என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பினராயி விஜயன்"
- தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்
- நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது
தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். நம் நாடு எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இது. நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
தேர்தல் பத்திர முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. தேர்தல் பத்திர முறை இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று அவர் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
அதன் பின்பு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
- குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மாநிலத்தில் காங்கிரஸ் ஆரம்பத்தில் இடதுசாரிகள் பக்கம் நின்றது.
- 18 காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவர் கூட பாராளுமன்றத்தில், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை.
திருவனந்தபுரம்:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல் படுத்தமாட்டோம் என்று கேரளா, தமிழகம் உள்பட சில மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, மாநிலத்தில் காங்கிரஸ் ஆரம்பத்தில் இடதுசாரிகள் பக்கம் நின்றது. ஆனால் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றி பா.ஜனதாவுக்கு ஆதரவளித்தது.
கேரளாவை சேர்ந்த 18 காங்கிரஸ் எம்.பி.க்களில் ஒருவர் கூட பாராளுமன்றத்தில், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. பாராளுமன்றத்தில் கேரளாவின் குரல் மவுனமாகிறது.
பாராளுமன்றத்தில் காங்கிரசின் முக்கிய குரலாக இருக்க வேண்டியவர் வயநாடு எம்.பி. ராகுல்காந்தி. ஆனால் அவர் மக்களுக்காக பேசினாரா? மதச்சார்பற்ற இந்தியாவை அழிக்கும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து காங்கிரசிடம் தெளிவான நிலைப்பாடு இல்லை.
வயநாட்டில், வன விலங்குகள் தாக்குதலால் மக்கள் தொடர்ந்து உயிர் இழக்கிறார்கள். வனச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் இதற்கு நிரந்தர தீர்வு காணமுடியாது. இந்த விவகாரத்திலும் ராகுல்காந்தியால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- வனவிலங்கு அட்டகாசத்தை தடுத்து மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.
- காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் யானைகளை விரட்டும் சிறப்பு வகை தேனீக்கள் உரிய பகுதிகளில் வளர்க்கப்படும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி இருக்கின்றன. அங்கு மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை, கரடி, புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி புகுந்து விடுகின்றன.
அவ்வாறு புகும் வன விலங்குகள் மனிதர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை கொன்றுவிடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிக அளவில் நடந்து வருகின்றன. வயநாடு மாவட்டம் வானந்தவாடி பகுதியில் கடந்த மாதம் அஜி என்பவர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.
வீட்டு காம்பவுண்ட் சுவரை உடைத்துக் கொண்டு புகுந்த காட்டு யானை, அஜியை மிதித்து கொன்றது. இந்த சம்பவம் வயநாடு மாவட்டம் மட்டுமின்றி கேரள மாநிலம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வயநாடு மாவட்டத்தில் குர்வா தீவு அருகே வனத்துறை வழிகாட்டி பால் என்பவரும் காட்டு யானை தாக்கி பலியானார். வயநாடு மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்குள் காட்டு யானை தாக்கி 3 பேர் பலியாகி விட்டனர்.
இதற்கிடையே வயநாடு மாவட்டத்தில் சில இடங்களில் புலி மற்றும் சிறுத்தையும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தன. இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் பீதிக்கு உள்ளாகினர். வனவிலங்குகள் அட்டகாசத்தை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மனித மற்றும் வனவிலங்கு மோதலை தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டார்கள்.
வனவிலங்கு அட்டகாசத்தை தடுத்து மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் புகுவதை தடுக்க, யானைகள் புகும் பகுதிகளில் சிறப்பு தேனீக்களை வளர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியிருப்பதாவது:-
மனித-வனவிலங்கு மோதலை தடுக்க வனத்துறை தலைமையகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. 36 வனப்பிரிவுகளில் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்படும்.
காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் யானைகளை விரட்டும் சிறப்பு வகை தேனீக்கள் உரிய பகுதிகளில் வளர்க்கப்படும். இந்த தேனீக்கள் கரடிகளை ஈர்ப்பதால், அவை கரடி இல்லாத பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன.
வனவிலங்குகள் தாக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை செய்ய ஊராட்சி அளவில் வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கப்படும். மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட சுமார் 900 தற்காலிக கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வனப்பகுதியில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும். இதற்காக வயநாடு வனப்பகுதியில் 341 குளங்களும், இடுக்கியில் 249 குளங்களும் பராமரிக்கப்படுகின்றன. தண்ணீர் தொட்டிகள் கட்டும் பணியும் பரிசீலனையில் உள்ளது.
வனவிலங்குகள் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.13.70 கோடியில் ரூ.6.45 கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.7.26 கோடி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்கப்படும்.
இவ்வாறு முதல்- மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
- குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம்
- மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
"குடியுரிமை திருத்தச்சட்டம் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சட்டம். சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாகக் கருதும் குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்று உறுதியாக கூறுகிறோம்" என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.
- முடிவில்லா மகிழ்ச்சி, தொடர் வெற்றிகளையும் பெற விழைகிறேன் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதே போல், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அன்புத்தோழர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள். நமது அரசிலமைப்பின் கூறான ஜனநாயகம் மற்றும் மதச்சார்பற்ற விழுமியங்களைப் பாதுகாப்பதில் உங்களின் உறுதியான நிலைப்பாடு ஊக்கமளிக்கிறது. முடிவில்லா மகிழ்ச்சி, தொடர் வெற்றிகளையும் பெற விழைகிறேன் என கூறியுள்ளார்.
சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், திரு @mkstalin அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன். @CMOTamilnadu pic.twitter.com/QKF8hyRI2M
— Kamal Haasan (@ikamalhaasan) March 1, 2024
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எக்ஸ் தள பக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
— TVK Vijay (@tvkvijayhq) March 1, 2024
விஜய்,
தலைவர்,
தமிழக வெற்றிக் கழகம்.
- காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் நாளை இருப்பார்களா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.
- கோவிலுக்குச் செல்வது, பஜனைகள் பாடுவது ஆகியவை ஒவொருவரது தனிப்பட்ட விருப்பங்கள் என்றார்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கண்ணூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல் மந்திரி பினராயி விஜயன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் நாளை இருப்பார்களா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி சென்றார். அதேநாளில் கோவிலில் தியானம் செய்ய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி போராட்டம் நடத்தினார்.
கோவிலுக்குச் செல்வது, பிரார்த்தனை செய்வது, பஜனைகள் பாடுவது ஆகியவை ஒருவரது தனிப்பட்ட விருப்பங்கள். நாங்கள் யாரும் அதை எதிர்க்கவில்லை.
ஆனால் அவர்கள் பார்வையிடத் தேர்ந்தெடுத்த தேதி மற்றும் நேரம் மற்றும் இதன்மூலம் அவர்கள் தெரிவிக்க முயற்சிக்கும் செய்தியில் தான் பிரச்சனை உள்ளது என குறிப்பிட்டார்.
- கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.
- ஆளுநர் செல்லும் இடங்களில் இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஆளுநர் செல்லும் இடங்களில் அவருக்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பு கருப்பு கொடி போராட்டங்களை நடத்தி வருகிறது.
பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். வேட்பாளர்களை கேரளாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தள்ளுவதாக இந்திய மாணவர் அமைப்பு குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறுகையில், எனக்கு எதிராக கருப்பு கொடி போராட்டத்தை நடத்துமாறு இந்திய மாணவர் சங்கத்தை முதல் மந்திரி பினராயி விஜயன்தான் கூறுகிறார்.
அவர்கள் என் அருகில் வராமல் இருக்க காவல்துறையைப் பயன்படுத்துகிறார். என்னை தொட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று அவருக்கு தெரியும். இனி நான் பயப்பட மாட்டேன் என்பதை பினராயி விஜயன் உணரவேண்டும். அவர் அனைவரையும் பலி கொடுக்க விரும்புகிறார். காவல்துறையினரை துன்புறுத்துவதும், இளைஞர்களை சுரண்டுவதும் எனக்கு வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.
- நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதால் போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதல் மந்திரிகள் இருப்பதும் பிரதமருக்கு பிடிக்கவில்லை என்றார் மு.க.ஸ்டாலின்.
சென்னை:
மத்திய அரசுக்கு எதிராக டெல்லி ஜந்தர்மந்தரில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் இன்று போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நிதிப்பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. போராட்டம் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மத்திய அரசு செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கும் பா.ஜ.க. மாநில முதல் மந்திரிகளுக்கும் ஏற்படும்.
மாநிலங்கள் இருப்பதும், மாநிலங்களுக்கு முதல் மந்திரிகள் இருப்பதும் பிரதமர் மோடிக்கு பிடிக்கவில்லை.
மோடி பிரதமர் ஆனதும் கல்வி, மொழி, நிதி, சட்ட உரிமையைப் பறித்தார். இதற்கு காரணமான மத்திய பா.ஜ.க. அரசு, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.
முந்தைய காலத்தில் பிரதமர்கள் மாநில அரசுகளை மதித்தார்கள். ஆனால் பிரதமர் மோடி மதிப்பதில்லை.
மாநில அரசுகளிடம் மத்திய அரசு காட்டும் பாகுபாடு ஆக்சிஜனை நிறுத்துவதற்கு சமம். கேரளாவில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய கேரள முதல் மந்திரியை டெல்லி வந்து போராட்டம் நடத்த பா.ஜ.க. அரசு வைத்துள்ளது.
கூட்டாட்சி தத்துவத்தை பேணிக் காப்பதற்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை வெளியேற்றுவோம் என தெரிவித்தார்.
- மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
- போராட்டத்தில் ஆம் ஆத்மி முதல் மந்திரிகளான அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த்மான் ஆகியோர் பங்கேற்றனர்.
புதுடெல்லி:
மத்திய அரசை கண்டித்து கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினார். இதில் மாநில மந்திரிகள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். பேரணியாக சென்று அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். கேரள மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் என ஏராளமானவர்கள் அவருடன் ஊர்வலமாக சென்றனர்.
இந்த போராட்டத்தில் ஆம் ஆத்மி முதல் மந்திரிகளான அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), பகவந்த்மான் (பஞ்சாப்) ஆகியோர் பங்கேற்றனர்.
கேரளாவுக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக பினராயி விஜயன் போராட்டத்தின்போது குற்றம்சாட்டினார்.
#WATCH | Delhi CM Arvind Kejriwal & Punjab CM Bhagwant Mann arrive at the Jantar Mantar, where Kerala CM Pinarayi Vijayan is leading the Left Democratic Front (LDF) protest against the Centre's alleged discrimination against Kerala. pic.twitter.com/RPoEQpzsxe
— ANI (@ANI) February 8, 2024
- சித்தரமையா நேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் உறுப்பினர்களுடன் போராட்டம் நடத்தினார்.
- இன்று பினராயி விஜயன், கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் போராட்டம்.
வரிப் பகிர்வு விவகாரத்தில் தென்மாநிலங்களுக்கு மத்திய அரசு அநீதி இழைப்பதாக கர்நாடகம், கேரளா, தமிழ்நாடு ஆகியவை குற்றஞ்சாட்டி வருகின்றன.
கர்நாடக மாநிலத்திற்கு உரிய நிதியுதவி வழங்கவும், வரிப் பகிர்வில் பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் அமைச்சர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தினார்.
இந்த நிலையில் இன்று கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துகிறார். அவருடன் கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பினராயி விஜயன் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைக்கு திமுக ஆதரவு அளிக்கும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்று தெரிவித்திருந்தார்.
இதனால் திமுக எம்.பி.க்கள், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே போராட்டம் நடத்துகிறார்கள்.
நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறுகையில் "நாங்கள் எங்களுடைய உரிமையை கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களுடைய பங்கீட்டை கேட்டுக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசிடம் இருந்து வறட்சிக்கான நிவாரண தொகையை கர்நாடக அரசு கேட்டது. ஆனால் ஒரு பைசா கூட மத்திய அரசு கொடுக்கவில்லை" என்றார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய பிறகு மத்திய அரசு- தென்மாநிலங்களுக்கு இடையில் வரிப் பகிர்வு தொடர்பான பிரச்சினை வெடித்துள்ளது.
- மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டு.
- இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள அரசுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒன்றிய அரசு சில காலமாகவே மாநில அரசுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளில் நிலைமை வேகமாக மோசமடைந்துள்ளது. மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் இத்தகைய மறைமுகக் கட்டுப்பாடுகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் முற்போக்கான மாநிலங்களிடையே தெளிவான, ஒருமித்த கருத்து உருவாகி உள்ளது.
மாநிலங்களின் பொதுச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது இருப்பினும், மாநிலங்கள் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த, இந்திய அரசமைப்பின் 293-வது பிரிவின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தை ஒன்றிய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தப் பிரிவின்படி, ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற ஷரத்து, மாநில அரசின் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு-செலவு மேலாண்மை விதிகளின்படி வரையறுக்கப் பட்ட நிதிப்பற்றாக்குறையை நேர் செய்யும் மாநில அரசின் முனைப்புகளை தடுக்கும் கருவியாக ஒன்றிய அரசால் மாற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் கருதிய நிதிக் கூட்டாட்சியின் அடிப்படைக்கே மாபெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
ஏற்கனவே ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின் மூலம் மாநிலங்களின் நிதித் தன்னாட்சி கடுமையாக குறைக்கப்பட்டுள்ள நேரத்தில் இத்தகைய பாரபட்சமான மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி அமலுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடுகையில், ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு எதிர்கொண்டு வருகிறது, இழப்பீட்டுத் திட்டத்தை நீட்டிக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. ஒருமித்த கருத்துடைய முற்போக்கான மாநில அரசுகள் இதனை எதிர்க்க வேண்டும்.
நிதிக் கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாப்பதில் கேரள அரசின் உறுதிப்பாட்டை தான் முழுமையாக ஆதரிப்பதோடு தமிழ்நாடு அரசு தனது முழு ஒத்துழைப்பை கேரள அரசுக்கு வழங்கத் தயாராக உள்ளது, இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்ள கேரள அரசின் நடவடிக்கைகளோடு, தமிழ் நாடு அரசின் முயற்சிகளையும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- காவல்துறையை முதல்-மந்திரி கட்டுப்படுத்துகிறார் என தெரிவித்தார்.
- கவர்னர், முதிர்ச்சியையும் விவேகத்தையும் காட்ட வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரளாவில் ஆளும் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையில் கவர்னர் ஆரிப் முகமது கான் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, இந்திய மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரை பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் வந்தார். அப்போது அவரது காரை கருப்புக்கொடியுடன் இந்திய மாணவர் அமைப்பினர் வழிமறித்து, கோ பேக் என கோஷமிட்டனர்.
போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்திய போது, யாரும் எதிர்பார்க்காத விதமாக காரில் இருந்து இறங்கிய கவர்னர் ஆரிப் முகமது கான், பாதுகாப்பு வளையத்தை மீறி, சாலையோரம் இருந்த டீக்கடையில் போடப்பட்டிருந்த நாற்காலியை எடுத்து சாலையில் போட்டு அமர்ந்தார்.
போலீசார் தனக்கு சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் அவர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட எப்.ஐ.ஆரை போலீசார் காண்பித்தனர். அதன்பிறகே கவர்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். முன்னதாக அவர் கூறுகையில், கேரளாவில் காவல்துறை நன்றாக உள்ளது. ஆனால் அவர்களை சரியாக செயல்பட அனுமதிக்கவில்லை. காவல்துறையை முதல்-மந்திரி கட்டுப்படுத்துகிறார் என தெரிவித்தார்.
இந்த சூழலில் அவருக்கு மத்திய அரசின் இசட் பிளஸ் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-
மாநிலத்தின் தலைவர் என்ற முறையில் கவர்னருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்தப் பாதுகாப்பு வேண்டாம் என்று அவர் கூறுகிறார். அவர் வித்தியாசமான முறையில் விஷயங்களை கையாளுகிறார். பதவியில் இருப்பவர்களுக்கு எதிராக பல்வேறு விதமான எதிர்ப்புகள் இருக்கும்.
போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீசார் எடுத்த நடவடிக்கை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக கவர்னர், சாலையில் இறங்குவது வேடிக்கையாக உள்ளது. எந்த அதிகார பதவியும் சட்டத்திற்கு மேலானது அல்ல. கவர்னர், முதிர்ச்சியையும் விவேகத்தையும் காட்ட வேண்டும்.
எங்காவது எப்.ஐ.ஆருக்காக ஸ்டிரைக் பார்த்திருக்கிறீர்களா? கவர்னர், கேரளாவுக்கு சவால் விடுகிறார். ஞானம் தன்னால் பெற முடியாது. அனுபவத்தில் தான் வர வேண்டும். தற்போது அவருக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களால் வழக்கு எதுவும் பதிவு செய்ய முடியுமா? கேரளாவில் சில ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் தற்போது கவர்னரும் சேர்ந்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பினராயி விஜயன், அரசியல் சாசனங்களுக்கு சவால் விடுத்து கூட்டாட்சி கொள்கைகளை குழிதோண்டி புதைக்கும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டியது அவசியம் என்றார்.
வருகிற 8-ந் தேதி டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற உள்ள போராட்டத்திற்கு முன்னதாக ஒருங்கிணைந்த போராட்டம் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்