search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சுவிரட்டு"

    • வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
    • தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் சார்பில் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு வடமாடு நலச் சங்கத்தின் சார்பில் ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டு முழுவதும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    சங்கத்தின் கவுரவ தலைவர் சேவியர்தாஸ், மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில கவுரவ தலைவர் செல்வம், மாநில தலைவர் அந்தோணி முத்து, மாநில செயலாளர் ரெக்குமோகன், மாநில துணைத்தலைவர் பரத்ராஜ், மாநில பொருளாளர் முத்து பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் சதீஸ்வரன், கவுரவ ஆலோசகர் தனசேக ரன், பொருளாளர் ரஞ்சித், மாவட்ட துணை செயலா ளர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தற்பொழுது வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழக அரசு 6 மாத காலம் மற்றும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் ஆண்டு முழுவ தும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் என முதல்-அமைச்சருக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மோகன், கவியரசன், பார்த்திபன், மோசஸ், செல்வகணேசன், செல்வம், கவுந்தர பாண்டியன், விஜய், ஸ்ரீதர் ராஜ், முனீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 3 நாட்கள் நடந்த மஞ்சுவிரட்டில் 99 காளைகள் பங்கேற்றன.
    • மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிபோட்டு அடங்கினர்.

    சிவகங்கை

    சிவகங்கை காமராஜர் காலனியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் கே.டி.ஆர். கல்யாணி அம்மாள் நினைவு தினத்தை முன்னிட்டு உலக சாதனை முயற்சிக்காகவும் வடமாடு மஞ்சுவிரட்டு பேரவை மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை இனைந்து நடத்தும் 3 நாள் தொடர் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

    வீரத்தமிழர் வடமாடு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன், மாநில கவுரவ தலைவர் கே.டி.ஆர். தங்க ராஜ், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, துணைத் தலைவர் அதிகரை வேங்கை, திருப்புவனம் தமிழ்ச் சங்க வழக்கறிஞர், துணை பொதுச்செயலாளர் செல்வம், பொருளாளர் மயில்வாகனம், மாநில கவுரவ ஆலோசகர் கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் சிவ கங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 99 காளைகள் பங்கேற்றன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை போட்டிபோட்டு அடங்கினார்.

    இதில் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு ப்ரிட்ஜ், கிரைண்டர், மிக்ஸி, பீரோ, கட்டில், சேர் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. 3 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஆயிரக்க ணக்கான பொது மக்கள் மற்றும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

    • உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே கீழச்சீத்தை கிராமத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப் புல்லாணி ஒன்றியம் உதய–நிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

    ராமநாதபுரம் தி.மு.க. மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி மஞ்சுவிரட்டை தொடங்கி வைத்தார். உதயநிதி ஸ்டா–லின் நற்பணி மன்ற ஒன்றிய தலைவர் எஸ்.பி.ஜெயமுரு–கன் வரவேற்றார்.

    நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஆர்.கே.கே.கார்த் திக், உத்திரகோச–மங்கை ஊராட்சி மன்ற தலைவர் கருங்கம்மாள் முத்து ஆகி–யோர் முன்னிலை வகித்த–னர். ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், திருப்புல்லாணி ஒன்றிய பெருந்தலைவர் புல்லாணி, மாவட்ட கவுன் சிலர்கள் ஆதித்தன், கார்த் திகேஸ்வரி கொத்தலிங்கம் ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார் (மேற்கு), நாகேஸ்வரன் (கிழக்கு) உட்பட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்த போட்டியில் களம் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் 25 நிமிடங்கள் விளையாட அனுமதிக்கப்பட் டது. களம் இறக்கப்பட்ட காளைகளை அடக்க 9 பேர் கொண்ட குழுவை சேர்ந்த மாடுபிடி வீரர்கள் களம் இறங்கினர். மாடுபிடி வீரர்க–ளிடம் பிடிபடாத காளை–களின் உரிமையாளர்க–ளுக் கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் ரொக்க பணம் மற்றும் நினைவு பரிசு வழங்கப் பட்டது.

    இதில் மதுரை, தேனி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து காளை–களும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற ஒன்றிய செயலாளர் ரவிச் சந்திரன் நன்றி கூறினார்.

    • மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சிங்கம்புணரி

    சிங்கம்புணரியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

    சிவகங்கை தேவஸ்தா னத்துக்கு பாத்தியப்பட்ட சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோவில் விவசாய நிலத்தில் 2 சமூக மக்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்ற னர். இந்த ஆண்டு கோவி லுக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் சோளம், நிலக்கடலை பயிரிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அந்த நிலத்தில் அனுமதி பெறாமல் இளவட்ட மஞ்சு விரட்டு நடத்த ஏற்பாடு செய்துள் ளனர். எனவே அரசு அனுமதி பெறாமல் மஞ்சு விரட்டு நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு அரசாணை யில் இப்பகுதி இடம் பெறவில்லை. மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றார்.

    போலீசார் தரப்பிலும் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த மனு மீது வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

    இதையடுத்து சிங்கம்பு ணரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் இள வட்ட மஞ்சுவிரட்டு நடை பெறாது என போலீசார் அறிவிப்பு செய்தனர். இந்த நிலையில் சிங்கம்புணரி கிழவன் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இளவட்ட மஞ்சு விரட்டு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் சிலர் விளம்பரம் செய்து வருவதாகவும், அதை நம்ப வேண்டாம் எனவும் ேபாலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதனை மீறி மஞ்சுவிரட்டு நடத்த முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள் ளன. தற்போது அந்த பகுதியில் திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன.
    • காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று அப்பகுதியில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 70 காளைகள் கலந்து கொண்டன. வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன.

    அப்போது காளைகள் மைதானத்தில் சீறிப்பாய்ந்தும், துள்ளி குதித்தும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தன. அவ்வாறு வந்த காளைகளை மாடுபிடி வீரர்களும், இளைஞர்களும் அடக்க முயன்றனர். அதில் சில காளைகள் பிடிபட்டன. சில காளைகள் பிடிபடாமல் சென்றன.

    இந்த மஞ்சுவிரட்டை காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் காளைகள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்தநேரம் காளைகள் முட்டியதில் 20 பேர் காயம் அடைந்தனர். அதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

    அதில் படுகாயம் அடைந்த காடனேரி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 28) என்ற வாலிபர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    • கூலி தொழிலாளியான சிங்கராவணன் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டி என்ற கிராமத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. ஏகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இங்கு ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.

    அந்தவகையில் இந்தாண்டு இன்று காலை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் மஞ்சுவிரட்டு போட்டியில் உற்சாகமாக பங்கேற்றிருந்தன.

    வழக்கம் போல் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்ததை ஆரவாரம் செய்து ஏராளமானோர் ரசித்துக்கொண்டிருந்தனர்.

    இதனிடையே இதே பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிங்கராவணன் (வயது42) என்பவர் மஞ்சுவிரட்டை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடி வந்த காளை அவரை முட்டி தள்ளியது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மஞ்சுவிரட்டு போட்டி என்பது ஜல்லிக்கட்டு போன்று இல்லாமல் ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விடுவது போன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பத்தூர் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூரில் புனித ஜெபமாலை மாதா ஆலய சப்பர திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி ஒய்.எம்.சி.ஏ கத்தோலிக்க இளைஞர் மன்றத்தால் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள் பங்கேற்றன. 20 நிமிடங்களுக்குள் காளையை அடக்க வேண்டும் என்று விழா குழுவினரால் நேரநிர்ணயம் செய்யப்பட்டது.

    இதில் 9 பேர் கொண்ட 15 குழுவினர் களம் இறங்கினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதை பார்பதற்காக சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். விழாவில் காரைக்குடி வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் காயமடைந்த வீரர்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் முதலுதவி வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • திருச்சுழி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
    • 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் மற்றும் தேவர் குருபூஜை விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒரு குழுவிற்கு 12 பேர் என 10 குழுக்களை சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இதை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

    வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கப்பணம் சேர், கட்டில், குத்துவிளக்கு மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கோவில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
    • விழா நிறைவடைந்ததும் மேளதாளம் வாண வேடிக்கையுடன், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் முத்தாலம்மன் நிறை குளத்துஅய்யனார் கோவில் உள்ளது. இங்கு வைகாசி பொங்கல் மற்றும் முத்துராம லிங்கதேவர் 31-வது குருபூஜை விழா நடை பெற்றது.

    விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மற்றும் பொங்கல் வைத்து வழிபடுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுக்கோட்டை கிராம ஊரணியின் மைதானத்தின் நடுவில் உரல் புதைத்து அதில் வடம் கட்டி ஒவ்வொரு மாடாக, மைதானத்தில் அவிழ்த்து விடப்பட்டது. இதில் 13 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கபட்டன.

    இந்த காளைகளை அடக்க 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழாவில் பங்கேற்க மதுரை, விருது நகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்திருந்தன.இந்த எருது கட்டு விழாவை பெண்கள், சிறுவர்கள், முதியோர் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

    பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தலா 2 அண்டா, 2 குக்கர், ரூ.5000 ரொக்கம் மற்றும் மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கபட்டது.

    இந்த வடமாடு மஞ்சு விரட்டு விழா நிறைவ டைந்ததும் மேளதாளம் வாண வேடிக்கையுடன், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    • மேலூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
    • மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகு வலையபட்டியில் பெரிய கருப்பசாமி மற்றும் பூத கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த பகுதி மக்கள் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இன்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி அங்குள்ள கம்புலியன் கண்மாயில் தொழு அமைக்கப்பட்டு சுற்றுப்புற கிராம பகுதிகளில் இருந்து 220 காளைகள் கொண்டு வரப்பட்டன. கிராம முக்கியஸ்தர்கள் வேட்டி, துண்டுகளை மாடுகளுக்கு அணிவித்தனர். மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

    இதில் மாடுகளை பிடித்த 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டையொட்டி கீழவளவு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.
    • டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஏரியூர் கிராமத்தில் மலை மருந்தீஸ்வரர்-முனிநாத சுவாமி கோவில்உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மிக்க மஞ்சுவிரட்டு நடை பெற்றது.

    ஏரியூர் கிராமத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் இந்த கிராம மக்கள் ஏரி கண்மாயில் மீன்பிடி திருவிழாவும், அதனை தொடர்ந்து பாரம்பரியமிக்க மஞ்சு விரட்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் மஞ்சு விரட்டு போட்டி நேற்று மாலை நடந்தது.

    முன்னதாக ஏரியூர், மயில்ராயன் கோட்டை, வலையபட்டி, கலிங்கப்பட்டி போன்ற 10-க்கு மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 500-க்கும் மேற்பட்ட காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டன. விரட்டு மஞ்சுவிரட்டு என்பதால் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டு ஓடிய காளைகளை வீரத் தோடு திமிலைப் பிடித்து அடக்க முற்பட்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சிறுகூடல்பட்டியில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.
    • நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டு வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கவியரசர் கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல் பட்டியில் நாட்டார் நகரத்தார்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து மஞ்சுவிரட்டு போட்டியை நடத்தினர்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டுவரப்பட்டு வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்களுக்கு இப்பகுதி மக்களின் பாரம்பரிய விருந்தோம்பலை உணர்த்தும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மஞ்சு விரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். கீழ்ச்செவல் பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×