search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு

    • சுதந்திர தினத்தைெயாட்டிமதுரையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • ரெயில், விமான நிலையங்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை

    இந்திய திருநாட்டின் 77-வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழு–வதும் உள்ள விமான நிலை–யங்கள், வழிபாட்டு தளங் கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான ரெயில், பஸ் நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள் ளது. மதுரையில் தீவிர பாது–காப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

    மதுரை விமான நிலை–யத்துக்கு வரும் வாகனங் களை பிரதான நுழைவாயில் பகுதியிலேயே நிறுத்தி சந்தேகப்படும் வாகனங் களை பாதுகாப்பு படையி–னர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்கின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் விமான நிலையம் முழுவதும் பரிசோதிக்கின்ற–னர்.

    விமான நிலைய வளாகத் தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து வந்து கண்காணிக்கின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மோப்ப நாய் களுடன் மதுரை விமான நிலையத்தின் உள்பகுதிக–ளில் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வரு–கின்றனர். முக்கிய பிரமுகர் கள் வரும்போது வழங்கப்ப–டும் பாஸ்களுக்கு கட்டுப் பாடு விதிக்கப்பட்டு உள் ளது.

    விமானங்களுக்கு எரி–பொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பா–டுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்கா–ணிப்பு கேமராக்களு–டன் கூடுதலாக கேமராக்களை அமைத்து விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண் காணிக்கப்பட உள்ளது. விமான பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒருமுறை விமானங் களில் ஏறும் முன் சோதனை செய்ய திட்டமிடப்பட்டு உள் ளது.

    பயணிகள் எடுத்து வரும் உடைமைகள் ஸ்கேனிங் எந்திரம் மூலம் சோதனை செய்யப்படுகிறது. விமானங் களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவி–ரமாக கண்காணித்து, பல–கட்ட சோதனைக்கு பின் ஏற்ற அனுமதிக்கப்படுகின் றன. விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால் உள் நாட்டு பயணிகள் விமானம் புறப்படும் நேரத்துக்கு 1.5 மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் 3.5 மணி நேரத்துக்கு முன்னதா–கவும் வருவதற்கு மதுரை விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மதுரை விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    வருகிற 20-ந்தேதி நள்ளி–ரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரி–வித்துள்ளனர். இதேபோல் அசம்பாவிதங்கள் ஏற்படமால் தடுக்கும் வகையில் தென்மண்டல ஐ.ஜி. நரேந்திரன்நாயர், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதி–களிலும் மாட்டுத்தா–வணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்க–ளில் போலீஸ் பாதுகாப்பு அதி–கரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் நட–மாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை ரெயில் நிலையத் தில், ரெயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர பாது–காப்பு பணிகளில் ஈடுபட் டுள்ளனர். சந்தேகத்திற்கிட–மாக சுற்றித் திரிபவர்களை உடனடியாக பிடித்து விசா–ரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில்வே தடங்க–ளிலும், நடைமேடைகளிலும் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்படுகிறது. பயணிகள் மற்றும் அவர்க–ளது உடைமைகள் மெட்டல் டிடெக்டர் சோத–னைக்கு பின்னரே அனும–திக்கப்ப–டுகின்றனர்.

    மேலும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடு–பட்டு வருகின்றனர். நகர் பகுதியின் எல்லையில் உள்ள சோதனை சாவடிக–ளில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.

    மேலும் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பஸ் நிலையங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்ப–டுத்தியுள்ளனர்.

    இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சுவாமி கோவில், அழகர் கோவில்கள் மற்றும் முக்கிய வழிபாட்டுத் தலங்க–ளிலும் போலீசார் கண்கா–ணித்து வருகின்றனர்.

    Next Story
    ×