search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mudumalai"

    • உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.
    • முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகை தந்தார்.

    நீலிகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.

    முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பேசினார்.

    மேலும், ஆஸ்கர் விருது வென்ற தி எலிபாண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்பட புகழ் 'பொம்மி' யானைக்கு கரும்பு வழங்கினார்.

    அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசினார்.

    • புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.
    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ஊட்டி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகிறார்.

    இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் விமான தளத்துக்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு மசினகுடிக்கு வருகிறார்.

    அங்கிருந்து கார் மூலமாக சிறப்பு பாதுகாப்பு படையினருடன் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.

    முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.

    அப்போது அவர்களை பாராட்டுவதோடு, அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடுகிறார். அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளையும் பார்வையிடுகிறார். ஜனாதிபதி வரும் போது 12 வளர்ப்பு யானைகள் அனைத்தும் வரிசையாக நிற்கவைக்கப்பட உள்ளது.

    அப்போது அந்த யானைகளுக்கு ஜனாதிபதி, பழங்கள் மற்றும் உணவுகளை வழங்குகிறார். சிறிது நேரம் யானைகளை பார்வையிடும் அவர், தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் பார்வையிடுகிறார்.

    ஒரு மணி நேரம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இருக்கிறார்.

    அதன்பின்னர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு காரில் மசினகுடிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் சென்று, அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 போலீஸ் சூப்பிரண்டுகள், 7 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    முதுமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மசினகுடி, முதுமலை மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமு க்குள்ளும் பலத்த பாதுகாப்புகள் போட ப்பட்டுள்ளது. இதுதவிர மசினகுடி-தெப்பக்காடு, தொரப்பள்ளி-தெப்பக்காடு சாலை, பந்திப்பூர்-தெப்பக்காடு சாலை உள்ளிட்ட சாலைகளிலும் நக்சல் தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    இதேபோல் முதுமலை வனப்பகுதிக்குள் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் உள்ளரா எனவும் போலீசார் கண்காணித்தனர்.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மசினகுடி-தெப்பக்காடு சாலையில் இன்று மாலை மட்டும் சில மணி நேரங்கள் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். ஆனால் மைசூர்-கூடலூர் சாலையில் வாகனங்கள் வழக்கம் போல இயங்கும். மேலும் ஜனாதிபதி வந்து செல்லும் வரை தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய 3 எல்லை சாலைகளும் மூடப்படுகிறது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    • ஒரு புலி திடீரென காட்டுக்குள் இருந்து வெளியே வந்தது.
    • புலியை வெகுஅருகில் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இது 321 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு புலி, சிறுத்தை, யானை உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் மாயாறு- சத்தியமங்கலத்தை இணைக்கும் யானை வழித்தடமும் உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி சிங்காரா வனப்பகுதி உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று காலை, அந்த பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. அப்போது ஒரு புலி திடீரென காட்டுக்குள் இருந்து வெளியே வந்தது. இதனை பார்த்ததும் அங்கு சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனவே அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    அந்த புலி வாகன போக்குவரத்து பற்றி சிறிதும் கவலைப்படாமல், கம்பீரமாக நடந்து வந்தது. போக்குவரத்து சாலையை மெதுவாக கடந்து காட்டுக்குள் சென்று மறைந்தது. சிங்காரா போக்குவரத்து சாலையில் புலியை வெகுஅருகில் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இருந்தபோதிலும் ஒருசிலர் புலியின் ராஜ நடையை, வீடியோ எடுத்து பொதுவெளியில் பகிர்ந்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை பகுதியில் அடர்ந்த வனம் உள்ளது. இங்கு காட்டு யானைகள், மான்கள், புலிகள், கரடிகள், சிறுத்தை புலிகள், செந்நாய்கள் என வனவிலங்குகள் அதிகளவு வசித்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கடும் வறட்சி காணப் பட்டது.

    இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் பசுந்தீவனங்கள் மற்றும் தண்ணீரை தேடி பல்வேறு இடங்களுக்கு சென்றன. இந்த நேரத்தில் கோடை சீசனை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இல்லாததால் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகினர்.

    இதனால் சுற்றுலா தலங்களை கண்டு களித்து விட்டு சென்றனர். இந்த நிலையில் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி மீண்டும் பசுமைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள், காட்டு பன்றிகள், மலை அணில்கள் உள்ளிட்ட வன விலங்குகள் முதுமலை பகுதிக்கு திரும்பியது.

    தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் மைசூரூ- கூடலூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் தெப்பக்காடு- மசினகுடி சாலையோரம் வனவிலங்குகள் அதிகமாக தென்படு கிறது. இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் வனத்துக்குள் சுற்றுலா பயணிகள் அத்துமீறாமல் இருக்க வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    வாகனங்களில் செல்லும் போது வனவிலங்குகளை கண்டு களிப்பதற்கு எந்தவித தடையும் கிடையாது. ஆனால் வாகனங்களை நிறுத்தி கூச்சலிட்டு வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.

    அவ்வாறு தொந்தரவு செய்யும் போது காட்டு யானைகள் திடீரென தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும். இதனால் சுற்றுலா பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வனத்துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.
    முதுமலை வளர்ப்பு யானை முகாமில் கேரளாவை சேர்ந்த 3 யானைகளுக்கு கும்கி பயிற்சி தொடங்கியது.
    மசினகுடி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பழமையான வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. தாயிடமிருந்து பிரிந்து தவிக்கும் குட்டி யானை, நோய்வாய்படும் யானைகள் பிடிக்கபட்டு இந்த முகாமில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இந்த முகாமில் 23 வளர்ப்பு யானைகள் பராமரிக்கபட்டு வரும் நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த, நீலகண்டன்(வயது 22), சூரியன்(20), சுரேந்திரன்(20) ஆகிய 3 யானைகள் கும்கி பயிற்சி பெற முதுமலைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை தொடர்ந்து இந்த 3 யானைகளும் தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு கட்டப்பட்டன. பின்னர் பயிற்சிக்காக யானைகள் அங்குள்ள உணவு கூடத்திற்கு அழைத்து வரபட்டன. பின்னர் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் சண்முகப்பிரியா, கேரள மாநில முத்தங்கா வனக்கோட்ட வன அலுவலர் சாஜன், கோவை மண்டல வனக்கால்நடை மருத்துவர் மனோகரன் ஆகியோர் யானைகளுக்கு கரும்பு உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களை அளித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த 3 யானைகளுக்கும் 90 நாட்கள் கும்கி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் யானைகளை ஆற்றில் குளிக்க வைத்தல், அத்துடன் காட்டு யானைகளை விரட்டுதல், ரோந்து செல்லுதல், மரங்களை தூக்கி செல்லுதல், பாகன்களின் கட்டளைக்கு ஏற்ப செயல்படுதல் என பல்வேறு வகையான கும்கி பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன என்றனர்.

    இந்த பயிற்சிகளை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள பாகன்கள், மருத்துவர்கள் அளிக்க உள்ளனர். நேற்று நடைபெற்ற பயிற்சி தொடக்க விழாவில் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல துணை களஇயக்குனர் புஸ்பாகரன், வனச்சரகர்கள் தயானந், சிவக்குமார், காந்தன், மாரியப்பன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×