search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சு விரட்டு
    X

    மஞ்சு விரட்டு

    • திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டு நடந்தது.
    • தென்கரை, கும்மங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தென்கரை கிராமத்தில் ஆகாச கருப்பர் அந்த நாச்சி அம்மன் கோவிலில் பூச்செரிதல் மற்றும் பால்குட சித்திரை திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய மஞ்சுவிரட்டு நடந்தது. முன்னதாக தென்கரை, கும்மங்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் கண்மாய் மற்றும் வயல்வெளி பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்டது. திரளோனோர் இதில் கலந்துகொண்டு அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்க முயன்றனர். விழாவிற்கான பணிகளை வாசுதேவன் அம்பலம், தலைவர் சுப்பிரமணியன், சொக்கலிங்கம், ராமராஜன், கவுதமன் மற்றும் ஊர் மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் டி.எஸ்.பி. ஆத்மநாதன் தலைமையில் திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    Next Story
    ×