார்.
    • அரசின் நலத்திட்டங்களை பெற்று பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும் என பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள மண்டபத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் 2-ம் கட்ட விநியோக தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பெண்களுக்கு உரிமைத்ெதாகை வழங்கி 2-ம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் கூறியதாவது:-சிவகங்கை மாவட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் கீழ் 2-ம் கட்டமாக 12,784 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.

    முதல் கட்டத்தில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 113 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2-ம் கட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதை யடுத்து மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 897 பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர 66 ஆயிரத்து 700 பெண்கள் பல்வேறு திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகையும் பெற்று வருகின்றனர். இதன் வாயிலாக சராசரியாக 75 சதவீத பெண்கள் அரசின் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

    பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள் அதனை சிறந்த முறையில் பயன் படுத்தி கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, முன்னாள் அமைச்சர் தென்னவன், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி, துணைத்தலைவர் இந்தியன்செந்தில், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் ரம்யா, சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், தி.மு.க. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய அயலக அணி சன் சீமான் சுப்பு, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
    • தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் விடுபட்ட பெண்களுக்கு 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் விடுபட்ட மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடந்தது. மாவட்டம் முழுவதும் 17 ஆயிரம் பெண்களுக்கு உரிமை த்தொகை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர்கள் அஞ்சுகம் பூபதி, தமிழழகன், ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முரசொலி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், கோட்டாட்சியர் இலக்கியா, தாசில்தார்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 2 மாத உரிமைத்தொகையை பெண்கள் பெற்றுவிட்டநிலையில் பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
    • தாலுகா அலுவலகத்தில் சென்று விசாரித்தாலும் அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.

    நிலக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். பெண்களின் வங்கி கணக்கிற்கே இந்த தொகை வரவு வைக்கப்படுவதால் எவ்வித இடைத்தரகருக்கும் பணம் கொடுக்காமல் முழுமையாக தங்களுக்கு கிடைப்பதால் பெண்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

    தகுதியான மகளிருக்கு பணம் கிடைக்கவேண்டும் என்பதற்காக முகாம்கள் அமைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 2 மாத உரிமைத்தொகையை பெண்கள் பெற்றுவிட்டநிலையில் பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை என ஆதங்கம் தெரிவித்துள்ளனர். நிலக்கோட்டை தாலுகாவில் தகுதியான மகளிர் பலருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றும், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர்.

    தாலுகா அலுவலகத்தில் சென்று விசாரித்தாலும் அதிகாரிகள் உரிய பதில் அளிப்பதில்லை என்று தெரிவிக்கின்றனர். தமிழக அரசு அனைத்து தகுதியான பெண்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்கும் என்றுகூறி உள்ள நிலையில் முகாம்கள் அமைத்து விடுபட்ட பெண்களை சேர்க்கவேண்டும் என ேகாரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வக்கம்பட்டியில் ரேசன்க டையை திறக்க அமைச்சர் இ.பெரியசாமி உத்தர விட்டதையடுத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • வருமான வரி செலுத்து வோர் தவிர, மற்ற அனைவருக்கும் கண்டிப்பாக ரூ.1000 கிடைக்கும். விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என பேசினார்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் வக்கம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று ரேசன் பொரு ட்களை வாங்கி வந்தனர். தங்கள் பகுதியில் ரேசன் கடையை திறக்க வேண்டும் என அமைச்சர் இ.பெரிய சாமியிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வக்கம்பட்டியில் ரேசன்க டையை திறக்க அமைச்சர் இ.பெரியசாமி உத்தர விட்டதையடுத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் பத்மா வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக் பிரேம்குமார் வரவேற்றார்.

    விழாவில் ரேசன் கடையை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழ கத்தில்தான் கூட்டுறவு த்துறை சிறப்பாக செயல்படு கிறது. கடந்த 12-வருடங்க ளுக்கு முன்பு தி.மு.க ஆட்சியின் போது வருவா ய்துறை அமைச்சராக இருந்தநான் கிராமங்கள் தோறும் ரேசன் கடையை திறக்க உத்தரவிட்டதால் 300 குடும்ப அட்டை உள்ள கிராமங்களில் கூட பகுதி நேர நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டன. தற்போது மீண்டும் தி.மு.க ஆட்சியில் ஆத்தூர் தொகுதியில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரேசன் கடைகள் திறக்கப்பட்டு ள்ளன. தற்போது இப்பகுதியில் புதிய ரேசன் கடை திறக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் இவர்களுக்கு சிரமமின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதி பொது மக்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்ககூடிய வகையில், தனியார் மற்றும் அரசு ஆஸ்பஸ்த்திரி அமைய உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறுவோர் மற்றும் வருமான வரி செலுத்து வோர் தவிர, மற்ற அனை வருக்கும் கண்டிப்பாக ரூ.1000 கிடைக்கும். விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய தி.மு.க செயலா ளர்கள் ராமன், முருகேசன், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், பொது விநியோ கதிட்ட துணைப்பதிவாளர் அன்புக்கரசன், பித்தளை ப்பட்டி கூட்டுறவு வங்கி செயல் ஆட்சியர் பொன்னு ச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பித்தளைப்பட்டி கூட்டுறவு வங்கி மேலாளர் சுப்பையா நன்றி கூறினார்.

    • ஒவ்வொருவரையும் வரிசையாக அழைத்து சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    • கணினி உதவியோடு இணையதளத்தின் மூலமாக ஊழியர்கள் சரிபார்த்து காரணங்களை தெரிவித்தனர்.

    பல்லடம்:

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 15 -ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தகுதியுடைய பெண்கள் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ளும் வகையில் தாலுகா அலுவலகங்களில் உதவி மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதற்கென இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

    அதன்படி நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டது. அப்போது பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் பொதுமக்களின் விண்ணப்பத்தின் நிலையை ஆய்வு செய்தார். முன்னதாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. அதன்படி ஒவ்வொருவரையும் வரிசையாக அழைத்து சரி பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது மேல்முறையீடு செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இ-சேவை மையத்திற்கு அணுகுமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கு அரசு சார்பில் கட்டணம் வசூலிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முகாமானது 30 நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் ஆதார் கார்டு, குடும்ப அட்டையை கொண்டு வந்து சரி பார்த்துக்கொள்ளலாம் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நேற்று தாலுகா அலுவலகத்தில் மற்ற அலுவலகப்பணிகள் நிறுத்தப்பட்டு உரிமைத்தொகை சரிபார்க்கும் பணி மட்டுமே நடைபெற்றது.இதில் குடும்ப தலைவிகள் தங்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டை கொடுத்து விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டனர். கணினி உதவியோடு இணையதளத்தின் மூலமாக ஊழியர்கள் சரிபார்த்து காரணங்களை தெரிவித்தனர்.

    ஒரேநேரத்தில் இணையதளத்தை பயன்படுத்தியதால் சர்வர் மிகவும் தாமதமாக செயல்பட்டது.இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும்போது:- வங்கி கணக்கில் குறைந்தபட்ச வைப்பு தொகை இல்லாதவர்களுக்கு ரூ.1,000 செலுத்தியதும் வங்கி அந்த பணத்தை பிடித்துக்கொள்கிறது. அதுபோன்ற வங்கிக்கணக்குகளுக்கு பணம் அனுப்பாமல் இருக்கிறார்கள்.

    அதுபோல் வங்கி கணக்குடன் ஆதார் எண், செல்போன் இணைக்காதவர்களுக்கும் பணம் அனுப்பாமல் உள்ளது. இதுபோன்ற குறைகளை அறிந்து இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தி வருகிறோம். சர்வர் மெதுவாக இருப்பதால் விரைந்து சரிபார்க்க முடியவில்லை.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குமரியில் உதவி மையம், இ-சேவை மையங்களில் திரண்ட பொதுமக்கள்
    • வருமான வரி, கள ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    நாகர்கோவில் :

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பணம் பெற குமரி மாவட்டத்தில் 4 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கள ஆய்வு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இதில் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. தகுதியான விண்ணப்பங்கள் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிலையில் தகுதியான பயனாளிகளுக்கு கடந்த 15-ந்தேதி முதல் செல்போனில் குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. குறுஞ்செய்திகள் வந்தவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் சுமார் 75 சதவீதம் பேருக்கு குறுஞ்செய்திகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான பணம் கிடைக்காதவர்கள் மீண்டும் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் குறுஞ்செய்திகள் வராத நிலையிலும் பெண்கள் ஏராளமானோர் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் 5 ஊழியர்கள் இந்த பணிக்கு நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை, கணினி உதவியுடன் ஆன்லைனில் பார்த்து பொதுமக்களிடம் தெரிவித்தனர். வருமான வரி, கள ஆய்வு உள்ளிட்ட காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

    இதேபோல் தோவாளை, கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் தாலுகா அலுவலங்களிலும் உதவி மையங்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியது. நாகர்கோவில் ஆர்.டி.ஓ. அலுவலகம், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் உதவி மையங்கள் இன்று முதல் திறந்து செயல்பட்டது. அதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் அந்த பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து அந்த குறைபாடுகளை எப்படி களைவது என்பது குறித்து அறிவுரைகளை வழங்கி அனுப்பினார்கள்.

    இந்த சூழலில் உதவி மையங்களில் இண்டர்நெட் சேவை திடீரென தடைபட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த பொதுமக்களின் விவரங்களை கேட்டு, அதனை ஒரு நோட்டில் ஊழியர்கள் பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு டோக்கன் கொடுத்து அமர வைக்கப்பட்டனர்.

    இதற்கிடையில் மறு விண்ணப்பத்திற்காக ஏராளமோனார் இ-சேவை மையங்களுக்கு சென்றனர். ஆனால் அங்கு மறு விண்ணப்பத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மறு விண்ணப்பத்துடன் வந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதேபோல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வந்த பணத்தை எடுப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்றதால் அங்கும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    • மண்டபத்தில் மகளிர் உரிமைத்தொகை டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.
    • ரேசன் கடைபொறுப்பாளர் சந்திரசேகர் குடும்ப தலைவிகளின் பெயர்களை பதிவு செய்தார்.

    மண்டபம்

    தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.அதனையொட்டி கூட்டுறவு சங்கங்களின் மாநில பதிவாளர் அனைத்து மாவட்டங்களுக்கும் கூடுதல் பதிவாளர் அளவில் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளார். இதன் மூலம் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், டோக்கன் வழங்குதல், சேமிப்பு கணக்கு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கணக்குகள் தொடங்குதல் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி 11-வது வார்டு சேது நகரில் 150 ரேசன் அட்டை தாரர்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், டோக்கன் கவுன்சிலர்கள் முபாரக், முகமது மீரா சாகிப், சாதிக் பாட்சா ஆகியோர் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது. ரேசன் கடைபொறுப்பாளர் சந்திரசேகர் குடும்ப தலைவிகளின் பெயர்களை பதிவு செய்தார். இந்த விண்ணப்ப படிவங்களை நிறைவு செய்து குடும்ப தலைவிகள் வார்டுகளில் நடக்கும் சிறப்பு முகாமின் போது அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்ய பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • இந்த முதற்கட்ட முகாம் வரும் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மகளிர் உரிமைத் தொகைக்கு கமுதி பேரூராட்சி பகுதிகளில் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்ப படிவங்கள், ரேசன் கடைகளில் பெற்று கடந்த 24-ந் தேதி முதல் வழங்கப்பட்டது.

    கமுதி வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு பகுதி மற்றும் சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் என 2 இடங்களில், இதற்கான மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் தங்களது உரிமைத் தொகையை பெறுவதற்கான மனுக் களை கொடுத்து பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    வருவாய் ஆய்வாளரும், மண்டல அலுவலருமான மணி வல்லபன் முன்னிலையில், தன்னார்வலர்கள், பொறுப்பு அலுவலர்களும் இந்த மனுக்களை பெற்று பதிவேற்றம் செய்து வருகின்றனர். தற்போது வரை 1500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட முகாம் வரும் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    மேலும் கிராம பகுதியில் உள்ள பெண்களுக்காக பசும்பொன், செங்கப்படை, பாக்குவெட்டி, மரக்குளம் உள்பட பல்வேறு கிராமங்களில் மொத்தம் 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மகளிர் உரிமைத் தொகைகாண மனுக்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

    • மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் முதற்கட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் ராஜா எம்.தினகர் ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டதுடன் அம்முகாமில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பங் களை குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்து வருவதை பார்வையிட்டார்.

    மேலும், முதற்கட்ட முகாம் 326 நியாயவிலைக் கடைகளில் அப்பகுதிகளுக் குறிய குடும்ப அட்டைதாரர் களிடமிருந்து விண்ணப்படி வங்கள் பெற்று பதிவு செய்யப்படுகிறது. இந்த முகாம் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடைபெறும்.

    அதேபோல் 2-ம் கட்ட முகாம் 439 நியாயவிலை கடைகளில் வருகிற 5-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    பொதுமக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி களை சரியாக அமைத்து கொடுத்து கண்காணித்து வரவேண்டும் எனவும், அதேபோல் குடும்ப அட்டை தாரர்களும் தங்களுக்கு தெரிவிக்கப்பட்ட தேதியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நியாயவிலை கடைகளில் பதிவு செய்திட வேண்டும் எனவும் அனைத்து விண்ணப்பங்களும் இரண்டு கட்ட முகாம்கள் மூலம் பதிவு செய்யப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, வட்டாட்சியர்கள் தமீம்ராஜா மற்றும் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×