search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiger awareness"

    • முதுமலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • வன வளம் ஏற்பட புலிகளை பாதுகாக்க வேண்டும்.

    ஊட்டி

    உலக புலிகள் தினத்தை–யொட்டி முதுமலை புலிகள் காப்பக நிர்வாகம் சார்பில் மசினகுடி, முதுமலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மைதானத்தில் புலிகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா தலைமை தாங்கினார்.

    தொடர்ந்து ஆதிவாசி இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் தெப்பக்காடு சுற்றுலா பயணிகள் வரவேற்பு மையத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. புலிகள் பாதுகாப்பு, வனங்களின் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு விழிப்பு–ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஓவியம் மற்றும் கைப்பந்து உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கப்பட்டது.

    முன்னதாக புலி பாதுகாப்பு குறித்து புலி முகமூடி அணிந்து வனத்துறையினர் ஆதிவாசி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்பு–ணர்வு ஏற்படுத்தினர்.

    அப்போது வனத்துறையினர் கூறும்போது, வன வளம் ஏற்பட புலிகளை பாதுகாக்க வேண்டும். காடுகளை பாதுகாப்பதில் புலிகள் முக்கிய இடத்தை வகிக்கிறது. இதன் மூலம் நிலம், நீர், காற்று மனிதர்களுக்கு கிடைக்கிறது. எனவே காடுகளையும், அதை சார்ந்து வாழக்கூடிய புலிகள் உள்ளிட்ட வன உயிரினங்களையும் நாம் அனைவரும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றனர்.

    இதில் ஊட்டி வன அலுவலர் சச்சின் துக்காராம், முதுமலை வனச்சரகர்கள் விஜய், முரளி, மனோஜ் குமார், பவித்ரா, கணேஷ் மற்றும் வன ஊழியர்கள், மாண–வர்கள் கலந்து கொண்டனர்.

    ×