search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விளக்குகள் ஏற்றி பெண்கள் திடீர் போராட்டம்-பரபரப்பு
    X

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விளக்குகள் ஏற்றி பெண்கள் 'திடீர்' போராட்டம்-பரபரப்பு

    • பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்துள்ள பூமலூர் கோகுல் கார்டன் பகுதியை சேர்ந்த பொது மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது திடீரென தங்கள் பகுதிக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர கோரி தாங்கள் கொண்டு வந்த விளக்குகளை ஏற்றி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். இதில் பெண்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பூமலூர் ஊரட்சிக்கு உட்பட்ட பூமலூர் கிராமம் கோகுல் கார்டன் பகுதியில் 250 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவரிடம் அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு மின்விளக்கு, சாக்கடை வசதி செய்து தரக்கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொது மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று எங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

    Next Story
    ×