search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி முதல்வர்"

    • தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்
    • நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது

    தேடுதல் பத்திர விவரங்கள் மத்திய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் இந்த பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப, டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். நம் நாடு எதிர் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான உதாரணம் இது. நம்மால் எதையும் செய்யமுடியும் என்று சங்பரிவார் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

    தேர்தல் பத்திர முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை. தேர்தல் பத்திர முறை இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் என்று அவர் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி விட்டதாக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.

    அதன் பின்பு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்பட அனைத்து விவரங்களையும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ராகுல் காந்தி இன்று கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல்.
    • கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோதிலும் முதலமைச்சராக தொடர்வார்.

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் கைது செய்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி இன்று பாஜக அலுவலகங்களுக்கு வெளியே நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

    ரெய்டுகளுக்கு எதிரான கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறது. அப்போது, அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்.

    மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், டெல்லி முதல்வர் மீதான கைது நடவடிக்கை கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனத்தை எழுப்பி வருகின்றனர்.

    இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோதிலும் முதலமைச்சராக தொடர்வார் என சபாநாயகர் தெரிவித்துள்ளா்.

    இந்நிலையில், கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கையை தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது. மேலும், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெளியே இன்று போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

    • கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது.
    • அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளது.

    மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 8 முறை சம்மன் அனுப்பியும்ஆஜராகாத நிலையில், கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது.

    அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமலாக்கத்துறையை ஏவி கெஜ்ரிவாலை பாஜக கைது செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, தோல்வியின் பயத்தால் உந்தப்பட்டு, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்ததன் மூலம் பாசிச பாஜக அரசு வெறுக்கத்தக்க செயலை காட்டுகிறது.

    அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் சீரழிவு போன்றவற்றை அம்பலப்படுத்தி, ஒரு பாஜக தலைவர் கூட விசாரணையையோ அல்லது கைது செய்வதையோ எதிர்கொள்வதில்லை.

    பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை இடைவிடாமல் துன்புறுத்துவது ஒரு அவநம்பிக்கையான சூனிய வேட்டையை காட்டுகிறது.

    இந்த கொடுங்கோன்மை பொதுமக்களின் கோபத்தை தூண்டுகிறது, பாஜகவின் உண்மையான நிறத்தை வெளிக்கொணர்கிறது. ஆனால் அவர்களின் வீண் கைதுகள் நமது உறுதியை அதிகரித்து, இந்திய கூட்டணியின் வெற்றிப் பயணத்தை பலப்படுத்துகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளது என மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு டெல்லி அரசு எதிர்ப்பு தெரிவித்ததுன் நாடு முழுவதும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது.

    அந்த வகையில், இன்று தமிழகத்திற்கு வருகை தந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன், பஞ்சாப் முதல்வர் பகவந்த மான் சிங்கும் பங்கேற்றார்.

    இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி மற்றும் பஞ்சாப் முதல்வர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

    அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், " நான் டெல்லி செல்லும்போது அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திப்பதுண்டு. டெல்லியில் மாடல் பள்ளி போன்று தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்று ஆய்வு செய்தோம். டெல்லி அரசுக்கு ஆளுநர் மூலமாக தொடர் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அனைத்து மாநில முதல்வர்களும் டெல்லி அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    மத்திய அரசு டெல்லி அரசுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும்" என்றார்.

    பின்னர் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், " டெல்லி அரசுக்கு முழு சுதந்திரம் உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முழு சுதந்திரம் இல்லையென்றால் அரசை நடத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லை. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும்" என்றார்.

    • எதிர்க்கட்சிகளை உடைக்க பாஜக முயற்சி செய்வதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
    • உத்தவ் தாக்கரே, சரத் பவார் ஆகியோரையும் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார்.

    கொல்கத்தா:

    டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான அதிகார போட்டியில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மத்திய அரசுக்கு சறுக்கலாக அமைந்தது. அதாவது, உயர் அதிகாரிகள் டிரான்ஸ்பர் மற்றும் பதவி நியமனம் போன்றவற்றை செய்ய முதலமைச்சருக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த தீர்ப்பை மீறும் செய்யும் வகையில் நிர்வாக உத்தரவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாகவும் தெரிகிறது.

    இதையடுத்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற முடிவு செய்துள்ளார். பாராளுமன்றத்தில் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய அளவில் எம்.பி.க்கள் இல்லாத நிலையில், மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் மம்தாவின் உதவியை நாடுகிறார் கெஜ்ரிவால்.

    இதன் முதற்கட்டமாக இன்று கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா, டெல்லி அமைச்சர் அதிஷி சிங் ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சந்திப்பின்போது நடப்பு அரசியல் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது:-

    பாஜக ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறது, சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை உடைக்க முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் அரசாங்கங்களுக்கு தொந்தரவு கொடுப்பதற்காக ஆளுநர்களை பயன்படுத்துகிறது. இப்போது, இரட்டை இயந்திரம் (பாஜக ஆட்சி) பிரச்சனைக்குரிய இயந்திரமாக மாறிவிட்டது.

    இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

    இதேபோல் சிவசேனா தலைவர் (உத்தவ் அணி) உத்தவ் தாக்கரேவை நாளையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நாளை மறுதினமும் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார். அப்போது, மாநிலங்களவையில் மத்திய அரசின் நிர்வாக உத்தரவை முடக்கும் திட்டம் தொடர்பாக விவாதிக்க உள்ளார்.

    ×