search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதுமலை"

    • உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.
    • முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகை தந்தார்.

    நீலிகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.

    முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.

    மேலும், ஆஸ்கர் விருது வென்ற தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்பட புகழ் 'பொம்மி' யானைக்கு கரும்பு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

    • புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் விமான தளத்துக்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு மசினகுடிக்கு வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலமாக சிறப்பு பாதுகாப்பு படையினருடன் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.

    முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.

    அப்போது அவர்களை பாராட்டுவதோடு, அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடுகிறார். அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளையும் பார்வையிடுகிறார். ஜனாதிபதி வரும் போது 12 வளர்ப்பு யானைகள் அனைத்தும் வரிசையாக நிற்கவைக்கப்பட உள்ளது.

    அப்போது அந்த யானைகளுக்கு ஜனாதிபதி, பழங்கள் மற்றும் உணவுகளை வழங்குகிறார். சிறிது நேரம் யானைகளை பார்வையிடும் அவர், தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் பார்வையிடுகிறார்.

    ஒரு மணி நேரம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இருக்கிறார்.

    அதன்பின்னர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு காரில் மசினகுடிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் சென்று, அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 போலீஸ் சூப்பிரண்டுகள், 7 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முதுமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மசினகுடி, முதுமலை மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமு க்குள்ளும் பலத்த பாதுகாப்புகள் போட ப்பட்டுள்ளது. இதுதவிர மசினகுடி-தெப்பக்காடு, தொரப்பள்ளி-தெப்பக்காடு சாலை, பந்திப்பூர்-தெப்பக்காடு சாலை உள்ளிட்ட சாலைகளிலும் நக்சல் தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    இதேபோல் முதுமலை வனப்பகுதிக்குள் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் உள்ளரா எனவும் போலீசார் கண்காணித்தனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மசினகுடி-தெப்பக்காடு சாலையில் இன்று மாலை மட்டும் சில மணி நேரங்கள் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். ஆனால் மைசூர்-கூடலூர் சாலையில் வாகனங்கள் வழக்கம் போல இயங்கும். மேலும் ஜனாதிபதி வந்து செல்லும் வரை தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய 3 எல்லை சாலைகளும் மூடப்படுகிறது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    • ஒரு புலி திடீரென காட்டுக்குள் இருந்து வெளியே வந்தது.
    • புலியை வெகுஅருகில் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இது 321 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு புலி, சிறுத்தை, யானை உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் மாயாறு- சத்தியமங்கலத்தை இணைக்கும் யானை வழித்தடமும் உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி சிங்காரா வனப்பகுதி உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று காலை, அந்த பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. அப்போது ஒரு புலி திடீரென காட்டுக்குள் இருந்து வெளியே வந்தது. இதனை பார்த்ததும் அங்கு சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனவே அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    அந்த புலி வாகன போக்குவரத்து பற்றி சிறிதும் கவலைப்படாமல், கம்பீரமாக நடந்து வந்தது. போக்குவரத்து சாலையை மெதுவாக கடந்து காட்டுக்குள் சென்று மறைந்தது. சிங்காரா போக்குவரத்து சாலையில் புலியை வெகுஅருகில் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இருந்தபோதிலும் ஒருசிலர் புலியின் ராஜ நடையை, வீடியோ எடுத்து பொதுவெளியில் பகிர்ந்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • முதுமலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • வன வளம் ஏற்பட புலிகளை பாதுகாக்க வேண்டும்.

    ஊட்டி

    உலக புலிகள் தினத்தை–யொட்டி முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் சார்பில் மசினகுடி, முதுமலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மைதானத்தில் புலிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா தலைமை தாங்கினார்.

    தொடர்ந்து ஆதிவாசி இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் தெப்பக்காடு சுற்றுலா பயணிகள் வரவேற்பு மையத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. புலிகள் பாதுகாப்பு, வனங்களின் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்பு–ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஓவியம் மற்றும் கைப்பந்து உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக புலி பாதுகாப்பு குறித்து புலி முகமூடி அணிந்து வனத்துறையினர் ஆதிவாசி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்பு–ணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது வனத்துறையினர் கூறும்போது, வன வளம் ஏற்பட புலிகளை பாதுகாக்க வேண்டும். காடுகளை பாதுகாப்பதில் புலிகள் முக்கிய இடத்தை வகிக்கிறது. இதன் மூலம் நிலம், நீர், காற்று மனிதர்களுக்கு கிடைக்கிறது. எனவே காடுகளையும், அதை சார்ந்து வாழக்கூடிய புலிகள் உள்ளிட்ட வன உயிரினங்களையும் நாம் அனைவரும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றனர்.

    இதில் ஊட்டி வன அலுவலர் சச்சின் துக்காராம், முதுமலை வனச்சரகர்கள் விஜய், முரளி, மனோஜ் குமார், பவித்ரா, கணேஷ் மற்றும் வன ஊழியர்கள், மாண–வர்கள் கலந்து கொண்டனர்.

    முதுமலையில் வறட்சி காரணமாக உணவு தேடி சாலையோரங்களில் வனவிலங்குகள் உலா வருகின்றன.
    மசினகுடி:

    இந்தியாவில் மொத்தம் 50 புலிகள் காப்பகங்கள் உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் முதுமலை உள்பட 4 புலிகள் காப்பகங்கள் இருக்கின்றன. இந்த 4 புலிகள் காப்பகங்களில் முதுமலையில் மட்டுமே அதிக புலிகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. தற்போது முதுமலையில் 100-க்கும் மேற்பட்ட புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு புலிகள் வாழ ஏற்ற காலநிலை, உணவு, வாழ்விடம் போன்றவை இருப்பதே முக்கிய காரணம் என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக லண்டான எனப்படும் களை செடிகள் அதிக அளவில் இருப்பதால் புலிகள் மறைந்து வாழ வசதியாக உள்ளதாக கூறுகின்றனர். இதனிடையே மழை காலத்தில் முதுமலை வனப்பகுதி பச்சை பசேல் என காட்சி அளிக்கும்.

    அப்போது புதர்களில் புலிகள், காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள் என எந்த வனவிலங்குகள் இருந்தாலும் அவற்றை நாம் எளிதில் பார்க்க முடியாது. ஆனால் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கோடை காலம் என்பதால் முதுமலையில் ஏற்படும் கடும் வறட்சி காரணமாக வனப்பகுதி பசுமையை இழந்து காணப்படும்.

    குறிப்பாக மரங்கள் இலைகள் இன்றி காட்சி அளிக்கும். புதர்களில் உள்ள செடிகளில் இருக்கும் இலைகளும் கீழே விழுந்து விடுவதால், அங்கு வனவிலங்குகள் மறைந்திருந்தாலும் எளிதில் பார்க்க முடியும். இதனால் கோடை காலத்தில் அதிகமான வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் காண முடியும். இந்த நிலையில் இந்த ஆண்டும் வழக்கம்போல் முதுமலையில் கோடை காலம் தொடங்கி கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் காட்டுத்தீயும் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமானது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக புலிகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், காட்டுயானைகள் என வனவிலங்குகள் புதர்களில் இருந்து வெளியே வருவதை அடிக்கடி காண முடிகிறது.

    காலை அல்லது மாலை நேரங்களில் புலிகள் காப்பகத்துக்குள் அமைக்கப்பட்டு உள்ள சாலை ஓரங்களில் உலா வரும் இந்த வன விலங்குகள் வனத்துறை ஊழியர்களையோ அல்லது சுற்றுலா பயணிகளையோ பொருட்படுத்தாமல் சுதந்திரமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இவற்றை காணும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுக்கின்றனர்.

    வாகன சவாரியின்போது சுற்றுலா பயணிகள் பார்க்கும் புலி, சிறுத்தைப்புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை, பார்த்த இடம் மற்றும் நேரம் ஆகிய தகவல்களும் தெப்பகாட்டில் உள்ள முன் பதிவு மையத்தில் தினந்தோறும் எழுதி வைக்கப்படுகிறது. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தல், பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு உள்ளிட்ட காரணங்களால் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
    ×