search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "19 injured"

    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.
    • விபத்தில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்ப த்தை சேர்ந்தவர்கள் என்ப தும், இவர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது இந்த விபத்து நடந்தது எனவும் தெரியவந்தது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் இன்று காலை 4 மணியளவில் சாலையோரம் இருந்த மரத்தில் வேன் மோதி விபத்தில் சிக்கியது. இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அவர்கள் திண்டுக்கல் காந்திபுரம் நத்தப்பட்டியை சேர்ந்த நாகராஜ்(32), பாலாஜி(35), மணிவேல் மனைவி நிலா(30), அவர்களது மகன் பூபதி(13), பூஜா(13), பாலையா(44), அவரது மகள் ஹாசினி(9), பழனி ச்சாமி மனைவி பால ம்மாள்(44) என தெரிய வந்தது.

    விபத்தில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்ப த்தை சேர்ந்தவர்கள் என்ப தும், இவர்கள் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது இந்த விபத்து நடந்தது எனவும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 500 காளைகள் பங்கேற்றன.
    • இந்த போட்டியில் 19 பேர் படுகாயமடைந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே குமாரபேட்டை கிராமத்தில் அழகிய நாச்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பங்குனி திருவிழாவையொட்டி 5 ஊர் நாட்டார்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. 69-வது ஆண்டாக பாரம்பரிய மஞ்சு விரட்டு நிகழ்ச்சி மாவட்ட நிர்வாக அனுமதியுடன் நடைபெற்றது.

    இந்த மஞ்சுவிரட்டில் காளைகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 16 காளைகள் நிராகரிக்கப் பட்டு 274 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 50 மாடுபிடி வீரர்கள் 2 குழுவாக காளைகளை பிடித்தனர். முன்னதாக வயல்வெளிகளில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் சீறிபாய்ந்த காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் என 19 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அவசர சிகிச்சை மையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த 2பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழகியநாச்சி அம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அதே வேனில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் மற்றும் ஆட்டோ மூல மும் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்ச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்த 19 பேர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவித்து ஒரு வேனில் சென்றனர். நேற்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அதே வேனில் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். வேனை வதிஷ்டபுறம் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் ஓட்டி வந்தார். திட்டக்குடியை அடுத்துள்ள தி.இளமங்கலம் அருகே வந்து கொண்டிருக்கும்போது திடீரென ஓட்டுநர் கட்டுப் பாட்டை இழந்த வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 2 குழந்தை கள் உட்பட 19 பேரும் வேனில்சிக்கினர். சாலையில் சென்றவர்களும் அருகில் இருந்த வர்களும் ஓடி வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மற்றும் ஆட்டோ மூல மும் திட்டக்குடி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் படுகாயம் அடைந்த ஜெயந்தி (40), ஐஸ்வர்யா (16) காயத்ரி (24) முத்து (45), வீரம்மாள் (40), மகேஸ்வரி (28), சரிதா (32), பரமேஸ்வரி (22) ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஜெயந்தி, காயத்ரி, வீரம்மாள், மகேஸ்வரி, சரிதா உட்பட 5 பெண்கள் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதி கிராமத் தைச் சேர்ந்த பொது மக்கள் ஏராளமா னோர் மருத்துவ மனையில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • செல்லூர் அருகே பஸ் சென்றபோது, டிரைவர்அய் யப்பனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
    • போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே அம்பகரத்தூரிலிருந்து, தனியார் பஸ் ஒன்று காரைக்கால் நோக்கி சென்றது. இந்த பஸ்சை அய்யப்பன்(வயது40) என்பவர் ஓட்டி வந்தார். செல்லூர் அருகே பஸ் சென்றபோது, டிரைவர்அய் யப்பனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி, பின்னர், பூட்டி இருந்த கடையில் மோதி நின்றது.

    இதில் டிரைவர் அய் யப்பன், கண்டக்டர் மகேஸ்வரன்(41) மற்றும் 17 பயணிகள் என மொத்தம் 19 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை, அருகில் இருந்த பொது மக்கள் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அனை வரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் இது குறித்து, காரை க்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ஜப்பானின் கவாசாகி பகுதியில் உள்ள பூங்காவில் மர்ம நபர் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.
    டோக்கியோ:

    ஜப்பான் நாட்டின் கவாசாகி நகரின் நோபோரிடோ பகுதியில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அந்த பூங்காவில் குழந்தைகள், பெரியவர்கள் என பல்வேறு தரப்பினர் கூடியிருந்தனர். 

    இந்நிலையில், அந்த பூங்காவுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் பெண் குழந்தை உள்பட 2 பேர் பலியானதாகவும், மேலும் 17 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கத்திக்குத்து தாக்குத்ல் நடத்திய நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    பூங்காவில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    ×