search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு பணி"

    • சிலைகள் சின்ன சேலத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டையுடன் ஊர்வல மாக சென்றது.
    • 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஏரியில் கரைக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 3 அடி முதல் 10 அடி உயரம் வரை 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை வைத்து வழிபட்டனர். அப்போது விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கரகாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடை பெற்றது.  இந்நிலையில் 3-ம் நாளான நேற்று அனைத்து சிலைகளும் ஏரியில் கரைப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள சிலைகள் சின்ன சேலத்தில் உள்ள முக்கிய வீதிகளில் தாரை தப்பட்டை யுடன் ஊர்வல மாக சென்றது. இதனைக் காண திரளான பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை காவல் துறை துரிதமாக செயல்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி பொதுமக்கள் செல்வதற்கு வழிவகுத்தனர். இந்த நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சின்ன சேலம் காவல் ஆய்வாளர் ராஜாராமன் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.

    பின்னர் விநாயகர் சிலையை ஒன்றன்பின் ஒன்றாக கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடனும் விநாயகர் சிலையை சின்னசேலம் ஏரியில் கரைக்கப்பட்டது. சிலையை கரைக்கும் போது பக்தர்கள் ஏரிக்குள் அனுமதிக்கவில்லை. முழுக்க முழுக்க போலீ சாரின் கட்டுப்பாட்டில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் எந்த ஒரு அசம்பாவிதமும் இன்றி ஏரியில் கரைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் இந்து முன்னணி சார்பாக நடைபெற்றது. இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு, இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் பலர் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட ஏ.டி.எஸ்.பி கோவிந்தராஜ் தலைமையில் திண்டி வனம் டி.எஸ்.பி சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக் டர்கள் கலையரசி, லட்சுமி, கலையரசன் நகரம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். இந்து முன்னணி சார்பாக 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக அமைதியான முறையில் நடைபெற்றது.

    • இமானுவேல் சேகரனாருக்கு நினை வஞ்சலி செலுத்தவுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
    • சேலம் மாநகர போலீசில் இருந்து துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், உதயகுமார், 4இன்ஸ்பெக்டர்கள், 230 போலீசார், ராமநாத புரத்திற்கு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர்.

    சேலம்:

    இமானுவேல் சேகரனாரின் நினைவு நாள், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11-ந் தேதி) அனுசரிக்கப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பி னரும் வந்து, இமானுவேல் சேகரனாருக்கு நினை வஞ்சலி செலுத்தவுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணிக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

    சேலம்

    சேலம் மாநகர போலீசில் இருந்து துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் உதவி கமிஷனர்கள் வெங்கடேசன், உதயகுமார், 4இன்ஸ்பெக்டர்கள், 230 போலீசார், ராமநாத புரத்திற்கு வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். இதேபோல், சேலம் மாவட்ட போலீசில் இருந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் டி.எஸ்.பி.க்கள் அமலஎட்வின், சண்முகம், 7 இன்ஸ்பெக் டர்கள், 300 போலீசார், குமாராசாமிபட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.

    ராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் சேலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசாரும் சென்றுள்ளனர். அவர்கள் வாகன போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.

    • சுதந்திர தினத்தைெயாட்டிமதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ரெயில், விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை

    இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழு–வதும் உள்ள விமான நிலை–யங்கள், வழிபாட்டு தளங் கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள் ளது. மதுரையில் தீவிர பாது–காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

    மதுரை விமான நிலை–யத்துக்கு வரும் வாகனங் களை பிரதான நுழைவாயில் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங் களை பாதுகாப்பு படையி–னர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கின்ற–னர்.

    விமான நிலைய வளாகத் தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து வந்து கண்காணிக்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் களுடன் மதுரை விமான நிலையத்தின் உள்பகுதிக–ளில் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வரு–கின்றனர். முக்கிய பிரமுகர் கள் வரும்போது வழங்கப்ப–டும் பாஸ்களுக்கு கட்டுப் பாடு விதிக்கப்பட்டு உள் ளது.

    விமானங்களுக்கு எரி–பொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பா–டுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்கா–ணிப்பு கேமராக்களு–டன் கூடுதலாக கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண் காணிக்கப்பட உள்ளது. விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒருமுறை விமானங் களில் ஏறும் முன் சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள் ளது.

    பயணிகள் எடுத்து வரும் உடைமைகள் ஸ்கேனிங் எந்திரம் மூலம் சோதனை செய்யப்படுகிறது. விமானங் களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவி–ரமாக கண்காணித்து, பல–கட்ட சோதனைக்கு பின் ஏற்ற அனுமதிக்கப்படுகின் றன. விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள் நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1.5 மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் 3.5 மணி நேரத்துக்கு முன்னதா–கவும் வருவதற்கு மதுரை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மதுரை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    வருகிற 20-ந்தேதி நள்ளி–ரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரி–வித்துள்ளனர். இதேபோல் அசம்பாவிதங்கள் ஏற்படமால் தடுக்கும் வகையில் தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன்நாயர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதி–களிலும் மாட்டுத்தா–வணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்க–ளில் போலீஸ் பாதுகாப்பு அதி–கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் நட–மாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை ரெயில் நிலையத் தில், ரெயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர பாது–காப்பு பணிகளில் ஈடுபட் டுள்ளனர். சந்தேகத்திற்கிட–மாக சுற்றித் திரிபவர்களை உடனடியாக பிடித்து விசா–ரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில்வே தடங்க–ளிலும், நடைமேடைகளிலும் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. பயணிகள் மற்றும் அவர்க–ளது உடைமைகள் மெட்டல் டிடெக்டர் சோத–னைக்கு பின்னரே அனும–திக்கப்ப–டுகின்றனர்.

    மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடு–பட்டு வருகின்றனர். நகர் பகுதியின் எல்லையில் உள்ள சோதனை சாவடிக–ளில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

    மேலும் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்ப–டுத்தியுள்ளனர்.

    இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சுவாமி கோவில், அழகர் கோவில்கள் மற்றும் முக்கிய வழிபாட்டுத் தலங்க–ளிலும் போலீசார் கண்கா–ணித்து வருகின்றனர்.

    • உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.
    • முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகை தந்தார்.

    நீலிகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.

    முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.

    மேலும், ஆஸ்கர் விருது வென்ற தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்பட புகழ் 'பொம்மி' யானைக்கு கரும்பு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

    • புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் விமான தளத்துக்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு மசினகுடிக்கு வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலமாக சிறப்பு பாதுகாப்பு படையினருடன் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.

    முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.

    அப்போது அவர்களை பாராட்டுவதோடு, அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடுகிறார். அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளையும் பார்வையிடுகிறார். ஜனாதிபதி வரும் போது 12 வளர்ப்பு யானைகள் அனைத்தும் வரிசையாக நிற்கவைக்கப்பட உள்ளது.

    அப்போது அந்த யானைகளுக்கு ஜனாதிபதி, பழங்கள் மற்றும் உணவுகளை வழங்குகிறார். சிறிது நேரம் யானைகளை பார்வையிடும் அவர், தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் பார்வையிடுகிறார்.

    ஒரு மணி நேரம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இருக்கிறார்.

    அதன்பின்னர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு காரில் மசினகுடிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் சென்று, அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 போலீஸ் சூப்பிரண்டுகள், 7 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முதுமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மசினகுடி, முதுமலை மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமு க்குள்ளும் பலத்த பாதுகாப்புகள் போட ப்பட்டுள்ளது. இதுதவிர மசினகுடி-தெப்பக்காடு, தொரப்பள்ளி-தெப்பக்காடு சாலை, பந்திப்பூர்-தெப்பக்காடு சாலை உள்ளிட்ட சாலைகளிலும் நக்சல் தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    இதேபோல் முதுமலை வனப்பகுதிக்குள் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் உள்ளரா எனவும் போலீசார் கண்காணித்தனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மசினகுடி-தெப்பக்காடு சாலையில் இன்று மாலை மட்டும் சில மணி நேரங்கள் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். ஆனால் மைசூர்-கூடலூர் சாலையில் வாகனங்கள் வழக்கம் போல இயங்கும். மேலும் ஜனாதிபதி வந்து செல்லும் வரை தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய 3 எல்லை சாலைகளும் மூடப்படுகிறது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    • மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    திருச்சுழி

    திருச்சுழி அருகே உள்ள கள்ளக்காரி கிராமத்தில் மொட்டை இருளப்பசுவாமி கோவில் 3-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

    பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி களுக்கான போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன. இந்த மாட்டு வண்டி பந்தயமானது கள்ளக்காரி கிராமத்தில் தொடங்கி திம்மநாதபுரம் வரை சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு நடை பெற்றது.

    போட்டி காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிவரை நடந்தது. இதில் 7 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 29 சிறிய மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன. இதில் மதுரை, விருதுநகர் ராமநாதபுரம், தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும் அதன் சாரதிகளும் பங்கேற்றன.

    ரேக்ளா பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. பெரிய மாட்டுவண்டி பந்தய போட்டியில் வெற்றி பெற்றதற்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம் ரொக்கமும் அதனுடன் ஒரு பெரிய வெள்ளாடும் பரிசாக வழங்கப்பட்டது. சிறிய மாட்டுவண்டி பந்தய போட்டியில் வெற்றி பெற்றதற்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகள் மற்றும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • திடீர் நகர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மதுரை

    மதுரை மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

    அதற்காக மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அந்தப்பகுதியில் ஆக்கிர மித்து இருந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அந்த ஆக்கிரமிப்பு களை அவர்கள் தாமாக முன்வந்து அகற்றவில்லை. மேலும் இந்தப்பகுதியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படு கிறது.

    சில நேரங்களில் பெரியார் பஸ் நிலைய வளாகத்திற்குள்ளும், பெரியார் பஸ் நிலையம் வரும் முக்கிய சாலைகளிலும் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் ஏற்படுகிறது.எனவே இதுகுறித்து மாநகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இன்று காலை மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநக ராட்சி உதவி ஆணையர் மனோகரன் தலைமையில் உதவி பொறியாளர் பழனி, திட்ட அலுவலர் கனி, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், சுகாதார அலுவலர் வீரன் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    தெருக்களில் வீடுகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்பு களையும் அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளையும் மாநக ராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் நகர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேக்காட்டுக்கருப்பர், பொன்னடைக்கன் சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

    முன்னதாக கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மேக்காட்டு கருப்பர், பொன்னடைக்கன் சாமி, பெரிய கருப்பர், சின்ன கருப்பர், வீரன்னசாமி, ஆண்டிசாமி, அம்மன் சாமி, முத்துக்கருப்பர் சாமி என அனைத்து தெய்வங்களுக்கும் பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டது.

    பின்பு ராஜேந்திர வேளாளர் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை வேடுவர் கண்ணப்ப குல அம்பலகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.

    • வீரய்யா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் நாடு வடக்கு தெரு சேகரம் வெளியாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நயினார் பட்டி கிராமத்தில் உள்ளது வீரய்யா சுவாமி பட்டவர் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் பல்வேறு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டது.

    தீர்த்தம் எடுத்து வந்து கோவிலை சுற்றி வலம் வந்து தீபாராதனை, வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகள் பிறகு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டாரத்தில் உள்ள வெளியாத்தூர், வாணியம்பட்டி, பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், யகருங்குளம் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆயா அப்புச்சி வகையறா பங்காளிகள், நயினார் பட்டி கிராமத்தார்கள் ஆகியோர் செய்திருந்தனர். திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சோழவந்தான் அருகே உள்ள பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
    • காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் பூசாரி மகாமுனி தலைமையில் நடந்தது. பட்டர்கள் பாலாஜி, செந்தில் தலைமையில் கணபதி ஹோமத்துடன் யாகபூஜை நடந்து இதை தொடர்ந்து பூர்ணாஹூதி செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு மரக்கன்று, அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உலக நன்மைக்காக சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிப்பாடு நடைபெறுகிறது. 5 பேர்ஆண்டித்தேவர் வகையறா, எட்டூர் கிராம பொதுமக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • திருச்சுழி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் மற்றும் தேவர் குருபூஜை விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒரு குழுவிற்கு 12 பேர் என 10 குழுக்களை சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இதை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

    வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கப்பணம் சேர், கட்டில், குத்துவிளக்கு மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
    • மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு , திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலை புனரமைக்க ஒருத்தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனினும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.

    இந்நிலையில் கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும், விவசாயம் காக்க வேண்டியும், மண் கால்வாயிகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தி அரச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள் கடை வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.

    அதன்படி இன்று காலையில் இருந்து அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான பிச்சாண்டாம் பாளையம், கருக்கம் பாளையம், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அரச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

    புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அரச்சலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×